search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் புதிய கிராம சாலைகள் அமைக்கும் பணி
    X

    மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் புதிய சாலைகள் அமைக்கும் பணிகளை சண்முகையா எம்.எல்.ஏ. கொடி அசைத்து தொடங்கி வைத்த காட்சி. 

    மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் புதிய கிராம சாலைகள் அமைக்கும் பணி

    • ரூ.1 கோடியே 31 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக தார் சாலை அமைக்கப்பட உள்ளது.
    • பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகளை சண்முகையா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் எட்டயபுரம் சாலை முதல் வடக்கு சோட்டையன் தோப்பு பகுதி வரை சுமார் 2.20 கிலோ மீட்டர் தூரத்திற்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 31 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக தார் சாலை அமைக்கப்பட உள்ளது.

    சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி வடக்கு சோட்டையன் தோப்பில் நடைபெற்றது. இதில் சண்முகையா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சாலை அமைக்கும் பணிகளை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    அதைத்தொடர்ந்து ராஜீவ் காந்தி நகர் பகுதியில் உள்ள குடிசை மாற்று குடியிருப்பு பகுதியில் புதிதாக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பயணிகள் நிழற்குடை அமைக்க ரூ.5.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அங்கு பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகளையும் சண்முகையா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும், தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான சரவண குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹெலன் பொன்மணி, வசந்தா, தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. ஆதி திராவிடர் அணி மாவட்ட அமைப்பாளர் டி.டி.சி. ராஜேந்திரன், தூத்துக்குடி மாநகராட்சி 3-வது வார்டு கவுன்சிலர், தெற்கு மாவட்ட தி.மு.க. வர்த்தக அணி துணை அமைப்பு செயலாளர் ரெங்கசாமி, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஷ் பாலன், வார்டு உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்க மாரியப்பன், இளைஞரணி வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×