என் மலர்

    நீங்கள் தேடியது "Electricity attack"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    உத்திரமேரூர் அருகே மின்சாரம் தாக்கி முதியவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உத்திரமேரூர்:

    காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த காவனூர் புதுச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் பழனி (வயது 65). ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர். மழையின் காரணமாக கடந்த 2 நாட்களாக இவரது வீட்டில் மின்சாரம் இல்லாமல் இருந்தது. இதுகுறித்து அவர் புகார் செய்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் யாரும் சரி செய்யாததால் நேற்று பகல் 12 மணி அளவில் பழனி வீட்டின் அருகே இருந்த மின்கம்பத்தில் ஏறி சரி செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது.

    அப்போது திடீரென அவர் மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார்.

    இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் பழனி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கீழ்வேளூர் அருகே மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தாயார் போலீசில் புகார் அளித்துள்ளார்.
    சிக்கல்:

    நாகை மாவட்டம் திருமருகல் அருகே தென்கரை கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் ராஜகோபால். இவருடைய மனைவி ராகினி. இவர்களுடைய மகள் மீனா(வயது 28). இவருக்கும், கீழ்வேளூர் அருகே உள்ள கோகூர் வடக்குதெருவை சோ்ந்த கலியமூர்த்தி மகன் முருகவேல் என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

    கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு மீனா கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விடுவதாகவும், அவரது பெற்றோர் சமரசம் செய்து அவரை கணவர் வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மீனா மின்சாரம் தாக்கி இறந்து விட்டதாக அவரது கணவர் வீட்டில் இருந்து மீனாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், கோகூருக்கு புறப்பட்டு வந்துள்ளனர். அப்போது மீனாவின் உடல் போர்வையால் மூடி வைக்கப்பட்டிருந்ததை கண்டு கதறி அழுதனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்வேளூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மீனாவின் உடலை கைப்பற்றி நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக மீனாவின் தாயார் ராகினி கீழ்வேளூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    காவலாளி உயிரிழந்த இடத்தில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கி உள்ளது. இருப்பினும் அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்படாமல் இருந்த காரணத்தாலேயே அவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    சென்னை:

    சென்னை மந்தைவெளி பஸ் டிப்போ அருகே மழை வெள்ளம் தேங்கி உள்ளது. இதன் அருகில் போக்குவரத்து சிக்னல் கம்பமும், மின் கம்பமும் உள்ளது.

    இந்த நிலையில் இன்று காலை 9 மணியளவில் அதே பகுதியில் காவலாளியாக பணிபுரிந்து வந்த சக்திவேல் பணி முடிந்து வெள்ளத்தில் நடந்து சென்றார்.

    அப்போது வெள்ளத்தில் பாய்ந்து இருந்த மின்சாரம் சக்திவேல் மீது தாக்கியது. இதில் வெள்ளத்திலேயே துடிதுடித்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் அபிராமபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகு மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    போக்குவரத்து சிக்னல் கம்பம் மற்றும் மின் கம்பம் அருகில் சிறிய மின்சாதன பெட்டி உள்ளது. அதில் இருந்துதான் மின்சாரம் பாய்ந்து சக்திவேலின் உயிரை பறித்து இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீஸ் தரப்பில் அப்பகுதியை சேர்ந்த மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து சென்று மின் இணைப்பை துண்டித்தனர்.

    பின்னர் போலீசார் காவலாளியின் உடலை வெள்ளத்தில் இறங்கி மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆதார் அட்டையை வைத்துதான் அவரது பெயர் விவரம் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் திருவல்லிக்கேணி என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அஅங்கு சென்று விசாரித்த போது சக்திவேல் மாதவரத்தில் குடும்பத்தோடு வசித்து வந்தது தெரியவந்ததது.

    சக்திவேலுக்கு 50 வயதாகிறது. அவர் உயிரிழந்ததை பற்றி குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகு சக்திவேலின் உடல் குடும்பத்திடம் ஒப்படைக்கப்படுகிறது.

    இந்த சம்பவத்தை அடுத்து மந்தைவெளி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் மின்வாரிய அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    தண்ணீர் அதிகம் தேங்கியுள்ள பகுதிகளில் மின் இணைப்பை துண்டிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சக்திவேல் உயிரிழந்த இடத்தில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கி உள்ளது. இருப்பினும் அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்படாமல் இருந்த காரணத்தாலேயே சக்திவேல் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    காவேரிப்பட்டணம் அருகே சாலையில் செல்லும்போது மின்சாரம் தாக்கி இருவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
    காவேரிப்பட்டணம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டணத்தில் நேற்று இரவு இதமான மழை பெய்து வந்தது.

    காவேரிபட்டணத்தை அடுத்த கால்வே அள்ளியை சேர்ந்த முனுசாமி (வயது 33) என்பவர் இப்பகுதியில் நிப்பட் கம்பெனி வைத்து நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது.

    இவரிடம் கால்வே அள்ளி முத்தூராண் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த சரவணன் (வயது 32) என்பவர் வேலைசெய்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 ஆண் குழந்தை உள்ளது.

    இவர்கள் நேற்று இரவு வேலையை முடித்துவிட்டு நிப்பட்டை சரக்கு வண்டியில் ஏற்றுவதற்காக காவேரிப்பட்டணம் வந்துவிட்டு பின்பு இரவு 12.30 மணியளவில் வீடு திரும்பினர். அப்போது கத்தேரி பிரிவுரோடு அருகே பலத்த மழையின் காரணமாக மின்சார கம்பி அறுந்து கீழே விழுந்து கிடந்து உள்ளது. இதனை அறியாத இவர்கள் அந்த வழியாக செல்லும்போது அவர்கள் மீது மின்சாரம் பாய்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிர் இழந்தனர்.

    இறந்தவர்களின் உடல்கள் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக உடல்கள் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுதுரை ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ஒரே பகுதியை சேர்ந்த இருவர் பலியாகி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    போடி அருகே கோவில் திருவிழாவில் பிளஸ்-2 மாணவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மேலசொக்கநாதபுரம்:

    போடி அருகே உள்ள அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் மகன் சுபாஷ் (வயது 17). பிளஸ்-2 தேர்வு எழுதியுள்ளார். இவர் காளியம்மன் கோவில் திருவிழாவுக்காக கொட்டக்குடி ஆற்றில் கரகம் எடுக்க தனது நண்பர்களுடன் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். போடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது. இது குறித்து போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தேவாரம் அருகே தண்ணீர் பிடிக்க மோட்டாரை இயக்கிய கூலித்தொழிலாளி மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.
    தேனி:

    தேவாரம் அருகே தம்மிநாயக்கன்பட்டி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நீதிபதி (வயது 43). இவர் கூலி தொழிலாளி.

    சம்பவத்தன்று தனது வீட்டில் குடிநீர் பிடிப்பதற்காக மோட்டாரை இயக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக நீதிபதி மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதை பார்த்த உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் நீதிபதியை மீட்டு உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நீதிபதி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து அவரது அண்ணன் விஜயராஜ் தேவாரம் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் தேவாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கொருக்குப்பேட்டையில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலியான சமபவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயபுரம்:

    கொருக்குப்பேட்டை அம்பேத்கார் நகர் 5-வது தெருவைச் சேர்ந்தவர் செரீப். கூலி தொழிலாளி. இவருடைய மகன் ரியாஸ் (10). அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தான்.

    நேற்று இரவு செரீப் வீட்டில் மின்சாரம் இல்லை. எனவே அருகில் உள்ள வீட்டில் இருந்து வயர் மூலம் மின்சாரம் எடுத்து இருந்தனர்.

    இன்று காலை சிறுவன் ரியாஸ் வீட்டில் இருந்த தனது சைக்கிளை எடுத்தாள். அப்போது பக்கத்து வீட்டில் இருந்து வந்த மின்சார வயரில் எதிர்பாராத விதமாக கைப்பட்டதால் மின்சாரம் தாக்கியது.

    சிறுவன் ரியாஸ் அலறியபடியே கீழே விழுந்தான். சத்தம் கேட்டு அவனை காப்பாற்ற முயன்ற ரியாசின் தாயாருக்கும் காயம் ஏற்பட்டது.

    மின்சாரம் தாக்கிய சிறுவன் ரியாசை, ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    ரியாஸ் உடலை கண்டு உறவினர்கள் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. ஆர்.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பல்வேறு சம்பவங்களில் பலியான 7 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #TNCM #EdappadiPalanisamy
    சென்னை:

    தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    விருத்தாசலம் வட்டம் மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பிச்சமுத்து அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

    புதுக்கோட்டை மாவட்டம், நாவினிவயல் கிராமத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மனைவி மாசிலாமணி மின் கம்பி அறுந்து விழுந்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

    மதுரை மாவட்டம், கல்கொண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மொக்குசு மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

    கன்னியாகுமரி மாவட்டம், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணியாளராகப் பணிபுரிந்து வந்த மைக்கேல்ராஜ் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

    கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு ‘ஏ’ கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

    திருவள்ளூர் மாவட்டம், கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சந்திரசேகர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

    திருநெல்வேலி மாவட்டம், கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த நாகராஜன் மனைவி பாப்பா, பாம்பு கடித்து உயிரிழந்தார்

    இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #TNCM #EdappadiPalanisamy
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கொடுங்கையூர் பகுதியின் சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தை தொட்ட தனியார் கம்பெனி டிரைவர் மின்சாரம் பாய்ந்து பலியானார்.
    பெரம்பூர்:

    கொடுங்கையூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் ஜெயராஜ் (40). தனியார் கம்பெனி டிரைவர்.

    நேற்று இரவு கொடுங்கையூர் பகுதியில் பலத்த மழை பெய்தது. அப்போது, கொடுங்கையூர் மீனாம்பாள் சாலையில் ஜெயராஜ் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது சாலையின் ஓரத்தில் இருந்த மின் கம்பத்தை தொட்டபடி சாலையின் அருகில் ஒதுங்கினார். அப்போது திடீர் என்று அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.

    இதில் தூக்கி வீசப்பட்ட ஜெயராஜ் அலறியபடியே கீழே விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.

    ஆனால் வழியிலேயே ஜெயராஜ் பரிதாபமாக உயிர் இழந்தார். மழை பெய்த போது மின் கம்பத்தில் மின்சாரம் கசிந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து கொடுங்கையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திருக்குவளை அருகே மின்சாரம் தாக்கியதில் கணவன் மனைவி பலியாகினர். இவர்களது மகன்- மகள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    திருவாரூர்:

    நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த ராமன்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 53). விவசாயி. இவரது மனைவி நாகம்மாள் (வயது 45).

    இந்த நிலையில் இவர்களது மகள் விஜயலட்சுமிக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. இதனால் திருப்பூரில் வேலை பார்த்து வந்த பாலகிருஷ்ணனின் மகன் சவுரிராஜன், ஊருக்கு வந்திருந்தார்.

    இந்த நிலையில் பாலகிருஷ்ணன் தான் வசித்து வந்த கூரைவீட்டின் மேற்கூரை பகுதியை மாற்ற முடிவு செய்தார்.

    இதையொட்டி இன்று காலை பாலகிருஷ்ணன், தென்னங்தட்டிகளை வைத்து மேற்கூரையை கம்பியால் கட்டி கொண்டிருந்தார். அவர் அருகே நின்று கொண்டு மனைவி நாகம்மாள், மகள் விஜயலட்சுமி, மகன் சவுரிராஜன் ஆகியோர் உதவி செய்து கொண்டு இருந்தனர்.

    அப்போது திடீரென பாலகிருஷ்ணனின் கை , அங்கிருந்த மின்கம்பி மீது பட்டது. இதில் அவரை மின்சாரம் தாக்கியது.

    மேலும் அருகில் நின்ற நாகம்மாள், விஜயலட்சுமி, சவுரிராஜன் ஆகிய 4 பேர் மீதும் மின்சாரம் பாய்ந்து வீடு அருகே உள்ள திருப்பூண்டி வாய்க்காலில் தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே நாகம்மாள் பரிதாபமாக இறந்தார்.

    படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய பாலகிருஷ்ணன் உள்பட 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு செல்லும் வழியிலேயே பாலகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார்.

    அங்கு விஜயலட்சுமி, சவுரிராஜன் ஆகியோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி பலியான சம்பவம் திருக்குவளை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
    ×