என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுப்பெண் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு
- கோகுலப்பிரியா குடிநீர் தேவைக்காக தங்களது தோட்டத்தில் உள்ள மின் மோட்டாரை இயக்க சென்றார்.
- திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் கிணற்றில் தவறி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வெள்ளிதிருப்பூர் குரும்ப பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகள் கோகுலப்பிரியா (25). என்ஜினீயரிங் பட்டதாரி.
இவருக்கு திருமண நிச்சயம் செய்யப்பட்டு திருமணத்துக்கான தேதியும் குறிக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் நேற்று குடிநீர் தேவைக்காக தங்களது தோட்டத்தில் உள்ள மின் மோட்டாரை இயக்க சென்றார்.
அப்போது அவர் தவறி அருகில் உள்ள கிணற்றில் கோகுலப்பிரியா விழுந்தார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால் அவர் தண்ணீரில் மூழ்கி லியானார்.
இதையடுத்து அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து கோகுலப்பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். திருமணம் நிச்சயிக்கப்படட பெண் கிணற்றில் தவறி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்