என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுவாணி அணை"

    • சிறுவாணி அணை கோவையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.
    • சுற்றுலா தலங்களாக விளங்கும் கோவை குற்றாலம், ஆனைமலை அருகே உள்ள கவியருவிகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அதிகனமழைக்காக சிவப்பு நிற எச்சரிக்கை இன்றும் நீடிக்கிறது.

    நேற்றும், இன்றும் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக வால்பாறை தாலுகா சின்னக்கல்லார் பகுதியில் 11 செ.மீ மழை கொட்டித்தீர்த்தது. பொள்ளாச்சி தாலுகா பகுதியில் 8 செ.மீ. மழை பதிவாகி இருந்தது.

    தொடர்ந்து பெய்து வரும் மழையால் கோவை மாவட்டத்தில் உள்ள குளங்கள், அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகின்றன. மாவட்டத்தில் முக்கிய அணைகளாக உள்ள சிறுவாணி, ஆழியார், பில்லூர், சோலையாறு ஆகிய அணைகளின் நீர்மட்டம் கடந்த சில நாட்களில் மிக வேகமாக உயர்ந்துள்ளன.

    சிறுவாணி அணை கோவையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்த அணையின் நீர்த்தேக்க உயரம் 49.53 அடி என்றாலும், அணையின் பாதுகாப்பு காரணங்களுக்காக 44.61 அடி உயரம் வரை மட்டுமே தண்ணீர் தேக்கப்படுகிறது.

    அணையில் இருந்து பெறப்படும் நீர் வழியோரம் உள்ள 22 கிராமங்களுக்கும், மாநகராட்சியின் 30-க்கும் மேற்பட்ட வார்டுகளுக்கும் வினியோகிக்கப்படுகிறது.

    தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் சிறுவாணி அணை மற்றும் அதன் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. சிறுவாணி அணையில் கடந்த 24-ந் தேதி 19.02 அடிக்கு நீர்மட்டம் இருந்தது. 25-ந் தேதி 21.55 அடி, 26-ந் தேதி 26.60 அடி, 27-ந் தேதி 30.24 அடி, நேற்று 32.73 அடியாக இருந்தது. இன்று காலை நீர்மட்டம் 34.80 அடியாக உயர்ந்தது.

    கடந்த 5 நாட்களில் அணையின் நீர்மட்டம் 15.71 அடி உயர்ந்துள்ளது. மேலும் இன்று அணையில் 6 செ.மீ மற்றும் அடிவாரப்பகுதியில் 5 சென்டி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகி உள்ளது. நீர் எடுப்பதற்காக உதவும் மூன்று வால்வுகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.

    மற்றொரு குடிநீர் ஆதாரமான பில்லூர் அணையின் மொத்த நீர்த்தேக்க உயரம் 100 அடி. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் பில்லூர் அணை கடந்த 25-ந்தேதி நள்ளிரவு நிரம்பியது. அன்று முதல் அணையின் 4 மதகுகள் திறந்து உபரிநீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று 5-வது நாளாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

    சோலையாறு அணையின் நீர்மட்டம் கடந்த 20-ந் தேதி 2 அடியாக இருந்த நிலையில் கடந்த ஒருவார காலமாக பெய்து வரும் கனமழையால் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. நேற்று நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 3889.58 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து 50 கனஅடி நீர் வெளியேற்றப்பட்ட நிலயில் 165 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 59.69 அடியாக உயர்ந்துள்ளது.

    ஆழியாறு அணை நீர்மட்டம் கடந்த 24-ந் தேதி 75.30 கனஅடி நீர்மட்டம் இருந்தது. நீர்வரத்து அதிகரிப்பால் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து இன்று காலை 80.20 அடியாக தண்ணீர் உயர்ந்துள்ளது.

    இதேபோல சுற்றுலா தலங்களாக விளங்கும் கோவை குற்றாலம், ஆனைமலை அருகே உள்ள கவியருவிகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு பொது மக்கள் குளிப்பதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

    • வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
    • 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

    கோவை

    கோவை மாநகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது சிறுவாணி அணை . இந்த அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீர், மாநகராட்சியில் உள்ள 26 வார்டுகளுக்கும், நகரை யொட்டிய 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

    49.53 அடி உயரம் கொண்ட சிறுவாணி அணையில், பாதுகாப்பு கருதி கேரள அரசு 45 அடி வரை மட்டுமே நீரைத் தேக்கிவைக்கிறது. இதன் காரணமாக, கடந்த 3 ஆண்டுகளாக சிறுவாணி அணை முழுக் கொள்ளளவை எட்டாமல் உள்ளது.

    கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட்டு மாதங்கள் வரை தென்மேற்கு பருவ மழை நன்றாகப் பெய்ததால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் 45 அடிக்கு மேல் சென்றது.

    அதன் பிறகு, அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு, நீர்மட்ட ம் குறைக்க ப்பட்டது.

    அதைத் தொடர்ந்து, சிறுவாணி நீர்மட் டம் 35 அடி முதல் 40 அடி வரை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது.

    இந்தநிலையில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. கடந்த வாரங்களில் 20 அடியாக இருந்த நீர்மட்டம், தற்போது, 15.90 அடியாக குறைந்துள்ளது.

    இதன் காரணமாக குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து எடுக்கப்ப டும் நீரின் அளவு 6.30 கோடி லிட்டரில் இருந்து 5 கோடி லிட்டராக குறைக்கப்பட்டுள்ளது.

    • கோவை மாநகரில் 26 வார்டுகள் மற்றும் 20க்கும் மேற்பட்ட நகரையொட்டிய கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை உள்ளது.
    • வரும் நாட்களில் சிறுவாணி அணையின் நீர்மட்டம் மேலும் குறைந்தால், மாநகரில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது.

    கோவை:

    சிறுவாணி அணையின் நீர்மட்டம் 2.85 அடியாக குறைந்துள்ளதால் வருகிற நாட்களில் மாநகரில் குடிநீர் பற்றாக்குறை நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    கோவை மாநகரில் 26 வார்டுகள் மற்றும் 20க்கும் மேற்பட்ட நகரையொட்டிய கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை உள்ளது.

    49.50 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் இருந்து தினமும் குடிநீருக்காக 10 கோடி லிட்டர் (100 எம்.எல்.டி) தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது.

    பிப்ரவரி இறுதியில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைய தொடங்கியது.

    மார்ச்சில் அணையின் நீர்மட்டம் 6 அடியாக சரிந்தது. அதை தொடர்ந்து ஏப்ரல், மே மாதங்களில் அணையின் நீர்மட்டம் 5 அடிக்கு கீழ் வந்தது.

    தற்போது நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும், வெயிலின் தாக்கம் அதிகரித்ததாலும் கடந்த வாரத்தில் 3.94 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று நிலவரப்படி 2.85 அடியாக குறைந்தது.

    இதனால் குடிநீருக்காக அணையில் இருந்து எடுக்கப்பட்டு வந்த குடிநீரின் அளவு 4.50 கோடி லிட்டரில் இருந்து 3.60 கோடி லிட்டராக குறைக்கப்பட்டுள்ளது.

    வரும் நாட்களில் அணையின் நீர்மட்டம் மேலும் குறைந்தால், மாநகரில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது.

    இதுதொடர்பாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

    ஜூன் இறுதிக்குள் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி தொடங்கி விட்டால் அணையின் நீர்மட்டம் உயரும்.

    பின்னர் அணையில் இருந்து குடிநீருக்காக எடுக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்படும்.

    மாநகரில் சிறுவாணி நீர் வினியோகிக்கும் பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் கடந்தாண்டை போல பில்லூர் குடிநீர் திட்டத்தின் மூலமாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • 2 நாட்களாக பருவமழை பெய்து வருவதால் அணையின் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • அணையில் இருந்து குடிநீருக்காக 10 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது.

    கோவை,

    கோவை மாநகரில் 26 வார்டுகள், 20-க்கும் மேற்ப ட்ட நகரையொட்டிய கிரா மங்களுக்கு நீராதார மாக சிறுவாணி அணை விளங்கு கிறது. 49.50 அடி கொள்ள ளவு கொண்ட இந்த அணையில் இருந்து குடிநீருக்காக 10 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்ப ட்டு வந்தது.

    வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்ததால் கட ந்த பிப்ரவரி மாதத்தின் இறுதியில் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறையத் தொடங்கியது. ஏப்ரல், மே மாதங்களில் அணையின் நீர்மட்டம் 5 அடிக்கு கீழ் குறைந்தது.

    இந்நிலையில் கேரளத்தில், தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாள்களாக 15 மி.மீ முதல் 20 மி.மீ வரை மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு செல்லும் முக்தியாறு, பட்டியலாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ள்ளது.

    இது குறித்து மாநகராட்சி ஆணையர் பிரதாப் கூறியதாவது:-

    சிறுவாணி அணையின் நீர்மட்டம் வெகுவாக குறை ந்தாலும் சிறுவாணியில் உள்ள பழமையான தடுப்ப ணையில் 3 அடிக்கு உள்ள தண்ணீர் மூலம் குடிநீர் விநியோகம் தடைபடாமல் வழங்க ஏற்பாடு செய்யப்ப ட்டது. தற்போது கேர ளத்தில் பருவமழை தொ டங்கி யுள்ளதால் அணை யின் நீர்மட்டம் உயரத் தொடங்கியுள்ளது. வரும் நாள்களில் பருவ மழை தீவிரமடைந்து அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தால் குடிநீருக்காக எடுக்கப்படும் நீரின் அளவு அதிகரி க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜூன் மாத இறுதியில் இருந்து நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது.
    • சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    கோவை:

    கோவை மாநகரில் 26 வார்டுகள், 20க்கும் மேற்பட்ட நகரையொட்டிய கிராமங்களுக்கு நீர் ஆதாரமாக சிறுவாணி அணை விளங்குகிறது.

    49.50 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் இருந்து தினமும் குடிநீருக்காக 10 கோடி லிட்டர் (100 எம்.எல்.டி) தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.

    கடந்த ஏப்ரல், மே மாதங்களில் அணையின் நீர்மட்டம் 5 அடிக்கும் கீழ் குறைந்தது. ஜூன் மாதத்தில் அணையின் நீர்மட்டம் ஒரு அடிக்கு குறைவாக சரிந்தது.

    இதனால் சிறுவாணி குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட வார்டுகளில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் லாரிகள் மூலமாக தண்ணீர் வினியோகிக்கப்பட்டது.

    இந்த நிலையில் ஜூன் மாத இறுதியில் இருந்து நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. கடந்த சில நாட்களாக பலத்த மழையும் பெய்தது.

    இதனால் அணைக்கு செல்லும் முத்தியாறு, பட்டியலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளம் அப்படியே அணைக்கு வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டமும் வெகுவாக உயர தொடங்கியது.

    மெல்ல மெல்ல உயர தொடங்கிய சிறுவாணி அணையின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 12 அடியாக உயர்ந்தது. வரும் நாட்களில் இன்னும் அணையின் நீர்மட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

    சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    அணையின் நீர்மட்டம் உயர தொடங்கி உள்ளதால், அங்கிருந்து குடிநீருக்காக எடுக்கப்படும் தண்ணீரின் அளவு 3 கோடியில் இருந்து 7 கோடி லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    செப்டம்பர் வரை பருவமழை பெய்யும் வாய்ப்புள்ளதால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • சிறுவாணியில் குடிநீர் தேவைக்காக தண்ணீர் எடுத்தும், 11 அடி என நிலையாக இருந்தது.
    • தொடர் மழை காரணமாக ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 3.5 அடியாக உயர்ந்துள்ளது.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை விளங்கி வருகிறது. இந்த அணை தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது. கேரளத்தில் தற்போது தென் மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை.

    இந்த மாதம் முதல் வாரத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து 3 நாட்களுக்கு மழை பெய்தது. தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில் அணையின் நீர்மட்டம், 11 அடி என நிலையாக இருந்து வந்தது. இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு மலைப்பகுதியில் திடீரென கனமழை பெய்தது.

    சிறுவாணியில் நேற்று காலை நிலவரப்படி அடிவாரத்தில் 31 மி.மீ. மழையும், அணைப்பகுதியில், 27 மி.மீ. மழையும் பதிவாகி இருந்தது. இதன் காரணமாக நீர்மட்டம் 12.14 அடியாக உயர்ந்துள்ளது.

    இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், சிறுவாணியில் குடிநீர் தேவைக்காக தண்ணீர் எடுத்தும், 11 அடி என நிலையாக இருந்தது. தற்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளதால் நீர்மட்டம் உயர்ந்து இருக்கிறது. நல்ல மழையை எதிர்பார்த்துள்ளோம் என்றனர்.

    இதேபோல மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான கேரள மாநிலம் அட்டப்பாடி மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அவலாஞ்சி பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    நேற்றுமுன்தினம் அணையின் மொத்த கொள்ளளவான 100 அடியில் 80 அடி அணையில் நீர் இருப்பு இருந்தது. நீர்வரத்து அதிகரிப்பால் நேற்று ஒரே நாளில் நீர்மட்டம் 83.5 அடியாக உயர்ந்தது. தொடர் மழை காரணமாக ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 3.5 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து 3 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் பவானியாற்றின் இருகரைகளையும் தொட்டவாறு தண்ணீர் செல்கிறது.

    அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் கடந்த சில மாதங்களாக நிலவி வந்த குடிநீர் பிரச்சினை நீங்கும் என பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • அணையில் இருந்து, தினமும் குடிநீருக்காக 10 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது.
    • ஆகஸ்ட் மாதத்தில் அணையின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளது

    கோவை,

    சிறுவாணி அணையின் நீர்மட்டம் 16 அடியாக உயர்ந்துள்ள நிலையில், அணையில் இருந்து குடிநீருக்காக எடுக்கப்படும் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    கோவை மாநகரில் 26 வார்டுகள், 20-க்கும் மேற்பட்ட நகரையொட்டிய கிராமங்களுக்கு நீராதாரமாக சிறுவாணி அணை விளங்குகிறது. 49.50 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் இருந்து, தினமும் குடிநீருக்காக 10 கோடி லிட்டர் (100 எம்.எல்.டி) தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது.

    பிப்ரவரி மாதத்தின் இறுதியில் இருந்து, வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்ததால், அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறையத் தொடங்கியது. அதன்படி, மார்ச் மாதத்தில் அணையின் நீர்மட்டம் 6 அடியாக சரிந்தது.

    அதைத்தொடர்ந்து ஏப்ரல்,மே மாதங்களில் அணையின் நீர்மட்டம் 5 அடிக்கும் கீழ் வந்தது.

    ஜூன் மாதத்தில் ஒரு அடிக்கும் குறைவாக சரிந்தது. இதனால், சிறுவாணி குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட வார்டுகளில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் லாரிகள் மூலமாக தண்ணீர் வினியோகிக்கப்பட்டன.

    இந்நிலையில், ஜூன் மாத இறுதியில் இருந்து சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இடைவெளி விட்டு கனமழை பெய்து வருவதால், சிறுவாணி அணைக்கு செல்லும் முக்தியாறு, பட்டியலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 16 அடியாக உயர்ந்தது.

    இது தொடர்பாக, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி கூறுகையில், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், குடிநீருக்காக எடுக்கப்படும் தண்ணீரின் அளவு 7 கோடி லிட்டரில் இருந்து 8 கோடி லிட்டராக அதிகரிக்கப்ப ட்டுள்ளது.

    பருவமழை தீவிரமடைந்துள்ளதால், ஆகஸ்ட் மாதத்தில் அணையின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளது என்றார்.

    • சிறுவாணி குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட வார்டுகளில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் லாரிகள் மூலமாக தண்ணீர் வினியோகிக்கப்பட்டது.
    • கோடை மழை அல்லது தென்மேற்கு பருவமழையால் சிறுவாணி அணை நீர்மட்டம் உயரும் வாய்ப்புள்ளது.

    கோவை:

    கோவை மாநகரில் 26 வார்டுகள், நகரையொட்டி உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சிறுவாணி அணை நீர் பிரதான குடிநீர் ஆதாரமாக உள்ளது.

    49.50 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் இருந்து தினமும் குடிநீருக்காக 10 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது. கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவமழை ஏமாற்றியதால் அணையின் நீர்மட்டம் 20 அடிக்கு உயராமல் காணப்பட்டது.

    இதனால் சிறுவாணி குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட வார்டுகளில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் லாரிகள் மூலமாக தண்ணீர் வினியோகிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை கைகொடுத்ததால் அணையின் நீர்மட்டம் 32 அடி வரை உயர்ந்தது.

    அதற்கு மேல் நீர்மட்டம் உயரவில்லை. மேலும் மழை பெய்யாததாலும் குடிநீருக்காக அணையில் இருந்து தினமும் 7 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருவதாலும் சிறுவாணி அணை நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது.

    குறிப்பாக கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 26 அடி(871 மீட்டர்) ஆக உள்ளது.

    இதுகுறித்து கோவை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

    சிறுவாணி அணையின் நீர்மட்டம் குறைந்தாலும் மாநகரில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க பில்லூர் 1 மற்றும்2, ஆழியார் கூட்டுக் குடிநீர்திட்டம், வடவள்ளி-கவுண்டம்பாளையம் குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் வழங்கலாம்.

    கோடை மழை அல்லது தென்மேற்கு பருவமழையால் சிறுவாணி அணை நீர்மட்டம் உயரும் வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • கோவை மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருக்ககூடிய சிறுவாணி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக சோலையாரில் 59 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    கோவை:

    மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரையொட்டி கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை, இரவு நேரங்களில் கனமழை கொட்டுகிறது.

    நேற்றும் மழை நீடித்தது. கோவை மாநகர் பகுதிகளான ரெயில் நிலையம், காந்திபுரம், பாப்பநாயக்கன் பாளையம், காந்திபார்க், சிங்காநல்லூர், உக்கடம், குனியமுத்தூர், சுந்தராபுரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இரவில் பலத்த மழை பெய்தது. அதனை தொடர்ந்து சாரல் மழை அடித்து கொண்டே இருந்தது.

    இந்த மழையால் சாலைகள் மற்றும் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு மத்தியிலேயே வாகனத்தை இயக்கி சென்றனர்.

    புறநகர் பகுதிகளான மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வடவள்ளி, தொண்டாமுத்தூர், பேரூர், சூலூர், வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது. சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இந்த மழையால் கடும் குளிரும் நிலவியது. இன்று காலையும் லேசான சாரல் மழை பெய்தது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இருந்து வருகிறது.

    இதன் காரணமாக கோவை மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருக்ககூடிய சிறுவாணி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    நீர்வரத்து அதிகரிப்பால் அணையின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்தது. தற்போது அணையின் நீர்மட்டம் 42 அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 9.82 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டது.

    கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக சோலையாரில் 59 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    கோவை மாவட்டத்தில் பதிவான மழை விவரம் மி.மீட்டரில் வருமாறு:

    சோலையார்-59, சின்னக்கல்லார்-49, சின்கோனா-42, வாரப்பட்டி பி.டபிள்யூடி அலுவலகம்-34, பெரிய நாயக்கன்பாளையம்-29, வால்பாறை பி.ஏ.பி-27, பொள்ளாச்சி தாலுகா-25, வால்பாறை தாலுகா-24, கோவை தெற்கு-22 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    பருவ மழை தொடரும் என்பதால், மெல்ல மெல்ல நீர் மட்டம் உயரும். அப்போது கூடுதலாக தண்ணீர் எடுக்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கோவை:

    கோவை மாநகராட்சி மற்றும் வழியோர கிராம மக்களுக்கு மிக முக்கிய குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை இருந்து வருகிறது.

    இங்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவ மழை பெய்யத் தொடங்கி உள்ளது. நேற்று காலை, 8 மணி நிலவரப்படி, அணை பகுதியில், 21 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. அடிவாரத்தில் மழைப்பொழிவு இல்லை.

    ஆனாலும் சிற்றருவிகளில் நீர் வரத்து காணப்படுவதால் அணையில் 5 செ.மீ., நீர் மட்டம் உயர்ந்திருக்கிறது. அதன்படி நேற்று 18.5 அடிக்கு நீர் இருப்பு இருந்தது.

    4-வது வால்வு மூடப்பட்டு இருப்பதால், 5 கோடி லிட்டரே எடுக்கப்பட்டது. அதில், 3.2 கோடி கோவை மாநகராட்சி பகுதி மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது.

    பருவ மழை தொடரும் என்பதால், மெல்ல மெல்ல நீர் மட்டம் உயரும். அப்போது கூடுதலாக தண்ணீர் எடுக்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×