என் மலர்
நீங்கள் தேடியது "pudhukottai"
- சென்னையில் இருந்து விமான மூலம் நாளை இரவு 9 மணிக்கு திருச்சி வருகிறார்.
- திருச்சி கொட்டப்பட்டில் முதியோர்களுக்கான அன்புச்சோலை திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை திருச்சி வருகிறார். சென்னையில் இருந்து விமான மூலம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 மணிக்கு திருச்சி வருகிறார்.
பின்னர் டிவிஎஸ் டோல்கேட் நெடுஞ்சாலைத்துறை விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார். பின்னர் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலையில் சோமரசம்பேட்டை டாக்டர் கலைஞர் திடலில் ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. பழனியாண்டி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசுகிறார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் செல்கிறார். அங்கு மூகாம்பிகை பொறியியல் கல்லூரி திடலில் அரசு விழாவில் கலந்து கொண்டு புதுக்கோட்டை மாவட்டத்திற்கான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்து, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
இதில் ரூ. 201 கோடியே 70 லட்சம் மதிப்பில் 103 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ. 223 கோடியே 6லட்சம் செலவில் முடிவுற்ற 577 திட்ட பணிகளை திறந்து வைத்து, ரூ.348 கோடியே 43 லட்சம் மதிப்பில் 44 ஆயிரத்து 93 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி விழா பேருரை ஆற்றுகிறார்.
மொத்தம் புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ. 773 கோடியே 19 லட்சம் திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார்.
அதன் பின்னர் திருச்சி கொட்டப்பட்டில் முதியோர்களுக்கான அன்புச்சோலை திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இது முதியோர்களுக்கான பிரத்யேக பகல் நேர பராமரிப்பு மையமாகும். வீட்டில் உள்ள பெண்கள் அனைவரும் வேலைக்கு செல்லும் சூழ்நிலையில் தனியாக இருக்கும் முதியவர்கள் இங்கு பராமரிக்கப்பட உள்ளனர்.
இந்த மையங்களில் அவர்களுக்கு காலையில் டீ ஸ்னாக்ஸ், மதிய உணவு, மாலையில் டீ, காபி வழங்கப்படுகிறது. மேலும் அவரவர் சூழலுக்கு ஏற்ப கவுன்சிலிங் மற்றும் கேரம் போர்டு போன்ற பல்வேறு விளையாட்டு பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.
தமிழக முழுவதும் 25-க்கும் மேற்பட்ட அன்புச் சோலை மையங்களை அன்றைய தினம் முதலமைச்சரும் மு. க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக கொட்டப்பட்டிலிருந்து தொடங்கி வைக்கிறார்.
திருச்சி மாவட்டத்தில் பெட்டவாய்த்தலை பகுதியிலும் மற்றொரு மையம் திறக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மதியம் 2 மணி அளவில் விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.
முதல்வர் திருச்சி வருகையொட்டி நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்கள் இரவு 12 மணி வரை திருச்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறுவோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட கலெக்டர் சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முதலமைச்சர் மு க ஸ்டாலின் வருகையை முன்னிட்டு திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கொடி தோரணங்கள் கட்டப்பட்டு வருகின்றன. கட்சி நிர்வாகிகள் முதல்வரை வரவேற்று பிரம்மாண்ட பிளக்ஸ் பேனர்கள், வரவேற்பு பதாகைகள் வைக்க உள்ளனர். முதல்வரின் வருகை தி.மு.க.வினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- அதிமுக ஆட்சியில் தொங்கப்பட்ட காவிரி- குண்டாறு இணைப்பு திட்டம் திமுக அரசால் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
- காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் 2,306 கிராமங்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கப்பட்டது.
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் புதுக்கோட்டை கந்தர்வகோட்டையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, எடப்பாடி பழனிசாமி உரையாற்றியதாவது:-
அதிமுக ஆட்சியில் தொங்கப்பட்ட காவிரி- குண்டாறு இணைப்பு திட்டம் திமுக அரசால் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
ரூ.16000 கோடியில் தொடங்கப்பட்ட காவிரி- குண்டாறு திட்டம் முடக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தால் புதுக்கோட்டை சுற்றுவட்டார மக்கள் பயன் பெறுகின்றனர்.
காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் 2,306 கிராமங்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை சுற்றுவட்டார மக்களுக்காக ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது அரசு பாலிடெக்னிக் கல்லூரி தொடங்கப்பட்டது.
அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மருதங்கோன் அரசு கலை, அறிவியல் கல்லூரியின் மூலம் ஏழை, எளிய மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனர்.
வீட்டு மனை இல்லாத ஏழைகள், தாழ்த்தப்பட்டோருக்கு வீட்டு மனை கொடுத்து, இலவச வீடுகள் கட்டித் தரப்படும்.
தைப்பெங்கலை கொண்டாடும் விதமாக அனைத்து குடும்பத்திற்கும் ரூ.2500 வழங்கப்படும்.
விவசாயிகளுக்கு ஷிப்ட் முறையில் திமுக ஆட்சியில் மின்சாரம் தருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்க கோரி போராட்டம்.
- போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
புதுக்கோட்டை அருகே கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? என்பதை கண்டறிந்து, கருக்கலைப்பு செய்தபோது பெண் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பென்னாமராதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்க கோரி பெண்ணின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கருவில் இருப்பது பெண் குழந்தை என்பது தெரியவந்ததால், கருக்கலைப்பு செய்தபோது பெண் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு இழப்பீடு கோரியும், மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க கோரியும் போராட்டம் நடத்தப்பட்டது.
பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.






