என் மலர்
நீங்கள் தேடியது "நலத்திட்டப் பணிகள்"
- சென்னையில் இருந்து விமான மூலம் நாளை இரவு 9 மணிக்கு திருச்சி வருகிறார்.
- திருச்சி கொட்டப்பட்டில் முதியோர்களுக்கான அன்புச்சோலை திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை திருச்சி வருகிறார். சென்னையில் இருந்து விமான மூலம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 மணிக்கு திருச்சி வருகிறார்.
பின்னர் டிவிஎஸ் டோல்கேட் நெடுஞ்சாலைத்துறை விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார். பின்னர் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலையில் சோமரசம்பேட்டை டாக்டர் கலைஞர் திடலில் ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. பழனியாண்டி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசுகிறார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் செல்கிறார். அங்கு மூகாம்பிகை பொறியியல் கல்லூரி திடலில் அரசு விழாவில் கலந்து கொண்டு புதுக்கோட்டை மாவட்டத்திற்கான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்து, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
இதில் ரூ. 201 கோடியே 70 லட்சம் மதிப்பில் 103 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ. 223 கோடியே 6லட்சம் செலவில் முடிவுற்ற 577 திட்ட பணிகளை திறந்து வைத்து, ரூ.348 கோடியே 43 லட்சம் மதிப்பில் 44 ஆயிரத்து 93 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி விழா பேருரை ஆற்றுகிறார்.
மொத்தம் புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ. 773 கோடியே 19 லட்சம் திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார்.
அதன் பின்னர் திருச்சி கொட்டப்பட்டில் முதியோர்களுக்கான அன்புச்சோலை திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இது முதியோர்களுக்கான பிரத்யேக பகல் நேர பராமரிப்பு மையமாகும். வீட்டில் உள்ள பெண்கள் அனைவரும் வேலைக்கு செல்லும் சூழ்நிலையில் தனியாக இருக்கும் முதியவர்கள் இங்கு பராமரிக்கப்பட உள்ளனர்.
இந்த மையங்களில் அவர்களுக்கு காலையில் டீ ஸ்னாக்ஸ், மதிய உணவு, மாலையில் டீ, காபி வழங்கப்படுகிறது. மேலும் அவரவர் சூழலுக்கு ஏற்ப கவுன்சிலிங் மற்றும் கேரம் போர்டு போன்ற பல்வேறு விளையாட்டு பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.
தமிழக முழுவதும் 25-க்கும் மேற்பட்ட அன்புச் சோலை மையங்களை அன்றைய தினம் முதலமைச்சரும் மு. க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக கொட்டப்பட்டிலிருந்து தொடங்கி வைக்கிறார்.
திருச்சி மாவட்டத்தில் பெட்டவாய்த்தலை பகுதியிலும் மற்றொரு மையம் திறக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மதியம் 2 மணி அளவில் விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.
முதல்வர் திருச்சி வருகையொட்டி நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்கள் இரவு 12 மணி வரை திருச்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறுவோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட கலெக்டர் சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முதலமைச்சர் மு க ஸ்டாலின் வருகையை முன்னிட்டு திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கொடி தோரணங்கள் கட்டப்பட்டு வருகின்றன. கட்சி நிர்வாகிகள் முதல்வரை வரவேற்று பிரம்மாண்ட பிளக்ஸ் பேனர்கள், வரவேற்பு பதாகைகள் வைக்க உள்ளனர். முதல்வரின் வருகை தி.மு.க.வினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- தமிழக அரசு பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டப் பணிகள் மற்றும் வளர்ச்சித்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது
- அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்களும் வளர்ச்சித்திட்ட பணிகளுக்காக தேவைப்படும் திட்ட மதிப்பீட்டினை தயார் செய்யவும்
நாகர்கோவில் :
கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு துறைகளின் சார்பில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்து துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமையில் கலெக்டர் அலுவலக வரு வாய் கூட்டரங்கில் நடை பெற்றது.
கூட்டத்தில், அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறிய தாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டப் பணிகள் மற்றும் வளர்ச்சித்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது . குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்து, உடனுக்குடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது.
கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட தேசிய மற்றும் மாநில நெடுஞ் சாலைகளில் பழுதடைந்த சாலைகளை சீர மைக்கும் பணியினை நெடுஞ்சாலைத்துறை மாவட்ட செயற்பொறியாளர் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடனடி யாக சாலைகளை செப்பனிட்டு போக்கு வரத்துக்கும் பொதுமக்க ளுக்கும் எந்தவித பாதிப்பும் இன்றி பயன்பாட்டிற்கு கொண்டுவர அறிவு றுத்தப்படுகிறது. அணைகளில் வரும் நீரின் அளவிற்கேற்ப தேவையான அளவிற்கு தண்ணீர் திறந்து விடவும், அதிகமான தண்ணீர் வரும் பகுதிகள் குறித்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அறிந்துகொள்ளும் வகையில் எச்சரிக்கை அமைக்கவும், பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு), வருவாய்த்துறை உள்ளிட்ட துறைசார்ந்த அலுவலர்க ளுக்கு அறிவுறுத்தப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து அரசு மருத்துவ மனை களையும் சுகாதார மாகவும் , தூய்மையாகவும் வைத்துக்கொள்வதோடு பொதுமக்கள் சிகிச்சை மேற்கொள்ளும் நோய்க ளுக்கு தேவையான மருந்து கள் இருப்பில் வைத்திருக்க வும் அறிவுறுத்தப்பட்டுள் ளது. அதிக கனமழை பெய் தால் கடலில் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்துவதோடு மீன்பிடிக்க சென்று ஏதேனும் மீனவர்கள் திரும்பவில்லை எனில் அதுகுறித்த அறிக்கை யினையும் மாவட்ட நிர்வா கத்திற்கு தெரிவிப்ப தோடு, அவர்கள் கரை சேர்வ தற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளவும், கடல ரிப்பு தடுப்பதற்கான நடவடிக்கையினை மேற் கொள்ளவும் மீன்வளத் துறை உதவி இயக்குநருக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் , கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலை களிலுள்ள தெருவிளக்குகள் பழுது ஏற்பட்டிருந்தால் அதனை உடனடியாக சரி செய்யவும், மரங்களின் கிளைகள் உள்ளிட்டவைகள் ஏதேனும் இடையூறு இருந்தால் மரக்கிளை களை அகற்றவும், பொது மக்களுக்கு எவ்வித இடை யூறுமின்றி மின் இணைப்பு கள் தொடர்ந்து கிடைப்ப தற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள மின்சா ரத்துறை சார்ந்த அலுவலர்க ளுக்கு அறிவுறுத்தப்பட்டது .
அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்களும் வளர்ச்சித்திட்ட பணிகளுக்காக தேவைப்படும் திட்ட மதிப்பீட்டினை தயார் செய்யவும் . அதற்கான நிதி ஒதுக்கீடு பெற்று தருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாக மேற்கொள்ளப்படும். மேற்குறிப்பிட்ட பணிகளில் மெத்தனமாக இருக்கும் அலுவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
இவ்வாறு அவர் பேசி னார். கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா , நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.






