search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pass percentage"

    • பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் தேர்ச்சி சதவீதத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெற்றது.
    • கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 97.27 ஆகும்.

    விருதுநகர்

    தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகின. விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 10 ஆயிரத்து 465 மாணவர்களும், 11 ஆயிரத்து 843 மாணவிகளும் தேர்வெழுதினர்.

    இன்று வெளியான தேர்வு முடிவில் 10 ஆயிரத்து 135 மாணவர்களும், 11 ஆயிரத்து 693 மாணவிகளும் என மொத்தம் 21 ஆயிரத்து 828 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

    மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 96.85 ஆகும். மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 98.73 சதவீதம் ஆகும். மொத்த சதவீதம் 97.85 ஆகும்.

    மாநிலத்திலேயே மாவட்ட அளவில் பிளஸ்-2 தேர்வில் அதிக தேர்ச்சி சதவீதம் பெற்று முதன்மை மாவட்டமாக விருதுநகர் திகழ்கிறது.

    கடந்த 25 ஆண்டுகளாக பிளஸ்-2 தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பெற்று வந்தது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக முதலிடத்தை இழந்த விருதுநகர் மாவட்டம் தற்போது மீண்டும் அதிகளில் தேர்ச்சி விகித்தை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது.

    கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 97.27 ஆகும்.

    • இயக்குனரகத்தில் இருந்து ஒருங்கிணைக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
    • அடுத்த தேர்வில் இப்பாடத்தில் மாணவர்களின் நிலை எப்படி என ஆய்வு செய்வதோடு ஒப்பீடு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சமீபத்தில் நடந்த காலாண்டு தேர்வு மதிப்பெண்கள் எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. இதை இயக்குனரகத்தில் இருந்து ஒருங்கிணைக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

    இதன்படி தேர்ச்சி சதவீதம் குறைந்த பாடங்கள், பள்ளிகள் குறித்த விபரங்கள் திரட்டப்பட்டுள்ளன. இதுசார்ந்து, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும், தலைமையாசிரியர்களுக்கான கூட்டத்தில் எடுத்துரைத்து ஆய்வு செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

    குறிப்பாக பள்ளி வாரியாக குறிப்பிட்ட பாடத்தில் மட்டும் தேர்ச்சி சதவீதம் குறைந்திருந்தால், அதற்கான காரணத்தை உரிய ஆசிரியரே குறிப்பிட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான தீர்வையும், அந்த ஆசிரியரே தெரிவிக்க வேண்டும். அடுத்த தேர்வில் இப்பாடத்தில் மாணவர்களின் நிலை எப்படி என ஆய்வு செய்வதோடு ஒப்பீடு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பிளஸ்-1 தேர்வு முடிவுகள் விழுப்புரம் மாவட்டத்தில் 84.67 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • விழுப்புரம் மாவட்ட முதன்மை அலுவலகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா பிளஸ்-1 தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

    விழுப்புரம்:

    தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 10 முதல் 31-ம் தேதி வரை நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 8 லட்சத்து 83 ஆயிரத்து 882 மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். இதில் மாணவர்கள் 4 லட்சத்து 33 ஆயிரத்து 684 பேரும், மாணவிகள் 4 லட்சத்து 50 ஆயிரத்து 198 பேரும் தேர்வு எழுதினர்.  இந்நிலையில்தான் விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 9-ல் தொடங்கி 18-ம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து ஜூன் 27-ந்தேதி (இன்று) காலை 10 மணிக்கு பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டன.விழுப்புரம் மாவட்ட முதன்மை அலுவலகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா பிளஸ்-1 தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

    விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 189 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன இதில் அரசு பள்ளிகள் 130 தனியார் பள்ளிகள் 69 உள்ளனமொத்த தேர்வு எழுதியவர்கள் எண்ணிக்கை 22 ஆயிரத்து 308 பேர் ஆகும் இதில் 19 ஆயிரத்து 517 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த 2019 ஆம் கல்வி ஆண்டை விட 8 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது ஆனால் அரசு பள்ளி மாணவர்கள் 15 ஆயிரத்து 795 பேர் தேர்வு எழுதினார்கள் இதில் 12 ஆயிரத்து 950 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர் அரசுப்பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் 84.67 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

    தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-1 தேர்வு முடிவு வெளியானது. திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்ச்சி அதிகரித்துள்ளது. #Plus1result
    திருவள்ளூர்:

    பிளஸ்-1 தேர்வு முடிவு இன்று வெளியானது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 359 பள்ளிகளில் மொத்தம் 41 ஆயிரத்து 26 பேர் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 17 ஆயிரத்து 614 பேரும், மாணவிகள் 20 ஆயிரத்து 110 பேரும் என மொத்தம் 38 ஆயிரத்து 724 பேர் தேர்ச்சி பெற்றனர்.

    இது 94.39 சதவீதம் தேர்ச்சி ஆகும். கடந்த ஆண்டை விட 3.54 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் 102 அரசு பள்ளிகளில் 14 ஆயிரத்து 246 பேர் தேர்வு எழுதினர். இதில் 12 ஆயிரத்து 339 பேர் தேர்ச்சி பெற்றனர். #Plus1result
    தமிழகத்தில் பிளஸ்1 அரசு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. #TNResults #11thResult #Plus1Result
    சென்னை:

    தமிழகத்தில் 11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 6-ந்தேதி முதல் 22-ந் தேதி வரை நடந்தது. இந்த தேர்வினை சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதியுள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்ததையடுத்து தேர்வு முடிவு இன்று வெளியிடப்படுள்ளது.

    www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவு எண், பிறந்த தேதி, மாதம், வருடத்தை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம். மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.


    11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 95 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 96.5 சதவீதமும், மாணவர்கள் 93.3 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசுப் பள்ளிகள் 90.6 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 2636 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. பிளஸ்1 தேர்வு எழுதிய 78 சிறைக் கைதிகளில் 62 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. ஈரோடு மாவட்டம் 98.08 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. திருப்பூர் மாவட்டம் 97.90 சதவீத தேர்ச்சியுடன் இரண்டாம் இடத்தையும், கோவை மாவட்டம் 97.60 சதவீத தேர்ச்சியுடன் 3-ம் இடத்தையும் பிடித்துள்ளது. 89.29 சதவீத தேர்ச்சியுடன் வேலூர் மாவட்டம் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. #TNResults #11thResult #Plus1Result
    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், மெட்ரிக் பள்ளிகள் தேர்ச்சி விகிதத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளன. #SSLCResult #TNResult
    சென்னை:

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் இன்று இணையதளங்கள் மூலம் வெளியிடப்பட்டுள்ளன. www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் அறிந்துகொள்ளலாம். இந்த ஆண்டு 94.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தைப் பொருத்தவரை மெட்ரிக் பள்ளி முதலிடத்தில் உள்ளது. மெட்ரிக் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 98.79 ஆகும். பெண்கள் பள்ளிகள் 96.27 சதவீத தேர்ச்சி பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளன. இருபாலர் பள்ளிகளில் பயின்றோர் 94.81 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளிகள் 94.36 சதவீதம், அரசுப் பள்ளிகள் 91.36 சதவீதம், ஆண்கள் பள்ளிகள் 87.54 சதவீதம் என்ற அளவில் தேர்ச்சி விகிதம் உள்ளது.



    பாடவாரியாக பார்க்கையில் அறிவியல் படத்தில் அதிக அளவில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அறிவியல் பாடத்தில் 98.47 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சமூக அறிவியலில் 96.75 சதவீதம், ஆங்கிலத்தில் 96.50 சதவீதம், மொழிப்பாடத்தில் 96.42 சதவீதம், கணிதத்தில் 96.18 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதேபோல் மாவட்ட வாரியாக தேர்ச்சி விவரம், மொத்த மதிப்பெண் அடிப்படையிலான பகுப்பாய்வு உள்ளிட்ட பல்வேறு விவரங்களை http://dge.tn.nic.in/SSLC_2018_ ANALYSIS.pdf என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். #SSLCResult #TNResult
    மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க உள்ளதாக புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிளஸ்-2 தேர்வு முடிவுகளில் வழக்கம்போல மாணவிகள்தான் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுக்க உள்ளது.

    இதற்காக பள்ளிகளில் பள்ளி நேரம் தவிர பிற நேரங்களிலும் சிறப்பு வகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதோடு மாணவர்கள், ஆசிரியர்களிடம் ஒருங்கிணைப்பு ஏற்படுத்த உள்ளோம். ஏற்கனவே பள்ளிகளில் பெற்றோர், ஆசிரியர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த குழுவினர் மாணவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பார்கள். ஏற்கனவே இந்த குழுவின் கண்காணிப்பால் தேர்ச்சி வீதம் உயர்ந்துள்ளது.

    வரும் காலத்திலும் தேர்ச்சி வீதம் உயரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவரிடம் கோடை வெயிலின் தாக்கத்தில் விடுமுறை நீட்டிக்கப்படுமா? என்று கேள்வி கேட்டபோது, அதிகாரிகளோடு கலந்து பேசி முடிவெடுப்போம் என தெரிவித்தார்.

    ×