என் மலர்
நீங்கள் தேடியது "இஸ்ரேல் அரசு"
- இஸ்ரேல் உடனான சண்டையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்தது.
- அமெரிக்காவின் தாக்குதல்கள் ஈரானின் அணு ஆயுதத்தை உருவாக்கும் முயற்சிகளை தாமதப்படுத்தியுள்ளன.
கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளமான அல் உதெய்த் விமானத் தளத்தின் மீது நேற்று இரவு ஈரான் பல ஏவுகணைகளை ஏவி தாக்கியது.
அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்தது.
கடந்த ஜூன் 13 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் நடந்து வந்தது.
இந்நிலையில் ஈரானும், இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்தார்.
இதனையடுத்து, இஸ்ரேல் உடனான சண்டையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக ஈரான் அரசு ஊடகம் அறிவித்தது. முதலில் போர் நிறுத்தம் இல்லை என்று கூறிய ஈரான் தற்போது போர் நிறுத்தத்தை அறிவித்தது.
இந்நிலையில், அணு ஆயுதத்தை தயாரிக்க ஈரான் மீண்டும் முயற்சிக்க கூடாது அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜே.டி. வான்ஸ், "ஈரானின் அணு நிலையங்கள் மீதான எங்களது தாக்குதல், யுரேனியத்தை புதைப்பதை இலக்காக கொண்டு இருந்தது. யுரேனியம் புதைக்கப்பட்டுவிட்டது என்று நான் நினைக்கிறேன். ஈரானின் யுரேனியம் கையிருப்பை அகற்றவும், செறிவூட்டப்பட்ட எரி பொருளை அணு ஆயுதமாக மாற்றும் ஈரானின் திறனை அழிக்கவும் அமெரிக்கா விரும்பியது.
அதன்படி அமெரிக்கா தாக்கிய 3 செறிவூட்டல் நிலையங்களுக்கு அடியில் ஈரானின் யுரேனியம் கையிருப்பு புதைந்து போயிருக்கலாம். நாங்கள் ஈரானுடன் போரில் ஈடுபடவில்லை. ஈரானின் அணுசக்தி திட்டத்துடன் போரில் ஈடுபட்டுள்ளோம்.
அமெரிக்காவின் தாக்குதல்கள் ஈரானின் அணு ஆயுதத்தை உருவாக்கும் முயற்சிகளை கணிசமாக தாமதப்படுத்தியுள்ளன. அதுதான் தாக்குதலின் குறிக்கோளாக இருந்தது. அதை நிறைவேற்றி உள்ளோம். ஈரான் எதிர்காலத்தில் அணு ஆயுதத்தை உருவாக்க விரும்பினால் அவர்கள் மீண்டும் மிகவும் சக்திவாய்ந்த அமெரிக்க ராணுவத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்" என்று தெரிவித்தார்.
- இஸ்ரேலும் ஈரானும் மாறி மாறி ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
- ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்களை குறி வைத்து இஸ்ரேல் தாக்குகிறது.
ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்குவதில் 90 சதவீதத்தை எட்டி விட்டதாகவும், இது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கூறி இஸ்ரேல், ஈரான் மீது கடந்த 13-ந்தேதி கடும் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.
தொடர்ந்து 7 ஆவது நாளாக இரு தரப்பும் மாறி மாறி ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள், ராணுவ கட்டமைப்புகள் உள்ளிட்ட முக்கிய இடங்களை குறி வைத்து இஸ்ரேல் தாக்குகிறது. அதேபோல் இஸ்ரேலின் டெல்அவிவ், ஹைபா உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ஏவுகணைகள் வீசப்படுகின்றன.
இந்நிலையில், இஸ்ரேலில் உள்ள சொரோகா மருத்துவமனையின் மீது ஈரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் மருத்துவமனையில் சில பகுதிகள் சேதமடைந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
- இங்கிலாந்து எம்.பி.க்கள் யுவான் யாங், அப்திசம் முகமது நுழைய தடை.
- இஸ்ரேலுக்கு எதிராக வெறுக்கத்தக்க கருத்தை பரப்ப விரும்பியதால் தடை.
இங்கிலாந்து எம்.பிக்களை கொண்ட பாராளுமன்ற குழுவினர் இஸ்ரேல் நாட்டுக்கு சென்றனர். இக்குழுவில் இடம்பெற்றிருந்த ஆளும் தொழிலாளர் கட்சியை சேர்ந்த 2 பெண் எம்.பி.க்களான யுவான் யாங், அப்திசம் முகமது ஆகியோரை இஸ்ரேல் தடுத்து நிறுத்தியது. அவர்களை நாட்டுக்குள் நுழைய தடை விதித்து திருப்பி அனுப்பியது.
இதுதொடர்பாக இஸ்ரேலிய மக்கள் தொகை மற்றும் குடியேற்ற ஆணையம் கூறும்போது, இங்கிலாந்து எம்.பி.க்கள் யுவான் யாங், அப்திசம் முகமது ஆகியோர் பாதுகாப்புப் படைகளின் செயல்பாடுகளை ஆவணப்படுத்தவும் இஸ்ரேல் எதிர்ப்பு வெறுப்பைப் பரப்பவும் திட்டமிட்டுள்ளனர் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டனர்.
இஸ்ரேலுக்கு எதிராக வெறுக்கத்தக்க கருத்தை பரப்ப விரும்பியதால் அவர்களுக்கு நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது என்று தெரிவித்தது.

எம்.பிக்களுக்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பாக இஸ்ரேலுக்கு இங்கிலாந்து கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இங்கிலாந்து வெளியுறவு மந்திரி டேவிட் லாமி கூறும்போது, இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்களை இதுபோன்று நடத்துவது சரியல்ல என்பதை இஸ்ரேல் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளேன்.
இந்த நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது, எதிர்மறையானது மற்றும் ஆழ்ந்த கவலைக்குரியது. 2 எம்.பி.க்களை தொடர்பு கொண்டு ஆதரவை தெரிவித்துள்ளேன்.
இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு போர்நிறுத்தத்திற்கு திரும்புவதையும், ரத்தக்களரியை நிறுத்துவதற்கும், பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கும், காசாவில் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதில் இங்கிலாந்து அரசு கவனம் செலுத்துகிறது என்றார்.
- மாலத்தீவில் உள்ள இஸ்ரேலியாளர்கள் உடனே வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
- கடந்த காலங்களிலும் இஸ்ரேல் மீது மலாத்தீவு தடைகளை விதித்துள்ளது.
தீவு நாடான மாலத்தீவில் இஸ்ரேல் குடிமக்கள் நுழைய தடை விதிப்பதாக அந்நாட்டு அதிபர் முகமது முய்சு அறிவித்துள்ளார். பாலஸ்தீன பகுதிகள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் பெண்கள் குழந்தைகள் உட்பட இதுவரை 36,439 மக்கள் உயிரிழந்துள்ளனர்.
கடந்த மே 27 ஞாயிற்றுக்கிழமை பாலஸ்தீனத்தில் அதிக மக்கள் வாழும் ரஃபா நகரில் உள்ள முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 45 பொதுமக்கள் கொள்ளப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு உலகம் முழுவதும் கண்டனங்கள் வலுத்து வருகிறது.

முன்னதாக பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக நார்வே, ஸ்பெயின், அயர்லாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகள் அதை தனி நாடாக அங்கீகரித்தன. ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளும் பாலஸ்தீனத்தில் மீண்டும் அமைதி நிலவ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலுக்கு அனைத்து வகையிலும் ஆதரவு அளித்து வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நெருங்கும் சமயத்தில் போர் நிறுத்தத்த்துக்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு அழைப்பு விடுத்துள்ளளார். இந்த நிலையில்தான் இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மாலத்தீவு இஸ்ரேல் குடிமகன்கள் மாலத்தீவுக்குள் நுழைய தடை விதித்துள்ளது.

இதைத்தொடர்ந்து மாலத்தீவில் உள்ள இஸ்ரேலியாளர்கள் உடனே வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதையும் மீறி இங்குள்ள இஸ்ரேலியர்களுக்கு ஏதேனும் அசமபாவித்தம் நிகழ்ந்தால் அவர்களுக்கு அரசு உதவி செய்வதில் சிக்கல் ஏற்படும் என்று என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இஸ்ரேல் அரசானது மாலத்தீவில் உள்ள இஸ்ரேலியர்கள் உடனே நாடு திரும்பும்படி அறிவுறுத்தியுள்ளது.

சுற்றுலாவுக்கு பெயர் போன மாலத்தீவுக்கு உலகம் முழுவதிலும் இருந்து அதிக சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் சூழலில் இந்த அறிவிப்பானது அதன் பொருளாதாரத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த காலங்களிலும் இஸ்ரேல் மீது மலாத்தீவு தடைகளை விதித்துள்ளது.இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சனை தீவிரமாக நடந்து வந்த 1990 களில் மாலத்தீவில் இஸ்ரேலியர்களுக்கு தடைவிதிக்கபப்ட்டு, பின் 2010 இல் அதனை நீக்கி இஸ்ரேலுடன் அரசாங்க உறவுகளை மீண்டும் மாலத்தீவு புதுப்பித்தது குறிப்பிடத்தக்கது.






