என் மலர்tooltip icon

    செய்திகள்

    எரிந்து சேதமான கார். பலியான டாக்டர் பார்வதி.
    X
    எரிந்து சேதமான கார். பலியான டாக்டர் பார்வதி.

    ஆலப்புழா அருகே கார் மீது பஸ் மோதிய விபத்தில் பெண் டாக்டர் பலி

    ஆலப்புழா அருகே கார் மீது பஸ் மோதிய விபத்தில் பெண் டாக்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர் பிரசன்னகுமார். இவரது மகள் பார்வதி (வயது 25). அங்குள்ள ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றினார். இவரது நண்பர் நிதிஷ்பாபு (26). இருவரும் ஆலப்புழாவில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு காரில் சென்றனர்.

    திருமண நிகழ்ச்சி முடிந்ததும் அதே காரில் கோழிக்கோடு புறப்பட்டனர். கார் ஆலப்புழாவில் உள்ள பல்லாதுருத்தி என்ற இடத்தில் கார் வந்தது. அப்போது கோழிக்கோட்டில் இருந்து திருவனந்தபுரத்திற்கு திருமண கோஷ்டியுடன் பஸ் வந்தது. திடீரென கார் மீது பஸ் மோதியது. இதில் கார் நெறுங்கி தீ பிடித்தது.

    காரில் சிக்கிய டாக்டர் பார்வதியும் அவரது நண்பரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று 2 பேரையும் மீட்டனர். பின்னர் கார் முற்றிலும் எரிந்தது.

    மீட்கப்பட்ட டாக்டர் பார்வதி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட சிறிது நேரத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயத்துடன் நிதிஷ்பாபு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஆலப்புழா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×