search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆற்காட்டில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
    X

    ஆற்காடு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் புவனேஸ்வரி சத்தியநாதன் கலை நிகழ்ச்சி விழிப்புணர்வை தொடங்கி வைத்தார்.

    ஆற்காட்டில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

    • மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்த நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த கிராமத்தில் செந்தூர் வாழ்வாதாரம் மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் அரசு மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு செந்தூர் வாழ்வாதாரம் மேம்பாட்டு அறக்கட்டளை இயக்குனர் அமுதா செல்வம் தலைமை தாங்கினார், தலைமை ஆசிரியர் அருண்குமார் முன்னிலை வகித்தார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக ஆற்காடு ஒன்றிய குழு தலைவர் புவனேஸ்வரி சத்தியநாதன், அகில இந்திய இளைஞர் மற்றும் மாணவர் பிரிவு செயலாளர் ஆபிரகாம் லிங்கன், உதவும் வேலைவாய்ப்பு மைய மேத்யூ, ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதி நந்தகுமார், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரஞ்சிதா கோபு ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்கள்.

    தொடர்ந்து மாணவ ர்களின் கற்றல் திறனை வெளிப்படுத்த மாணவர்களுக்கும் மட்டுமல்லாது, அவா்களது பெற்றோர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் கல்வியின் மீது ஆா்வத்தை ஏற்படுத்துகிற வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்த கரகாட்டம் ஒயிலாட்டம் பறையாட்டம் கும்மியாட்டம் பெரிய கொம்பாட்டம் நாடகம் சமூக விழிப்புணர்வு பாடல்கள் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதில் பேராசிரியர் குமரன், அஜித்குமார், பெல் சேகர், தலைவர் ரேவதி சேட்டு, சமூக ஆர்வலர்கள் ராமன், லட்சுமணன் பயிற்சியாளர்கள் ஜேம்ஸ் குணசேகரன், மெர்லின் ஜேம்ஸ், லூர்து, ஆண்ட்ரூஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர் செந்தூர் வாழ்வாதாரம் மேம்பாட்டு அறக்கட்டளை செயலாளர் குமரேசன் நன்றி கூறினார்.

    Next Story
    ×