என் மலர்
நீங்கள் தேடியது "பெண் உயிரிழப்பு"
- தீபா உயிரிழப்புக்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.
- மழைநீர் வடிகால் பணிகளை இனியாவது பாதுகாப்பு நெறிமுறைகளையோடு மேற்கொள்ள வேண்டும்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
சென்னை சூளைமேடு பகுதியில் நேற்றைய தினம் , மூடப்படாமல் இருந்த மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து தீபா என்ற பெண் உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
மூடப்படாமல் இருந்த மழை நீர் பணி பள்ளத்தை பல மாதங்களாக முடூவதற்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தும், அக்கறையற்று நடவடிக்கை எடுக்காமல் இருந்த காரணத்தினால் இந்த உயிர் பலி நடந்திருந்திருக்கிறது.
உயிரிழந்த பெண்ணின் உடற்கூராய்வு அறிக்கையில், சுமார் அரை மணி நேரம் அவர் உயிருக்குப் போராடியதாக வரும் தகவல்கள் பதைபதைக்க வைக்கின்றன.
மழைநீர் வடிகால் பணிகள், 95%, 97% முடிவடைந்து விட்டன என்று நான்கரை ஆண்டுகளாக சதவீதக் கணக்கு போட்ட பொம்மை முதல்வர் அரசின் அமைச்சர்களும், சென்னை மேயரும் இந்த உயிரிழப்புக்கு சொல்லப்போகும் பதில் என்ன?
ஆண்டுதோறும் நடக்கும் இது போன்ற மரணங்களை ஒருபோதும் ஏற்கமுடியாது. இதெல்லாம் எந்த பேக்கேஜில் வரும் என்று மு.க.ஸ்டாலின் சொல்வாரா?
மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த பாடில்லை;
மழைநீரும் வடிந்த பாடில்லை;
அப்பாவி உயிர்கள் பறி போவதைத் தடுக்க வக்கில்லை;
இப்படிப்பட்ட ஒரு அவல ஆட்சி இருந்து என்ன பயன்?
தீபா உயிரிழப்புக்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். அவரது குடும்பத்திற்கு உரிய நிவாரணம் இந்த அரசு உடனடியாக வழங்கவேண்டும்.
மழைநீர் வடிகால் பணிகளை இனியாவது பாதுகாப்பு நெறிமுறைகளையோடு மேற்கொள்ள வேண்டும் என மு.க.ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
- திருமண நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
- வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல மெடிக்கல் கடை உரிமையாளர் ஞானம். இவரது மனைவி ஜீவா நேற்று நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சினிமா பாட்டிற்கு உற்சாகமாக நடனமாடி கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மராப்டைப்பு ஏற்பட்டதால் நடனமாடிக்கொண்டிருந்த போதே மயங்கி விழுந்தார்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் ஜீவாவிற்கு முதலுதவி சிகிச்சை அளித்தும் கண் முழிக்காததால் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஜீவாவை பரிசோததித்த மருத்துவர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் திருமண நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். நடனமாடிக்கொண்டு இருக்கும் போது பெண் ஒருவர் மரணம் அடைந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து அங்கு இருந்தவர்கள் பதிவு செய்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் மகிழ்ச்சியாக நடனமாடும் ஜீவா திடீரென தலை சுற்றுவதை போல் தலையில் கை வைத்து விட்டு, அப்படியே மேடையில் மயங்கி விழுந்தார்.
இதுகுறித்து அங்கிருந்தவர்கள் கூறுகையில், பாடகர் வேல்முருகன் அங்கிருந்த அனைவரையும் மகிழ்ச்சியாக பாடலுக்கு நடனம் ஆடும்படி அழைத்தார். அதன் அடிப்படையில் சென்ற ஜீவாவிற்கு இந்த சோகம் நேர்ந்ததாக தெரிவித்தனர்.
- 5-வது கர்ப்பமானதை யாருக்கும் தெரிவிக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
- நேற்று வீட்டில் வைத்து குழந்தை பிறந்துள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியை சேர்ந்தவர் சிராஜூதீன். இவரது மனைவி அஸ்மா (வயது35). இவர்களுக்கு ஏற்கனவே 4 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் அஸ்மா மீண்டும் கர்ப்பமானார். அஸ்மாவுக்கு முதலில் இரண்டு குழந்தைகளும் ஆஸ்பத்திரியில் வைத்து பிறந்துள்ளது. 3 மற்றும் 4-வதாக அவருக்கு வீட்டில் வைத்தே குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில் 5-வது குழந்தையையும் வீட்டில் பிரசவம் பார்த்து பெற்றோருக்கு கணவன்-மனைவி இருவரும் முடிவு செய்துள்ளனர். இதனால் 5-வது கர்ப்பமானதை அக்கம் பக்கதத்தினர் யாருக்கும் தெரிவிக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அஸ்மாவுக்கு நேற்று வீட்டில் வைத்து குழந்தை பிறந்துள்ளது. ஆனால் பிரசவத்தின் போது அஸ்மா பரிதாபமாக இறந்துவிட்டார்.
அவருக்கு பிறந்த குழந்தை பெரும்பாவூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது. பிரசவத்தின் போது அஸ்மாவுக்கு கடுமையான பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. ஆனால் அதனை பொருட்படுத்தாமல் சிராஜூதீன் தனது மனைவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லாமல் இருந்துள்ளார். இதனால் தான் அவர் இறந்துவிட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோகுலப்பிரியா குடிநீர் தேவைக்காக தங்களது தோட்டத்தில் உள்ள மின் மோட்டாரை இயக்க சென்றார்.
- திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் கிணற்றில் தவறி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வெள்ளிதிருப்பூர் குரும்ப பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகள் கோகுலப்பிரியா (25). என்ஜினீயரிங் பட்டதாரி.
இவருக்கு திருமண நிச்சயம் செய்யப்பட்டு திருமணத்துக்கான தேதியும் குறிக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் நேற்று குடிநீர் தேவைக்காக தங்களது தோட்டத்தில் உள்ள மின் மோட்டாரை இயக்க சென்றார்.
அப்போது அவர் தவறி அருகில் உள்ள கிணற்றில் கோகுலப்பிரியா விழுந்தார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால் அவர் தண்ணீரில் மூழ்கி லியானார்.
இதையடுத்து அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து கோகுலப்பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். திருமணம் நிச்சயிக்கப்படட பெண் கிணற்றில் தவறி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- திருமணத்திற்கு பிறகு 2 பேரும் கோவையில் வசித்து வந்தனர்.
- பெற்றோர், அவரை ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்து சென்று கொண்டிருந்தனர்.
கொழிஞ்சாம்பாறை:
கோவையை சேர்ந்தவர் ஹரீஷ்குமார். இவருக்கு கடந்த வருடம் கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறை அருகே உள்ள நல்லபுள்ளியை சேர்ந்த அனிதா(27) என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பிறகு 2 பேரும் கோவையில் வசித்து வந்தனர். இந்த நிலையில் அனிதா கர்ப்பமானார். இதையடுத்து அவரது பெற்றோர் அவரை அவர்களது ஊரான நல்லபுள்ளிக்கு அழைத்து சென்றனர்.
நேற்று அதிகாலை வீட்டில் இருந்த அனிதாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. வலியால் அவர் அலறி துடித்தார். இதை பார்த்த அவரது பெற்றோர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சித்தூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
அங்கு டாக்டர்கள் அவரை சிகிச்சை பிரிவில் அனுமதித்து பிரசவம் பார்த்தனர். அப்போது டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுத்தனர். ஆனால் குழந்தை இறந்தே பிறந்தது. இதனால் உறவினர்கள் சோகம் அடைந்தனர்.
இதற்கிடையே பிரசவத்தின்போது, அனிதாவுக்கு அதிகளவில் ரத்தபோக்கு ஏற்பட்டது.
இதையடுத்து டாக்டர்கள் அவரை திருச்சூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல பரிந்துரைத்தனர். பெற்றோர், அவரை ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்து சென்று கொண்டிருந்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே, அனிதா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்கிடையே சித்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சையின்போது டாக்டர்கள் கவனக்குறைவாக செயல்பட்டதே தாயும், சேயும் இறக்க காரணம் என குற்றம்சாட்டி உள்ளனர்.
இதுகுறித்து சித்தூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாயும், சேயும் மரணம் அடைந்தது குறித்து அறிந்த கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மருத்துவத்துறை செயலாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கேரளாவில் பிரசவத்தின்போது தாயும், சேயும் உயிரிழந்தது அவர்களது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- கடந்த 20-ந்தேதி இரவு சரவணய்யா, அவரது மனைவி கீதா, மகள் இந்துஜா ஆகிய 3 பேரும் வீட்டில் விஷம் குடித்து மயங்கினர்.
- கணவர், மகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த வெள்ளை குலம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணய்யா (வயது46) விவசாயி. இவரது மனைவி கீதா (39). இவர்களது மகள் இந்துஜா(16). சரவணய்யா கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தடப்பெரும்பாக்கம் ஏ.ஏ.எம். நகரில் புதிதாக வீடு கட்டி குடும்பத்துடன் குடியேறினார்.
இந்தநிலையில் கடந்த 20-ந்தேதி இரவு சரவணய்யா, அவரது மனைவி கீதா, மகள் இந்துஜா ஆகிய 3 பேரும் வீட்டில் விஷம் குடித்து மயங்கினர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கீதா பரிதாபமாக இறந்தார். அவரது கணவர், மகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வாழை இலைகள் வெட்டுவதற்காக அந்த பகுதியில் உள்ள ஒரு தோட்டத்துக்கு சென்றுள்ளார்.
- புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி :
புதுக்கடை அருகே கிள்ளியூர் பகுதி வாறுவிளையை சேர்ந்தவர் ஜாண்றோஸ். இவரது மனைவி சாரதா (65).
இவர் வீட்டில் வாத்துகள் வளர்த்து வருகிறார். சம்பவ தினம் சாரதா வாத்துகளின் தீவனத்துக்காக வாழை இலைகள் வெட்டுவதற்காக அந்த பகுதியில் உள்ள ஒரு தோட்டத்துக்கு சென்றுள்ளார்.
அங்கு இலைகளை வெட்டும் போது, வாழை மரத்தில் விஷ வண்டுகள் (கடந்தை) கூடு கட்டி யிருந்துள்ளது. இதை கவனிக்காமல் சாரதா இலை வெட்டிய போது, விஷ வண்டுகள் அவரை கொட்டியதில் படுகாய மடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, குலசேக ரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சாரதா உயிரிழந்தார். இது தொடர்பாக சாரதா மகன் ஜாண் ஜெயசிங் என்பவர் அளித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.]
- சுவாசிப்பதில் சிரமப்பட்டதை அடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
- தீவிர சிகிச்சை பிரிவு வார்டில் மின்தடை ஏற்பட்டது. இந்நிலையில் அமராவதி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
திருவாரூர்:
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அடுத்த சிவனாகரம் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி அமராவதி (வயது 48).
இவர் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவருக்கு நுரையீரல் பிரச்சனை காரணமாக கடந்த சனிக்கிழமை அதிகாலை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். சுவாசிப்பதில் சிரமப்பட்டதை அடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு வென்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று பிற்பகல் தீவிர சிகிச்சை பிரிவு வார்டில் மின்தடை ஏற்பட்டது. இந்நிலையில் அமராவதி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
அதனைத் தொடர்ந்து அமராவதிக்கு கொடுக்கப்பட்டிருந்த வென்டிலேட்டர் கருவிக்கு வரும் மின்சாரம் தடைப்பட்டு சிறிது நேரத்தில் கருவி செயலிழந்துவிட்டது. இதனால் அமராவதி உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர். உயிரிழந்த அமராவதியின் உடல் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமராவதியின் குடும்பத்தினர் மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்தனர்.
இது குறித்து ஆஸ்பத்திரி டீன் கூறுகையில், 10 நிமிடங்களுக்குள் தடைபட்ட மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டது. மின்சாரம் தடைபட்டாலும் வென்டிலேட்டர் கருவிகள் இயங்குவதற்கான மாற்று ஏற்பாடுகள் மருத்துவமனையில் தொடர்ந்து இருந்து வருகிறது. உயிரிழப்புக்கு மின் தடை காரணமில்லை. இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
- ஓட்டலில் மீன் பிரியாணியை பார்சல் வாங்கி வீட்டுக்கு கொண்டு சென்று சாப்பிட்டனர்.
- மீன் பிரியாணி சாப்பிட்டதால் பெண் இறந்ததாக உறவினர்கள் டாக்டர்களிடம் தெரிவித்தனர்.
திருச்சூர்:
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடுங்கல்லூர் அருகே பெரிஞ்சனம் ஊராட்சி பகுதியில் ஓட்டல் உள்ளது. இங்கு கடந்த 25-ந் தேதி அதே பகுதியை சேர்ந்த சிலர் மீன் பிரியாணி சாப்பிட்டனர். மேலும் ஓட்டலில் மீன் பிரியாணியை பார்சல் வாங்கி வீட்டுக்கு கொண்டு சென்று சாப்பிட்டனர். ஆனால் அந்த ஓட்டலில் மீன் பிரியாணி சாப்பிட்ட 178 பேருக்கு திடீரென வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
அவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஓட்டலுக்கு சென்று உணவு மாதிரியை சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பினர். மேலும் அந்த ஓட்டலை மூடி 'சீல்' வைத்தனர்.
பெரிஞ்சனம் அருகே குற்றியக்கடவு பகுதியை சேர்ந்த நுசைபா (வயது 56) என்பவரும் அதே ஓட்டலில் 25-ந்தேதி மீன் பிரியாணி பார்சல் வாங்கி வந்து வீட்டில் சாப்பிட்டு உள்ளார். மறுநாள் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
மீன் பிரியாணி சாப்பிட்டதால் பெண் இறந்ததாக உறவினர்கள் டாக்டர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து திருச்சூர் அரசு ஆஸ்பத்திரியில் உடலை பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுகுறித்து திருச்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சுரேஷின் காய்கறி கறிகடைக்கு ராஜேஸ்வரி அடிக்கடி வந்து வியாபாரம் செய்தார்.
- பார்வதி மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ராஜேஸ்வரி மீது ஊற்றி தீவைத்தார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் ராமர்கோயில் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி பார்வதி (36). இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. ஒரு ஆண், பெண் குழந்தை உள்ளது. சுரேஷ் திருவள்ளூர் மார்க்கெட்டில் காய்கறி கடை வைத்துள்ளார்.
சுரேசுக்கும் புல்லரம்பாக்கம் பகுதியை சேர்ந்த கணவரை பிரிந்து வாழ்ந்த ராஜேஸ்வரி (வயது 40) என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் இருவரும் குடும்பத்தினருக்கு தெரியாமல் புட்லூர் அம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் ராஜேஸ்வரி திருவள்ளூரில் தனியாக வசித்து வந்தார்.
இந்தநிலையில் சுரேஷின் காய்கறி கறிகடைக்கு ராஜேஸ்வரி அடிக்கடி வந்து வியாபாரம் செய்தார். இதனை அறிந்த சுரேசின் மனைவி பார்வதி கண்டித்தார். மேலும் ராஜேஸ்வரியை கடைக்கு வரக்கூடாது என்று எச்சரித்தார்.
எனினும் கடந்த 9-ந்தேதி ராஜேஸ்வரி மீண்டும் சுரேசின் காய்கறி கடைக்கு வந்து வியாபாரத்தில் ஈடுபட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பார்வதி மற்றும் அவரது உறவினர்கள் மார்க்கெட்டிற்கு வந்து கடையில் இருந்த ராஜேஸ்வரியுடன் தகராறில் ஈடுபட்டனர். அப்போது பார்வதி மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ராஜேஸ்வரி மீது ஊற்றி தீவைத்தார். இதில் உடல்கருயிய ராஜேஸ்வரியை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து பார்வதி, அவரது கணவர் சுரேஷ் மற்றும் உறவினர்கள் என மொத்தம் 6 பேரை கைது செய்தனர்.
இந்தநிலையில் இன்று காலை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து திருவள்ளூர் டவுன் போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி உள்ளனர்.
இதற்கிடையே மார்க்கெட்டில் ராஜேஸ்வரி தீவைத்து எரிக்கப்பட்ட வீடீயோ காட்சி தற்போது சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
- தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்க கோரி போராட்டம்.
- போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
புதுக்கோட்டை அருகே கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? என்பதை கண்டறிந்து, கருக்கலைப்பு செய்தபோது பெண் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பென்னாமராதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்க கோரி பெண்ணின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கருவில் இருப்பது பெண் குழந்தை என்பது தெரியவந்ததால், கருக்கலைப்பு செய்தபோது பெண் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு இழப்பீடு கோரியும், மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க கோரியும் போராட்டம் நடத்தப்பட்டது.
பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
- துர்கா தேவி உடல்நிலை மோசமானது.
- போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.
மாதனூர்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் ஊராட்சி, எல். மாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் விஜய் மனைவி துர்காதேவி (வயது 26), தனியார் ஷூ கம்பெனி தொழிலாளி.
இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் தலை பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது சிகிச்சை அளிக்க டாக்டர்கள் இல்லை. இதனால் நர்சுகள் சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது.
அப்போது துர்கா தேவி உடல்நிலை மோசமானது. இதனால் அவர் உடனடியாக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு, பெண் குழந்தை பிறந்தது. இதில் துர்கா தேவிக்கு அதிகபடியான ரத்தப்போக்கு ஏற்பட்ட காரணத்தால் சேலம் மற்றும் தருமபுரி ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த துர்கா தேவியின் உறவினர்கள், ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரி நிர்வாகத்தை கண்டித்து, ஆம்பூர்-பேரணாம்பட்டு சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த உமராபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதித்தது.






