search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போடி அருகே மின்சாரம் தாக்கி பிளஸ்-2 மாணவர் பலி
    X

    போடி அருகே மின்சாரம் தாக்கி பிளஸ்-2 மாணவர் பலி

    போடி அருகே கோவில் திருவிழாவில் பிளஸ்-2 மாணவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மேலசொக்கநாதபுரம்:

    போடி அருகே உள்ள அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் மகன் சுபாஷ் (வயது 17). பிளஸ்-2 தேர்வு எழுதியுள்ளார். இவர் காளியம்மன் கோவில் திருவிழாவுக்காக கொட்டக்குடி ஆற்றில் கரகம் எடுக்க தனது நண்பர்களுடன் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். போடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது. இது குறித்து போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×