search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fih"

    • உலகக் கோப்பை ஆக்கி தொடரில் இந்திய அணி சி பிரிவில் இடம்பெற்றது.
    • இந்திய அணி தோல்வியை சந்திக்காமல் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    ஓமனில் நடைபெற்று வரும் முதலாவது ஐவர் மகளிர் ஆக்கி உலகக் கோப்பை போட்டியில் இந்திய மகளிர் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. உலகக் கோப்பை ஆக்கி தொடரில் இந்திய அணி சி பிரிவில் இடம்பெற்று இருந்தது.

    இதே பிரிவில் இந்தியாவுடன் அமெரிக்கா, போலந்து, நமீபியா ஆகிய அணிகளும் இடம்பெற்றிருந்தன. லீக் சுற்றில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காமல் வெற்றி பாதையில் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    அந்த வகையில் இந்திய அணி இன்று (ஜனவரி 26) காலிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்டு விளையாடியது. இந்த போட்டியில் இந்திய அணி துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி அபாரமாக விளையாடியது.

     


    போட்டி முடிவில் இந்திய அணி 11-1 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி, அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. இந்தியா சார்பில் தீபிகா சோரெங், ருதஜா பிசல் ஆகியோர் தலா 3 கோல்களும், மும்தாஜ் கான், மரியானா குஜூர் ஆகியோர் தலா 2 கோல்களும், ஓரிவா ஹெபி 1 கோல் அடித்தனர்.

    அரையிறுதி சுற்றில் இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்ள இருக்கிறது. லீக் சுற்று வெற்றிகளை தொடர்ந்து இந்திய அணி தோல்வியை சந்திக்காமல் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • தென்னாப்பிரிக்காவுடனான போட்டியை இந்திய மகளிர் அணி டிரா செய்தது.
    • இந்திய மகளிர் அணி இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தது.

    லாசானே:

    சர்வதேச ஆக்கி சம்மேளனம் சார்பில் 5 வீரர்கள் மட்டும் பங்கேற்கும் ஆக்கி போட்டி சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள லாசானே நகரில் நடைபெற்றது.

    இந்த தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி மலேஷியாவை 7-2 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது. 2வது போட்டியில் 6-2 என்ற கோல்கணக்கில் போலந்தை இந்தியா வீழ்த்தியது.

    புள்ளிகள் அடிப்படையில் இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் இந்திய அணியும் போலந்து அணியும் மோதின. இதில் 6-4 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து அறிமுகம் செய்யப்பட்ட முதல் தொடரிலேயே இந்திய அணி கோப்பையை வென்றது.

    பெண்கள் பிரிவில் இந்திய மகளிர் அணி முதல் போட்டியில் சுவிட்சர்லாந்தை 4-3 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. 2வது போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 4-4 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. இதனால் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு இந்திய மகளிர் அணி இழந்தது.

    கோடியக்கரையில் மீன்பிடி சீசன் துவங்கி உள்ளது. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இங்கு வந்து தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    கோடியக்கரையில் மீன்பிடி சீசன் அக்டோபர் மாதம் துவங்கி மார்ச் வரை நடைபெறும். நாள்தோறும் 10 டன் முதல் 25 டன் மீன்கள் பிடிக்கப்பட்டு கோடியக்கரையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் மேலும் கர்நாடகா, கேரளா, மற்றும் சிங்கப்பூர் ஆகியவற்றுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று கோடியக்கரையில் ஒரே நாளில் 10 டன் மீன்கள், நண்டுகள் சிக்கின. கடந்த ஒரு வார காலமாக கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவர் கிராமங்களில் அதிக அளவில் காலா மீன்கள் கிடைக்கின்றன. நாள் ஒன்றுக்கு 5 முதல் 15 டன் வரை காலா மீன்களை மீனவர்கள் பிடித்து வருகின்றனர்.

    மீனவர்களது வலையில் காலா, நண்டு, புள்ளி நண்டு. வாவல், ஷீலா, ஏமீன் டன் கணக்கில் கிடைக்கின்றன. இதனால் மீனவர்கள் மகிழ்சசி அடைந்தனர். வாவல் மீன்கள் ரூ.600க்கும் காலா ரூ.300க்கும், நீலக்கால் நண்டு ரூ.400க்கும், ஏமீன்கள் ரூ.250க்கும், சிறிய வகை இறால்கள் ரூ.100 முதல் 300 வரைக்கும், சிறிய ரக மீன்கள் ரூ.150க்கும் ஏலம் போனது. காலா மீன்கள் சென்றவாரம் கிலோ ரூ.500-க்கு விற்பனையானது. தற்சமயம் அதிகளவில் கிடைப்பதால் சரிபாதியாக விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    மீன் வியாபாரிகள் அதிகளவில் கிடைக்கும்.காலா மீன்களை கொள்முதல் செய்து விற்பனை செய்வதற்கு சிரமப்படுகின்றனர். இதே சீசன் இன்னும் 15 நாட்களுக்கு நீடிக்கும் என்று வியாபாரி சுப்பிரமணியன் தெரிவித்தார்.

    தற்போது அதிக அளவில் காலா மீன் கிடைப்பதற்கு காலா மீன்கள் குஞ்சு பொறிப்பதற்காக ஆழ்கடல் பகுதியிலிருந்து அதிகளவில் வேதாரண்யம் சேற்று கடல் பகுதிக்கு வருவதே காரணம் ஆகும். பிடிபடும் அனைத்து மீன்களும் சினையுடனே காணப்படுகிறது என்றும் மீனவர்கள் தெரிவித்தனர்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக விளையாடியதால் சர்வதேச ஹாக்கி தரவரிசையில் இந்திய அணி 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. #HockeyIndia #HI
    சர்வதேச ஹாக்கி பெடரேசன் இன்று அணிகளுக்கான தரவரிசையை வெளியிட்டது. இதில் இந்தியா அணி 6-வது இடத்தில் இருந்து ஒரு இடம் முன்னேறி ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. நெதர்லாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இரண்டாம் பிடித்ததால் ஒரு இடம் முன்னேறியுள்ளது.



    1906 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா முதல் இடத்தில் உள்ளது. 1883 புள்ளிகளுடன் அர்ஜென்டினா 2-வது இடத்தையும், 1709 புள்ளிகளுடன் பெல்ஜியம் 3-வது இடத்தையும், 1654 புள்ளிகளுடன் நெதர்லாந்து 4-வது இடத்தையும், 1484 புள்ளிகளுடன் இந்தியா ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளது.
    ×