search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Inaugration"

    • சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தின் திறப்பு விழா நடைபெற்றது.
    • புகையில்லாமல் சமையல் செய்யும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பள்ளி மாணவிகளை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.

    தாராபுரம்:

    தாராபுரம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடத்தை தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    விழாவிற்கு நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் தலைமை தாங்கினார். முன்னதாக தளவாய்பட்டிணம் ஊராட்சி ஊத்துப்பாளையத்தில் கால்நடை கிளை மருத்துவமனையை திறந்து வைத்தார்.

    அப்போது அங்கன்வாடி மையம் சார்பில் புகையில்லாமல் சமையல் செய்யும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பள்ளி மாணவிகளை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.

    • புதிய தரைமட்ட நீர்தேக்க தொட்டியை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாபன் திறந்து வைத்தார்.
    • கடையம் வடக்கு ஒன்றிய செயலாளரும் யூனியன் துணைச் சேர்மனுமான மகேஷ்மாயவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கடையம்:

    கடையம் யூனியனுக்குட்பட்ட சேர்வைகாரன்பட்டி ஊராட்சியில் ஊராட்சி நிதியில் கட்டப்பட்ட புதிய தரைமட்ட நீர்தேக்க தொட்டி திறப்பு விழா நடைபெற்றது. தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாபன் தலைமை தாங்கி நீர்தேக்க தொட்டியை திறந்து வைத்தார்.ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் வரவேற்று பேசினார்.

    கடையம் வடக்கு ஒன்றிய செயலாளரும் யூனியன் துணைச் சேர்மனுமான மகேஷ்மாயவன், ஊராட்சி துணைத்தலைவர் ராசம்மாள் லெட்சுமணன், ஊராட்சி உறுப்பினர் சந்தண ரோஜா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    இதில் கவுன்சிலர் ரம்யா, கிளைச் செயலாளர்கள் செல்வராஜ், ராஜேந்திரன், சாமுவேல், பொன்னுத்துரை, செல்லத்துரை, ஆத்திச் செல்வன், பெரியசாமி, மற்றும் கோபி ஜனார்த்தனன், பொன்ராஜ், பேச்சிமுத்து, ஞானகுமார், முருகன், பட்ட நாடார், துரை என்ற மாடசாமி, கணேசன், மாரிச் செல்வம், அருணாசலம், பாலக்குமார், கந்தசாமி, நடராஜன், கலைச் செல்வன், ரேவதி, நித்யா, சாந்தா, முப்புடாதி, கண்ணன், தேன்ராஜா, நவீன் கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வாசுதேவநல்லூரில் கே.சுப்பிரமணிய நாடார்- வடிவம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பில் கல்லூரிகள், பள்ளி செயல்பட்டு வருகின்றன.
    • சட்டக்கல்லூரி தொடங்கு வதற்கு மத்திய, மாநில அரசின் அனுமதி பெற்று திறப்பு விழா நாளை நடைபெறுகிறது.

    வாசுதேவநல்லூர்:

    வாசுதேவநல்லூரில் எஸ்.தங்கப்பழம் சட்டக் கல்லூரி திறப்பு விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

    வாசுதேவநல்லூரில் கே.சுப்பிரமணிய நாடார்- வடிவம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பில் செயல்பட்டு வரும் எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தின் சார்பாக பாலிடெக்னிக் கல்லூரி, வேளாண்மை கல்லூரி, மருத்துவ கல்லூரி, மெட்ரிகுலேசன் பள்ளி ஆகியவை செயல்பட்டு வருகின்றன.

    தற்போது இங்கு புதிதாக எஸ்.தங்கப்பழம் சட்டக்கல்லூரி தொடங்கு வதற்கு மத்திய, மாநில அரசின் அனுமதி பெற்று, அதன் புதிய கட்டிடங்கள் திறப்பு விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது.

    கல்லூரி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு எஸ்.டி. கல்வி குழுமத்தின் நிறுவனர் எஸ்.தங்கப்பழம் தலைமை தாங்குகிறார். கல்வி குழுமத்தின் செயலாளர் எஸ்.டி. முருகேசன் வரவேற்று பேசுகிறார். தமிழக சபாநாயகர் அப்பாவு, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் மற்றும் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் பவானி சுப்புராயன், தாரணி, ஸ்ரீமதி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கின்றனர்.

    ஏற்பாடுகளை எஸ்.டி. கல்வி குழுமத்தின் நிறுவனர் எஸ்.தங்கப்பழம், கல்வி நிறுவனங்களின் தாளாளர் எஸ்.டி.முருகேசன் மற்றும் விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.

    ×