search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dams"

    • குற்றாலத்தில் மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளும் தண்ணீரின்றி வறண்டுபோய் காட்சியளிக்கிறது.
    • கடுமையான வெயிலின் காரணமாகவும், பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டதன் காரணமாகவும் அணைகளின் நீர்மட்டம் பாதியாக குறைந்துவிட்டது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை இயல்பான அளவை விட அதிகமாக பெய்தது.

    இதனால் மாவட்டங்களில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் நெல் நடவு செய்யப்பட்டது. தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதத்தில் பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பெரும்பாலான ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கி நாசமாகியது.

    மீதமுள்ள வயல்களில் நெற்கதிர்கள் விளைந்து தற்போது அறுவடை செய்யும் பணிகளும் ஒருசில இடங்களில் ஆரம்பித்து உள்ளன.

    பொதுவாக அறுவடை காலகட்டங்களில் 75 கிலோ கொண்ட ஒரு மூடை நெல்லின் விலை ரூ.800 வரையிலும் குறைந்துவிடும் நிலையில், தற்போது நெல் சாகுபடி பரப்பு குறைந்தது காரணமாகவும், அரசின் கொள்முதல் விலை உயர்வு காரணமாகவும் ரூ.1,300 வரை விற்பனையாகிறது.

    இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கிடையே பருவ மழைக்கு பின்னர் நடப்பட்ட நெற்பயிர்கள் தற்போது பயிர் பிடிக்கும் கால கட்டத்தில் இருந்து வருகிறது.

    அவைகளுக்காக இந்த மாதம் 31-ந்தேதி வரை நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாப நாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து பாசனத்திற்காக கால்வாய்களில் நீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இதனால் அணைகளின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே சமீப காலமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகவும் அணைகளில் தண்ணீரின் அளவு வேகமாக குறைந்து வருகிறது. இன்னும் 3 மாதங்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் விவசாயிகளும், பொதுமக்களும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 1,504 கனஅடி நீர் வெளியறே்றப்படும் நிலையில், 143 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையின் நீர்மட்டம் 95 அடியாக குறைந்துள்ளது. 156 அடி கொண்ட சேர்வலாறு அணையில் இன்றைய நிலவரப்படி 81.89 அடி நீர் இருப்பு உள்ளது.

    118 அடி கொண்ட மணி முத்தாறு அணையில் இருந்து பாசனத்திற்காக 475 கனஅடி நீர் திறந்து விடப்படு கிறது. அந்த அணையின் நீர்மட்டம் 105.17 அடியாக உள்ளது. கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 15.25 அடியாகவும், நம்பியாறு அணையின் நீர்மட்டம் 12.92 அடியாகவும் குறைந்துள்ளது.

    தென்காசி மாவட்டத் திலும் கடுமையான வெயிலின் காரணமாகவும், பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டதன் காரணமாகவும் அணைகளின் நீர்மட்டம் பாதியாக குறைந்துவிட்டது.

    85 அடி கொண்ட கடனா அணை நீர்மட்டம் 46.70 அடியாகவும், 84 அடி கொண்ட ராமநதி அணை நீர்மட்டம் 61.25 அடியாகவும் குறைந்துள்ளது. கருப்பாநதி நீர்மட்டம் 50.86 அடியாகவும், குண்டாறு அணை நீர்மட்டம் 27 அடியாகவும் உள்ளது.

    இதுதவிர மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள குற்றாலத்தில் மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவி களும் தண்ணீரின்றி வறண்டுபோய் காட்சியளிக்கிறது. அப்பகுதி முழுவதும் சுற்றுலா பயணிகள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    • குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் 800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
    • நீர்வரத்து குறைந்ததாலும் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. அதேநேரம் அணைக்கு வரும் நீர்வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 79.61 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 798 கனஅடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு முதல் சுற்று நீர் நிறுத்தப்பட்டுள்ளது.

    தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 700 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் 800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 39.52 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 2.85 அடியாகவும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 33.04 அடியாகவும் உள்ளது. மழை பொழிவு இல்லாததாலும், நீர்வரத்து குறைந்ததாலும் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • கன்னடியன் அணைக்கட்டு பகுதியில் 16.60 மில்லி மீட்டர் மழை பதிவானது.
    • இன்று காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் நீர்மட்டம் 86.35 அடியாக உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவ லாக மழை பெய்தது. மாநகர பகுதிகளான பாளை, தச்சநல்லூர், மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதி களிலும், புறநகர் பகுதி களில் அம்பை, நாங்குநேரி, ராதாபுரம், களக்காடு உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது.

    மேலும் கன்னடியன் அணைக்கட்டு, மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, மணிமுத்தாறு பகுதிகளிலும் ஓரளவு மழை பெய்தது. அதிகபட்சமாக கன்னடியன் அணைக்கட்டு பகுதியில் 16.60 மில்லி மீட்டர் மழை பதிவானது. அம்பையில் 11, கொடுமுடியாறு அணை பகுதியில் 9, நாங்குநேரி, மாஞ்சோலையில் தலா 7 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    ராதாபுரத்தில் 6, மணிமுத்தாறில் 5.60, நெல்லையில் 2, களக்காடு பகுதியில் 3.20, காக்காச்சியில் 5, நாலுமுக்கு பகுதியில் 4 மில்லி மீட்டர் என நேற்று மாவட்டம் முழுவதும் 80.40 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    அணைகளின் நீர்மட்டம்

    இன்று காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் நீர்மட்டம் 86.35 அடி, சேர்வலாறு அணை 91.33 அடி, மணிமுத்தாறு 55.30 அடி, கொடுமுடியாறு 46.25 அடி, நம்பியாறு 12.49 அடியாக உள்ளது.

    • கடும் பனிமூட்டமும் காணப்பட்டது. பின்னர் மழை நின்றவுடன் படிப்படியாக விலகியது.
    • தோட்டங்கள் பசுமைக்கு திரும்பி வருவதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து

    அரவேணு,

    கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மேகமூட்டத்துடன் கூடிய குளிர்ந்த சீதோஷ்ண காலநிலை நிலவி வருகிறது.

    மேலும் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் கோத்தகிரியில் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் அங்கு இதமான காலநிலை நிலவி வருகிறது. கடும் பனிமூட்டமும் காணப்பட்டது. பின்னர் மழை நின்றவுடன் படிப்படியாக விலகியது.

    கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மேலும் தேயிலை மற்றும் காய்கறி தோட்டங்கள் பசுமைக்கு திரும்பி வருவதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    • இன்று காலை வரை அதிகபட்சமாக நாலுமுக்கில் 41 மில்லி மீட்டர் மழை பெய்தது.
    • மழை காரணமாக மாநகர பகுதியில் சில இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது.

    நீர் மட்டம் உயர்வு

    இன்று காலை வரை அதிகபட்சமாக நாலுமுக்கில் 41 மில்லி மீட்டர், காக்காச்சியில் 28 மில்லி மீட்டரும், மாஞ்சோலையில் 27 மில்லி மீட்டரும் மழை பதிவானது. இதேபோல் பாளையங்கோட்டை, நெல்லை, களக்காடு, ஊத்து, முன்னீர்பள்ளம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது.

    இந்த மழை காரணமாக நேற்று 64.50 அடியாக இருந்த பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று 3 அடி உயர்ந்து 67.60 அடியாக உள்ளது. அணைக்கு 1946.215 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 354.75 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 80 அடியாக இருந்த சேர்வலாறு அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து இன்று 82.41 அடியாக உள்ளது.

    இதேபோல் மணி முத்தாறு அணை நீர்மட்டம் 44.90 அடியாக உள்ளது. நேற்று இரவு பெய்த மழை காரணமாக மாநகர பகுதியில் சில இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.

    குறிப்பாக சந்திப்பு பஸ் நிலையத்தில் தண்ணீர் குளம் போல் தேங்கி காணப்படுகிறது. இதேபோல் தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த மழை காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மெயினருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    • அம்பை சட்டமன்ற தொகுதி விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள ஒரு தொகுதியாகும்.
    • தற்போது பாசனத்திற்கு தண்ணீர் தராமல் கால்வாய்களில் தண்ணீர் அடைக்கப்பட்டு உள்ளது.

    சிங்கை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் மற்றும் தமிழக அரசுக்கு அம்பை தொகுதி எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-

    அம்பை சட்டமன்ற தொகுதி விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள ஒரு தொகுதியாகும். விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டு இப்பகுதி மக்கள் வசிக்கின்றனர். இந்த நிலையில் கார்பருவ சாகுபடிக்காக நான் பல்வேறு கோரிக்கைகள் வைத்ததின்பேரில் கடந்த மாதம் 19-ந்தேதி பாபநாசம் அணை மற்றும் மணிமுத்தாறு அணையில் இருந்து நீர் திறக்க அரசு ஆணை பிறப்பித்து இருந்தது.

    அந்த ஆணையில் 19-7-2023 முதல் 31-10-2023 வரை 105 நாட்கள் 3015 மில்லியன் கனஅடி நீர்பாசனத்திற்காக அதாவது கன்னடியான்கால்வாய், நதியுன்னிகால்வாய், வடக்கு கோடை மேலழகியான், தெற்கு கோடை மேலழகியான்கால் ஆகிய கால்வாயில் பாசன விவசாயிகள் பயன்பெறும் வகையில் தண்ணீர் திறக்கப்படும் என்று அறிவித்து திறக்கப்பட்டது.

    அரசின் ஆணையை நம்பி இப்பகுதி விவசாயிகள் விவசாய முன்னேற்பு பணிகளை பெரும் சிரமத்திற்குள் செய்துள்ளனர். இந்நிலையில் தற்போது பாசனத்திற்கு தண்ணீர் தராமல் கால்வாய்களில் தண்ணீர் அடைக்கப்பட்டு உள்ளது. இது இப்பகுதி விவசாய மக்களை மிகவும் பாதிக்கும் சூழலில் உள்ளது. அதனால் அரசும், மாவட்ட நிர்வாகமும் விவசாயிகளின் நலன் கருதி மீண்டும் பாசனத்திற்காக கால்வாய்களில் தண்ணீர் திறக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • வேளாண், குடிநீர் தேவைக்கு வினாடிக்கு 750 கன அடி பயன்படுத்தினால் 10 முதல் 15 நாட்களுக்கு மட்டுமே நீரை பயன்படுத்த இயலும்.
    • ஒரு சில இடங்களில் விஷமிகள் தவறான நோக்கத்துடன் தேவையற்ற வதந்திகளை பரப்பி வருவதாக தெரிகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    நெல்லை மாவட்டத்தில் மழை பற்றாக்குறை காரணமாகவும், தாமிரபரணி குடிநீரையே நம்பி உள்ள 3 மாவட்ட மக்களின் நலன் காக்கும் விதமாகவும் பாபநாசம் அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு நீர்வரத்தை பொறுத்து மட்டும் திறந்து விடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மணிமுத்தாறு அணையிலும் போதிய நீர் இல்லாத நிலையில் தற்போது உள்ள நீரை குடிநீர் தேவைக்கு மட்டும் ஒரு நாளைக்கு 300 முதல் 350 கன அடி பயன்படுத்தினால் 40 முதல் 45 நாட்கள் வரை பயன்படுத்தலாம். வேளாண் மற்றும் குடிநீர் தேவை ஆகிய 2-க்கும் வினாடிக்கு 750 கன அடி பயன்படுத்தி னால் 10 முதல் 15 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த இயலும்.

    இது தொடர்பாக நீர்வளத்துறையால் விவசாயிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களின் ஒத்துழைப்பும் கோரப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஒரு சில இடங்களில் விஷமிகள் தவறான நோக்கத்துடன் தேவையற்ற வதந்திகளை பரப்பி வருவதாக தெரிகிறது. அதுபோன்ற அவ தூறான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    குடிநீர் தேவைக்காக மக்கள் நலன் கருதி எடுக்கப்படும் இந்த நடவடிக்கைகளின் அவசியத்தை அனைவரும் உணர்ந்து ஒத்துழைக்க வேண்டும். இதுகுறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
    • சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 73.46 அடியாக உள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக தென்மேற்கு பருவமழை பரவலாக மழை பெய்து வருகிறது.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டு அவற்றின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.

    மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 41 அடியாக இருந்த நிலையில் நேற்று 44 அடியை எட்டியது. இன்று காலை நிலவரப்படி மேலும் 4 அடி உயர்ந்து 48.30 அடியானது. அணையில் 2 நாட்களில் சுமார் 10 அடி நீர் இருப்பு அதிகரித்துள்ளது. நீர்மட்டம் 50 அடியை நெருங்குவதால் விவசாயிகளும், பொது மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று 65 அடியாக இருந்த நிலையில், இன்று மேலும் 8 அடி அதிகரித்து 73.46 அடியாக உள்ளது. தொடர்ந்து 2 அணைகளுக்கும் நீர்வரத்து இருப்பதால் நீர்மட்டம் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தென்காசி

    தென்காசி மாவட்டத்தில் இன்று காலை வரையிலும் விடிய விடிய பெரும்பாலான பகுதிகளில் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. செங்கோட்டையில் அதிகபட்சமாக 21.6 மில்லிமீட்டரும், தென்காசியில் 6 மில்லிமீட்டரும், சிவகிரியில் 8 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    அணை பகுதிகளை பொறுத்தவரை அடவி நயினாரில் அதிகபட்சமாக 50 மில்லிமீட்டரும், குண்டாறில் 36.8 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. கடனா அணையின் நீர்மட்டம் நேற்று 28.50 அடியாக இருந்த நிலையில் இன்று 5 அடி உயர்ந்து 33.50 அடியானது. இதேபோல் ராமநதி அணை நீர்மட்டம் நேற்று 33 அடியாக இருந்த நிலையில், இன்று 40 அடியாக உயர்ந்துள்ளது.

    மாவட்டத்தின் பெரிய அணையான 152 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினாரில் நேற்று 49 அடி நீர் இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 8 அடி உயர்ந்து 57 அடியாக உள்ளது. குண்டாறு அணை நீர்மட்டம் 1 அடி அதிகரித்து 26.75 அடியாக உள்ளது.

    • பாபநாசத்தில் 20 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
    • இன்று மாவட்டத்தின் சில இடங்களிலும் கனமழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. நேற்று காலை நெல்லை மாவட்டத்தில் கடும் வெயில் வாட்டி வந்த நிலையில் இரவில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    அதிகபட்சமாக பாபநாசத்தில் 20 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. கன்னடியன் கால்வாய் பகுதியில் 10 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது. இதேபோல் மணிமுத்தாறு, சேர்வலாறு உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது.

    இந்நிலையில் இன்று காலை முதலே நெல்லை மாநகர பகுதியில் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. 10 மணிக்கு மேல் பாளை, பெரு மாள்புரம், வண்ணார்பேட்டை, என்.ஜி.ஓ. காலனி, புதிய பஸ் நிலையம் பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது.

    இதேபோல் இன்று மாவட்டத்தின் சில இடங்களிலும் கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்தனர்.

    தென்காசி மாவட்டத்திலும் தென்காசி, செங்கோட்டை, ராமநதி, குண்டாறு, அடவிநயினார் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மழை பெய்தது. குற்றாலம் பிரதான அருவியான மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குறைந்த அளவில் தண்ணீர் விழுந்து வருகிறது.

    இன்று விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிகளில் திரண்டனர். அவர்கள் வரிசையில் நின்று அருவியில் குளித்து சென்றனர்.

    • சோலையாறு அணையின் 160 அடி உயரத்தில் 15.42 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது.
    • வினாடிக்கு 51.15 கனஅடி நீர்வரத்து உள்ளது.

    உடுமலை : 

    பி.ஏ.பி., திட்டத்தில் மேல்நீராறு, கீழ்நீராறு உள்ளிட்ட 8 தொகுப்பு அணைகளில் இருந்து பாசனம், குடிநீர் மற்றும் கேரள மாநிலத்துக்கு நீர் திறக்கப்படுவதால் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.சோலையாறு அணையின் 160 அடி உயரத்தில் 15.42 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. வினாடிக்கு 51.15 கனஅடி நீர்வரத்து உள்ளது. 72 அடி உயரம் உள்ள பரம்பிக்குளம் அணையில் 18.67 அடி நீர் இருப்பு உள்ளது. வரத்து 35 கனஅடியாக உள்ளது.மொத்தம் 120 அடி உயரம் உள்ள ஆழியாறு அணையின் நீர்மட்டம் 58.20 அடியாக சரிந்துள்ளது. வினாடிக்கு 136 கனஅடி நீர் வரத்து உள்ளது.நீர்மட்டம் வேகமாக சரிவதால் தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்குமா என பொதுமக்களிடம் அச்சம் நிலவுகிறது.நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பி.ஏ.பி., அணைகளில் உள்ள நீர் இருப்பை கொண்டு, கோடையில் தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகிக்க முடியும். திருமூர்த்தி பாசனத்துக்கு நீர் இருப்பு வைத்து வினியோகிக்கப்படுகிறது. காடம்பாறையில் இருந்து ஆழியாறு அணைக்கு நீர் எடுக்கப்பட உள்ளது என்றனர்.

    • கேரள - தமிழக அரசுகள் இடையே ஒப்பந்தம் ஏற்படுத்தி 1967ல் திட்டம் தொடங்கப்பட்டது.
    • கோவை, திருப்பூர் மாவட்டத்தில், 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    உடுமலை :

    மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் வீணாக கடலில் சென்று கலப்பதை தடுத்து வறட்சிப்பகுதிகளை பசுமையாக்கும் வகையிலும், பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் (பி.ஏ.பி.,) செயல்படுத்தப்பட்டது.

    கேரள - தமிழக அரசுகள் இடையே ஒப்பந்தம் ஏற்படுத்தி 1967ல் திட்டம் தொடங்கப்பட்டது. திட்ட தொகுப்பு அணைகளான சோலையாறு, தூணக்கடவு, பெருவாரிபள்ளம், பரம்பிக்குளம், மேல்ஆழியாறு, ஆழியாறு அணைகளில் நீர் சேகரிக்கப்படுகிறது. ஒவ்வொரு அணைகள் வழியாகவும் மின் உற்பத்தி செய்து மலைப்பகுதியில் 49 கி.மீ.,தூரம் சுரங்கத்துடன் கூடிய சமமட்ட கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு நீர் கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து பிரதான கால்வாய், கிளைக்கால்வாய் வழியாக பாசன நிலங்களுக்கு நீர் வழங்கப்படுகிறது. இத்திட்டம் ஆசிய அளவில் சிறந்த பொறியியல் தொழில்நுட்பமாக கருதப்படுகிறது. இப்பாசன திட்டத்தில் கோவை, திருப்பூர் மாவட்டத்தில், 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பாசன நிலங்கள் நான்கு மண்டலமாக பிரித்து சுழற்சி முறையில் இரு ஆண்டுக்கு ஒரு முறை ஆறு மாதம் நீர் வினியோகிக்கப்படுகிறது.கேரள அரசு, இடைமலையாறு அணை கட்டியதும் தமிழக அரசு ஆனைமலையாறு மற்றும் நல்லாறு அணைகளை கட்டும் வகையில் ஒப்பந்தம் உள்ளது. ஆனால் கேரள அரசு 1997ல் இடைமலையாறு அணை கட்டிய நிலையில் ஆனைமலையாறு, நல்லாறு அணைகள் கட்டப்படாமல் இழுபறியாகி வருகிறது. நல்லாறு அணை கட்டினால் தற்போது மலைப்பகுதிகளில் 100 கி.மீ., தூரம் பயணம் செய்து, திருமூர்த்தி அணைக்கு வரும் நீர் 20 கி.மீ., தூர பயணத்தில் எளிதில் வந்தடையும். கூடுதலாக 7.5 டி.எம்.சி., நீரும் கிடைக்கும். அதே போல் ஆனைமலையாறு அணை கட்டினால் மழை காலத்தில் வீணாகி கடலை நோக்கி செல்லும் 2.5 டி.எம்.சி., நீர் சேமிக்கப்படும். மின் உற்பத்தி திட்டங்களும் செயல்படுத்த முடியும்.

    பி.ஏ.பி., திட்டம் தொடங்கப்பட்ட போது ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவாக இருந்த பாசன பரப்பு 3.77 லட்சம் ஏக்கராக விரிவுபடுத்தப்பட்ட நிலையில் பாசன நீர் அளவை அதிகரிக்க நிலுவையிலுள்ள இரு அணைகளுடன் கட்டப்படாமல் உள்ளது. இதனால் பாசன நிலங்களில் முறையான பயிர் சாகுபடி மேற்கொள்ள முடியாமல் சிறப்பான இத்திட்டம் கேள்விக்குறியாகி வருகிறது. அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தலின் போது இத்திட்டம் குறித்து வாக்குறுதி மட்டுமே இடம் பெறுகிறது. இரு அணைகளையும் கட்ட வலியுறுத்தி விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இரு மாநில அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு வார்த்தை, அணைகள் கட்ட விரிவான ஆய்வறிக்கை தயாரிக்க தொழில் நுட்ப கமிட்டி என கடந்த 35 ஆண்டுகளாக திட்டம் நிறைவேற்றப்படாமல் உள்ளது. கடந்த தேர்தலிலும் இரு அணைகளும் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தி.மு.க., வாக்குறுதி அளித்துள்ள நிலையில் நடப்பாண்டு பட்ஜெட்டில் இத்திட்டங்களுக்கு தேவையான நிதி ஒதுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். அதிகாரிகள் மட்டத்தில் மட்டும் பேச்சு வார்த்தை என்று இல்லாமல் இரு மாநில முதல்வர்கள் நேரடியாக பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இத்திட்டத்தில் நிலுவையி லுள்ள அணைகளை கட்டி முழுமையான பாசனம் மற்றும் பயிர் சாகுபடி திட்டமாக பி.ஏ.பி., திட்டத்தை புதுப்பிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கேரளா அரசு இடைமலையாறு அணை கட்டியதும், ஆனைமலை யாறு, நல்லாறு அணைகள் தமிழகம் கட்டிக்கொள்ள ஒப்பந்தம் உள்ளது. கேரள அரசு, அணை கட்டி 30 ஆண்டுக்கு மேலாக பயன்படுத்தி வரும் நிலையில், ஆவணங்கள் வெளிப்படையாக உள்ளது. ஆனால் திட்ட ஒப்பந்தம் அடிப்படையில் தமிழக பகுதியில் கட்ட வேண்டிய இரு அணைகளும் கட்டவில்லை.விவசாயிகள் போராட்டம் நடத்தினால், தமிழக அரசு தரப்பில் பேச்சுவார்த்தை, தொழில் நுட்ப கமிட்டி ஆய்வு என இழுத்தடித்து வருகின்றனர்.

    இரு மாவட்டத்திலுள்ள பல லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள இத்திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இரு மாநில முதல்வர்களும் நேரடியாக பேசி தீர்வு காண்பதோடு நடப்பாண்டு பட்ஜெட்டில் இரு அணைகளும் கட்டுவதற்கான ஆய்வு மற்றும் திட்ட நிதி ஒதுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். ஆனால் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படாததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    • 1100 குளங்களில் 700-க்கும் மேற்பட்ட குளங்கள் நீரின்றி வறண்டு காணப்படுகிறது.
    • 2021-ம் ஆண்டு பாபநாசம் அணையில் 94.69 சதவீதம் நீர் இருப்பு இருந்தது

    நெல்லை:

    நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்க ளில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை குறைவாகவே பெய்துள்ளது.

    நீர் இருப்பு குறைவு

    இதனால் மாவட்டத்தில் உள்ள 1100 குளங்களில் 700-க்கும் மேற்பட்ட குளங்கள் நீரின்றி வறண்டு காணப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 75.10 அடியாக உள்ளது. அந்த அணையில் தற்போது 33.57 சதவீதம் நீர் இருப்பு உள்ளது.

    கடந்த ஆண்டு இதே நாளில் அந்த அணையில் 115.60 அடி நீர் இருப்பு இருந்தது. அதாவது 70.65 சதவீதம் நீர் இருப்பு காணப்பட்டது. தற்போது அதில் இருந்து பாதியாக நீர் இருப்பு குறைந்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு அந்த அணையில் 94.69 சதவீதம் நீர் இருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    நெல் சாகுபடி

    இதேபோல் கடந்த ஆண்டு சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 115.71 அடியாக இருந்த நிலையில் தற்போது 77.30 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இதன் சதவீதம் 21.53 ஆகும். 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் கடந்த ஆண்டு இதே நாளில் 88.54 சதவீதம் நீர் இருப்பு இருந்த நிலையில், இந்த ஆண்டு 48.13 சதவீதமாக உள்ளது.

    இதேபோல் வடக்கு பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு உள்ளிட்ட அணைகளிலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நீர் இருப்பு சதவீதம் பாதியாக குறைந்துவிட்டது. இதன் காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள சுமார் 86 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில் இந்த ஆண்டு நெல் சாகுபடி பணியானது வெகுவாக குறைந்துவிட்டது.

    ×