search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fish price"

    • பொதுமக்கள் அசைவத்தை தவிர்த்து விரதம் இருந்து வந்தனர்.
    • புரட்டாசி மாதம் முடிந்த நிலையில் மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர்

    கடலூர்:

    புரட்டாசி மாதம் பெரு மாளுக்கு உகந்த மாதம் என்பதால் பொதுமக்கள் அசைவத்தை தவிர்த்து விரதம் இருந்து வந்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை புரட்டாசி மாதம் முடி வடைந்து தற்போது ஐப்பசி மாதம் நடைபெற்று வரு கிறது. பலர் புரட்டாசி மாதம் முழுவதும் அசை வத்தை தவிர்த்து விரதம் இருந்து வந்த நிலையில் புரட்டாசி மாதம் தற்போது முடிவடைந்த முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் அதிகாலை முதல் மக்கள் குவிந்தனர்.

    ஒரு மாதத்திற்கு அசைவம் சாப்பிடாமல் இருந்த நிலை யில் தற்மபோது புரட்டாசி மாதம் முடிந்த நிலையில் மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர். பொதுமக்கள் அதிகள வில் குவிந்தாலும் மீன்களின் விலை எப்போதும் போல் வழக்கமான விலைக்கு விற்றது. வஞ்சரம் 700 ரூபாய், சங்கரா 300 ரூபாய், கொடுவா 350 ரூபாய், இறால் 250 ரூபாய், நண்டு 400 ரூபாய் என்ற விலையில் இன்று மீன்கள் விற்பனை யானது.

    • மீன்பிடி தடைகாலம் இருந்ததால் கடந்த 2 மாதமாக காசிமேடு மார்க்கெட் களை இழந்து காணப்பட்டது.
    • மீன்விற்பனை களை கட்டியதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ராயபுரம்:

    தமிழகத்தில் ஏப்ரல் 15-ந்தேதி தொடங்கிய 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் கடந்த 14-ந் தேதியுடன் முடிந்தது. இதைத்தொடர்ந்து 14-ந்தேதி நள்ளிரவே மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் புறப்பட்டனர்.

    காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 800-க்கும் மேற்பட்ட விசை படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். வழக்கமாக வாரவிடுமுறை நாட்களில் காசிமேட்டில் மீன்வாங்க அதிக அளவிலான மீன்பிரியர்கள் குவிவார்கள். மீன்பிடி தடைகாலம் இருந்ததால் கடந்த 2 மாதமாக காசிமேடு மார்க்கெட் களை இழந்து காணப்பட்டது.

    இந்த நிலையில் இன்று மீன்பிடி தடைகாலம் முடிந்து வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிக அளவிலான பெரியவகை மீன்கள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இதையடுத்து இன்று அதிகாலை முதலே காசிமேட்டில் ஏராளமான மீன்பிரியர்கள் குவிந்தனர். இதனால் மார்க்கெட் முழுவதும் கூட்டம் அலை மோதியது. மீன்விற்பனையும் களை கட்டியதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஆனால் இன்று குறைந்த அளவிலான விசைப்படகுகளே கரை திரும்பியதால் எதிர்பார்த்த அளவு பெரியவகை மீன்கள் விற்பனைக்கு வரவில்லை.

    சிறியவகை வஞ்சிரம், சங்கரா, இறால், கடமா, வவ்வால், பாறை, நெத்திலி உள்ளிட்ட மீன்கள் அதிக அளவு விற்பனைக்கு குவிந்து இருந்தது. பெரிய வகை மீன்கள் எதுவும் விற்பனைக்கு வராததால் அசைவ பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    எனினும் மற்ற வகை மீன்கள் அதிகம் குவிந்து இருந்ததால் போட்டி போட்டு வாங்கிச்சென்றனர். விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை.

    ஆழ்கடலுக்கு செல்லும் விசைப்படகு மீனவர்கள் சுமார் 15 நாட்கள் கடலில் தங்கி இருந்து மீன்பிடிப்பார்கள். எனவே அடுத்த வாரத்தில் பெரும்பாலாள விசைப்படகு மீனவர்கள் கரை திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது பெரிய வகை மீன்கள் அதிகஅளவில் விற்பனைக்கு வரும் எனவும், விலையும் குறையும் என்றும் தெரிகிறது.

    காசிமேட்டில் இன்று காலை வஞ்சிரம் கிலோ ரூ. 950-க்கும், சங்கரா ரூ.700, இறால் ரூ.600, வவ்வால் மீன்-ரூ.300 முதல் ரூ.600 வரை, கடமான் ரூ.600, பாறை ரூ.350-க, நெத்திலி ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    • வஞ்சிரம் ரூ.850க்கு விற்பனையானது.
    • அதிகளவு மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    கோவை,

    கோவை உக்கடத்தில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.

    இந்த மீன் மார்க்கெட்டிற்கு ராமேஸ்வரம் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து அதிகளவு மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    கோவை மற்றும் சுற்றுவட்டாரங்களை சேர்ந்தவர்கள் மீன் மார்க்கெட்டிற்கு வந்து தங்களுக்கு பிடித்த மீன்களை வாங்கி செல்கின்றனர். இதனால் எப்போதும் மீன் மார்க்கெட்டில் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    குறிப்பாக வார விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட அதிகமான மக்கள் மீன் வாங்குவதற்காக மார்க்கெட்டிற்கு வருவார்கள். இதனால் அந்த பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவதோடு போக்குவரத்து நெரிசலும் ஏற்படும்.

    இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் காலை முதலே மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம், கூட்டமாக குவியத் தொடங்கினர். அவர்கள் மார்க்கெட்டில் தங்களுக்கு பிடித்த மீன்களை வாங்கி சென்றனர்.

    வெயில் காலம் தொடங்கி உள்ளதால் தற்போது மீன்கள் வரத்து சற்று குறைவாக உள்ளது. இதன் காரணமாக உக்கடம் மீன் மார்க்கெட்டில் மீன்கள் விலை உயர்ந்து காணப்படுகிறது.

    கடந்த மாதம் ரூ.750க்கு விற்பனையான வஞ்சிரம் மீன் விலை ரூ.100 உயர்ந்து கிலோ ரூ.850க்கு விற்பனையாகிறது.

    இன்று உக்கடம் மீன்மார்க்கெட்டில் விற்பனையாகும் மீன்களின் விலை விவரம் கிலோவில் வருமாறு:-

    அயிரை மீன்-ரூ.100, விலா-ரூ.450, வஞ்சிரம்-ரூ.850, மத்தி-ரூ.140, வாளை-ரூ.800, ஊளி-ரூ.400, இறால்-ரூ.500, பாறை-ரூ.400, நண்டு-ரூ.700, கிழங்கான்-ரூ.150க்கு விற்பனையாகியது.

    இதுகுறித்து மீன் வியாபாரி ஒருவர் கூறும் போது, தற்போது வெயில் காலம் தொடங்கி விட்டதால் மீன் பிடிப்பது குறைந்து விடும். இதனால் மார்க்கெட்டிற்கும் வரத்து சற்று குறைந்து வருகிறது. இதனால் மீன்கள் விலை சற்று உயர்ந்து காணப்படுகிறது என தெரிவித்தார்.

    புயல் எச்சரிக்கை, தடைகாலம் காரணமாக மீன்கள் வரத்து குறைந்ததால், மீன்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
    நாகர்கோவில்:

    கிழக்கு கடற்கரை பகுதியில் தற்போது மீன்கள் இனப்பெருக்க காலம் என்பதால் விசைப்படகு மூலம் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் குமரி மாவட்டத்தின் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. அவர்களது விசைப்படகுகள் சின்னமுட்டம் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

    கட்டுமரம், வள்ளம் போன்றவை மூலம் கடலுக்கு செல்லும் மீனவர்கள் மட்டும் மீன்பிடித்து வந்ததால் மீன்களின் வரத்து குறைந்தது. இந்த நிலையில் பானி புயல் எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதன் காரணமாக வள்ளம், கட்டுமரம் மீனவர்களும் கடந்த 2 நாட்களாக மீன்பிடிக்க செல்லவில்லை.

    முற்றிலுமாக மீன்பிடி தடைபட்டதால் குமரி மாவட்டத்தில் உள்ள மீன் மார்க்கெட்டுகளுக்கு மீன் வரத்து மிகவும் குறைந்துவிட்டது. நாகர்கோவிலில் வடசேரி, கணேசபுரம், பார்வதிபுரம் உள்பட பல இடங்களில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக இந்த மார்க்கெட்டுகளுக்கு குறைந்த அளவே மீன் விற்பனைக்கு வருகிறது.

    அதேசமயம் மீன்களின் தேவை அதிகமாக இருப்பதால் மீன்களின் விலை பல மடங்கு உயர்ந்துவிட்டது. குறிப்பாக நெய் மீன் கிலோ ரூ.800-ல் இருந்து ரூ.1200 ஆக உயர்ந்து உள்ளது. அதே சமயம் நெய்மீன் போதுமான அளவும் கிடைப்பது இல்லை.

    ரூ.400-க்கு விற்பனையான பாறை வகை மீன் தற்போது ரூ.700-க்கு விற்பனையாகிறது. ரூ.10-க்கு 5 சாளை மீன்கள் விற்கப்பட்டது. தற்போது ரூ.20-ஆக உயர்ந்து உள்ளது. ஒரு கூறு நெத்திலி மீன் ரூ.20-ல் இருந்து 50 ஆகி விட்டது. விளமீன் கிலோ ரூ.180 முதல் ரூ.200 வரை விற்பனையானது. தற்போது கிலோ ரூ.300-ஆக உள்ளது.

    விலை உயர்வு ஒருபக்கம் இருந்தாலும் போதுமான மீன்கள் கிடைக்காததால் மீன் வாங்க வரும் பலரும் ஏமாற்றமடைந்து செல்கின்றனர்.

    கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தடைகாலம் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் தொடங்கியது. ஆழ்கடலுக்குள் சென்ற படகுகள் அனைத்தும் கரைக்கு திரும்பின. வரக்கூடிய நாட்களில் மீன்விலை கணிசமாக உயர வாய்ப்பு இருக்கிறது. #FishingBan #FishingBanPeriod
    சென்னை:

    கிழக்கு கடற்கரை பகுதிகளான தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் உள்ள கடலோர மாவட்டங்களில் மீன்பிடி தடைகாலம் நேற்று முன்தினம் (திங்கட் கிழமை) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இந்த மீன்பிடி தடைகாலம் 60 நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும். அந்தவகையில் வருகிற ஜூன் மாதம் 15-ந் தேதி நள்ளிரவுடன் தடைகாலம் முடிகிறது.

    தமிழகத்தின் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 13 கடலோர மாவட்டங்களை சேர்ந்த 591 மீன்பிடி கிராமங்களுக்கும், புதுச்சேரி, காரைக்கால் பகுதி மீனவர்களுக்கும் இந்த தடைகாலம் அமலில் இருக்கிறது.

    இந்த பகுதிகளில் 150 முதல் 240 வரையிலான குதிரை திறன் கொண்ட சுமார் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட விசைப்படகுகள் ஆழ்கடலுக்குள் சென்று மீன்பிடிப்பார்கள். தடைகாலமான இந்த நேரத்தில் இந்த 15 ஆயிரம் விசைப்படகுகளும் கரையில் நிறுத்தப்பட்டு இருக்கும்.

    அந்த வகையில் ஆழ்கடலுக்குள் சென்ற அனைத்து விசைப்படகுகளும் கரை திரும்பி இருக்கின்றன. சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மட்டும் சுமார் 2 ஆயிரம் விசைப்படகுகள் கரையோரங்களில் அருகருகே நிறுத்திவைக்கப்பட்டு இருக்கின்றன.

    மீன்பிடி தடைகாலம் தொடங்கியதால் 60 நாட்களுக்கு மீனவர்கள் வேலை இழக்கிறார்கள். இந்த காலகட்டங்களில் கரையோரங்களில் நிறுத்தப்பட்டு இருக்கும் படகுகளை, அதன் உரிமையாளர்கள் பராமரிக்கும் பணிகளில் ஈடுபடுவார்கள்.



    கரை திரும்பிய விசைப்படகுகள் மூலம் ஆழ்கடலுக்கு சென்று பிடித்து வந்திருந்த மீன்களை கொண்டு, இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்கு தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்றும், அதன்பிறகு மீன்விலை கணிசமாக உயர வாய்ப்பு இருக்கிறது என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 800 படகுகள் நிறுத்துவதற்கான வார்ப்பு தான் இருக்கிறது. ஆனால் சுமார் 2 ஆயிரம் படகுகள் ஒன்றோடொன்று ஒட்டியவாறு நிறுத்தப்பட்டு இருப்பதால் உராய்வு ஏற்படும் என்றும், தற்போது கோடைகாலமாக இருப்பதால் உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்றும், எனவே தடைகாலம் முடியும் வரை தீயணைப்பு வாகனம் ஒன்றை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துறைமுகத்தில் நிறுத்திவைக்க வேண்டும் என்றும் அகில இந்திய மீனவர் சங்கத்தின் தேசிய செயல் தலைவர் நாஞ்சில் ரவி தெரிவித்தார்.  #FishingBan #FishingBanPeriod

    மீன்களின் இனப்பெருக்கத்துக்காக கடந்த ஏப்ரல் 15-ந் தேதி தொடங்கிய மீன்பிடி தடைக்காலம் நாளையுடன் முடிகிறது. மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல இருப்பதால் மீன் விலை குறைய வாய்ப்பு உள்ளது.
    ராயபுரம்:

    மீன்களின் இனப்பெருக்கத்துக்காக கடந்த ஏப்ரல் 15-ந் தேதி முதல் 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் தொடங்கியது. இது நாளையுடன் முடிவடைகிறது.

    இதையடுத்து நாளை நள்ளிரவு 12 மணிக்கு பிறகு மீனவர்கள் கடலுக்குள் செல்கிறார்கள். 61 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் செல்வதால் அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தடைகாலத்தில் ஏற்கனவே பழுதான படகுகள், வலைகளை சீரமைத்திருந்தனர். தற்போது கடலுக்கு செல்ல தேவையான ஐஸ்கட்டிகள், டீசல், உணவு பொருட்களை ஏற்றும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்கள். இதனால் மீனவர்கள் உற்சாகத்துடன் காணப்படுகிறார்கள்.

    தடைகாலம் நிறைவடைந்து மீன் பிடிக்க செல்வதால் அதிக அளவு மீன்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்துள்ளனர்.

    கடந்த 2 மாதமாக மீன் விலை உச்சத்தில் இருந்தது. வஞ்சிரம், வவ்வால் மீன்கள் கிலோ ரூ. 900 வரை விற்கப்பட்டது. தற்போது மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல இருப்பதால் மீன் விலை குறைய வாய்ப்பு உள்ளது.

    வழக்கமாக ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் 15 நாட்களுக்கு பிறகே கரை திரும்புவார்கள். ஆனால் சிறிய வகை படகுகளில் செல்பவர்கள் ஞாயிற்றுக்கிழமை கரை திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மீன் விலை விரைவில் குறையும் என்று மீன் பிரியர்கள் எதிர்பார்த்துள்ளனர். #Tamilnews
    தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் அமலில் இருப்பதால் பெரம்பலூரில் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வஞ்சிரம் மீன் கிலோ ரூ.900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    பெரம்பலூர்:

    ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சென்னை, கடலூர், புதுக்கோட்டை, ராமேசுவரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருச்சி புத்தூர் மீன் மார்க்கெட்டுக்கு கடல் மீன்கள் உள்பட பல்வேறு வகையான மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து பெரம்பலூர் சிறு வியாபாரிகள் மீன்களை கொள்முதல் செய்து வந்து பெரம்பலூரில் விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    பெரம்பலூர் நகரில் உள்ள மீன் கடைகளில் கிலோ ரூ.150-க்கு விற்ற ரோகு வகை மீன் தற்போது ரூ.180-க்கும், கிலோ ரூ.170-க்கு விற்ற கட்லா மீன் ரூ.200-க்கும், கிலோ ரூ.170-க்கு விற்ற பாப்பு லெட் மீன் ரூ.180-க்கும், கிலோ ரூ.800-க்கு விற்ற வஞ்சிரம் மீன் ரூ.900-க்கும், கிலோ ரூ.300-க்கு விற்ற சீலா மீன் ரூ.350-க்கும் விற்கப்படுகிறது. மேலும் அயிலைபாறை மீன் கிலோ ரூ.250-க்கும், கொடுவா பாறை ரூ.250-க்கும், தேங்காய் பாறை ரூ.200-க்கும், நெத்திலி ரூ.250-க்கும், இறால் ரூ.300-க்கும், அயிலைசம்பா ரூ.120-க்கும், மத்தி ரூ.120-க்கும், சங்கரா ரூ.250-க்கும், பிளாச்சி ரூ.350-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கண்ணாடி பாறை கிலோ ரூ.350-க்கும், கிளி மீன் ரூ.300-க்கும், விறால் ரூ.500-க்கும், உயிர்மீன் (மயிலை) ரூ.150-க்கும், வாழை மீன் ரூ.350-க்கும், பால்சுறா, வஞ்சிரம் பாறை ரூ.400-க்கும், நண்டு ரூ.250-க்கும், புளூ நண்டு ரூ.450-க்கும், கடல் வவ்வால் ரூ.450-க்கும், கடல் விறால் ரூ.350-க்கும், கடல் கெழுத்தி ரூ.300-க்கும், அயிலை ரூ.250-க்கும், ஜிலேபி ரூ.130-க்கும், பங்கஸ் வகை மீன் ரூ.180-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    மீன்களின் விலை அதிகரித்தது குறித்து பெரம்பலூரை சேர்ந்த பெண் மீன் வியாபாரி ஒருவர் கூறுகையில், “தமிழகம் முழுவதும் உள்ள கடல் பகுதிகளில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக கடந்த ஏப்ரல் 15-ந்தேதி முதல் வருகிற 14-ந்தேதி மீன்பிடி தடை காலம் அமலில் இருப்பதால் விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்வதில்லை. நாட்டுப்படகு மீனவர்கள் மட்டுமே கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். இதனால் மீன்களின் வரத்து குறைந்துள்ளதால், அவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கண்மாயில் பிடிக்கப்படும் கெண்டை, கட்லா மீன்களை மொத்த வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர். அவற்றின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. மீன்பிடி தடைகாலம் முடிந்த பின்னரே மீன்களின் விலை கணிசமாக குறையும்” என்றார். இந்நிலையில் மீன் கடைகளுக்கு மீன் வாங்க வந்தவர்கள், மீன்கள் விலை அதிகமாக இருந்ததால் குறைந்த அளவில் மீன்களை வாங்கி சென்றனர். 
    ×