search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கணக்கம்பாளையம் ஊராட்சியில் ரூ.18 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    X

    வளர்ச்சி திட்ட பணிகளுக்கான பூமிபூஜையை திருப்பூர் வடக்கு தொகுதி கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்த காட்சி.

    கணக்கம்பாளையம் ஊராட்சியில் ரூ.18 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    • ரூ.5 லட்சத்து 23 ஆயிரம் செலவில் ஆழ்துளை கிணறு அமைத்து மேல்நிலைதொட்டி பொருத்தும் பணி நடைபெற உள்ளது.
    • அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பெருமாநல்லூர் :

    திருப்பூர் ஒன்றியம் கணக்கம்பாளையம் ஊராட்சி அய்யம்பாளையம் ஏ.டி காலனியில் ரூ.3 லட்சத்து 90 ஆயிரம் செலவில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, பொங்குபாளையம் ஊராட்சி அம்மன் நகர் பகுதியில் ரூ.9 லட்சத்தில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி, காளம்பாளையம் என்.எஸ்.பி.ராஜா கார்டன் குடியிருப்பு பகுதியில் ரூ.5 லட்சத்து 23 ஆயிரம் செலவில் ஆழ்துளை கிணறு அமைத்து மேல்நிலைதொட்டி பொருத்தும் பணி நடைபெற உள்ளது.

    இந்த பணிகளுக்கான பூமிபூஜை நடந்தது. இதில் திருப்பூர் வடக்கு தொகுதி கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×