search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகள் கோரிக்கை"

    • 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிடப்பட்ட மக்காசோளப்பயிர்கள் மான்களால் சேதப்படுத்தி உள்ளது.
    • விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகளும், மருந்துகளும் வழங்க வேண்டும்.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே உள்ள ஆசூர் பஞ்சாயத்தில் தளவாய்புரம் கிராமத்தில் சுமார் 150 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் பயிரிடப்பட்டு வருகின்றன.

    இந்த மக்காச்சோள பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராகும் நிலையில் கதிர்கள் விளைந்துள்ளது.

    இப்பகுதியில் நூற்றுக்கணக்கான மான்கள் கூட்டம் கூட்டமாக நள்ளிரவில் விவசாயிகள் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோள பயிர்கள் தோட்டத்திற்குள் புகுந்து அதனை தின்றும், சேதப்படுத்தியும் செல்கிறது.

    இதனால் இப்பகுதி விவசாயிகள் பாதிக்கப் பட்டுள்ளனர். மேலும் இந்த பகுதியில் நாற்கர சாலை யோரத்தில் தேவராஜன் என்பவர் 5 ஏக்கர் நிலத்தில் மக்காசோளப்பயிர் பயிரிட்டுள்ளார்.

    அதேபோல் கந்தசாமி என்பவருக்கு 5 ஏக்கர், சுப்பு ராஜ் என்பவருக்கு 6 ஏக்கர், கிருஷ்ணசாமி என்பவருக்கு 4 ஏக்கர் உள்பட 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிடப்பட்ட மக்காசோளப்பயிர்கள் மான்களால் சேதப்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறும் போது, நகைகளை வங்கியில் அடமானம் வைத்து விவசாயம் செய்து வருகிறோம். மான்கள் பயிர்களை சேதப்படுத்திய நிலையில் தற்போது எந்த பலனும் கிடைக்காமல் வங்கியில் வைத்த நகைகளை திருப்ப முடியாமல் நாங்கள் கஷ்டப்பட்டு வருகிறோம்.

    எனவே மாவட்ட நிர்வாகம், விளை நிலங்களை பார்வையிட்டு எங்களுக்கு நிவாரண வழங்க வேண்டும்.

    மேலும் இந்த பகுதியில் விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகளும், மருந்துகளும் வழங்க வேண்டும்.

    உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தாலுகா அலுவலகம் முன்பு நாங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்துவோம் என்றனர்.

    • நிலத்தடி நீரை பயன்படுத்தி சம்பா நெல் சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • மகிமலை ஆற்றில் ஆகாய தாமரை செடிகள் படர்ந்துள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி காழியப்பன்நல்லூர், எருக்கட்டாஞ்சேரி, பொறையார், காட்டுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மின் மோட்டார் மூலம் நிலத்தடி நீரை பயன்படுத்தி சம்பா நெல் சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .

    இந்த நிலையில் இப்பகுதியில் வடிகால் மற்றும் பாசனவாய்க்காலுக்கு தண்ணீர் வரும் மகிமலை ஆற்றில் ஆகாய தாமரை செடிகள் படர்ந்து இருப்பதால் மேட்டூரில் இருந்து திறந்து விடப்பட்டும் தண்ணீர் விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மதகுகளில் ஆகாயத்தாமரை செடி கொடிகள் படர்ந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் செல்வதில் தேக்க நிலை ஏற்படுகிறது .

    எனவே பருவ மழை பெய்து வருவதால் வெள்ளம் ஏற்படும் முன்பே தேங்கியுள்ள ஆகாயத்தாமரை, செடி கொடிகளை அகற்றி சம்பா பயிர்களை காப்பாற்ற பொதுப்பணித்துறையினர் விரைந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிப்பம் கட்டும் அறைக்கு கூடுதல் மானியம் வழங்க வேண்டும் என்று தமிழக விவசாய டிராக்டர் உரிமையாளர் நலச் சங்கத்தின் மாநில தலைவர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • சிப்பம் கட்டிட, தற்போது சூழ்நிலை யில் பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் ரூ.8 லட்சம் வரை செலவாகிறது.

    கிருஷ்ணகிரி:

    தமிழக விவசாய டிராக்டர் உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் மாநில தலைவர் மகாராஜன் மற்றும் நிர்வாகிகள் கிருஷ் ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி தோட்டக்க லைத்துறை மூலம் விவசாயிகள் பயிரிடும் காய்கறிகளை தரம் பிரித்து விற்பனை செய்ய ஏதுவாக 30 அடிக்கு 20 அடிக்கு என்கிற அளவில் ரூ.4 லட்சம் மதிப்பில் சிப்பம் கட்டும் அறை கட்டிட 50 சதவீதம் மானியம் அரசு வழங்குகிறது.

    ஒரு சிப்பம் கட்டிட, தற்போது சூழ்நிலை யில் பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் ரூ.8 லட்சம் வரை செலவாகிறது.

    இதில் அரசு வழங்கும் 2 லட்சம் மானியம் கட்டுபடியாகவில்லை.

    மேலும், சிப்பம் கட்டும் அறையில் 2 கதவு, 6 ஜன்னல்கள், 3 மின்விசிறி, 5 டியூப்லைட்கள், ஒரு எடை தராசு, 20 தக்காளி கிரேடு, ஒரு டேபிள், 10 சேர், 1 தண்ணீர் தொட்டி குழாய் உபகரணங்கள், 3 சிறிய தொட்டிகள் மற்றும் தடை யில்லா மின்சாரம் வழங்க யூபிஎஸ் உள்ளிட்டவை கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும்.

    மேலும், சிப்பம் கட்டும் அறை கட்டி முடித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஆய்வு செய்த பிறகு தான் மானியத்தை தொகையை விடுவிக்கின்றனர். மேலும், சிப்பம் கட்டும் அறை கட்ட புளு பிரிண்ட் தயார் செய்து வழங்கினால் தான் அறையை கட்ட அனுமதிக்கிறார்கள். எனவே, சிப்பம் கட்டும் அறைக்கான் மதிப்பீட்டுத் தொகையை, தற்போதுள்ள விலை விகிதப்படி உயர்த்த வேண்டும்.

    மானிய தொகை யை உயர்த்தி வழங்கவும், கட்டுமானம் நடைபெறும் பொழுது தேவையான பொருட்களை வழங்கினால் விவசாயிகளுக்கு பயன்பெ றுவார்கள். எனவே, சிப்பம் கட்டும் அறைக்கான மதிப் பீடு தொகை, மானியத்தை உயர்த்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

    • சூளகிரி அருகே சிம்புள்திரடி ஊராட்சிக்குட்பட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் விவசாயத்தை முதன்மையாக தொழிலாக கொண்டு செய்து வருகின்றனர்.
    • சிம்புள்திராடி பகுதியில் விவசாய பயிர்களை காய வைக்க களம் அமைத்து தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா சூளகிரி ஒன்றியத்திற்கு உள்பட்ட சிம்புள்திராடி ஊராட்சிக்குட்பட்ட அருப்பள்ளி, மையிலேப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். அவர்கள் பல ஏக்கரில் ராகி, சோளம், கம்பு, நெல் ஆகிய பயிர்களை பயிரிட்டு தற்போது அவை அறுவடை செய்து வருகின்றனர்.

    பயிர்களை அப்பகுதியில் காய வைப்பதற்காக நெற்களம் இல்லாமல் சிம்புள்திராடியில் இருந்து காளிங்காவரம் செல்லும் சாலையின் நடுவில் போட்டு வைத்துள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    எனவே, இப்பகுதில் பயிர்களை காய வைப்ப தற்காக களம் அமைத்து தரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • 2 காட்டு யானைகள் தென்னை மரத்தை சேதம் செய்தது.
    • இதனால் அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்தனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    உணவு தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.

    குறிப்பாக யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது வாடிக்கையாகி வருகிறது.

    ஜீர்கள்ளி வனச்சரகத்திக்கு உட்பட்ட அருள்வாடி பகுதியை சேர்ந்த பங்கஜப்பா விவசாயி 2 ஏக்கரில் தென்னை சாகுபடி செய்துள்ளார்.

    இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து வந்த 2 காட்டு யானைகள் அங்கிருந்த தென்னை மரத்தை சேதம் செய்தது. அருகில் இருந்த விவசாயிகள் ஒன்று சேர்ந்து யானைகளை இரவு 12 மணியளவில் காட்டு யானைகளை விரட்ட முயன்றனர்.

    3 மணி நேர போராட்டத்திக்கு பிறகு யானையை வனப்பகுதியில் விரட்டினார்கள். யானையால் 20 தென்னை மரம் சேதம் ஆனாது.

    இதனால் அபபகுதி விவசா யிகள் அச்சமடைந்த னர். யானைகள் விவசாயத் தோட்டத்தில் புகாதவாறு வணப்பகுதி சுற்றி அகழி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆடுகளின் எடை கூடுவதற்கு சேற்று தண்ணீரை கால்நடைகளுக்கு வலு கட்டாயமாக குடிக்க வைக்கின்றனர்.
    • விவசாயிகள் ஆடுகளை வாங்கி சென்ற 4 மணி நேரத்தில் துடிதுடித்து இறந்து போகிறது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, நல்லம்பள்ளி, காரிமங்கலம், பாப்பிரெட்டிபட்டி, அரூர், மொரப்பூர், பாப்பாரப்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் வார சந்தைகள் இயங்கி வருகிறது. இந்த வார சந்தைகளில் விவசாயத்திற்கு தேவையான விவசாய பொருட்கள், மளிகை பொருட்கள் காய்கறி வகைகள், ஆடு, மாடு, கோழி, உள்ளிட்டவைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    பெரும்பாலும் பசு மாடுகள் பால் உற்பத்திக்காகவும் காளை மாடுகள் விவசாய பயன்பாட்டிற்காகவும் அதிகபடியாக விவசாயிகள் வாங்கி செல்கின்றனர். அதேபோல் ஆடுகள் வளர்ப்புக்காகவும் இறைச்சிக்காகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தருமபுரி மாவட்ட வாரச்சந்தைகளுக்கு சேலம், கிருஷ்ணகிரி, ஆந்திரா, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆடுகளை வாங்க வியாபாரிகள் வருகின்றனர்.

    விவசாயிகள் அதிகமாக வளர்ப்பிற்கு செம்மறி ஆடு, வெள்ளாடு, குறியாடு, உள்ளிட்ட ஆடுகளை வாங்கி செல்கின்றனர். அவ்வாறு வாங்கிச் செல்லும் ஆடுகள் 4 மணி நேரத்தில் திடீரென இறப்பதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறும் போது நம் மாவட்டத்தில் முக்கியமாக காரிமங்கலம், நல்லம்பள்ளி, பாப்பாரப்பட்டி ,உள்ளிட்ட பகுதிகளில் வார சந்தைகளை இயங்கி வருகிறது. இங்கு விவசாயிகள் வாங்கிச் செல்லும் ஆடுகள் திடீரென துடிதுடித்து இறந்து போகிறது.

    வியாபாரிகள் விவசாயிகள் இடத்தில் நேரடியாக சென்று ஆடுகளை குறைந்த விலைக்கு வாங்கி வாரச்சந்தைகளில் விற்பனை செய்து வருகின்றனர். அவ்வாறு விற்பனை செய்யும் ஆடுகளை லாப நோக்கத்திற்காக, ஆடுகளின் எடை கூடுவதற்கு சேற்று தண்ணீரை கால்நடைகளுக்கு வலு கட்டாயமாக ஊற்றி வார சந்தைகளுக்கு கொண்டு வருவதால் ஆடுகளின் எடை கூடி புஷ்டியாக தெரிவதால் விவசாயிகளிடத்தில் வியாபாரிகள் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

    இவ்வாறு வாங்கிச் செல்லும் விவசாயிகள் வீட்டுக்கு சென்ற 4 மணி நேரத்தில் துடிதுடித்து இறந்து போகிறது. அதே போல் பாப்பாரப்பட்டி வார சந்தையில் கடந்த வியாழக்கிழமை விவசாயி வாங்கி சென்ற ஆடு 4 மணி நேரத்தில் துடிதுடித்து இறந்து போனதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.

    வியாபாரிகள் தங்களுடைய சொந்த லாப நோக்கத்திற்காக கால்நடைகளை சித்திரவதை செய்து விற்பனை செய்து வருபவர்கள் மீது கால்நடை துறையும், விலங்கின ஆர்வலர்களும் கண்டறிந்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    • சார் ஆட்சியர் ஐஸ்வர்யா தலைமையில் வட்டாட்சியர் செல்வகுமார் முன்னிலையில் நடைபெற்றது.
    • வேளாண்மை அலுவலர் ரமேஷ் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் ஐஸ்வர்யா தலைமையில் வட்டாட்சியர் செல்வகுமார் முன்னிலையில் நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்ட 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் அறுவடைக்கு தயாராக இருக்கும் நெற்பயிர்களை காட்டுப் பன்றிகள் சேதப்படுத்துவ தாகவும் சேதப்படுத்தும் நெற்பயிர்களுக்கு நிவார ணம் வழங்க வேண்டும் எனவும் ஏரியில் மணல் எடுப்பதை தடுக்கவும் விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். இதில் வேளாண்மை அலுவலர் ரமேஷ் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • பா.ம.க. சார்பில் மாவட்டம் முழுவதும் 10 லட்சம் கையெழுத்து பெறப்பட்டு முந்தைய அதிமுக அரசிடம் அளிக்கப்பட்டது.
    • பிழைப்புக்காக சொந்த மண்ணையும், உறவுகளையும் பிரிந்து எங்கெங்கோ சிதறிக் கிடப்பவர்கள் தங்கள் ஊரிலேயே நிலையாகவும், நிம்மதியாகவும் வாழ இந்த திட்டம் ஒன்று போதும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் பஞ்சப்பள்ளி (சின்னாறு), தும்பல அள்ளி, கேசர்குளி, நாகாவதி, தொப்பையாறு, ஈச்சம்பாடி உள்ளிட்ட 8 அணைக்கட்டுகள் உள்ளன.

    இதனால், இவ்வணைகளின் பாசனப் பரப்பு பகுதிகளில் மட்டும் ஓரளவு செழிப்பாக விவசாயம் நடைபெறுகிறது.

    மாவட்டத்தின் இதர பகுதிகளில் சிறந்த மண் வளம் இருந்தபோதும் பாசன நீர் வசதி இல்லாததால் பெரும்பகுதி வேளாண் நிலப்பரப்பு வானம் பார்த்த பூமியாகவே உள்ளன.

    இதனால், சொந்த நிலமிருந்தும் வாழ்வாதாரத்துக்காக பல குடும்பங்கள் ஆண்டின் பல மாதங்கள் வேறு மாவட்டங்கள், மாநிலங்களுக்கு இடம்பெயர்கின்றன.

    நிலமுள்ள குடும்பங்களின் நிலையே இவ்வாறு என்றால், விவசாய கூலித் தொழிலாளர்களின் நிலை இன்னும் அவலமாக உள்ளது.

    இந்நிலையில், மக்களின் வாழ்வாதார இடப்பெயர்வுக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தும் வகையில் ஒகேனக்கல் காவிரியில் உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை தொடர்ந்து ஒலித்து வருகிறது.

    கனமழைக் காலங்களில் கடலுக்கு செல்லும் பல டிஎம்சி நீரில் வெறும் 3 டிஎம்சி நீரை மட்டும் நீரேற்றும் திட்டம் மூலம் பென்னாகரம் அருகிலுள்ள கெண்டையன் குட்டை ஏரியில் நிறைத்து அங்கிருந்து தரைவழிக் கால்வாய்கள் மூலம் மாவட்டத்தின் பெரும்பகுதி நீர்நிலைகளை நிரப்ப வேண்டும் என்பதே இந்த திட்டம்.

    இத்திட்டம் கோரி பா.ம.க. சார்பில் மாவட்டம் முழுவதும் 10 லட்சம் கையெழுத்து பெறப்பட்டு முந்தைய அதிமுக அரசிடம் அளிக்கப்பட்டது.

    அதேபோல, கம்யூனிஸ்ட் கட்சிகள், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சியினரும், தமிழக விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட சங்கங்களும், தன்னார்வ அமைப்புகளும் இத்திட்டத்தை விரைந்து நிறைவேற்ற தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும், திட்டம் ஏட்டளவிலேயே இருந்து வருகிறது.

    இது குறித்து விவசாய சங்க பிரதிநிதிகள் சிலர் கூறும்போது, 'ஒகேனக்கல் உபரி நீர் திட்ட கோரிக்கை குறித்த உத்தரவாதங்களை முந்தைய அரசும், தற்போதைய அரசும் மாவட்ட மக்களை ஏமாற்றி வருவதாக உணர்கிறோம்.

    பிழைப்புக்காக சொந்த மண்ணையும், உறவுகளையும் பிரிந்து எங்கெங்கோ சிதறிக் கிடப்பவர்கள் தங்கள் ஊரிலேயே நிலையாகவும், நிம்மதியாகவும் வாழ இந்த திட்டம் ஒன்று போதும். எனவே, இத்திட்டத்தின் முக்கியத்துவம் உணர்ந்து தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற முன்வர வேண்டும்' என்றனர்.

    • ஆத்துமேடு பகுதிக்கு மின் வயர் செல்லும் மின் கம்பம் ஒன்று உடைந்து விழுந்தது.
    • முனீஸ்வரன் கோவில் டிரான்ஸ்பார்மரில் இருந்து ஆத்துமேடு செல்லும் மின் சப்ளை கடந்த சில நாட்களாக தடைபட்டுள்ளது.

    பெரியபாளையம்:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. இருப்பினும், ஒரு சில இடங்களில் மாலை நேரங்களில் மேகமூட்டம் ஏற்பட்டு பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

    இதனால் ஒரு சில இடங்களில் மின்தடை ஏற்பட்டும், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டும் பொதுமக்கள் பல்வேறு வகையில் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இவற்றையும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடைவடிக்கை எடுத்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண்கின்றனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் திருவள்ளூரின் மையப் பகுதியில் உள்ள புகழ்பெற்ற அம்மன் கோவிலின் வேப்பமரம் வேரோடு சாய்ந்தது. அதனை பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் அதே இடத்தில் கிரேன் மூலம் நட்டு வைத்தனர்.

    இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் மாளந்தூர் ஊராட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்பொழுது முனீஸ்வரன் கோவில் அருகே உள்ள டிரான்ஸ்பார்மரில் இருந்து ஆத்துமேடு பகுதிக்கு மின் வயர் செல்லும் மின் கம்பம் ஒன்று உடைந்து விழுந்தது. அப்பொழுது மின் தடை ஏற்பட்டது.

    இச்சம்பவத்தில் யாருக்கும் அதிர்ஷ்டவசமாக பாதிப்பு ஏற்படவில்லை. இந்நிலையில், ஊத்துக்கோட்டை துணை மின் நிலையத்தில் இருந்து வந்த மின்வாரிய அதிகாரிகள் ஆத்துமேடு பகுதிக்கு செல்லும் மின் வயர்களை துண்டித்து விட்டு மின்சார சப்ளை செய்து விட்டு சென்றனர்.

    இதனால் முனீஸ்வரன் கோவில் டிரான்ஸ்பார்மரில் இருந்து ஆத்துமேடு செல்லும் மின் சப்ளை கடந்த சில நாட்களாக தடைபட்டுள்ளது. இதனால் பத்துக்கு மேற்பட்ட விவசாயிகளின் மின் மோட்டார்கள் இயக்க முடியாத அவல நிலை நீடித்து வருகிறது.

    தற்போது குருவை சாகுபடிக்கு நாற்றங்கால் காப்பாற்ற தண்ணீர் தேவைப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு மின் கம்பத்தை மாற்றி மின் சப்ளை செய்ய கிராம மக்களும் விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என மின்வாரிய துறையின் வாட்ஸ் அப் எண்ணில் விவசாயிகள் புகார் மனு அனுப்பியும் எந்த பயனும் இல்லை என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

    • 100 ஏக்கர் நிலங்களின் சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதை அகற்றிட வேண்டும்,
    • 300 மீட்டர் தூரம் மரங்கள் அகற்றப்படாததால் சாலை அமைப்பு பணி பாதிக்கப்பட்டுள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் அரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தின் போது பங்கேற்ற விவசாயிகள் கூறுகையில், பாப்பி ரெட்டிப்பட்டி தனியார் தொழிற்சாலையில் ஆற்றில் திருட்டுத்தனமாக நீர் எடுத்தது சம்பந்தமாக மனு கொடுத்தும் , சுமார் 40 கோடி ரூபாய் வரை அரசு இழப்பீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தும் ஆடை மீது நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார்கள்.

    தொடர்ந்து அப்பகுதியில் 100 ஏக்கர் நிலங்களின் சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதை அகற்றிட வேண்டும்,

    வனப்பகுதியை ஒட்டி உள்ள நிலங்களில் காட்டெ ருமை புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்கவேண்டும் என வலியுறுத்தினர்.

    தொடர்ந்து இவ்வாண்டில் இதுவரை நடந்த விவசாயிகள் கூட்டத்தில் 291 மனுக்கள் விவசாயிகளிடம் இருந்து பெறப்பப்பட்டு அதில் பெரும்பாலானவை அதிகாரிகளின் கவனத்திற்கு அனுப்பப்ப ட்டுள்ளதாகவும், நிலுவையில் உள்ள மனுக்கள் குறித்து தகவல் தெரிவித்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.

    வள்ளி மதுரை அணைக்கட்டு கட்ட நிலம் கொடுத்தவர்களின் நிலங்கள் 10 வருடங்களாகியும் சப்-டிவிஷன் செய்து தரப்படாமல் உள்ளதால், அப்பகுதி விவசாயிகளுக்கு அரசு நல திட்டங்களான பிரதமரின் உதவி தொகை மற்றும் மானியங்கள் பெறுவதில் சிரமம் உள்ளதாக விவசாயிகள் கூறியதற்கு கோட்டாட்சியர், உடனடியாக நிலம் கொடுத்தவர்களின் பழைய பைல்களை தேடி எடுத்து அதிகாரிகள் அவர்களுக்கு சப்-டிவிஷன் செய்து தர ஏற்பாடு செய்து அறிவுறு த்தினார்.

    நரிப்பள்ளி பகுதியில் கூட்டுறவு வங்கி மூலமாக ஏற்கனவே டிராக்டர், ரொட்டோவெட்டர், கலப்பைகள் உள்ள நிலையில் அவைகள்பயனற்று சேதமடைந்துள்ளது.

    இந்நிலையில் மேலும் புதியதாக இயந்திரங்கள் வந்துள்ளது என்று மேலும் அங்கு கடன்உள்ளிட்ட விவசாயிகளின் மனுக்கள் 2 மாதங்களாகியும் நடவடிக்கை எடுக்கப்ப டாமல் உள்ளதாக குற்ற ச்சாட்டினர்.

    அதற்கு கூட்டுறவு அதிகாரிகள் கூகையில், நரிப்பள்ளி கூட்டுறவு வங்கி 9 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாகவந்த புகாரின் பேரில் ஊழியர்கள் சிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு ள்ளனர்.

    இதனால் ஆட்கள் குறைபாடு ஏற்பட்டு கூட்டுறவு வங்கியில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

    இதற்கு கோட்டாட்சியர் அருகில் உள்ள கூட்டுறவு சங்கங்களிலிருந்து அலுவலர்களை பய ன்படுத்தி விவசாயிகளின் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

    அரூர்-சித்தேரி சாலையில் சுமார் 300 மீட்டர் தூரம் மரங்கள் அகற்றப்படாததால் சாலை அமைப்பு பணி பாதிக்கப்பட்டுள்ளது.

    அதனை உடனடியாக அகற்ற விவசாயிகள் வலியுறுத்திய போது, அதற்கு வனத்துறை சார்பில் 48 புளிய மரங்கள், 4 புங்கன் மரங்கள் இன்னும் 5 மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

    வரட்டாறு, வாணியாறு கால்வாய்களை சீரமைத்திட 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை அனுமதிக்க வேண்டும்.

    அதே போன்று ஏரிகளின் அருகில் உள்ள கரை பகுதிகளை தூய்மை ப்படுத்தும் பணிகளும் இவர்களை பயன்படுத்த அனுமதி வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்க கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர் உத்தரவிட்டார்.

    கூட்டத்தில் வட்டாட்சியர்கள் பெருமாள் (அரூர்), சுப்பிரமணி (பாப்பிரெட்டிப்பட்டி), கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் இளஞ்செ ழியன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

    • அதிகாரிகள் சென்று மணல் மூட்டைகளை வைத்து தடுக்கப்பட்டது.
    • அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஏரியை தூர்வாரி கரையை பலப்படுத்த பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே கானலட்டி கிராமத்தில் அன்னையப்பன் ஏரி உள்ளது. இந்த ஏரி சுமார் 14 ஏக்கர் நிலப்பரபரப்பில் அமைந்துள்ளது.

    கடந்த ஆட்சியில் தூர்வாருவதாக ஏரியை தேர்வு செய்து பின்பு கைவிடப்பட்டது. கடந்த ஆண்டு பருவ மழையில் ஏரி நிரம்பி தாறுமாறாக உடைப்பு எற்பட்டு விளை நிலங்கள் கோழிப்பண்ணைக்குள் மழை நீர்புகுந்தது.

    பின்பு அதிகாரிகள் சென்று மணல் மூட்டைகளை வைத்து தடுக்கப்பட்டது. தற்போது சில நாட்களாக விட்டு விட்டு தொடர் மழை பெய்து வருகிறது.

    அதனால் அப்பகுதியில் பல கிராம மக்களின் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரத்திற்கு முக்கிய ஏரியாக விளங்கி வருகிறது. தற்போது தூர் வாராமல் சிதலமடைந்து காணப்பட்டது. இதை சீரமைத்து தூர் வார அப்பகுதி விவசாயிகள் ஊராட்சி நிர்வாகத்தினரிடம் மனு அளித்து வருகின்றனர்.

    இதற்கு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஏரியை தூர்வாரி கரையை பலப்படுத்த பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    • 5,000 வாழை மரங்கள் சேதமானது
    • விவசாயிகளுக்கு அரசு நஷ்ட ஈடு வழங்க வலியுறுத்தல்

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

    சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. அதிவேகமாக சூறைக்காற்று வீசியதில் ஆரணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சேதமடைந்தது நாசமானது.

    இதில் குறிப்பாக வேதாஜிபுரம் பகுதியைச் சேர்ந்த கேசவன், சேகர், ராஜேந்திரன் உள்பட 5-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிரிட்டிருந்த சுமார் 5 ஆயிரம் வாழை மரங்கள் பாதியில் முறிந்தும், வேரோடு சாய்ந்தும் நாசமடைந்துள்ளது.

    இதனால் அப்பகுதி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பை ஈடுபடுத்தும் வகையில் அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×