search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Alappuzha"

    ஆலப்புழா அருகே கார் மீது பஸ் மோதிய விபத்தில் பெண் டாக்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர் பிரசன்னகுமார். இவரது மகள் பார்வதி (வயது 25). அங்குள்ள ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றினார். இவரது நண்பர் நிதிஷ்பாபு (26). இருவரும் ஆலப்புழாவில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு காரில் சென்றனர்.

    திருமண நிகழ்ச்சி முடிந்ததும் அதே காரில் கோழிக்கோடு புறப்பட்டனர். கார் ஆலப்புழாவில் உள்ள பல்லாதுருத்தி என்ற இடத்தில் கார் வந்தது. அப்போது கோழிக்கோட்டில் இருந்து திருவனந்தபுரத்திற்கு திருமண கோஷ்டியுடன் பஸ் வந்தது. திடீரென கார் மீது பஸ் மோதியது. இதில் கார் நெறுங்கி தீ பிடித்தது.

    காரில் சிக்கிய டாக்டர் பார்வதியும் அவரது நண்பரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று 2 பேரையும் மீட்டனர். பின்னர் கார் முற்றிலும் எரிந்தது.

    மீட்கப்பட்ட டாக்டர் பார்வதி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட சிறிது நேரத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயத்துடன் நிதிஷ்பாபு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஆலப்புழா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கேரள மாநிலத்தையே புரட்டி போட்ட மழை வெள்ளத்தில் இருந்து மக்களை மீட்க உதவிய மீனவர்களை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். #KeralaFloods #Congress #RahulGandhi
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த 8-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை 11 நாட்கள் பெய்த பேய் மழை காரணமாக மாநிலம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. மழை, வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற மத்திய மற்றும் மாநில அரசு அமைத்து இருந்த மீட்பு குழுக்கள் மற்றும் இராணுவ படையினர் மிகவும் கடுமையாக போராடினர்.

    இந்த போராட்டத்தில்,கேரள மீனவர்களுக்கும் மிக முக்கிய பங்கு உண்டு. தங்களது படகுகள் போன்ற பல்வேறு வழிகளில் மீனவர்கள் தங்களது மிகச்சிறந்த பங்களிப்பை அளித்தனர். இதையடுத்து கேரளாவில் மழை விடுத்த நிலையில், தற்போது சீரமைக்கும் பணியில் மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது.

    இந்நிலையில், கேரள மழை வெள்ள சேதங்களை பார்வையிட  இன்று கேரளா வந்தடைந்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  ஹெலிகாப்டர் மூலம் செங்கனூர் பகுதிக்கு சென்றார். அங்குள்ள ஒரு முகாமுக்கு நேரில் சென்ற ராகுல் காந்தி, அங்கு தங்கியிருந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்.



    செங்கனூர் பகுதியை பார்வையிட்ட பின்பு, ராகுல்காந்தி ஆலப்புழா சென்றார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், கேரள வெள்ளத்தில் இருந்து மக்களை காப்பாற்ற தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது உதவிய மீனவர்களுக்கு கேடயங்களை வழங்கி, வாழ்த்து கூறி கவுரவித்தார்.

    இதேபோல், நாளை கேரள முதல்மந்திரி பிணராயி விஜயன் தலைமையில் மீனவர்களுக்கு பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி நிசாகாந்தி அரங்கத்தில் நடைபெற உள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மீன்வளத்துறை மந்திரி மெர்சி குட்டி அம்மா, சுற்றுலாத்துறை மந்திரி கடகம்பள்ளி உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #KeralaFloods #Congress #RahulGandhi
    ×