search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Servaikaranpatti"

    • அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகள் தொடக்க விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.
    • சிவபத்பநாதன் கலந்து கொண்டு ஊரணியை சீரமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

    கடையம்:

    கடையம் யூனியனுக்கு உட்பட்ட சேர்வைகாரன்பட்டி ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவரும் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினருமான ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.

    யூனியன் சேர்மன் செல்லம்மாள், துணைச் சேர்மனும் ஒன்றிய செயலாள ருமான மகேஷ் மாயவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்பநாதன் கலந்து கொண்டு ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டேறிப் பட்டி ஊரணியை சீரமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

    இதில் கிளைச் செயலாளர்கள் சமுத்திரப் பாண்டியன், செல்வராஜ், ராஜேந்திரன், ஆத்தி செல்வன், முருகன், கலைச் செல்வன், ராமசாமி, ஞானகுமார், ஜெயராஜ் ஆறுமுகநயினார், வார்டு உறுப்பினர்கள் புஷ்பம், பரமேஸ்வரி, ஊராட்சி செயலர் கதிரேசன், மற்றும் நடராஜன், தேன்ராஜ், சபரிராம் ராஜ், நவீன் கிருஷ்ணன், தங்கராஜ், ரத்தினம், ரேவதி, முத்து விஜயன், முப்புடாதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புதிய தரைமட்ட நீர்தேக்க தொட்டியை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாபன் திறந்து வைத்தார்.
    • கடையம் வடக்கு ஒன்றிய செயலாளரும் யூனியன் துணைச் சேர்மனுமான மகேஷ்மாயவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கடையம்:

    கடையம் யூனியனுக்குட்பட்ட சேர்வைகாரன்பட்டி ஊராட்சியில் ஊராட்சி நிதியில் கட்டப்பட்ட புதிய தரைமட்ட நீர்தேக்க தொட்டி திறப்பு விழா நடைபெற்றது. தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாபன் தலைமை தாங்கி நீர்தேக்க தொட்டியை திறந்து வைத்தார்.ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் வரவேற்று பேசினார்.

    கடையம் வடக்கு ஒன்றிய செயலாளரும் யூனியன் துணைச் சேர்மனுமான மகேஷ்மாயவன், ஊராட்சி துணைத்தலைவர் ராசம்மாள் லெட்சுமணன், ஊராட்சி உறுப்பினர் சந்தண ரோஜா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    இதில் கவுன்சிலர் ரம்யா, கிளைச் செயலாளர்கள் செல்வராஜ், ராஜேந்திரன், சாமுவேல், பொன்னுத்துரை, செல்லத்துரை, ஆத்திச் செல்வன், பெரியசாமி, மற்றும் கோபி ஜனார்த்தனன், பொன்ராஜ், பேச்சிமுத்து, ஞானகுமார், முருகன், பட்ட நாடார், துரை என்ற மாடசாமி, கணேசன், மாரிச் செல்வம், அருணாசலம், பாலக்குமார், கந்தசாமி, நடராஜன், கலைச் செல்வன், ரேவதி, நித்யா, சாந்தா, முப்புடாதி, கண்ணன், தேன்ராஜா, நவீன் கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×