என் மலர்
நீங்கள் தேடியது "கோழி இறைச்சி விலை"
- பால் பொருள்கள் மற்றும் கடல் சாா்ந்த உணவுப் பொருள்கள் ஏற்றுமதியில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது.
- ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, மீன் மற்றும் நாட்டுக்கோழி உள்ளிட்ட இறைச்சிகளுக்கான விலை பட்டியல் சந்தை வாரியாக தினசரி வெளியிடப்படும்.
சென்னை:
கால்நடை மற்றும் கிராமப்புற மேம்பாடு குறித்து தேசிய அளவிலான கருத்தரங்கம் சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவமனையில் நடைபெற்றது. அப்போது, கால்நடை பராமரிப்புத் துறை செயலாளர் என்.சுப்பையன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பால் பொருள்கள் மற்றும் கடல் சாா்ந்த உணவுப் பொருள்கள் ஏற்றுமதியில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது. அதேபோல், தமிழகத்தில் பால் உற்பத்தியை பெருக்கும் வகையில், அதிக பால்தரும் புதிய கலப்பின மாடுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
எனவே தமிழகத்தில் பால் மற்றும் கடல் சாா்ந்த உணவு பொருள்களை இறக்குமதி செய்யும் சூழல் பெரும்பாலும் வர வாய்ப்பில்லை. கால்நடை பராமரிப்பு சாா்ந்த மாணவர்களின் புதிய ஆராய்ச்சிகளுக்கு நிதி உதவிகள் வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது.
தினசரி காய்கறி விலைகளைத் தெரிந்து கொள்வதைப்போல இறைச்சி வகைகளின் விலைகளையும் தெரிந்து கொள்ளும் வகையில், 'இறைச்சி விலை பலகை' என்ற ஒரு பிரத்யேக இணையதளம் உருவாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன்மூலம் பல்வேறு சந்தைகளில் கால்நடைகளின் சந்தை விலை மற்றும் இருப்பு நிலவரத்தை அறிந்து கொண்டு, அதற்கு ஏற்ற வகையில் வா்த்தகம் மேற்கொள்ள முடியும்.
மேலும், ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, மீன் மற்றும் நாட்டுக்கோழி உள்ளிட்ட இறைச்சிகளுக்கான விலை பட்டியல் சந்தை வாரியாக தினசரி வெளியிடப்படும். இதன்மூலம் விலை ஏற்றத் தாழ்வுகளை தவிா்ப்பதோடு, சந்தையில் நியாயமான விலையை உறுதி செய்ய முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- விலையை பற்றி கவலைப்படாமல் மீன்பிரியர்கள் தங்களுக்கு பிடித்த மீன்களை வாங்கிச்சென்றனர்.
- கோழி இறைச்சி விலையும் ரூ.20 அதிகரித்து உள்ளது.
ராயபுரம்:
தமிழகத்தில் தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. இதனால் ஆழ்கடலில் சென்று மீன்பிடிக்கும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் செல்வதில்லை. குறைந்த தூரத்தில் மட்டும் பைபர் படகில் சென்று மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் மீன்பிடி தடைக்காலம் என்பதால் காசிமேடு மார்க்கெட்டுக்கு மீன்கள் வரத்து குறைவாகவே உள்ளது. பெரிய வகை மீன்கள் வருவதில்லை. இதனால் மீன்விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. வார இறுதி நாளான நேற்று காசிமேட்டில் மீன்விலை வழக்கத்தை விட 2 மடங்கு அதிகமாக காணப்பட்டது. வஞ்சிரம் கிலோ ரூ.1400 வரையும், வவ்வால் மீன் ரூ. 750 வரையும் விற்கப்பட்டன. இதேபோல் சிறியவகை மீன்களின் விலையும் அதிகமாக காணப்பட்டது. பெரியவகை மீன்கள் அதிக அளவு விற்பனைக்கு வரவில்லை. எனினும் விலையை பற்றி கவலைப்படாமல் மீன்பிரியர்கள் தங்களுக்கு பிடித்த மீன்களை வாங்கிச்சென்றனர்.
கோழி இறைச்சி விலையும் ரூ.20 அதிகரித்து உள்ளது. ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ.280 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கடந்த வாரத்தில் ரூ.260 விற்கப்பட்ட நிலையில் தற்போது விலை உயர்ந்து இருக்கிறது.
காசிமேடு மார்க்கெட்டில் மீன்விலை விபரம் வருமாறு:-
வஞ்சரம் - ரூ.1400
சங்கரா - ரூ.400
வவ்வால் - ரூ.750
கொடுவா - ரூ.600
நண்டு - ரூ.350
காணங்கத்தை - ரூ.200
ஷீலா - ரூ.500
இறால் - ரூ.400.
மீன்விலை உயர்வு குறித்து மீனவர்கள் கூறும்போது, மீன்பிடி தடைகாலம் அடுத்தமாதம் 14-ந்தேதி வரை அமலில் உள்ளது. இதனால் காசிமேட்டில் மீன்கள் வரத்து குறைந்து உள்ளது. இந்த காலகட்டத்தில் கேரளாவில் இருந்து அதிக அளவில் மீன்கள் வரும். தற்போது மழை எச்சரிக்கையால் அங்கும் மீன்பிடிப்பது பாதிக்கப்பட்டு உள்ளதால் மீன்கள் வரத்து பாதியாக குறைந்து விட்டது. இதனால் மீன்விலை உயர்ந்து உள்ளது. மீன்பிடி தடைகாலம் முடியும் வரை விலை உயர்வு இருக்கும் என்றார்.






