search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nuclear deal"

    • அணு ஆயுதம் குறைப்பு காரணமாக அமெரிக்கா- ரஷியா இடையே START ஒப்பந்தம்
    • உக்ரைனுக்கு அமெரிக்கா ராணுவ உதவி வழங்குவதால் ரஷியா ஒப்பந்தத்தை இடைநிறுத்தம் செய்தது

    அணு ஆயுதங்களை குறைப்பதற்காக New START (Strategic Arms Reduction Treaty) அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் அமெரிக்கா- ரஷியா இடையே ஏற்படுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம் அணு ஆயுதம் எங்கு உள்ளது. எங்கிருந்து ஏவப்படுகிறது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை போன்ற தரவுகளை பகிர்வது. அணு ஆயுதம் எண்ணிக்கை அதிரிகரிப்பதை தடுப்பது. இரு நாடுகளும் தங்களுக்குள் தரவுகளை பகிர்ந்து கொண்டிருந்தன.

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததில் இருந்து அமெரிக்கா- ரஷியா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. பல்வேறு நாடுகளை ஒன்றிணைத்து (குறிப்பாக நேட்டோ நாடுகள்) அமெரிக்கா பல்வேறு தடைகளை ரஷியா மீது சுமத்தியது.

    மேலும், அமெரிக்கா உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் வழங்கியது. இதனால் உக்ரைன் மீதான போரை முழுமையான வெற்றி என்று ரஷியா கூறமுடியவில்லை. உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷியாவின் முக்கிய நோக்கம் முறியடிக்கப்பட்டுள்ளது என நேட்டோ நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா அறிவித்ததும் புதின் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.

    இதனால் ஒப்பந்தத்தை ரஷியா இடைநிறுத்தியது. இதன்மூலம் ரஷியா அணு ஆயுத தரவுகளை அமெரிக்காவுக்கு கொடுக்க வேண்டியதில்லை எனக் தெரிவித்தது.

    இந்த நிலையில், அமெரிக்கா பதிலடி கொடுக்கும் வகையில் நாங்களும் அணு ஆயுதம் குறித்த தரவுகளை கொடுப்பதில்லை என முடிவு செய்துள்ளது.

    இதுகுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியதாவது:-

    அமெரிக்கா அணு ஆயுதம் குறித்த தகவல், இருக்கும் இடம் குறித்து எந்த தகவலையும் தெரிவிக்காது. ஆனால், கண்டம் விட்டு கண்டம் பாயும், நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள் குறித்த தகவல்களை தொடர்ந்து ரஷியாவுக்கு தகவல் கொடுப்போம்.

    அமெரிக்க பிராந்தியத்தில் ரஷியாவின் ஆய்வுக்குழு, அவர்களுக்கான விசா வழங்கும் முறை, START தொடர்பாக ஆய்வு நடத்துவது, விமானப்படையினர் ஆகியோருக்கும் தடைவிதிக்கப்படுகிறது. ரஷியா ஆய்வு விமானங்களுக்கான டிப்ளோமெட்டிக் அனுமதிக்கும் தடைவிதிக்கப்படுகிறது.

    கண்டம் விட்டு கண்டம் பாயும், நீர் மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள் குறித்த டெலிமெட்ரிக் தகவல்களும் வழங்கப்படாது. இது ஏவுகணை பரிசோதனை செய்யப்படும் விமானத்தில் இருந்து கிடைக்கும் தகவல். இரு நாடுகளும் இந்தத் தகவல்களை பகிர்ந்து கொண்டிருந்தன.

    START ஒப்பந்தத்தை ரஷியா மீறியதற்காக பதில் அளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரஷியா ஒப்பந்தத்தை மீறியது சட்டப்பூர்வமாக செல்லாது. ரஷியா இந்த ஒப்பந்தத்தின்படி நடந்து கொள்ள சம்மதம் தெரிவித்தால், நாங்களும் தயாராக இருக்கிறோம்.

    இவ்வாறு தெரிவித்துள்ளது.

    ரஷியாவும், அமெரிக்காவும் உலகின் 90 சதவீத அணு ஆயுதங்களை கட்டுப்படுத்துகின்றன. START ஒப்பந்தம் அணு ஆயுதங்களை குறைப்பதற்காக ஏற்படுத்தப்பட்டதாகும். 2010-ம் ஆண்டு இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. 2026-ல் காலாவதியாகிறது. இந்த ஓப்பந்தத்தின் முக்கிய நோக்கம் அமெரிக்கா, ரஷியா 1550 அணு ஆயுதங்கள், நிலம் மற்றும் கடலுக்கு அடியில் இருந்து தாக்கும் ஏவுகணைகள் 700-க்கு மேல் வைத்திருக்கக் கூடாது என்பதுதான்.

    • அறிவிக்கப்படாத தளங்களில் காணப்படும் யுரேனிய தடயங்கள் பற்றி சர்வதேச ஆய்வாளர்கள் விசாரணை
    • ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் சிலவற்றை நீக்க அமெரிக்கா முன்வந்துள்ளது

    தெஹ்ரான்:

    அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்றது முதல் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை மறுசீரமைப்பு செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பான பேச்சுவார்த்தை, ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் நடந்து வருகிறது. இதில் அமெரிக்கா விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு ஈரான் ஒப்புக்கொண்டால் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இணைவதில் அமெரிக்கா தயாராக இருப்பதாகவும், அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகள் சிலவற்றை நீக்குவதாகவும் அமெரிக்கா கூறி உள்ளது.

    இந்நிலையில், உலக வல்லரசுகளுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை மீட்டெடுக்கவேண்டுமானால், அறிவிக்கப்படாத அணுசக்தி தளங்களில் யுரேனிய தடயங்கள் தொடர்பான விசாரணையை சர்வதேச ஆய்வாளர்கள் முடித்துக்கொள்ள வேண்டும் என்று ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி கூறி உள்ளார்.

    அறிவிக்கப்படாத தளங்களில் காணப்படும் யுரேனிய தடயங்கள் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்படி ஈரானை சர்வதேச அணுசக்தி ஏஜென்சி வலியுறுத்துகிறது. மேலும், ஈரான் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட அணு ஆயுத திட்டத்தை 2003 வரை நடத்தியதாக அமெரிக்க புலனாய்வு அமைப்புகள், மேற்கத்திய நாடுகள் மற்றும் சர்வதேச அணுசக்தி ஏஜென்சி ஆகியவை கூறியுள்ளன. ஆனால், அணு ஆயுத குற்றச்சாட்டை ஈரான் தொடர்ந்து மறுத்து வருகிறது.

    அணு ஆயுத ஒப்பந்தத்தை மீறிவரும் ரஷியாவுடன் இனியும் இணைந்திருப்பதில் அர்த்தமில்லை. அந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறும் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். #Trump #nucleardeal #nucleardealwithRussia
    வாஷிங்டன்:

    அணு ஆயுத பரவலை குறைக்கும் வகையில் அதிபயங்கர பேரழிவை ஏற்படுத்தும் போர் ஆயுதங்களை இனி தயாரிப்பதில்லை என ரஷியாவும் - அமெரிக்காவும் முன்னர் செய்துகொண்ட ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது.

    1987-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரஷியாவும் அந்நாள் அதிபர் மிக்கயில் கார்பச்சேவ் - அமெரிக்க அந்நாள் அதிபர் ரொனால்ட் ரீகன் ஆகியோர் ஏற்றிகொண்டு கையொப்பமிட்ட இந்த ஒப்பந்தம் அதன் பின்னர் பதவிக்கு வந்த இருநாட்டு அதிபர்களால் அடுத்தடுத்து பத்தாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட்டு வந்தது.

    தரையில் இருந்தோ, கடலில் இருந்தோ 300 முதல் 3400 மைல் தூரம்வரை பாய்ந்து சென்று தாக்கும் அணு ஆயுத ஏவுகணைகளை இருநாடுகளும் ஒழிக்க வேண்டும் இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாகும்.



    1980-களில் அமெரிக்கா - ரஷியா இடையே ஆயுதப் போட்டிக்கான பனிப்போர் உச்சகட்டத்தில் இருந்த வேளையில் இந்த ஒப்பந்தத்தின் மூலம் ரஷியாவின் அருகாமையில் இருந்தவாறு அமெரிக்காவுடன் நட்பு பாராட்டும் சில நேச நாடுகளுக்கு ஓரளவு பாதுகாப்பு கிடைத்தது. இந்த ஒப்பந்தத்தை ரஷியா மீறி வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்துள்ளார்.

    இந்நிலையில், அமெரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள நிவேடா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அதிபர் டிரம்ப், எல்க்கோ நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    அணு ஆயுத ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகளுக்கு ரஷியா கட்டுப்படவில்லை. அவர்கள் பல ஆண்டுகளாக மீறி வந்துள்ளனர். இதுதொடர்பாக, முன்னாள் அதிபர் ஒபாமா ஏன் பேச்சுவார்த்தை நடத்தி வெளியேறவில்லை என்பது எனக்கு தெரியவில்லை.

    எங்களுக்கு அனுமதி இல்லாத ஆயுதங்களை அவர்கள் தயாரிப்பதை இனியும் அனுமதிக்க முடியாது. எனவே, அந்த அணு ஆயுத ஒப்பந்தத்தை நாங்கள் ரத்து செய்யப் போகிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். #Trump #nucleardeal #nucleardealwithRussia

    நாட்டுக்கு நன்மை தராத அணு ஆயுத பரவல் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவது தொடர்பாக ஈரான் அரசு முடிவு செய்ய வேண்டும் என அந்நாட்டின் ஆளும்கட்சி தலைவர் வலியுறுத்தியுள்ளார். #Khamenei #nucleardeal
    டெஹ்ரான்:

    மேற்காசிய நாடுகளில் ஒன்றான ஈரான், அணு ஆயுதங்களை தயாரித்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மீது தாக்குதல் நடத்தப் போவதாக சில ஆண்டுகளுக்கு முன், ஐ.நா சபையில் புகார் கூறிய அமெரிக்கா, அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கச் செய்தது. 

    ஆனால், ஈரான், தங்களிடம் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கான தொழில்நுட்பம் இருந்தபோதிலும், அணு ஆயுதங்கள் எதையும் தயாரிக்கவில்லை என்றது. 

    இருப்பினும், உலக நாடுகள் (அமெரிக்கா, பிரிட்டைன், சீனா, பிரான்ஸ், ரஷியா, ஜெர்மனி) விதித்த பொருளாதார தடையால் கடுமையாக பாதிக்கப்பட்டதால், அணு ஆயுதப் பரவல் தவிர்ப்பு ஒப்பந்தத்தை மேற்கொள்ள தயாராக இருப்பதாக, ஈரான் அறிவித்தது. இதையடுத்து, ஈரானுக்கும், வளர்ச்சி அடைந்த ஆறு நாடுகளுக்கும் இடையே கடந்த ஜூலை மாதம் 14-7-2015 அன்று அணு ஒப்பந்தம் ஏற்பட்டது. 

    ஈரானில் யுரேனியத்தை செறியூட்டி, அணு குண்டாக மாற்ற பயன்படும் ‘சென்ட்ரிபியூஸ்’ எண்ணிக்கை மூன்றில் இரு பங்குக்கும் கீழாக குறைக்கப்படும், அடுத்த 15 ஆண்டுகளுக்கு 3.67 சதவீதத்துக்கு அதிகமாக யுரேனியத்தை செறிவூட்டக் கூடாது என முடிவு செய்யப்பட்டது. 

    இந்த ஒப்பந்தத்துக்கு முன்னதாக ஈரானில் சேமித்து வைக்கப்பட்டுள்ள யுரேனியத்தை கப்பலில் ஏற்றி வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட வேண்டும் என்ற நிபந்தனைக்கும் ஈரான் சம்மதித்தது. அதன்படி, அதிகப்படியான இருப்பில் இருந்த யுரேனியம் கப்பல்களில் ஏற்றப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    இதைதொடர்ந்து ஈரான் மீது விதிக்கப்பட்ட பல்வேறு தடைகளை அமெரிக்கா மற்றும் அதன் நேசநாடுகள் விலக்கி கொண்டன.

    ஆனால், இந்த ஒப்பந்தத்துக்கு பின்னரும் ஈரான் ரகசியமாக அணு ஆயுதங்களை தயாரிப்பதாக சமீபத்தில் இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நேதன்யாகு வீடியோ ஆதாரத்துடன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    இதைதொடர்ந்து, அமெரிக்கா ஈரானின் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ஈரானின் பொருளாதாரம் கடும் பின்னடைவை சந்தித்திருப்பதால் விலைவாசி பன்மடங்கு அதிகரித்துள்ளதால் அந்நாட்டு மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    ஈரான் சந்தித்து  வரும் வரலாறு காணாத பொருளாதாரச் சரிவு, விலைவாசி உயர்வு தொடர்பாக அதிபரின் பதில் திருப்தியளிக்காததால்  நீதி விசாரணைக்கு பாராளுமன்றம் பரிந்துரைத்துள்ளது.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில் பேசிய ஆளும்கட்சி தலைவர் அயாத்துல்லா கமேனி, ‘நமது நாட்டின் நன்மைக்கு உதவாவிட்டால், அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற நாம் தயாராக இருக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார். #Khamenei #nucleardeal 
    ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றுள்ள ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், அணு பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது தொடர்பாக ஈரான் அதிபருடன் ஆலோசனை நடத்தினார். #RouhaniPutindiscuss
    பீஜிங்:

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் ரஷியா, சீனா, பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகள் அங்கம் வகிக்கின்றன. கடந்த ஆண்டு இந்த அமைப்பில் இந்தியாவும் தன்னை ஒரு உறுப்பினராக இணைத்துக் கொண்டது.

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு சீனாவின் குவின்காடோ நகரில் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சுமார் 18 நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டு பேச உள்ளனர்.

    இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றுள்ள ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், அணு பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது தொடர்பாக ஈரான் அதிபருடன் ஆலோசனை நடத்தினார்.

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் கண்காணிப்பாளராக மட்டுமே உள்ள ஈரானுக்கு இந்த அமைப்பில் நிரந்தர இடம் கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை ரஷியா மேற்கொள்ளும் என ரவுகானியிடம் புதின் உறுதி அளித்துள்ளார்.

    சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சியை சீர்குலைக்க முயலும் சக்திகளை எதிர்த்து போராடுவதில் ஈரானும், ரஷியாவும் மும்முரமாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. #RouhaniPutindiscuss #USexitnucleardeal
    ஈரானுடன் உறவை வலுப்படுத்திக்கொள்ள உறுதி பூண்டிருப்பதாக ரஷிய வெளியுறவுத்துறை துணை மந்திரி செர்கெய் ரியாப்கோவ் கூறினார். #Russia #Iran #NuclearDeal
    மாஸ்கோ:

    வல்லரசு நாடுகளுடன் ஈரான் செய்துகொண்ட அணுஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் அறிவித்து உள்ளார்.

    ஆனால் அந்த ஒப்பந்தத்தில் தொடர்புடைய பிற நாடுகள், ஒப்பந்தத்தை தொடரப்போவதாக கூறின.

    இந்த நிலையில் ஈரானுடன் உறவை வலுப்படுத்திக்கொள்ள உறுதி பூண்டிருப்பதாக ரஷிய வெளியுறவுத்துறை துணை மந்திரி செர்கெய் ரியாப்கோவ் கூறினார்.

    இதற்கிடையே ஈரானுடன் அமெரிக்கா மனிதாபிமான அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஈரான் நாட்டில் சிறைவைக்கப்பட்டு உள்ள அமெரிக்கர்களின் குடும்பத்தினர் ஜனாதிபதி டிரம்புக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    அமெரிக்க கைதிகள் விவகாரத்தில் ஈரானுடன் டிரம்ப் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்த திறந்த மனதுடன் உள்ளதா என வெள்ளை மாளிகையிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் வெள்ளை மாளிகை உடனடியாக பதில் ஏதும் தெரிவிக்கவில்லை. #Russia #Iran #NuclearDeal
    ×