search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "increases"

    தென்மேற்கு பருவமழை எதிரொலியால் ஊட்டியில் அணைகளில் நீர்மட்டம் கிடு, கிடு என உயர்ந்து வருகிறது. இதில் 3 அணைகள் நிரம்பின.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றன. சுற்றுலா நகரமான ஊட்டியில் சுற்றுலா தலங்களை கண்டு ரசிப்பதற்காக ஆண்டுதோறும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.

    மேலும் சுற்றுலா பயணிகள் தங்கும் வகையில் ஊட்டியில் ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் உள்ளன. ஊட்டி நகராட்சியில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் குடிநீர் தேவையை பல்வேறு அணைகள் பூர்த்தி செய்கின்றது.

    குறிப்பாக பார்சன்ஸ்வேலி அணை, மார்லிமந்து அணை, கோடப்பமந்து அப்பர் அணை, கோரிசோலா அணை, டைகர்ஹில் அணை, தொட்டபெட்டா அப்பர் அணை உள்ளிட்ட அணைகள் உள்ளன. கடந்த ஆண்டு ஊட்டியில் தென்மேற்கு பருவமழை குறைவாக பெய்தது. இதனால் அணைகளில் நீர் இருப்பு குறைந்த நிலையில் காணப்பட்டது.

    ஆனால், இந்த ஆண்டு ஊட்டி நகரில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு வனப்பகுதிகளில் இருந்து பெருக்கெடுத்து வரும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதால் நீர்மட்டம் கிடு, கிடுவென உயர்ந்து வருகிறது.

    ஊட்டியில் பெய்த தென்மேற்கு பருவமழை எதிரொலியால் முக்கிய அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருகின்றது. கோடப்பமந்து அப்பர் அணை தனது முழு கொள்ளளவான 12 அடி, தொட்டபெட்டா லோயர் அணை 14 அடி, கிளன்ராக் அணை 7 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்து உள்ளன. அந்த 3 அணைகள் நிரம்பி உள்ளன.

    முக்கிய குடிநீர் ஆதாரமான பார்சன்ஸ்வேலி அணையின் நீர்மட்டம் 46 அடியாக உயர்ந்து உள்ளது. மார்லிமந்து அணை தனது 23 அடி முழு கொள்ளளவில் 12.5 அடியை எட்டி உள்ளது. தற்போது அந்த அணை கடல்போல் காட்சி அளிக்கிறது. கோடப்பமந்து லோயர் அணை நிரம்பும் தருவாயில் உள்ளது.

    ஊட்டியில் உள்ள அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து உள்ளதால், போதுமான அளவு தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால் ஊட்டி நகராட்சியில் வசித்து வரும் மற்றும் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இல்லை. இதுகுறித்து ஊட்டி நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ரவி கூறும்போது, ஊட்டி நகராட்சியில் தென்மேற்கு பருவமழையால் அணைகளின் நீர்மட்டம் அதிகரித்து உள்ளது. அதன் காரணமாக பொதுமக்களுக்கு குடிநீர் பிரச்சினை வராது. சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்றார். 
    தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் அமலில் இருப்பதால் பெரம்பலூரில் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வஞ்சிரம் மீன் கிலோ ரூ.900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    பெரம்பலூர்:

    ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சென்னை, கடலூர், புதுக்கோட்டை, ராமேசுவரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருச்சி புத்தூர் மீன் மார்க்கெட்டுக்கு கடல் மீன்கள் உள்பட பல்வேறு வகையான மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து பெரம்பலூர் சிறு வியாபாரிகள் மீன்களை கொள்முதல் செய்து வந்து பெரம்பலூரில் விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    பெரம்பலூர் நகரில் உள்ள மீன் கடைகளில் கிலோ ரூ.150-க்கு விற்ற ரோகு வகை மீன் தற்போது ரூ.180-க்கும், கிலோ ரூ.170-க்கு விற்ற கட்லா மீன் ரூ.200-க்கும், கிலோ ரூ.170-க்கு விற்ற பாப்பு லெட் மீன் ரூ.180-க்கும், கிலோ ரூ.800-க்கு விற்ற வஞ்சிரம் மீன் ரூ.900-க்கும், கிலோ ரூ.300-க்கு விற்ற சீலா மீன் ரூ.350-க்கும் விற்கப்படுகிறது. மேலும் அயிலைபாறை மீன் கிலோ ரூ.250-க்கும், கொடுவா பாறை ரூ.250-க்கும், தேங்காய் பாறை ரூ.200-க்கும், நெத்திலி ரூ.250-க்கும், இறால் ரூ.300-க்கும், அயிலைசம்பா ரூ.120-க்கும், மத்தி ரூ.120-க்கும், சங்கரா ரூ.250-க்கும், பிளாச்சி ரூ.350-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கண்ணாடி பாறை கிலோ ரூ.350-க்கும், கிளி மீன் ரூ.300-க்கும், விறால் ரூ.500-க்கும், உயிர்மீன் (மயிலை) ரூ.150-க்கும், வாழை மீன் ரூ.350-க்கும், பால்சுறா, வஞ்சிரம் பாறை ரூ.400-க்கும், நண்டு ரூ.250-க்கும், புளூ நண்டு ரூ.450-க்கும், கடல் வவ்வால் ரூ.450-க்கும், கடல் விறால் ரூ.350-க்கும், கடல் கெழுத்தி ரூ.300-க்கும், அயிலை ரூ.250-க்கும், ஜிலேபி ரூ.130-க்கும், பங்கஸ் வகை மீன் ரூ.180-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    மீன்களின் விலை அதிகரித்தது குறித்து பெரம்பலூரை சேர்ந்த பெண் மீன் வியாபாரி ஒருவர் கூறுகையில், “தமிழகம் முழுவதும் உள்ள கடல் பகுதிகளில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக கடந்த ஏப்ரல் 15-ந்தேதி முதல் வருகிற 14-ந்தேதி மீன்பிடி தடை காலம் அமலில் இருப்பதால் விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்வதில்லை. நாட்டுப்படகு மீனவர்கள் மட்டுமே கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். இதனால் மீன்களின் வரத்து குறைந்துள்ளதால், அவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கண்மாயில் பிடிக்கப்படும் கெண்டை, கட்லா மீன்களை மொத்த வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர். அவற்றின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. மீன்பிடி தடைகாலம் முடிந்த பின்னரே மீன்களின் விலை கணிசமாக குறையும்” என்றார். இந்நிலையில் மீன் கடைகளுக்கு மீன் வாங்க வந்தவர்கள், மீன்கள் விலை அதிகமாக இருந்ததால் குறைந்த அளவில் மீன்களை வாங்கி சென்றனர். 
    மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க உள்ளதாக புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிளஸ்-2 தேர்வு முடிவுகளில் வழக்கம்போல மாணவிகள்தான் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுக்க உள்ளது.

    இதற்காக பள்ளிகளில் பள்ளி நேரம் தவிர பிற நேரங்களிலும் சிறப்பு வகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதோடு மாணவர்கள், ஆசிரியர்களிடம் ஒருங்கிணைப்பு ஏற்படுத்த உள்ளோம். ஏற்கனவே பள்ளிகளில் பெற்றோர், ஆசிரியர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த குழுவினர் மாணவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பார்கள். ஏற்கனவே இந்த குழுவின் கண்காணிப்பால் தேர்ச்சி வீதம் உயர்ந்துள்ளது.

    வரும் காலத்திலும் தேர்ச்சி வீதம் உயரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவரிடம் கோடை வெயிலின் தாக்கத்தில் விடுமுறை நீட்டிக்கப்படுமா? என்று கேள்வி கேட்டபோது, அதிகாரிகளோடு கலந்து பேசி முடிவெடுப்போம் என தெரிவித்தார்.

    ×