search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொன்னேரியில் ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை முயற்சி- சிகிச்சை பெற்ற பெண் உயிரிழப்பு
    X

    பொன்னேரியில் ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை முயற்சி- சிகிச்சை பெற்ற பெண் உயிரிழப்பு

    • கடந்த 20-ந்தேதி இரவு சரவணய்யா, அவரது மனைவி கீதா, மகள் இந்துஜா ஆகிய 3 பேரும் வீட்டில் விஷம் குடித்து மயங்கினர்.
    • கணவர், மகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த வெள்ளை குலம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணய்யா (வயது46) விவசாயி. இவரது மனைவி கீதா (39). இவர்களது மகள் இந்துஜா(16). சரவணய்யா கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தடப்பெரும்பாக்கம் ஏ.ஏ.எம். நகரில் புதிதாக வீடு கட்டி குடும்பத்துடன் குடியேறினார்.

    இந்தநிலையில் கடந்த 20-ந்தேதி இரவு சரவணய்யா, அவரது மனைவி கீதா, மகள் இந்துஜா ஆகிய 3 பேரும் வீட்டில் விஷம் குடித்து மயங்கினர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கீதா பரிதாபமாக இறந்தார். அவரது கணவர், மகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×