search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் உள்பட 4 பேர் தற்கொலை
    X

    பெண் உள்பட 4 பேர் தற்கொலை

    • மதுரையில் பெண் உள்பட 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • இது தொடர்பாக செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை திருப்பரங்குன்றம் முத்துமாரியம்மன் கோவில் தெரு, ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது57). இவரது மனைவி அய்யம்மாள்.

    மாரிமுத்து வுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. அவர் மது குடிப்ப தற்காக பலரிடம் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. அவரால் பணத்தை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் சரவண பொய்கை அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக திருப்பரங் குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரி முத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மதுரை ரெயிலார் நகரை சேர்ந்தவர் முரளிதரன் (54). இவருக்கு கடன் தொல்லை இருந்து வந்ததாக கூறப்படு கிறது. இதனால் வாழ்க்கை யில் விரக்தியடைந்த முரளி தரன் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கூடல்புதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை விளாங்குடி செங்கோல் நகரை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன். இவரது மனைவி ஜனனி (30). இவருக்கும் கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனமுடைந்த ஜனனி வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்றார். அப்போது அவரை உறவினர்கள் மீட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டது. இருந்தபோதிலும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை அகிம்சாபுரத்தை சேர்ந்தவர் நீலகண்டன்(35). இவருக்கு வலிப்புநோய் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் பல இடங்களில் சிகிச்சை பெற்று வந்தார். இருந்தபோதிலும் நோய் குணமாகவில்லை. இதில் வாழ்க்கையில் விரக்திய டைந்த அவர், வைகை மைய மண்டபத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×