என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    காஞ்சிபுரத்தில் 11-ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது
    X

    காஞ்சிபுரத்தில் 11-ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது

    • மாணவிக்கு குளிர்பானத்தில் மதுபானத்தை கலந்து கொடுத்துள்ளனர்.
    • காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் வழக்கு பதிவு செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் ஊராட்சியில் ஒரு தம்பதிகளுக்கு மூன்று மகள் ஒரு மகன் உள்ளனர்.

    ஒரு மகள் காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகம் அருகே உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்நிலையில் களக்காட்டூர் பகுதியை சேர்ந்த 22 வயது வாலிபர், மூன்று மாணவர்களுடன் சேர்ந்து 11ம் படிக்கும் மாணவிக்கு குளிர்பானத்தில் மதுபானத்தை கலந்து கொடுத்து களக்காட்டூர் பகுதியில் உள்ள வங்கியின் பின்புறம் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

    மூன்று மாணவர்களும் இந்த மாணவியை விட சிறிய வயது உடையவர்கள்.

    மாநகர காவல்துறையினர் இரண்டு சிறுவர்கள் மற்றும் வாலிபர் ஆகியோரை கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்று உள்ளதாகவும் மற்றொரு பள்ளி மாணவனை தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. இதில் வாலிபருக்கு இந்த பாலியல் வன்கொடுமையில் சம்பந்தமில்லை என்று பள்ளி மாணவி கூறியதாக தகவல் கூறப்படுகிறது.

    கைது செய்யப்பட்ட மூன்று மாணவர்களும் சிறியவர்கள் என்பதால் காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் வழக்கு பதிவு செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    Next Story
    ×