search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arts show"

    • பொதுமக்களுக்கு மஞ்சப்பை, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
    • மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சியும், கரகம், தப்பாட்ட நிகழ்ச்சியும் நடந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தேசிய பசுமை படை சார்பில் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் கலந்து கொண்டு சுற்றுச்சூழலை பாதுகா ப்பதன் அவசியம் குறித்து எடுத்துக் கூறினார்.

    பின்னர் பொதுமக்க ளுக்கு மஞ்சப்பை விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மாணவ மாணவி யருக்கு மூலிகைக் கன்றுகள் வழங்கினார்.

    சுற்றுச்சூ ழல் விழிப்பு ணர்வு நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் செ.சுபாஷினி, மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பு

    ஏ.நிர்மலா ராணி, மாவட்ட கல்வி அலுவலர் தனியார் பள்ளிகள் முருகன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தெர்லின் விமல், பள்ளித்துணை ஆய்வாளர் ராமநாதன், நகராட்சி துணைத் தலைவர் செந்தில்கு மார், நாகூர் சித்திக் சேவை குழுமத்தை சேர்ந்த நாகூர் சித்திக் வேளாங்கண்ணி அந்தோணிசாமி நாகை மோகன், அமிர்தா பள்ளி முதல்வர் என் சித்ரா, சுற்றுச்சூழல் தகவல் மைய ஒருங்கிணைப்பாளர் எஸ்.செங்குட்டுவன், தேசிய பசுமைப்படை ஆசிரியர்கள் பால சண்முகம், ரமேஷ், மங்கலம், ரகு, காட்சன், அருண் முன்னாள் என்சிசி அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பின்னர் மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சியும் கலை குழுவினரின் கரகம் தப்பாட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    முன்னதாக, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய பொறியாளர் தமிழ் ஒளி வரவேற்றார்.

    முடிவில் தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் நன்றி கூறினார்.

    • மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்த நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த கிராமத்தில் செந்தூர் வாழ்வாதாரம் மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் அரசு மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு செந்தூர் வாழ்வாதாரம் மேம்பாட்டு அறக்கட்டளை இயக்குனர் அமுதா செல்வம் தலைமை தாங்கினார், தலைமை ஆசிரியர் அருண்குமார் முன்னிலை வகித்தார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக ஆற்காடு ஒன்றிய குழு தலைவர் புவனேஸ்வரி சத்தியநாதன், அகில இந்திய இளைஞர் மற்றும் மாணவர் பிரிவு செயலாளர் ஆபிரகாம் லிங்கன், உதவும் வேலைவாய்ப்பு மைய மேத்யூ, ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதி நந்தகுமார், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரஞ்சிதா கோபு ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்கள்.

    தொடர்ந்து மாணவ ர்களின் கற்றல் திறனை வெளிப்படுத்த மாணவர்களுக்கும் மட்டுமல்லாது, அவா்களது பெற்றோர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் கல்வியின் மீது ஆா்வத்தை ஏற்படுத்துகிற வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்த கரகாட்டம் ஒயிலாட்டம் பறையாட்டம் கும்மியாட்டம் பெரிய கொம்பாட்டம் நாடகம் சமூக விழிப்புணர்வு பாடல்கள் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதில் பேராசிரியர் குமரன், அஜித்குமார், பெல் சேகர், தலைவர் ரேவதி சேட்டு, சமூக ஆர்வலர்கள் ராமன், லட்சுமணன் பயிற்சியாளர்கள் ஜேம்ஸ் குணசேகரன், மெர்லின் ஜேம்ஸ், லூர்து, ஆண்ட்ரூஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர் செந்தூர் வாழ்வாதாரம் மேம்பாட்டு அறக்கட்டளை செயலாளர் குமரேசன் நன்றி கூறினார்.

    • ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது
    • விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் காந்தி பரிசு, சான்றிதழ் வழங்கினார்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் மாற்றுதிறனாளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ், பயனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் தலைமை தாங்கினார்.

    கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ், 63 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சத்து 38 ஆயிரத்து 960 மதிப்பிலான உபகரணங்கள், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்த அலுவலர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கி பேசினார்.

    • வட்டார வள மையம் சார்பில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான கலை மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சி பரமத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் நடனம், மாறுவேடம், திருக்குறள் ஒப்புவித்தல், பாட்டு உள்ளிட்ட போட்டிகளில் தங்களின் திறனை வெளிப்படுத்தினர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டார வள மையம் சார்பில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான கலை மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சி பரமத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    பள்ளியின் தலைமை ஆசிரியர் சண்முகம், வட்டார கல்வி அலுவலர் கவுரி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) அனிதாகுமாரி ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் நடனம், மாறுவேடம், திருக்குறள் ஒப்புவித்தல், பாட்டு உள்ளிட்ட போட்டிகளில் தங்களின் திறனை வெளிப்படுத்தினர்.

    விழாவில் ஒருங்கிணைப்பாளர் ராஜா, ஆசிரியர் பயிற்றுநர்கள் பார்வதி, செல்வராணி, மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களின் பெற்றோர்கள், சிறப்பு பயிற்றுநர்கள் பெரியசாமி, மகேஸ்வரி, கவிதா, இயன்முறை மருத்துவர் மலர்விழி, பள்ளி ஆயத்த முகாம் ஆசிரியர் மற்றும் உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பிளாஸ்டிக், தெர்மாகோல் தட்டு மற்றும் குவளைகள், பிளாஸ்டிக் உறிஞ்சி குழாய்கள் ஆகியவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.
    • கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சுவாமிநாதன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    திருப்பூர்:

     தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் திருப்பூர் மாவட்டம் மற்றும் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 இணைந்து பல்லடம் பேருந்து நிலையத்தில் ஒருதடவை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டியும், மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டியும் கலைநிகழ்ச்சி நடத்தினர்.

    முன்னதாக, நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் பிளாஸ்டிக் தவிர்ப்பு பற்றி விரிவாக பொது மக்களுக்கு விளக்கினார். மேலும் பிளாஸ்டிக், தெர்மாகோல் தட்டு மற்றும் குவளைகள், பிளாஸ்டிக் உறிஞ்சி குழாய்கள் ஆகியவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.

    இயற்கையாக கிடைக்கக்கூடிய மற்றும் எளிதில் மக்கக்கூடிய பொருட்களான துணிப்பைகள், வாழை இலை, காகித குவளைகள் போன்றவற்றை பயன்படுத்தவேண்டும்.நெகிழிப் பொருட்கள், மண் வளத்தை கெடுத்து விடும்.பிளாஸ்டிக் மாசில்லா தமிழகத்தை உருவாக்க அனைவரும் சபதம் எடுப்போம் என்று பேசினார். பிறகு மாணவச் செயலர்கள் அருள்குமார், அரவிந்தன், ரமேஷ் ஆகியோர் தலைமையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. பேருந்து நிலையத்தில் இருக்கும் பொது மக்களுக்கு மஞ்சப்பைகள் மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கி நெகிழி பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளை எடுத்துக் கூறினர்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் இளம் பொறியாளர்கள், அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சுவாமிநாதன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • குறைந்த வட்டியில் கடன் பெற்று, சேமிப்புகளை செலுத்தி பயனடைவீர்கள் என ஆலோசனை வழங்கப்பட்டது.
    • தெரு நிகழ்ச்சி மற்றும் தெரு நாடகம் முதலிய கலைநிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்ட்டது.

    திருவையாறு:

    திருவையாறு அருகே வைத்தியநாதன்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நிதி சார் கல்வி விழிப்புணர்வு முகாம் நடந்தது.

    இம்முகாமில் தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தமிழ்நங்கை தலைமை வகித்தார்.

    தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் பழனீஸ்வரி மற்றும் துணைப் பொதுமேலாளர் வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் அனீஷ்குமார் சிறப்புரை ஆற்றினார்.

    வைத்தியநாதன் பேட்டை, ஆச்சனூர், கடுவெளி மற்றும் பெரும்புலியூர் ஆகிய வருவாய்க் கிராமங்களுக்கு வைத்தியநாதன் பேட்டை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கம் வேளாண் சேவையாற்றி வருவதை பாராட்டியும் இக்கிரா மங்களை விவசாயப் பெருமக்கள் அனைவரும் இக்கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்து 'வேளாண்மைக்கு தேவை யான நிதி உதவிகளை குறைந்த வட்டியில்கடனாகப் பெற்றும், வேளாண் கருவி களைப் பெற்றும், சேமிப்புகளை இச்சங்க த்தில் செலுத்தியும் பயனடை யுமாறு ஆலோச னைகள் வழங்கப்பட்டது.

    கூட்டுறவு சங்கத்தின் சேவைகளை தெரு நிகழ்ச்சி மற்றும் தெரு நாடகம் முதலிய கலைநிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்ட்டது.

    இம்முகாமில் திருவையாறு மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் பாரதிதாசன், வைத்தியநாதன் பேட்டை தொடக் வேளாண்மை கூட்டுறவு சங்கச் செயலாளர் தவமூர்த்தி, தலைவர் சங்க இயக்குநர்கள், சங்க உறுப்பினர்கள் ' மகளிர் சுய உதவிக் குழுவினர், ரேசன் கடை விற்பனையாளர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியின் பொதுமேலாளர் திராவிடச் செல்வன் வாழ்த்துரையும் நிகழ்ச்சிகளைத் தொகு த்தும் வழங்கினார்.

    விழாநி றைவில் தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியின்முதன்மை வருவாய் அலுவலர் குமரவேல் நன்றி கூறினார். இம்முகாமிற்கான ஏற்பாடு களை வைத்திய நாதன் பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நிர்வா கத்தினர் செய்திருந்தார்கள்.

    • கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேச்சு
    • மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது

    வேலூர்:

    சிருஷ்டி வித்யாஷ்ரம் பள்ளியின் 19-வது ஆண்டு தடகள விளையாட்டுப் போட்டிகள் விழா நேற்று நடந்தது மகிஜா பவுண்டேஷன் அறக்கட்டளை அறங்காவலர் மகாதேவன் வெங்கடேசன் தலைமை தாங்கினார். பள்ளிகளின் குழும தலைவர் எம்.எஸ்.சரவணன் தலைமை ஆசிரியை கீதா இணைக்கல்வி ஒருங்கிணைப்பாளர் உஷா பால்சன் மெட்ரிக் பள்ளி முதல்வர் திங்கள் ஜான்சன் துணை முதல்வர் ஜாய்சி ஜெயக்குமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    துணை முதல்வர் ஹெப்சிபா வரவேற்றார் சிறப்பு விருந்தினராக வேலூர் மாவட்ட கலெக்டர் குமரவேல் பாண்டியன் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    மாணவர்கள் படிப்பில் மட்டுமின்றி விளையாட்டு மற்றும் பலதரப்பட்ட போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்று சிறப்பாக செயல்பட வேண்டும் சர்வதேச அளவில் ஒலிம்பிக் மற்றும் காமன் வெல்த் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வீரர்கள் தங்க பதக்கத்தை வென்று வருகின்றனர்.

    வரும் காலங்களில் நீங்களும் இது போன்ற போட்டிகளில் பங்கேற்பதற்கு முறையான பயிற்சி மேற்கொண்டு தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும் என்றார்.

    முதன்மை இயக்குனராக அர்ஜுனா விருந்து பெற்ற அமல்ராஜ் அந்தோணி அற்புதராஜ் கலந்துகொண்டு பேசினார்.முடிவில் பள்ளி விளையாட்டு குழு தலைவி கோலின் ஜெப்ரி நன்றி கூறினார்.

    சிருஷ்டி மெட்ரிக் பள்ளி ஆண்டு விளையாட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய கூடைப்பந்து அணி கேப்டன் சுனிதா பால்துரை கலந்து கொண்டு பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.

    ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை நர்மதா அணி தட்டி சென்றது. முடிவில் பள்ளி மாணவர் தலைவர் சிந்து பிரியா நன்றி கூறினார். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது.

    ×