என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "boat house"
- நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள படகு இல்லத்தை மேம்படுத்தும் பணியானது பல மாதங்களாக நடைபெற்று வருகிறது.
- படகு இல்லத்தில் குப்பைகளை குவித்து வைத்தது போல் காட்சி பொருளாகவே படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் தமிழக சுற்றுலா தலங்களில் முக்கிய சுற்றுலா இடமாக உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் கூடும் மையப்பகுதியாக நட்சத்திர ஏரி விளங்கி வருகிறது. ஏரியில் சுற்றுலாத்துறை சார்பில் 2 படகு இல்லங்களும், நகராட்சி சார்பில் ஒரு படகு இல்லமும் இருந்து வந்தது.
கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏரியில் படகு சுவாரி செய்து மகிழ்ந்து செல்வர். நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள படகு இல்லத்தை மேம்படுத்தும் பணியானது பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விரைவாக நடைபெற்று வந்த பணிகள் முடிவு பெறாமல் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கொடைக்கான லுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும் அலை க்கழிப்புக்கு உள்ளாவதாக குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் படகு இல்லத்தில் குப்பைகளை குவித்து வைத்தது போல் காட்சி பொருளாகவே படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது . எனவே நகராட்சி படகு இல்லத்தை விரைந்து சுற்றுலாப் பயணிகளின் வசதிக்கு திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து ள்ளது.
- படகு முழுவதும் தேடிப் பார்த்தும் அவர் இல்லாததால், தண்ணீருக்குள் விழுந்திருக்கலாம் என்று அவரது சகோதரி கருதினார்.
- தீபக் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருவனந்தபுரம்:
கோவை பெரிய நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் தீபக் (வயது 25).வியாபாரம் செய்து வந்த இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது தனது சகோதரி தீபிகாவுடன் கேரள மாநிலம் ஆலப்புழாவிற்கு சுற்றுலா வந்திருந்தார்.
தீபக்குடன் சேர்த்து மொத்தம் 10 பேர் வந்துள்ளனர். அவர்கள் அங்கு படகு இல்லம் ஒன்றில் பயணம் மேற் கொண்டனர். படகு இல்லத்தை பொறுத்தவரை, மதியம் முதல் மாலை வரை நீர்பரப்பில் செல்லும். இரவு நேரத்தில் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்படும்.
அதேபோல் தீபக் குடும்பத்தினர் சென்ற படகு, சவாரி முடிந்து பள்ளத்துருத்தி அருகே உள்ள ஹவுஸ் போர்டு முற்றத்தில் நிறுத்தப்பட்டது. அந்த இடத்தில் படகு இல்லத்தில் தீபக் மற்றும் அவருடன் வந்திருந்தவர்கள் தங்கியிருந்தனர்.
இந்நிலையில் திடீரென தீபக்கை மட்டும் காணவில்லை. படகு முழுவதும் தேடிப் பார்த்தும் அவர் இல்லாததால், தண்ணீருக்குள் விழுந் திருக்கலாம் என்று அவரது சகோதரி கருதினார். அது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீபக்கை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து தேடுதல் பணியில் ஈடுபட 'டைவிங்' வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தீபக் தங்கி இருந்த படகு நின்று கொண்டிருந்த பகுதியில் தண்ணீருக்குள் மூழ்கி தேடினர்.
அப்போது தண்ணீரில் மூழ்கிய நிலையில் தீபக் பிணமாக கிடந்தார். அவரது உடலை டைவிங் வீரர்கள் மேலே கொண்டு வந்தனர். அவரது உடலை பார்த்த சகோதரி மற்றும் உடன் வந்தவர்கள் கதறி அழுதனர். சுற்றுலா வந்த இடத்தில் இப்படி ஆகிவிட்டதே என புலம்பினர்.
இதையடுத்து தீபக் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சுற்றுலா வந்த இடத்தில் தமிழக வாலிபர் பலியான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- மொடக்குறிச்சி ஒன்றியம் அவல்பூந்துறை சோளிபாளையம் பகுதியில் 205 ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது.
- இந்த குளத்தில் ஆண்டு முழுவதும் வற்றாமல் தண்ணீர் இருந்து கொண்டே இருப்பதால் சுற்றுவட்டார பகுதிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருந்து வருகிறது.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி ஒன்றியம் அவல்பூந்துறை சோளிபாளையம் பகுதியில் 205 ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது. மொடக்குறிச்சி ஒன்றியத்துக்குட்பட்ட குளூர் ஊராட்சியில் ஒரு பகுதியும், அவல்பூந்துறை பேரூராட்சியில் ஒரு பகுதியும் என மொத்தம் 205 ஏக்கர் பரப்பளவில் குளம் அமைந்துள்ளது.
இந்த குளத்திற்கு எல்.பி.பி. வாய்க்காலில் இருந்து வரும் கசிவு நீர் வடிந்து குளத்திற்கு தண்ணீர் வருகிறது. இந்த குளத்தைச் சுற்றி ஒரு பகுதியில் கருவேலம் மரங்களும், மற்றொரு பகுதியில் விவசாய நிலங்கள் உள்ளது.
இந்த குளத்தில் ஆண்டு முழுவதும் வற்றாமல் தண்ணீர் இருந்து கொண்டே இருப்பதால் சுற்றுவட்டார பகுதிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருந்து வருகிறது. அதேபோல் விவசாய கிணறுகள், ஆழ்துழாய் கிணறு போன்றவைகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதில்லை.
மேலும் அவல்பூந்துறை குளத்திற்கு அருகில் வெள்ளோடு பறவைகள் சரணாயம் உள்ளதால் அங்கிருந்து பல்வேறு வகையான பறவைகள் இந்த குளத்திற்கு வந்து சென்று உணவுகளை தின்றுவிட்டு செல்கிறது .
இந்நிலையில் அவல்பூந்துறை குளத்தை படகு இல்லம் அமைப்பதற்காக சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் கீழ் கடந்த 2013–-2014-ம் ஆண்டு ஒரு கோடியே 72 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து படகு இல்லம் அமைப்பதற்காக குளத்தை தூர் வாரி ஆழப்படுத்தி சமன் படுத்தும் பணி நடைபெற்று வந்தது. ஆனால் ஆங்காங்கே தண்ணீர் இருந்ததால் சமன் செய்யும் பணி காலதாமதம் ஏற்பட்டது.
அதனைத்தொடர்ந்து தண்ணீர் வற்றியதையடுத்து மீண்டும் குளத்தை ஆழப்படுத்தி சமன்செய்யும் பணி நடைபெற்றது.
மேலும் படகு இல்லத்திற்கு தேவையான பூங்கா, பார்வையாளர்கள் அமர்வதற்கு செட், மேல்நிலை குடிநீர் தொட்டி, பார்வையாளர்கள் நின்று பார்ப்பதற்கான மேடைகள், ஆண், பெண் என தனித்தனியாக கழிப்பறைகள் மற்றும் அவல்பூந்துறை மெயின் ரோட்டில் படகு இல்லம் என்ற ஆர்ச் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மெயின்ரோட்டில் இருந்து படகு இல்லம் வரை கான்கிரீட் சாலை, ஏற்காட்டில் இருந்து இரண்டு படகு என படகு இல்லத்திற்கு தேவையான அனைத்தும் ஏற்பாடும் செய்யப்பட்டது.
ஆனால் குளத்தை முழுமையாக ஆழப்படுத்தாமலும், சமன்படுத்தாமலும் இருந்ததால் படகு இல்லத்தை திறந்து வைத்தும் இதுவரை படகு இல்லம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வராமல் இருந்து வருகிறது.
இதனால் படகு இல்லத்தில் உள்ள பூங்கா, பார்வையாளர்கள் செட் போன்றவைகள் புதர் மண்டி கிடக்கிறது.
இதுகுறித்து மொடக்குறிச்சி ஒன்றியக்குழு தலைவர் கணபதி கூறியதாவது:
அவல்பூந்துறை குளம் முழுவதும் மொடக்குறிச்சி ஒன்றிய அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒரு பகுதி குளூர் ஊராட்சியிலும் மற்றொரு பகுதி அவல்பூந்துறை பேரூராட்சியிலும் உள்ளது. கடந்த 2013–-2014-ம் ஆண்டு குளத்தில் படகு இல்லம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குளத்தை தூர் வாரி ஆழப்படுத்தி சமன் செய்யும் பணி நடைபெற்று வந்தது.
ஆனால் குளத்திற்கு வரும் தண்ணீர் அதிகரித்ததால் வேலை செய்யமுடியாத நிலை ஏற்பட்டது. அதனால் படகு இல்லத்தை திறந்து வைத்தும் இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டு வரமுடியவில்லை. குளத்தில் தண்ணீர் வற்றினால் மட்டுமே மீண்டும் சமன்படுத்தி படகு இல்லத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரமுடியும் என தெரிவித்தார்.
தி.மு.க. தலைவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதி மறைவை தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் இயங்கி வரும் ஊட்டி படகு இல்லத்தின் நுழைவு வாயில்கள் நேற்று மூடப்பட்டு பூட்டு போடப்பட்டு இருந்தது. அதில் ஒரு நுழைவுவாயிலில் கருணாநிதி உருவப்படம் வைக்கப்பட்டு கருப்பு கொடி கட்டப்பட்டு இருந்தது.
ஊட்டி படகு இல்லத்தில் வார விடுமுறை இல்லாத நாட்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்படும். ஆனால், நேற்று படகு இல்லத்தின் உள்பகுதியில் மிதி படகுகள், மோட்டார் படகுகள், துடுப்பு படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. வளாகத்தில் உள்ள பல்வேறு கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஊட்டி படகு இல்ல சாலையில் குதிரை சவாரி ரத்து செய்யப்பட்டது. ஊட்டி படகு இல்லம் மூடப்பட்டதால், அங்கு கார்களில் வந்த சில சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
தோட்டக்கலைத்துறை மூலம் செயல்பட்டு வரும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா ஆகிய சுற்றுலா தலங்கள் திறந்து இருந்தன. ஆனால் சுற்றுலா பயணிகள் கூட்டமின்றி வெறிச்சோடி இருந்ததை காண முடிந்தது. சில சுற்றுலா பயணிகள் மட்டும் கொட்டும் மழையில் குடைகளை பிடித்தபடி பூங்காவில் வலம் வந்தனர்.
சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா நகரமான ஊட்டிக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் சீதோஷ்ண நிலையை அனுபவிக்க வருகை தருவார்கள். இதனால் ஊட்டியில் முக்கிய சந்திப்பு பகுதியான சேரிங்கிராஸ் பகுதியில் எப்போதும் வாகனங்கள் சென்று கொண்டு இருக்கும். ஆனால், நேற்று வாகன போக்குவரத்து இன்றி சேரிங்கிராஸ் பகுதி வெறிச்சோடியது.
அதேபோல் ஊட்டி-கோத்தகிரி சாலை, ஊட்டி-குன்னூர் சாலையில் குறைந்த எண்ணிக்கையிலேயே வாகனங்கள் சென்றன. கமர்சியல் சாலை, மாரியம்மன் கோவில் சந்திப்பு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் மிகவும் குறைந்து காணப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்