கள்ளர் பள்ளியில் அமைச்சர் ஆய்வு

திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரில் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் ஆய்வு நடத்தினார். கூடுதலாக இந்த பள்ளியில் ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
கள்ளர் பள்ளியில்  அமைச்சர் ஆய்வு
Published on

திருமங்கலம்

திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரில் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 386 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 19 ஆசிரியர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

கூடுதலாக இந்த பள்ளியில் ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதனை அமைச்சர் ராஜகண்ணப்பன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

பள்ளி மைதானம் மற்றும் சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com