என் மலர்
நீங்கள் தேடியது "அயோதுல்லா அலி காமேனி"
- ஈரானுடன் அமெரிக்கா அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த முடிந்தால், அது நன்றாக இருக்கும்- டிரம்ப்
- ஒரு ஒப்பந்தம் வற்புறுத்தலுடன் சேர்ந்து அதன் விளைவு முன்னரே தீர்மானிக்கப்பட்டால் அது ஒப்பந்தம் அல்ல- காமேனி
இஸ்ரேல்- காசா இடையே போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முக்கிய காரணமாக இருந்தார். அவர் இஸ்ரேல்- காசா அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான எகிப்து வந்தார்.
அதற்கு முன்னதாக இஸ்ரேல் நாட்டிற்கு சென்று, அங்குள்ள பாராளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது "ஈரானுடன் அமெரிக்கா அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த முடிந்தால், அது நன்றாக இருக்கும்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஈரானின் சுப்ரீம் தலைவர் அயோதுல்லா அலி காமேனி, அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்பின் விருப்பத்தை நிராகரித்துள்ளார். மேலும் ஈரானில் உள்ள அணு ஆயுத திறனை அமெரிக்கா அழிக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான்- அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் அணு ஆயுதத் திட்டம் குறித்த மறைமுக பேச்சுவார்த்தை ஐந்து சுற்றுகளாக நடைபெற்றது. கடந்த ஜூன் மாதம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகியவை ஈரானின் அணு ஆயுத தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதுஇ அந்த 12 நாள் விமானத் தாக்குதலால் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. இந்த நிலையில்தான் அமெரிக்கா அதிபர் பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதை காமேனி நிராகரித்துள்ளார்.
"டொனால்டு டிரம்ப் தன்னை ஒரு டீல் மேக்கர் என சொல்கிறார். ஆனால் ஒரு ஒப்பந்தம் வற்புறுத்தலுடன் சேர்ந்து அதன் விளைவு முன்னரே தீர்மானிக்கப்பட்டால், அது ஒரு ஒப்பந்தம் அல்ல, மாறாக ஒரு திணிப்பு மற்றும் மிரட்டல். ஈரான் மீது குண்டுகள் வீசி அணு ஆயுத தொழிற்சாலையை அழித்ததாக பெருமை கொள்கிறார். நன்று. அவர் கனவு காணட்டும்" காமேனி எனத் தெரிவித்துள்ளார்.
- ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேலின் மருத்துவமனை சேதம்.
- ஈரானில் உள்ள அணு உலை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இஸ்ரேல்- ஈரான் இடையிலான சண்டை 7ஆவது நாளாக நீடித்து வருகிறது. இஸ்ரேலில் உள்ள மருத்துவமனை மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் ஈரானில் உள்ள அணு உலை மீது தாக்குதல் நடத்தியது. இந்த அணு உலையில் ரஷியாவைச் சேர்ந்த நிபுணர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இதனால் அணுஉலை மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என ரஷியா வலியுறுத்தியுள்ளது.
இரண்டு நாடுகளும் மாறிமாறி ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இரு பக்கமும் சேதத்தை சந்தித்து வருகின்றன.
இந்த நிலையில் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ், ஈரானின் உச்சப்பட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியை இருக்க அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். இதன் மறைமுக அர்த்தம் அவரை வீழ்த்துவது.
இந்த கருத்தை இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவும் புறந்தள்ளிவிடவில்லை. "அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. இது தொடர்பாக மீடியாவில் பேசுவது சிறந்ததாக இருக்காது. இஸ்ரேல் ராணுவத்திடம், ஈரான் அதிகாரத்தில் யாருக்கும் தன்னை பாதுகாத்துக் கொள்ளும் தன்மை இல்லை என அறிவுறுத்தியுள்ளேன். நான் பேசாமல் இருக்க விரும்புகிறேன். நீங்கள் நடவடிக்கையை பார்ப்பீர்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் காமேனிக்கு இஸ்ரேல் குறி வைக்கலாம் எனத் தெரிகிறது.
முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப் "ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி எங்கு மறைந்திருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். அவர் எங்களுக்கு ஒரு எளிதான இலக்கு. ஆனால் அங்கு பாதுகாப்பாக இருக்கிறார். நாங்கள் அவரை கொல்லப் போவதில்லை. குறைந்தபட்சம் இப்போதைக்கு இல்லை. ஆனால் பொதுமக்கள் அல்லது அமெரிக்க வீரர்கள் மீது ஏவுகணைகள் வீசப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்கள் பொறுமை குறைந்து வருகிறது. ஈரான் நிபந்தனையற்று சரணடைய வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு காமேனி "ஈரான் ஒற்றுமையாக உள்ளது. ஒருபோதும் சரணடையமாட்டோம். அமெரிக்கா தலையீடு செய்தால் சரி செய்ய முடியாத அளவிற்கு விளைவுகளை சந்திக்க நேரிடும்" எனத் தெரிவித்திருந்தார்.
இஸ்ரேல் உடன் இணைந்து தாக்குதல் நடத்த டொனால்டு டிரம்ப் தனிப்பட்ட முறையில் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இஸ்ரேல்- ஈரான் இடையிலான சண்டை மேலும் மோசமான நிலையை எட்ட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
- ஈரான் உச்சபட்ச தலைவர் எங்கு மறைந்திருக்கிறார் என்பது தெரியும் என்று டிரம்ப் தெரிவித்தார்.
- ஈரான் நிபந்தனையற்று சரணடைய வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தல்.
ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்குவதில் 90 சதவீதத்தை எட்டி விட்டதாகவும், இது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கூறி இஸ்ரேல், ஈரான் மீது கடந்த 13-ந்தேதி கடும் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.
இரு தரப்பும் மாறி மாறி ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள், ராணுவ கட்டமைப்புகள் உள்ளிட்ட முக்கிய இடங்களை குறி வைத்து இஸ்ரேல் தாக்குகிறது. அதேபோல் இஸ்ரேலின் டெல்அவிவ், ஹைபா உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ஏவுகணைகள் வீசப்படுகின்றன.
இதற்கிடையே அணுசக்தி ஒப்பந்தத்தை ஈரான் ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் அமெரிக்கா அதிபர் டிரம்ப் ஈரானுக்கு கடும் எச்சரிக்கையை விடுத்தார்.
இது தொடர்பாக டிரம்ப் தனது 'Truth Social' சமூக வலைத்தள பதிவில், "ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி எங்கு மறைந்திருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். அவர் எங்களுக்கு ஒரு எளிதான இலக்கு. ஆனால் அங்கு பாதுகாப்பாக இருக்கிறார். நாங்கள் அவரை கொல்லப் போவதில்லை. குறைந்தபட்சம் இப்போதைக்கு இல்லை. ஆனால் பொதுமக்கள் அல்லது அமெரிக்க வீரர்கள் மீது ஏவுகணைகள் வீசப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்கள் பொறுமை குறைந்து வருகிறது. ஈரான் நிபந்தனையற்று சரணடைய வேண்டும்" என்று தெரிவித்தார்.
அதேபோல் சதாம் உசே னுக்கு ஏற்பட்ட நிலைமை அயதுல்லா அலி காமெனிக்கு ஏற்படும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மிரட்டல் விடுத்தார்.
இந்த நிலையில் டிரம்பின் மிரட்டலுக்கு அடியபணிய மாட்டோம் என்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, "போர் தொடங்கிவிட்டது. பயங்கரவாத சியோனிச ஆட்சிக்கு (இஸ்ரேல்) நாம் வலுவான பதிலடி கொடுக்க வேண்டும். சியோனிஸ்டுகளுக்கு நாங்கள் கருணை காட்ட மாட்டோம்" என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் இஸ்ரேல்-ஈரான் 6-வது நாளாக பரஸ்பர தாக்குதல்களில் ஈடுபட்டன. ஈரான் தலைநகர் டெக்ரானை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. டெக்ரானுக்கு அருகில் உள்ள கோஜிர் ஏவுகணை உற்பத்தி நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த ஏவுகணை உற்பத்தி நிலையம் ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை உள்கட்டமைப்பிற்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. அதேபோல் டெக்ரானிலும், தலைநகருக்கு மேற்கே உள்ள கராஜ் நகரத்திலும் வெடிச் சத்தங்கள் கேட்டதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையே டெக்ரானின் 18-வது மாவட்டத்தில் உள்ள ஈரானின் ராணுவ உள்கட்டமைப்பு மீது தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் அப்பகுதியில் இருந்து மக்கள் உடனடியாக வெளியேறுமாறும் இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்தது.
அதேபோல் இஸ்ரேல் மீது ஈரான் சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதலை நடத்தியது. டெல் அவிவ் உள்ளிட்ட நகரங்கள் மீது தாக்குதல் நடத்தப் பட்டது.
இதையடுத்து ஈரான் ஏவுகணைகளை நடுவானில் தடுக்க இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு தீவிரமாக செயல்பட்டது. தாக்குதல் காரணமாக மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடையுமாறு இஸ்ரேல் ராணுவம் கேட்டு கொண்டது.
இந்த நிலையில் இஸ்ரேலைத் தாக்க ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாக ஈரான் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. மேலும் டெக்ரான் மீதான தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட இஸ்ரேலிய விமானத் தளங்களை குறிவைத்து தாக்கியதாக ஈரான் புரட்சிகர காவல்படை அறிவித்து உள்ளது.
ஈரானின் ராணுவத் தலைவர் மேஜர் ஜெனரல் அப்துல்ரஹிம் மௌசவி கூறும்போது, "இதுவரை எங்கள் ராணுவ நட வடிக்கைகள் வெறும் எச்சரிக்கைகள்தான். மேலும் கடுமையான, தண்டனைக்குரிய தாக்குதல்கள் தொடரக்கூடும். எனவே இஸ்ரேலியர்கள் தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள டெல் அவிவ் மற்றும் ஹைபாவை விட்டு வெளியேற வேண்டும்" என்று எச்சரிக்கை விடுத்தார்.
மோதல் காரணமாக ஜெருசலேமில் உள்ள தூதரகத்தை 3 நாட்களுக்கு மூடுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த நிலையில் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை ஈரான் தாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- "காமேனி எளிதான இலக்கு, ஆனால் அவரை இப்போதைக்கு வீழ்த்தப் போவதில்லை" எனத் தெரிவித்தார்.
- போர் நிறுத்தத்தை விட சிறந்ததை தேடுவதாகவும் டிரம்ப் தெரிவித்தார்,
ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனியை அமெரிக்காவால் வீழ்த்த முடியும் (கொல்ல முடியும்) என்று அச்சுறுத்தும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது 'Truth Social' சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்கக் குடிமக்கள் மற்றும் படைகளுக்கு எதிராகப் பதிலடி வருவதைத் தவிர்க்கவே இந்த முடிவை எடுத்ததாகக் கூறிய டிரம்ப், ஈரான் நிபந்தனையற்று சரணடைய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
"காமேனி எளிதான இலக்கு, ஆனால் அவரை இப்போதைக்கு வீழ்த்தப் போவதில்லை" எனத் தெரிவித்தார்.
முன்னதாக ஜி7 மாநாட்டைப் பாதியிலேயே முடித்துக்கொண்டு திரும்பிய டிரம்ப், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருக்கும் 95 லட்சம் மக்களை வெளியேறுமாறு பதிவிட்டிருந்தார்.
இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்களால் ஈரான் கணிசமான சேதங்களைச் சந்தித்துள்ளதாகவும், அமெரிக்காவின் உதவியுடன் அதன் அணுசக்தி வசதிகளை இஸ்ரேல் நிரந்தரமாகத் தாக்கும் வல்லமை பெற்றுள்ளதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார்.
இந்த மோதலுக்கு உண்மையான முடிவைக் காண விரும்புவதாகவும், போர் நிறுத்தத்தை விட சிறந்ததை தேடுவதாகவும் டிரம்ப் தெரிவித்தார். பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு இன்னும் இருப்பதாகவும் அவர் கூறினார்.
- இஸ்மாயில் ஹனியே சிந்திய ரத்தத்துக்கு பழிவாங்குவது எங்கள் கடமை.
- கடுமையான தண்டனையை பெறுவதற்கு இஸ்ரேல் களம் அமைத்துள்ளது என்றார்.
தெக்ரான்:
பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிப்போம் என்று இஸ்ரேல் சூளுரைத்து உள்ளது.
இதற்கிடையே ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவரான இஸ்மாயில் ஹனியே, ஈரான் தலைநகர் தெக்ரானில் உள்ள வீட்டில் இருந்தபோது படுகொலை செய்யப்பட்டார்.
அவரை இஸ்ரேல் கொலை செய்துள்ளது என்று ஈரான், ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளன. ஈரான் நாட்டுக்குள்ளே ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டது. அந்நாட்டு அரசை அதிர்ச்சி அடைய வைத்து உள்ளது. இதற்கு இஸ்ரேலை பழி வாங்குவோம் என்று ஈரான் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ஈரானின் உச்ச தலைவர் அயோதுல்லா அலி காமேனி, இஸ்ரேல் மீது நேரடி தாக்குதலை நடத்தும் படி ராணுவ படைகளுக்கு உத்தரவிட்டு உள்ளார். இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட சிறிது நேரத்தில் ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டம் அயோதுல்லா அலி காமேனி தலைமையில் நடந்தது. இதில் இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்த அவர் உத்தரவிட்டுள்ளார்.
போர் விரிவடையும் பட்சத்தில், இஸ்ரேல் தாக்குதல் மற்றும் தற்காப்பு ஆகிய இரண்டிற்கும் திட்டங்களை தயாரிக்குமாறு ஈரானின் புரட்சிகர காவலர்கள் மற்றும் ராணுவ தளபதிகளை அறிவுறுத்தினார். மேலும் அயோதுல்லா அலி காமேனி வெளியிட்ட அறிக்கையில், இஸ்மாயில் ஹனியே சிந்திய ரத்தத்துக்கு பழிவாங்குவது எங்கள் கடமை. ஏனென்றால் இது எங்கள் நாட்டில் நடந்தது. கடுமையான தண்டனையை பெறுவதற்கு இஸ்ரேல் களம் அமைத்துள்ளது என்றார்.
இது குறித்து ஈரான் அதிகாரிகள் கூறும்போது, இஸ்ரேல் மீது ஈரான் எவ்வளவு வலிமையுடன் தாக்குதல் நடத்தும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் ஹைபாவிற்கு அருகிலுள்ள ராணுவ இலக்குகள் மீது டிரோன்கள், ஏவுகணைகளின் கூட்டுத் தாக்குதலை நடத்த ராணுவத் தளபதிகள் பரிசீலித்து வருகின்றனர்.
அதே வேளையில் பொதுமக்கள் மீது தாக்குதலை தவிர்ப்பது எங்களது குறிக்கோளாக இருக்கும். மேலும் ஈரான்,ஏமன், சிரியா, ஈராக் உள்ளிட்ட நட்பு நாட்டுப் படைகளுடன் இணைந்து மற்ற முனைகளில் இருந்து ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதலை நடத்தவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
ஈரான் மீது இஸ்ரேலோ அல்லது அமெரிக்காவோ தாக்குதல் நடத்தினால் போரை விரிவுப்படுத்தும் படியும், அதற்கேற்ப தயாராகும்படியும் படைகளுக்கு காமினி உத்தரவிட்டு உள்ளார் என்றார்.






