search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கடை அருகே விஷ வண்டுகள் கொட்டியதில் படுகாயமடைந்த பெண் உயிரிழப்பு
    X

    புதுக்கடை அருகே விஷ வண்டுகள் கொட்டியதில் படுகாயமடைந்த பெண் உயிரிழப்பு

    • வாழை இலைகள் வெட்டுவதற்காக அந்த பகுதியில் உள்ள ஒரு தோட்டத்துக்கு சென்றுள்ளார்.
    • புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி :

    புதுக்கடை அருகே கிள்ளியூர் பகுதி வாறுவிளையை சேர்ந்தவர் ஜாண்றோஸ். இவரது மனைவி சாரதா (65).

    இவர் வீட்டில் வாத்துகள் வளர்த்து வருகிறார். சம்பவ தினம் சாரதா வாத்துகளின் தீவனத்துக்காக வாழை இலைகள் வெட்டுவதற்காக அந்த பகுதியில் உள்ள ஒரு தோட்டத்துக்கு சென்றுள்ளார்.

    அங்கு இலைகளை வெட்டும் போது, வாழை மரத்தில் விஷ வண்டுகள் (கடந்தை) கூடு கட்டி யிருந்துள்ளது. இதை கவனிக்காமல் சாரதா இலை வெட்டிய போது, விஷ வண்டுகள் அவரை கொட்டியதில் படுகாய மடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, குலசேக ரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சாரதா உயிரிழந்தார். இது தொடர்பாக சாரதா மகன் ஜாண் ஜெயசிங் என்பவர் அளித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.]

    Next Story
    ×