search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஐந்து வீரர்கள் பங்கேற்கும் ஆக்கி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா
    X

    இந்திய ஆக்கி அணி வீரர்கள் 

    ஐந்து வீரர்கள் பங்கேற்கும் ஆக்கி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா

    • தென்னாப்பிரிக்காவுடனான போட்டியை இந்திய மகளிர் அணி டிரா செய்தது.
    • இந்திய மகளிர் அணி இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தது.

    லாசானே:

    சர்வதேச ஆக்கி சம்மேளனம் சார்பில் 5 வீரர்கள் மட்டும் பங்கேற்கும் ஆக்கி போட்டி சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள லாசானே நகரில் நடைபெற்றது.

    இந்த தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி மலேஷியாவை 7-2 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது. 2வது போட்டியில் 6-2 என்ற கோல்கணக்கில் போலந்தை இந்தியா வீழ்த்தியது.

    புள்ளிகள் அடிப்படையில் இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் இந்திய அணியும் போலந்து அணியும் மோதின. இதில் 6-4 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து அறிமுகம் செய்யப்பட்ட முதல் தொடரிலேயே இந்திய அணி கோப்பையை வென்றது.

    பெண்கள் பிரிவில் இந்திய மகளிர் அணி முதல் போட்டியில் சுவிட்சர்லாந்தை 4-3 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. 2வது போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 4-4 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. இதனால் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு இந்திய மகளிர் அணி இழந்தது.

    Next Story
    ×