search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "girl suicide"

    • ஹரிபிரியா (17). இவருக்கும் மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த கூலி தொழிலாளி கவுதம் (22) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
    • 1.1.2023 அன்று திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் நேதாஜி நகரிலேயே வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.

    சேலம்:

    சேலம் களரம்பட்டி நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் ஹரிபிரியா (17). இவருக்கும் மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த கூலி தொழிலாளி கவுதம் (22) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

    இதை தொடர்ந்து காதலித்து வந்த இருவரும் கடந்த 1.1.2023 அன்று திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் நேதாஜி நகரிலேயே வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த ஹரிபிரியா நேற்று இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கிச்சிப்பாளையம் போலீசார் ஹரிபிரியாவின் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த மாதம் 28-ந்தேதி காலை 2-வது அக்ரஹாரம் பகுதியில் தனியார் பஸ் மோதியதில் பாப்பாத்தி உயிரிழந்தார்.
    • இது குறித்து டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்பாபு கண்ணா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    சேலம்:

    சேலம் மறைமலை அடிகள் தெருவை சேர்ந்தவர் பாப்பாத்தி (வயது 46). இவர் கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். இவருக்கு கல்லூரி படித்து வரும் மகளும், மகனும் உள்ளனர்.

    கடந்த மாதம் 28-ந்தேதி காலை 2-வது அக்ரஹாரம் பகுதியில் தனியார் பஸ் மோதியதில் பாப்பாத்தி உயிரிழந்தார்.

    இது குறித்து டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்பாபு கண்ணா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவை ஆய்வு செய்தபோது, அவர், சம்பவம் நடப்பதற்கு முன்னதாக, டவுன் பகுதியில் இருந்து சென்ற பஸ்சில் விழுவதற்கு ஓடி சென்றபோது மோட்டார்சைக்கிள் ஒன்று குறுக்கே வந்துள்ளது. அதில் மோதி பாப்பாத்தி கீழே விழுந்ததும், 2-வதாக வந்த பஸ்சிற்குள் ஓடிச்சென்று விழுந்து தற்கொலை செய்து ெகாள்ளும் காட்சியும் இடம் பெற்றிருந்தது. அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் தனியாக இருந்த போது பவித்ரா திடீரென மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • பென்னாலூர்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள நயப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். கூலித்தொழிலாளி. இவரது மகள் பவித்ரா (வயது 13). இவர் நயப்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த போது பவித்ரா திடீரென மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பென்னாலூர்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சத்தியபாமா பவித்ராவின் உடலை கைப்பற்றி அவரது சாவுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    பொன்னேரி அடுத்த பெருஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் (36). கூலித்தொழிலாளி. உடல் நிலை பாதிக்கப்பட்ட அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் மனவேதனை அடைந்த பார்த்திபன் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • மதுரையில் பெண் உள்பட 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • இது தொடர்பாக செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை திருப்பரங்குன்றம் முத்துமாரியம்மன் கோவில் தெரு, ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது57). இவரது மனைவி அய்யம்மாள்.

    மாரிமுத்து வுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. அவர் மது குடிப்ப தற்காக பலரிடம் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. அவரால் பணத்தை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் சரவண பொய்கை அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக திருப்பரங் குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரி முத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மதுரை ரெயிலார் நகரை சேர்ந்தவர் முரளிதரன் (54). இவருக்கு கடன் தொல்லை இருந்து வந்ததாக கூறப்படு கிறது. இதனால் வாழ்க்கை யில் விரக்தியடைந்த முரளி தரன் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கூடல்புதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை விளாங்குடி செங்கோல் நகரை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன். இவரது மனைவி ஜனனி (30). இவருக்கும் கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனமுடைந்த ஜனனி வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்றார். அப்போது அவரை உறவினர்கள் மீட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டது. இருந்தபோதிலும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை அகிம்சாபுரத்தை சேர்ந்தவர் நீலகண்டன்(35). இவருக்கு வலிப்புநோய் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் பல இடங்களில் சிகிச்சை பெற்று வந்தார். இருந்தபோதிலும் நோய் குணமாகவில்லை. இதில் வாழ்க்கையில் விரக்திய டைந்த அவர், வைகை மைய மண்டபத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காவிரி ஆறு, பழைய காவிரி பாலம் மையப்பகுதியின் அடியில் பெண் பிணம் கிடப்பதாக பொதுமக்கள் போலீசில் தெரிவித்தனர்.
    • அவர் ஆற்ரில் குதித்து தற்கொலை செய்தாரா? அல்லது யாராவது கொலை செய்து ஆற்றில் போட்டு விட்டனரா? என போலீசார் விசாரணை செய்து வந்தனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் காவிரி ஆறு, பழைய காவிரி பாலம் மையப்பகுதியின் அடியில் பெண் பிணம் கிடப்பதாக பொதுமக்கள் போலீசில் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற குமாரபாளையம் போலீசார், பிணத்தை மீட்டனர். பிணமாக கிடந்தவருக்கு சுமார் 55 வயது இருக்கும். அவர் ஆற்ரில் குதித்து தற்கொலை செய்தாரா? அல்லது யாராவது கொலை செய்து ஆற்றில் போட்டு விட்டனரா? என போலீசார் விசாரணை செய்து வந்தனர். குமாரபாளையம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் பிணமாக கிடந்தவர் குருசாமிபாளையம் கங்கராஜ் என்பவரின் மனைவி மலர்க்கொடி(வயது 34), என்பதும், இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் தெரியவந்தது. மலர்கொடியின் தாய் சரஸ்வதியின் வீடு, குமாரபாளையம் பெராந்தர்காடு பகுதியில் உள்ளது. அங்கு சென்ற மலர்கொடி வீட்டைவிட்டு வெளியேறி ஆற்றில் குதித்து தற்கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்கலத்தைச் சேர்ந்தவர் உடல்நிலை சரியாகாததால் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    • அதை பார்த்த அவரது குடும்பத்தினர் உடனடியாக ஆம்புலென்ஸ் வர வழைக்கப்பட்டு அவரை பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்கலத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி குள்ளம்மாள் (வயது 87). இவர்களுக்கு மூன்று மகன்களும், இரண்டு மகன்களும் உள்ளனர்.

    இவரது கணவர் கிருஷ்ணன் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். குள்ளம்மாள் கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவதிப்பட்டு வந்தார். சிகிச்சை பலனளிக்காததால் மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது நேற்று காலை குள்ளம்மாள் விஷம் குடித்து உயிருக்கு போராடிக் கொண்டி ருந்தார்.

    அதை பார்த்த அவரது குடும்பத்தினர் உடனடியாக ஆம்புலென்ஸ் வர வழைக்கப்பட்டு அவரை பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குள்ளம்மாள் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரி வித்துள்ளனர். இதுகுறித்து பரமத்தி வேலூர் போலீசில் புகார் செய்தனர்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்து இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆலங்குடி அருகே உள்ள மேற்பனைக்காடு கிராமத்தைச் சேர்ந்த கோகிலா (வயது 35).
    • கையெழுத்திட செல்லும் போதெல்லாம் தன்னையும், குடும்பத்தினரை–யும் கீரமங்கலம் போலீசார் மிரட்டி வருவதாக கோகிலா புகார் தெரிவித்தார்.

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மேற்பனைக்காடு கிராமத்தைச் சேர்ந்த கோகிலா (வயது 35). நடைபாதை பிரச்சினை தொடர்பாக கீரமங்கலம் போலீசாரால் கடந்த 20-ந்தேதி வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டிருந்தார்.

    பின்னர் கீரமங்கலம் போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார். அவ்வாறு கையெழுத்திட செல்லும் போதெல்லாம் தன்னையும், குடும்பத்தினரையும் கீரமங்கலம் போலீசார் மிரட்டி வருவதாக கோகிலா புகார் தெரிவித்தார்.

    இதனால் தனது நிம்மதியை இழந்து விட்டதாக கூறியதோடு, இந்த பிரச்சினையில் தனது கணவரையும் இணைத்து விட்டதால் அவர் பயந்துபோய் எங்கு போனார் என்றே தெரியவில்லை என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த கோகிலாவின் உறவினர்கள் போலீசாரை கண்டித்து சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த அறந்தாங்கி வட்டாட்சியர் மற்றும் ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்டோர் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சினைக்குரிய நடை பாதையை சீர் செய்யும் பணியையும் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் கீரமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • லாஸ்பேட்டையில் 10 வயது சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலை நரிகுறவர் குடியிருப்பை சேர்ந்தவர் பாபு. இவரது இளையமகள் காவ்யா (வயது 10). இவர் முத்தியால்பேட்டை பகுதியில் உள்ள ஒரு காப்பகத்தில் தங்கி படித்து வந்தார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு காவ்யா பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒருவர் காவ்யா தங்களது வீட்டுக்குள் புகுந்து பணம் திருடி சென்று விட்டதாக காவ்யாவின் தாய் ரேகாவிடம் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து காவ்யாவை அவரது தாய் ரேகா கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த காவ்யா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    இன்று காலை வீட்டில் காவ்யா சேலையால் தூக்குப்போட்டு தொங்கினார். இதனை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்து உடனடியாக தூக்கில் இருந்து காவ்யாவை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே காவ்யா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    லாஸ்பேட்டையில் கணவர் இறந்த துக்கத்தில் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    லாஸ்பேட்டை சாமிபிள்ளைதோட்டம் அணைக்கரை வீதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி பிரனாம்பாள் (வயது50). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. இதற்கிடையே ராஜா கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார்.

    பாசத்துடன் இருந்து வந்த கணவர் திடீரென இறந்ததால் பிரனாம்பாள் சோகத்தில் மூழ்கினார். கணவர் இறந்தது முதல் அவர் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்து வந்தார். மகன்கள் நன்றாக கவனித்து வந்தாலும் கணவரின் இறப்பை பிரனாம்பாவால் தாங்கி கொள்ள முடியவில்லை. இதனால் மனமுடைந்த பிரனாம்பாள் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகிர்உசேன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சேலத்தில் காதல் திருமணம் செய்த பெண் உள்பட 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொண்டலாம்பட்டி:

    சேலம், சூரமங்கலம் கென்னடி நகரை சேர்ந்தவர் கதிரவன். இவரது மனைவி சங்கீதா (வயது 33). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் மும்பையில் வசித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் கதிரவனுக்கும், சங்கீதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கணவரை பிரிந்து சங்கீதா சேலத்திற்கு வந்து கென்னடி நகரில் வாடகை வீட்டில் தங்கியிருந்தபடி, அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று சங்கீதா திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி சூரமங்கலம் போலீசார் திருவாக்கவுண்டனூர் புத்தர் தெருவில் வசித்து வரும் அவரது தாய் மேகலாவுக்கு தகவல் தெரிவித்தனர்.

    பின்னர் சங்கீதா உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம், அம்மாப்பேட்டை கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் தீபக் கார்த்திக். இவரது மனைவி சந்திரலேகா (வயது 20). இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

    இந்த நிலையில் சந்திரலேகா தனது உறவினர் வீட்டிற்கு சென்றபோது 2 ஆயிரம் பணம், தங்க காசு மாயமானது. இதில் மனவேதனை அடைந்த அவர் நேற்று இரவு வீட்டில தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து சேலம் வடக்கு சரக போலீஸ் உதவி கமி‌ஷனர் ஆனந்த குமார் மற்றும் ஆர்.டி.ஓ. செழியன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர் அருகே குடும்ப தகராறில் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    சிவம்பட்டி:

    வேலூர் மாவட்டம் காக்கங்கரை பகுதியைச் சேர்ந்தவர் சென்னகேசவன். இவரது மனைவி ஜோதி (வயது 48). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    சென்னகேசவனுக்கும்- ஜோதிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக தெரியவந்தது. இதனால் மனமுடைந்த ஜோதி நேற்று மாலை 4 மணியளவில் வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் குதித்தார். இதில் அவர் நீரில் மூழ்கி மூச்சு திணறி பரிதாபமாக இறந்தார். 

    அந்த வழியாக சென்ற அக்கம் பக்கத்தினர் கிணற்றில் ஜோதி பிணமாக இருப்பதை கண்டு உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஜோதியின் உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து கந்திலி போலீசார் வழக்குபதிவு செய்து ஜோதி குடும்ப தகராறு காரணமாக கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகரில் குடும்ப பிரச்சினை காரணமாக ரெயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை செய்தார்.

    விருதுநகர்:

    விருதுநகர் அல்லம்பட்டி பாண்டி கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி சுப்புலட்சுமி (வயது 55).

    கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதனால் வாக்குவாதம், சண்டை சச்சரவு ஏற்பட்டது.

    இந்த நிலையில் விருதுநகர் கவுசிகாமாநதி ரெயில்வே பாலம் அருகே வந்த சுப்புலட்சுமி அங்கு வந்த மதுரை-செங்கோட்டை பயணிகள் ரெயில் முன்பு பாய்ந்தார். இதில் அவர் உடல் சிதைந்து பலியானார்.

    இதுகுறித்து விருதுநகர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×