search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Joy"

    • அடுத்த மாதம் 8-ந் தேதி தஞ்சை அண்ணா சாலையில் இருந்து ஆத்துப்பாலம் வரை இந்த ஹேப்பி சன் ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடை பெறும்.
    • அனைவரும் சமமாக ஒன்று கூடி மகிழ்ச்சியாக சத்தமிட்டு ஆடிப்பாடி கொண்டாடினர்.

    தஞ்சாவூர்:

    தினமும் பரபரப்பாக ஓடிக்கொண்டு இருக்கும் மக்களுக்கு மன மகிழ்ச்சி மற்றும் புத்துணர்வு அளிக்கும் விதமாக வயது வரம்பின்றியும் அனைவரும் ஒன்று கூடி கொண்டாடும் வகையில் தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், உதகை, திருச்சி போன்ற மாவட்டங்களில் ஹேப்பி ஸ்ட்ரீட் என்ற மனமகிழ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    அந்த வகையில் தஞ்சை மாநகரத்தில் வசிக்கும் பொதுமக்கள், விடுமுறை நாளான ஞாயிற்றுகிழமையை பயனுள்ளதாகவும், மகிழ்ச்சியா கவும் கொண்டாடும் வகையில் ஹேப்பி சன் ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி தஞ்சாவூர் மாநகரில் முதல் முறையாக ஹேப்பி சன் ஸ்ட்ரீட் இன்று காலை நடைபெற்றது. தஞ்சாவூர் மாநகராட்சி, மானசா டான்ஸ் ஸ்டூடியோ நடத்திய ஹேப்பி சன் ஸ்ட்ரீட் நிகழ்ச்சி தஞ்சாவூர் பழைய கோர்ட் ரோட்டில் இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது.

    மானசா டான்ஸ் ஸ்டூடியோ இயக்குனர் தனலட்சுமி ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் இசைக்கருவிகள் இசைத்தும், கிரிக்கெட் விளையாடினார்.

    இதில் தஞ்சாவூர் மாநகரில் உள்ள மாணவ- மாணவிகள், பெண்கள், குழந்தைகள் , பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு வயது வரம்பு இல்லாமல் அனைவரும் சமமாக ஒன்று கூடி மகிழ்ச்சியாக சத்தமிட்டு ஆடி ,பாடி கொண்டாடினர்.

    இதில் பிரபல நடிகர்கள் போல் மிமிக்ரி செய்தல், சினிமா பாடல்களுக்கு நடனம் ஆடுதல், பாடல்கள் பாடல்கள் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. குறிப்பாக குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் அதிக அளவில் நடந்தது.

    அனைவருக்கும் கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.

    இதேபோல் பாரம்பரிய விளையாட்டுகளும் நடத்தப்ப ட்டது.காலை 6 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சியானது 9 மணி வரை நடைபெற்றது.

    இனி அடுத்த மாதம் 8-ம் தேதி தஞ்சை அண்ணா சாலையில் இருந்து ஆத்துப்பா லம் வரை இந்த ஹேப்பி சன் ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடை பெறும் என்று மேயர் சண். ராமநாதன் அறிவித்தார்.

    இன்று நடந்த முடிந்த ஹேப்பி சன் ஸ்ட்ரீட் நிகழ்ச்சி மிகுந்த மகிழ்ச்சி அளித்தது என்று கலந்து கொண்டவர்கள் உற்சாகத்துடன் கூறினர்.

    இந்த நிகழ்ச்சியை டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ, துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, மாநகர் நல அலுவலர் சுபாஷ்காந்தி உள்பட பலர் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.

    • தடை நீக்கத்திற்கு பிறகு கடல்பாசி சேகரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    • புயல், கடல் சீற்றம் உள்ள காலங்களில் பாசிகளை சேகரிப்பது சிரமமாக இருக்கும் என்றனர்.

    மண்டபம்

    ராமநாதபுரம் மாவட் டத்தில் கடல்பாசிகள் சேகரிப்பதற்கான தடை நீக்கத்திற்கு பிறகு தற்போது கடல்பாசிகள் சேகரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    கடற்பாசிகள் 180 மீட்டர் வரையிலான ஆழ்கடல் பகுதிகள், பாறைபகுதிகள், பவளப்பாறை பகுதிகளில் காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் தெற்கு கடற்கரை பகுதிகள், குஜராத், லட்சத்தீவு, அந்த மான் நிகோபார் கடலோர பகுதிகளில் அதிகமாக உள்ளது. இந்தியாவில் மட்டும் சுமார் 1,153 வகை கடற்பாசிகள் இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த கடற்பாசிகளில் 60 வகைகள் வணிக முக்கி யத்துவம் பெற்றுள்ளன. இவைகள் உணவு , மருந்து பொருட்கள் தயாரிப்பில் முக்கிய இடம் வகிக்கின்றன.

    தமிழ்நாட்டில் ராமேசு வரம் முதல் கன்னியாகுமரி வரையிலான 1,863 சதுர கி.மீ. பரப்பளவில் உள்ள கடல்பகுதிகளில் சுமார் 75 ஆயிரத்து 373 டன் கடற்பாசிகள் இருக்கக்கூடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றன. இந்த கடற்பாசிகளை சேகரிக்கும் தொழிலில் ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை கிரா மங்களை சேர்ந்த மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் தற்போது மண்டபம், தோணித்துறை, வேதாளை, சீனியப்பா தர்கா ஆகிய கடலோர பகுதிகளில் ஹப்பா பைகஸ் எனப்படும் கடற் பாசிகள் சுயஉதவி குழுக்கள் மூலம் கடலோர பகுதியில் செயற்கை முறையில் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதுதவிர கடலில் தானாகவே விளையும் சர்காஸம் எனப்படும் கட்டாக் கோரைபாசிகள் சேகரிப்பும் அதிக அளவில் நடந்து வருகிறது.

    இந்த வகை பாசிகள் ஆழ்கடலில் பாறைகள் இருக்கும் பகுதியில் வளரு கின்றன. கடல் நீரோட்டம் மற்றும் கடல் அலைகள் அதிகமாக இருக்கும்போது வேருடன் பிடுங்கப்பட்டு இவைகள் கரைக்கு வந்து சேருகின்றன. இதுதவிர மீனவர்களும் நாட்டுபடகில் சென்று ஆழ்கடலில் முத்து குளிப்பதைபோல இந்த வகை பாசிகளை சேகரிக் கின்றனர்.

    இதனை கடற்கரை பகுதிகளில் நன்றாக உலர வைத்து ஒரு டன்னிற்கு

    ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரையில் மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்கின்றனர். இந்த பணிகளில் பெண்கள் அதிக ளவில் ஈடுபட்டு வரு கின்றனர்.

    சர்காஸம் வகை கடற்பாசியில் இருந்து சோடியம் அல்ஜினேட் என்ற வேதிப்பொருள் தயாரிக்கப்படுகிறது. இது டெக்ஸ்டைல் தொழிலில் சாயம் சேர்க்கும் பணியில் பயன்படுத்தப்படுகிறது. இதுதவிர மருத்துவம், உணவுப்பொருள்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தப் படுகிறது.

    இதுகுறித்து இப்பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள் கூறுகையில், கடலோர பகுதிகளில் போதிய மீன்கள் கிடைக்காததால் குறைந்த வருமானமே கிடைக்கிறது. இந்த நிலையில் தற்போது கடல்பாசிகளை சேகரிக்கும் பணியில் மீண்டும் ஈடுபட்டுள்ளோம். இதன் மூலம் ஓரளவு வருவாய் கிடைக்கிறது. புயல், கடல் சீற்றம் உள்ள காலங்களில் பாசிகளை சேகரிப்பது சிரமமாக இருக்கும் என்றனர்.

    ஆர்.எஸ்.மங்கலத்தில் பல்நோக்கு கடல்பாசி பூங்கா பணிகள் தொடக்கம்

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே வழமாவவூரில் கடந்த 2-ந்தேதி மீன்வளத்துறையின் மூலம் பல்நோக்கு கடற்பாசி பூங்கா அமைப்பதற்கான பூமி பூஜை விழா நடந்தது. இதில் மத்திய மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா, இணை மந்திரி முருகன் ஆகியோர் ரூ.127.71 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு கடற்பாசி பூங்கா அமைப்பதற்கான பணிகளை தொடங்கி வைத்தனர். இத்திட்டத்தின் மூலம் 6 மாவட்ட மீனவமக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • அலங்கார தேர்பவனி புனித வனத்து சின்னப்பர் கல்லறை தோட்டத்திலிருந்து புறப்பட்டு வடக்கு வாசல் கல்லுக்கட்டித்தெரு விற்கு வந்தடைந்தது.
    • சுதந்திரம் பெற்றதற்கு முன்பிருந்தே, இவ்விழா கொண்டாடப்பட்டு வருவது தெரு மக்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் வடக்கு வாசல் கல்லுகட்டி தெரு, புனித வனத்து சின்னப்பர் 109ம் ஆண்டு அன்னதான விழா மற்றும் அலங்கார தேர்பவனி நடந்தது.

    கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக நடக்காமல் இருந்த விழா, இந்த ஆண்டு அரசின் வழிகாட்டுதல் படியும், மக்கள் பேராதரவோடும், வெகு விமர்சையாக நடந்தது.

    விழாவில் முக்கிய நிகழ்வாக ஆலய பங்கு தந்தை அருள், உதவி பங்கு தந்தை ஜோகிளமென்ட், நடத்திய கூட்டுத் திருப்பலியில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    சுதந்திர தினத்தன்று நடந்த விழாவில் நிறைவாக, புனித வனத்து சின்னப்பரின் திருஉருவம் தாங்கிய அலங்கார தேர்பவனி புனித வனத்து சின்னப்பர் கல்லறை தோட்டத்திலிருந்து புறப்பட்டு வடக்கு வாசல் கல்லுக்கட்டித்தெரு வந்தடைந்தது.

    ஏராளமான பொது–மக்கள், புனிதரின் நல் ஆசியை பெற்றதுடன் ஆலயம் சார்பில் வழங்கப்பட்ட அன்னதானத்திலும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    ஏற்பாடுகளை, தெரு தலைவர்கள், இளைஞர், நற்பணி மன்றத்தினர், மாதர் மன்றத்தினர் மற்றும் வடக்குவாசல் கல்லுக்கட்டி தெருவாசிகள் ஒன்று சேர்ந்து ஆலய பங்கு தந்தை அருள், உதவி பங்கு தந்தை ஜோகிளமென்ட் தலைமையில் சிறப்பாக செய்திருந்தனர்.

    இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் சுதந்திரம் பெற்றதற்கு முன்பிருந்தே, இந்த விழா தொடர்ந்து 109 ஆண்டாக கொண்டாடப்பட்டு வருவது தெரு மக்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது.

    தஞ்சை மாவட்ட நிர்வாகம் அனுமதியுடன், அரசின் வழிகாட்டுதல் படியும் நடந்த இந்த விழாக்களில், தஞ்சை ஆயர் இல்ல வேந்தர் ஜான் சக்கிரியாஸ் தலைமை வகித்து சிறப்பித்து விழாவை மேலும் சிறப்படைய செய்ததுடன், நல்லாசி கிடைத்ததாக பொது–மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்

    பாதுகாப்பு ஏற்பாடுகளை கள்ளப்பெரம்பூர் காவல் துறையினர் செய்திருந்தனர். தெருவாசிகள் டோமினிக், அற்புதராஜ், லியோ, ஜான்சன் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.

    ×