search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "trap"

    கோடியக்கரையில் மீன்பிடி சீசன் துவங்கி உள்ளது. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இங்கு வந்து தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    கோடியக்கரையில் மீன்பிடி சீசன் அக்டோபர் மாதம் துவங்கி மார்ச் வரை நடைபெறும். நாள்தோறும் 10 டன் முதல் 25 டன் மீன்கள் பிடிக்கப்பட்டு கோடியக்கரையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் மேலும் கர்நாடகா, கேரளா, மற்றும் சிங்கப்பூர் ஆகியவற்றுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று கோடியக்கரையில் ஒரே நாளில் 10 டன் மீன்கள், நண்டுகள் சிக்கின. கடந்த ஒரு வார காலமாக கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவர் கிராமங்களில் அதிக அளவில் காலா மீன்கள் கிடைக்கின்றன. நாள் ஒன்றுக்கு 5 முதல் 15 டன் வரை காலா மீன்களை மீனவர்கள் பிடித்து வருகின்றனர்.

    மீனவர்களது வலையில் காலா, நண்டு, புள்ளி நண்டு. வாவல், ஷீலா, ஏமீன் டன் கணக்கில் கிடைக்கின்றன. இதனால் மீனவர்கள் மகிழ்சசி அடைந்தனர். வாவல் மீன்கள் ரூ.600க்கும் காலா ரூ.300க்கும், நீலக்கால் நண்டு ரூ.400க்கும், ஏமீன்கள் ரூ.250க்கும், சிறிய வகை இறால்கள் ரூ.100 முதல் 300 வரைக்கும், சிறிய ரக மீன்கள் ரூ.150க்கும் ஏலம் போனது. காலா மீன்கள் சென்றவாரம் கிலோ ரூ.500-க்கு விற்பனையானது. தற்சமயம் அதிகளவில் கிடைப்பதால் சரிபாதியாக விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    மீன் வியாபாரிகள் அதிகளவில் கிடைக்கும்.காலா மீன்களை கொள்முதல் செய்து விற்பனை செய்வதற்கு சிரமப்படுகின்றனர். இதே சீசன் இன்னும் 15 நாட்களுக்கு நீடிக்கும் என்று வியாபாரி சுப்பிரமணியன் தெரிவித்தார்.

    தற்போது அதிக அளவில் காலா மீன் கிடைப்பதற்கு காலா மீன்கள் குஞ்சு பொறிப்பதற்காக ஆழ்கடல் பகுதியிலிருந்து அதிகளவில் வேதாரண்யம் சேற்று கடல் பகுதிக்கு வருவதே காரணம் ஆகும். பிடிபடும் அனைத்து மீன்களும் சினையுடனே காணப்படுகிறது என்றும் மீனவர்கள் தெரிவித்தனர்.

    சென்னை பெண் எம்.பி.க்கு போனில் பாலியல் தொல்லை கொடுத்த மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபர் போலீசாரிடம் சிக்கி கொண்டார்.

    நெல்லை:

    சென்னை பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. பெண் எம்.பி. ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு மர்ம போன் வந்தது. போனில் பேசியவர் தன்னை நெல்லையை சேர்ந்த அ.தி.மு.க. வி.ஐ.பி. என்று அறிமுகப்படுத்தி பேசியவர், பெண் எம்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    இதனால் அதிர்ச்சி யடைந்த அந்த பெண் எம்.பி.யின் உதவியாளர் நெல்லையில் உள்ள அந்த வி.ஐ.பி.யை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது போனில் அவர் பேச வில்லை என்றும், வேறு யாரோ பேசியதும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அந்த பெண் எம்.பி.க்கு வந்த செல்போன் நம்பரை கொடுத்து யார் என்று கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். இதைத்தொடர்ந்து நெல்லை அ.தி.மு.க. வி.ஐ.பி. பாளை போலீசில் புகார் செய்தார். அப்போது பாலியல் தொல்லை கொடுத்த போன் எண்ணையும் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக பாளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமையா மற்றும் போலீசார், சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் விசாரணை நடத்தினர். அப்போது அந்த செல்போன் தேவர்குளம் அருகே உள்ள சுண்டங்குறிச்சி பகுதியில் இருந்து பேசியது தெரியவந்தது. தொடர்ந்து அந்த செல்போன் சுவீட்ச் ஆப் செய்யப்படாமல் இயங்கியதால் போலீசார் அந்த முகவரிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபர் அந்த செல்போன் மூலம் பேசியது தெரியவந்தது. இவர் அடிக்கடி தன்னை கலெக்டர் என்றும், பல்வேறு வி.ஐ.பி.க்கள் பெயரை கூறியும் பலரிடம் பேசியதும் தெரியவந்தது. அந்த வாலிபர் மனநிலை பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருவதும், சான்றிதழ்கள் மூலம் உறுதி செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரிடம் செல்போனை கொடுக்க கூடாது என்று அவரது உறவினர்களிடம் எச்சரித்து எழுதி வாங்கினார்கள். இதைத்தொடர்ந்து அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

    ×