search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coimbatore rain"

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிப்பதற்காக 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அவசரகால கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
    கோவை:

    இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் நாளை மறுநாள்(7-ந் தேதி) அதிக கனமழை பெய்யும் என தமிழ்நாடு அரசுக்கு தெரிவித்திருந்தது.

    இதைத்தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் பருவமழை எதிர்நோக்கி அனைத்து வட்டங்களில் செய்யப்பட வேண்டிய முன்ஏற்பாடுகள் குறித்து கண்காணிக்கவும், மழையினால் பாதிப்புகள் ஏற்படும் போது தாசில்தாரால் மேற்கொள்ளப்படும் பணிகளை கண்காணிக்கவும், ஒவ்வொரு வட்டத்திற்கும், துணை கலெக்டர் நிலையில் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வட்டங்களில் பருவமழையை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் மழையினால் பாதிப்புகள் ஏற்படும் பொருட்டு, வட்டாட்சியரால் மேற்கொள்ளப்படும் பணிகளை கண்காணித்தும் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    வெள்ள பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு நடவடிக்கையாக மீட்பு வாகனங்கள், மணல் மூட்டைகள், சவுக்கு கட்டைகள், பொக்லைன் வாகனங்கள், பவர் ஸா மற்றும் ஜெனரேட்டர் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர், சப்-கலெக்டர்கள், ஆர்.டி.ஓ.க்கள், மற்றும் துணை ஆட்சியர்களால் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது விநியோகத் திட்டத்தில் தேவையான அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் இருப்பு குறித்து உறுதி செய்தல் வேண்டும். சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ முகாம்களை அமைக்க நடவடிக்கை எடுப்பதோடு, நோய்தடுப்பு மருந்துப் பொருட்கள் தேவையான அளவு இருப்பு வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    காவல்துறையினர் பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களில் போக்குவரத்தை சரிசெய்ய மாற்று போக்குவரத்து ஏற்பாடுகளுடன் தயார் நிலையில் இருத்தல் வேண்டும். மின்சார வாரியத்தின் மின்வழித் தடங்களை சரி பார்த்து, பழுதான மின்கம்பங்ளை உடனடியாக மாற்ற வேண்டும். தீயணைப்பு துறையினர் உயிர்ப் பாதுகாப்பு உடைகளுடன் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை உடனுக்குடன் மீட்பதற்குத் தேவையான தளவாடங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    கழிவு நீர் கால்வாய்களில் பொதுமக்கள் கொட்டும் குப்பைகளால் அவ்வப்போது அடைப்பு ஏற்படுகிறது. பொதுமக்கள் இதை உணர்ந்து மழைநீர் வடியும் கால்வாய்களில் குப்பைகளை கொட்டாமலும், அடைப்பு ஏற்படாமலும் பார்த்து கொள்ள வேண்டும். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிப்பதற்காக 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அவசரகால கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் தங்கள் பகுதியில் வடகிழக்கு பருவ மழையால் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டால் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    திருப்பூர், கோவை, நீலகிரியில் பலத்த மழை பெய்தது. மழை காரணமாக பொள்ளாச்சி அருகே உள்ள குரங்கு நீர் வீழ்ச்சியில் திடீர் வெள்ள பெருக்கு ஏற்பட்டது.
    திருப்பூர்:

    கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெயில் அடித்து வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் திருப்பூரில் திடீரென மேகம் திரண்டு பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது.

    இந்த மழை இரவு 7 மணி வரை 2 மணி நேரம் நீடித்தது. இதே போல் தாராபுரம், காங்கயம், மூலனூர், அவினாசி, பல்லடம், உடுமலை பேட்டை ஆகிய பகுதிகளிலும் மழை நீடித்தது.

    திருப்பூரில் பெய்த மழை காரணமாக அங்குள்ள ஈஸ்வரன் கோவில் வீதி பாலம், அவினாசி சாலை, எம்.ஜி.ஆர். சிலை ஆகிய பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்தனர். திருப்பூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு-

    அவினாசி - 10.6, திருப்பூர் -28, பல்லடம் -17, தாராபுரம்-16, காங்கயம் -4, மூலனூர் -21, உடுமலை பேட்டை - 5.40.

    கோவை மாவட்டத்திலும் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. கோவை நகரில் லேசான மழை பெய்தது. மேட்டுப்பாளையத்தில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது.

    வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்தது. வால்பாறை சத்தி எஸ்டேட் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக பொள்ளாச்சி அருகே உள்ள குரங்கு நீர் வீழ்ச்சியில் திடீர் வெள்ள பெருக்கு ஏற்பட்டது.

    செம்மண் நிறத்தில் தண்ணீர் கொட்ட தொடங்கியது. அருவியில் குளித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் அங்கிருந்து வெளியேற்றினார்கள். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள். பொள்ளாச்சியிலும் மழை பெய்தது.

    நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு விடிய, விடிய பலத்த மழை பெய்தது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பைக்காரா உள்ளிட்ட பகுதிகளில் இந்த மழை நீடித்தது. அதிகாலை 4 மணி வரை மழை பெய்தது.

    மழை காரணமாக இன்று ஊட்டிக்கு சுற்றுலா வரும் பயணிகள் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டது.
    கோவை-திருப்பூர்-நீலகிரியில் கொட்டி தீர்த்த மழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. #rain

    கோவை:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்றும் பலத்த மழை கொட்டியது. இதனால்தாழ்வான பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தன. ஊட்டி மாநகராட்சி மார்க்கெட் தண்ணீரில் மிதந்தது.

    கோடப்பமந்து கால்வாய் நிரம்பி ஊட்டி மத்திய பஸ்நிலையம், ரெயில்வே பாலத்தின் அடியில் தண்ணீர் தேங்கியதால் கார், ஆட்டோ உள்ளிட்ட எந்த வாகனமும் செல்ல முடியவில்லை. மேலும் பாலத்தை ஓட்டியுள்ள ரெயில்வே போலீஸ் நிலையம் தண்ணீரில் மூழ்கியது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் மின்சாரம், தொலைதொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் ஊட்டி நகரம் இருளில் மூழ்கியது.

    தொடர் மழை காரணமாக ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடுங்குளிர் நிலவியது. கோடைவிழாவின் ஒரு பகுதியாக ஊட்டியில் தேயிலை மற்றும் சுற்றுலா விழா, ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இன்று தொடங்க இருந்தது. இதற்காக 18 காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தொடர் மழையால் அரங்குகளுக்குள் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது.

    ஊட்டியில் பெய்து வரும் தொடர்மழையால் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் போன்ற சுற்றுலா தலங்களுக்கு வந்த சுற்றுலா பயணிகள் மழையில் நனையாமல் இருக்க குடைபிடித்தபடி சென்றனர். பலத்த மழை காரணமாக படகு இல்லத்தில் படகு சவாரி நிறுத்தப்பட்டது. ஊட்டி சுற்று வட்டார பகுதிகளான லவ்டேவ் காந்திப்பேட்டை, கேத்தி, தலைகுந்தா, பைக்காரா, கல்லட்டி, காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

    இதேபோல் கோவையிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று மாலையில் கோவை உள்பட புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. இதன் காரணமாக இரவில் கடுங்குளிர் மக்களை வாட்டி வதைத்தது.

    கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன்(வயது 45). இவர் தனது நண்பரான அய்யப்பன் என்பவருடன் இணைந்து கியாஸ் கம்பெனி மற்றும் இடிகரைரோடு மகாராஜா நகரில் மர தொழிற்சாலை நடத்தி வருகிறார். இதையொட்டி இடிகரை ரெயில்வே கிராசிங் அருகில் ஒரு மரகுடோன் அமைத்திருந்தனர். அதில் மர தொழிற்சாலைகளில் தயாரிக்கும் கதவு, ஜன்னல் மற்றும் உதிரி பொருட்களையும் இருப்பு வைப்பது வழக்கம்.

    இரவு அந்த பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது திடீரென அந்த மர குடோன் மீது மின்னல் தாக்கியது. இதில் குடோனில் இருந்த மரப்பொருட்களின் மீது தீப்பற்றி எரிய தொடங்கியது.

    அக்கம் பக்கத்தினர் கோவை வடக்கு தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு 15 தீயணைப்பு வாகனங்களுடன் வீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பின் தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் விற்பனைக்காக வைத்திருந்த 2 ஆயிரத்து 400 மர கதவுகள் உள்பட பல்வேறு பொருட்கள் எரிந்து நாசமாகின. இதன் மதிப்பு 1½ கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.

    திருப்பூரிலும் நேற்று மாலை 5 மணி முதல் 7 மணி வரை பலத்த மழை கொட்டியது. தொடந்து சாரல் மழை பெய்தது. இதேபோல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. #rain

    ×