search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகையில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    நிகழ்ச்சியில் கலெக்டர் ஜானி டேம் வர்கீஸ் பேசினார்.

    நாகையில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • பொதுமக்களுக்கு மஞ்சப்பை, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
    • மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சியும், கரகம், தப்பாட்ட நிகழ்ச்சியும் நடந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தேசிய பசுமை படை சார்பில் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் கலந்து கொண்டு சுற்றுச்சூழலை பாதுகா ப்பதன் அவசியம் குறித்து எடுத்துக் கூறினார்.

    பின்னர் பொதுமக்க ளுக்கு மஞ்சப்பை விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மாணவ மாணவி யருக்கு மூலிகைக் கன்றுகள் வழங்கினார்.

    சுற்றுச்சூ ழல் விழிப்பு ணர்வு நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் செ.சுபாஷினி, மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பு

    ஏ.நிர்மலா ராணி, மாவட்ட கல்வி அலுவலர் தனியார் பள்ளிகள் முருகன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தெர்லின் விமல், பள்ளித்துணை ஆய்வாளர் ராமநாதன், நகராட்சி துணைத் தலைவர் செந்தில்கு மார், நாகூர் சித்திக் சேவை குழுமத்தை சேர்ந்த நாகூர் சித்திக் வேளாங்கண்ணி அந்தோணிசாமி நாகை மோகன், அமிர்தா பள்ளி முதல்வர் என் சித்ரா, சுற்றுச்சூழல் தகவல் மைய ஒருங்கிணைப்பாளர் எஸ்.செங்குட்டுவன், தேசிய பசுமைப்படை ஆசிரியர்கள் பால சண்முகம், ரமேஷ், மங்கலம், ரகு, காட்சன், அருண் முன்னாள் என்சிசி அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பின்னர் மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சியும் கலை குழுவினரின் கரகம் தப்பாட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    முன்னதாக, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய பொறியாளர் தமிழ் ஒளி வரவேற்றார்.

    முடிவில் தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் நன்றி கூறினார்.

    Next Story
    ×