என் மலர்
நீங்கள் தேடியது "கோவை மழை"
- சேத மதிப்பு உடனடியாக தெரியவில்லை.
- சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பேரூராட்சி லிங்காபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான காந்தவயல், மொக்கை மேடு, பழைய கூத்தாமண்டி பிரிவு, திம்மராயம்பாளையம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் வாழை பயிரிடப்பட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தற்போது பவானி ஆறு, மாயாறு ஆறு ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரிக்கவே, ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இதனால் பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியிலும் நீர்மட்டமும் உயர்ந்து காணப்படுகிறது. இதனால் பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் உள்ள லிங்காபுரம், காந்தவயல், மொக்கை மேடு, பழைய கூத்தாமண்டி பிரிவு, திம்மராயம்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள வாழை தோட்டங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
50 ஆயிரம் வாழைகள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. சேத மதிப்பு உடனடியாக தெரியவில்லை. சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
- கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலை மேம்பாலம் மற்றும் சர்வீஸ் ரோடுகளில் இருந்து மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
- நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழையுடன் கடும் குளிரும் நிலவியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
கோவை:
தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழையால் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
அதன்படி கோவை மாவட்டம் வால்பாறையில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அங்குள்ள சாலையின் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியது. எனவே அந்த வழியாக செல்லும் வாகனங்கள் தட்டுத்தடுமாறி சென்று வந்தன.
வால்பாறை தேயிலை தோட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் தலையில் பிளாஸ்டிக் கவர்களை போட்டுக்கொண்டு வேலை பார்த்தனர். மேலும் பள்ளிக்கு சென்ற குழந்தைகள் குடைகளுடன் வீடு திரும்பியதை பார்க்க முடிந்தது.
வால்பாறையில் இருந்து சோலையாறு அணைக்கு செல்லும் சாலையில், ஜே.ஜே. நகர் பகுதியில் நேற்று சாலையோரம் நின்றமரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் கொட்டும் மழையிலும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலையில் விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.
கிணத்துக்கடவு பகுதியிலும் நேற்று காலை முதல் மதியம் வரை அவ்வப்போது விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. பின்னர் மாலையில் திடீரென பலத்த மழை பெய்தது.
இதன்காரணமாக கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலை மேம்பாலம் மற்றும் சர்வீஸ் ரோடுகளில் இருந்து மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனஓட்டிகள், பள்ளி குழந்தைகள் ஆகியோர் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
மேலும் மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள வடிகாலில் மழைநீர் செல்லாமல் மார்க்கெட் அருகே உள்ள சர்வீஸ் சாலையில் ஆறு போல வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று அதிகாலை முதலே கடும் மேகமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்தது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
மேலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் வாகனஓட்டிகள் முகப்பு விளக்கு மற்றும் திசை விளக்குகளை ஒளிரவிட்டபடி வாகனங்களை சிரமத்துடன் இயக்கி வந்தனர்.
நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழையுடன் கடும் குளிரும் நிலவியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
- கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டி வருகிறது.
- தொடர்ந்து கனமழை பெய்தால் சோலையார் அணை விரைவில் தனது முழு கொள்ளளவை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வால்பாறை:
தமிழகத்தில் கடந்த மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது.
இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
கோவை மாவட்டம் வால்பாறையில் சோலையாறு அணை உள்ளது. இந்த அணை 160 அடிய உயரம் கொண்டது.
கடந்த மாத இறுதியில் பெய்த மழை காரணமாக ஜூன் 1-ந்தேதி அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியது.
பின்னர் மழை சற்று குறைந்ததால் அணைக்கு நீர்வரத்தும் குறைந்து விட்டது. மேலும் மின் உற்பத்திக்கும், பரம்பிக்குளம் அணைக்கும் நீர் திறக்கப்பட்டதால் சோலையாறு அணையின் நீர்மட்டமும் குறைய தொடங்கியது.
இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி முதல் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டி வருகிறது.
குறிப்பாக சோலையார் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்கிறது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று அணையின் நீர்மட்டம் 116.58 அடியாக இருந்தது. தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரிக்கவே இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 123 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 505 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 879 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
தொடர்ந்து கனமழை பெய்தால் சோலையார் அணை விரைவில் தனது முழு கொள்ளளவை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொள்ளாச்சி அடுத்த ஆழியாரில் ஆழியார் அணை உள்ளது. இந்த அணையின் மொத்த நீர் மட்டம் 120 அடியாகும். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அணைக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 92.20 அடியாக இருந்தது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கவே அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 95.50 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 63 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 161 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மி.மீட்டரில் வருமாறு:
சின்னக்கல்லார்-75, சோலையார்-59, வால்பாறை பி.ஏ.பி-56, சின்கோனா, வால்பாறை தாலுகா-54, சிறுவாணி அடிவாரம்-23, பொள்ளாச்சி தாலுகா-11, ஆனைமலை தாலுகா-9, கிணத்துக்கடவு தாலுகா-8, மதுக்கரை தாலுகா-5 என மழை பெய்துள்ளது.
- பில்லூர் அணை இந்த சீசனில் 2-வது முறையாக தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
- குளிப்பதற்காக வந்த சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் சோதனைச்சாவடி அருகே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.
கோவை:
கோவை மாவட்டத்தில் பில்லூர், ஆழியார், சோலையார், சிறுவாணி ஆகிய அணைகள் முக்கிய நீராதாரங்களாக உள்ளன. தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
ஆழியார் அணையின் மொத்த நீர்மட்ட அளவு 120 அடியாகும். தற்போது அணை நீர்மட்டம் 90 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 850 கனடி அடி நீர் வந்து கொண்டிருந்தது. 200 கன அடி நீர் பாசத்திற்காக திறந்து விடப்படுகிறது. மழை வலுக்கும்பட்சத்தில் விரைவில் அணை தனது முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளது.
வால்பாறை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்குள்ள சோலையாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 8 அடி உயர்ந்துள்ளது. அணைக்கு 4,334 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. 165 அடி உயரம் கொண்ட அணையின் நீர் மட்டம் தற்போது 108 அடியாக உயர்ந்துள்ளது.
மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை இந்த சீசனில் 2-வது முறையாக தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதன் காரணமாக 4 மதகுகள் திறக்கப்பட்டு அதன் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு, ஆற்றுக்கு குளிக்கவோ, துணிதுவைக்கவோ செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
சிறுவாணி அணை நீர்மட்டம் 45 அடியை எட்டியுள்ளது. கோவை நகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் இந்த அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளது பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இதேபோல கோவை குற்றாலம் மற்றும் ஆழியார் அருகே உள்ள கவியருவியில் 3-வது நாளாக இன்றும் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் சுற்றுலாபயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. குளிப்பதற்காக வந்த சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் சோதனைச்சாவடி அருகே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.
- சிறுவாணி அணை கோவையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.
- சுற்றுலா தலங்களாக விளங்கும் கோவை குற்றாலம், ஆனைமலை அருகே உள்ள கவியருவிகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கோவை:
கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அதிகனமழைக்காக சிவப்பு நிற எச்சரிக்கை இன்றும் நீடிக்கிறது.
நேற்றும், இன்றும் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக வால்பாறை தாலுகா சின்னக்கல்லார் பகுதியில் 11 செ.மீ மழை கொட்டித்தீர்த்தது. பொள்ளாச்சி தாலுகா பகுதியில் 8 செ.மீ. மழை பதிவாகி இருந்தது.
தொடர்ந்து பெய்து வரும் மழையால் கோவை மாவட்டத்தில் உள்ள குளங்கள், அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகின்றன. மாவட்டத்தில் முக்கிய அணைகளாக உள்ள சிறுவாணி, ஆழியார், பில்லூர், சோலையாறு ஆகிய அணைகளின் நீர்மட்டம் கடந்த சில நாட்களில் மிக வேகமாக உயர்ந்துள்ளன.
சிறுவாணி அணை கோவையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்த அணையின் நீர்த்தேக்க உயரம் 49.53 அடி என்றாலும், அணையின் பாதுகாப்பு காரணங்களுக்காக 44.61 அடி உயரம் வரை மட்டுமே தண்ணீர் தேக்கப்படுகிறது.
அணையில் இருந்து பெறப்படும் நீர் வழியோரம் உள்ள 22 கிராமங்களுக்கும், மாநகராட்சியின் 30-க்கும் மேற்பட்ட வார்டுகளுக்கும் வினியோகிக்கப்படுகிறது.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் சிறுவாணி அணை மற்றும் அதன் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. சிறுவாணி அணையில் கடந்த 24-ந் தேதி 19.02 அடிக்கு நீர்மட்டம் இருந்தது. 25-ந் தேதி 21.55 அடி, 26-ந் தேதி 26.60 அடி, 27-ந் தேதி 30.24 அடி, நேற்று 32.73 அடியாக இருந்தது. இன்று காலை நீர்மட்டம் 34.80 அடியாக உயர்ந்தது.
கடந்த 5 நாட்களில் அணையின் நீர்மட்டம் 15.71 அடி உயர்ந்துள்ளது. மேலும் இன்று அணையில் 6 செ.மீ மற்றும் அடிவாரப்பகுதியில் 5 சென்டி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகி உள்ளது. நீர் எடுப்பதற்காக உதவும் மூன்று வால்வுகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.
மற்றொரு குடிநீர் ஆதாரமான பில்லூர் அணையின் மொத்த நீர்த்தேக்க உயரம் 100 அடி. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் பில்லூர் அணை கடந்த 25-ந்தேதி நள்ளிரவு நிரம்பியது. அன்று முதல் அணையின் 4 மதகுகள் திறந்து உபரிநீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று 5-வது நாளாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
சோலையாறு அணையின் நீர்மட்டம் கடந்த 20-ந் தேதி 2 அடியாக இருந்த நிலையில் கடந்த ஒருவார காலமாக பெய்து வரும் கனமழையால் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. நேற்று நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 3889.58 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து 50 கனஅடி நீர் வெளியேற்றப்பட்ட நிலயில் 165 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 59.69 அடியாக உயர்ந்துள்ளது.
ஆழியாறு அணை நீர்மட்டம் கடந்த 24-ந் தேதி 75.30 கனஅடி நீர்மட்டம் இருந்தது. நீர்வரத்து அதிகரிப்பால் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து இன்று காலை 80.20 அடியாக தண்ணீர் உயர்ந்துள்ளது.
இதேபோல சுற்றுலா தலங்களாக விளங்கும் கோவை குற்றாலம், ஆனைமலை அருகே உள்ள கவியருவிகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு பொது மக்கள் குளிப்பதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு உள்ளது.
- வால்பாறையில் கடந்த சில தினங்களாக மழை கனமழை பெய்தது.
- மின்சாரம் துண்டிக்கப்பட்டு அந்த பகுதியே இருளாக காட்சியளிக்கிறது.
வால்பாறை:
கோவை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டதால் கடந்த 3 தினங்களாக கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. ஏரிகள், குளங்கள், குட்டைகளிலும் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது.
வால்பாறையில் கடந்த சில தினங்களாக மழை கனமழை பெய்தது. நேற்றும் மழை நீடித்தது.
வால்பாறையில் உள்ள கூழாங்கல் ஆறு, நடுமலையாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த மழைக்கு நேற்று இரவு வால்பாறை அடுத்த சோலையார் எஸ்டேட் செல்லும் வழியில் முனீஸ்வரன் கோவில் பகுதியில் மரம் ஒன்று முறிந்து சாலையில் விழுந்தது.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வந்து மரங்களை வெட்டி அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.
இதேபோல் மானாம்பள்ளி மின் உற்பத்தி நிலையத்திற்கு செல்லும் சாலை, கருமலை எஸ்டேட் பகுதியில் குரூப் ஆபிஸ் அருகேயும் மரம் விழுந்தது.

வால்பாறை தலைநார், சக்தி எஸ்டேட் பகுதிகளில் மின் கம்பத்தின் மீது மரம் விழுந்தது. இதனால் அந்த பகுதிகளில் 2 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு அந்த பகுதியே இருளாக காட்சியளிக்கிறது. அதேபோன்று பெரியகல்லாறு, சின்னகல்லார் ஆகிய எஸ்டேட் பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இன்று காலை வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் 6-வது கொண்ைட ஊசி வளைவில் மரம் ஒன்று முறிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. வாகனங்கள் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்றன. தீயணைப்பு துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வந்து மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல் வால்பாறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஆங்காங்கே என 10க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன.
தொடர் கனமழையுடன் வீசிய சூறாவளி காற்றுக்கு சோலையார் அணை பகுதி சத்யா நகரில் உள்ள சுதர்சனன் என்பவரின் வீட்டின் மேல் கூரை காற்றில் பறந்து சேதம் அடைந்தது. அங்கு இருந்தவர்கள் மீட்கப்பட்டு சோலையார் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம், காரமடை, அன்னூர், சிறுமுகை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையால் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது.
கோவை மாநகரில் நேற்று காலை முதலே சாரல் மழை பெய்தது. மதியத்திற்கு பிறகு கனமழை வெளுத்து வாங்கியது. இரவிலும் இந்த மழை நீடித்தது. மழையால் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
கோவையில் பெய்து வரும் மழை காரணமாக நொய்யல் ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளதை தொடர்ந்து அங்கிருந்து குளங்களுக்கும் தண்ணீர் செல்கிறது. இதனால் கோவையில் உள்ள குளங்களும் வேகமாக நிரம்பி வருகின்றன.
கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக சின்னக்கல்லாரில் 11 செ. மீ மழை பதிவாகி உள்ளது.
மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
சின்னக்கல்லார்-116, சின்கோனா-70, சிறுவாணி அடிவாரம்-86, வால்பாறை பி.ஏ.பி-58, வால்பாறை தாலுகா-55, சோலையார்-61.
- வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது
- நடப்பாண்டில் வெள்ளியங்கிரி மலை ஏறி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.
கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் அதிதீவிரமாக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
அந்த வகையில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. மேற்குதொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை கொட்டுகிறது.
இந்நிலையில், கோவையில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் வெள்ளியங்கிரி மலையில் ஏற பக்தர்களுக்குத் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவையில் வெள்ளியங்கிரி மலை ஏறிய இரண்டு பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
உடல் நிலை மோசமான நிலையில் 5ஆவது மலையில் சிக்கியிருந்த நபர் உயிரிழந்தார். ஏற்கெனவே ஏழாவது மலையேறிய போது காரைக்காலைச் சேர்ந்த கௌசல்யா மயங்கி விழுந்து உயிரிழந்தார்
நடப்பாண்டில் மட்டும் வெள்ளியங்கிரி மலை ஏறி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.
- வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது.
- பக்தர்களின் பாதுகாப்பு கருதி நடவடிக்கை என வனத்துறை அதிகாரிகள் தகவல்
கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் அதிதீவிரமாக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
அந்த வகையில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. மேற்குதொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை கொட்டுகிறது.
இந்நிலையில், கோவையில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் வெள்ளியங்கிரி மலையில் ஏற பக்தர்களுக்குத் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
மறு அறிவிப்பு வரும் வரை வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது. மலைப்பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி நடவடிக்கை என வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும், பரளிக்காடு, பூச்சமரத்தூர் சூழல் சுற்றுலா தலங்களுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- கோவை வழியாக செல்லும் ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
- நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால், சித்திரை சாவடி முதல் தடுப்பணையில் வெள்ளநீர் கரைபுரண்டு ஒடுகிறது.
வடவள்ளி:
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
இந்த நிலையில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் அதிதீவிரமாக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
அந்த வகையில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. மேற்குதொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை கொட்டுகிறது.
இதன்காரணமாக கோவை வழியாக செல்லும் ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் இரவு முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
நொய்யலாற்று வழித்தடப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றங்கரையோரம் குளிக்கவோ, வேடிக்கை பார்க்கவோ செல்லக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
இதற்கிடையே கோவையின் முக்கிய நதியாகவும், விவசாயிகள் வாழ்வாதாரமாகவும் உள்ள நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் அந்த பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால், சித்திரை சாவடி முதல் தடுப்பணையில் வெள்ளநீர் கரைபுரண்டு ஒடுகிறது.
நீண்ட நாட்களாக மழை இல்லாமல் வறண்டு காணப்பட்ட சித்திரைசாவடி தடுப்பணையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் அழகை காண சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர்.
நொய்யல் ஆற்றில் வரும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்க கூடும் என்பதால் அந்த பகுதியில் தொண்டாமுத்தூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வால்பாறை பகுதியிலும் கனமழை வெளுத்து வாங்குவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.
இதன் காரணமாக சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி, கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு, ஆழியார் கவியருவி ஆகிய இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
வால்பாறையில் காலை 6:00 மணி வரை பெய்த மழைஅளவு விவரம் வருமாறு:-
வால்பாறை 51 மி.மீ., சோலையார் அணை-73 மி.மீ., சின்னக்கல்லார்-137 மி.மீ., சின்கோனா-95 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. மேலும் அதிகபட்சமாக சின்ன கல்லார் பகுதியில் 13 செ.மீ. மழை பெய்து உள்ளது.
- மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் நிரம்பி காட்டாற்று வெள்ளம் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.
- தற்போது சாலையில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வைத்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நேற்று காலை சிறுமுகை, காரமடை, மேட்டுப்பாளையம், பெள்ளேபாளையம், சிக்காரம்பாளையம், பெள்ளாதி, மருதூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டியது.
இந்த மழைக்கு சுற்றுவட்டார பகுதிகளில் 100-க்கும் அதிகமான குளங்கள், குட்டைகள் நிரம்பி வழிகின்றன. அங்கிருந்து வெளியேறிய தண்ணீர் அருகே உள்ள குடியிருப்புகள் மற்றும் பள்ளிகளுக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.
மருதூர் ஊராட்சிக்குட்பட்ட ஏழு சுழி தடுப்பணையில் அணை நிரம்பி, கசிவு ஏற்பட்டது. இதையறிந்ததும் மருதூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு கருதி அங்கு மணல் மூட்டைகளை அடுக்கி வைக்கப்பட்டன.
மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் நிரம்பி காட்டாற்று வெள்ளம் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.
இதன் காரணமாக 50-க்கும் அதிகமான சாலைகள் அனைத்தும் நீரில் மூழ்கி அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த சாலையை பயன்படுத்தி வந்த கிராம மக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.
நேற்று நள்ளிரவு மீண்டும் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. சிறுமுகை அடுத்த இலுப்பநத்தம் ஊராட்சியில் கொட்டிய கனமழைக்கு இரும்பறை முதல் சிறுமுகை செல்லும் சாலையில் மேடூர் என்ற பகுதியில் மழைநீர் கடல் நீரை போல சாலைகள் தெரியாத அளவுக்கு மூழ்கடித்தபடி சென்றது.
இந்த சாலையினை 50 கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது சாலையில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.
இலுப்பநத்தம் ஊராட்சியில் உள்ள அன்னதாசம்பாளையம் கிராமத்தில் பெய்த மழைக்கு அந்த பகுதியை சேர்ந்த ராஜ்குமார், தாமோதரன் ஆகியோர் பயிரிட்டிருந்த 10 ஏக்கர் அளவிலான வாழை பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கியது.
சில வாழைகள் தண்ணீரிலும் அடித்து செல்லப்பட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கனமழைக்கு அண்ணாநகர் சாலையில் உள்ள 20க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் நீரில் மிதந்தன. தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.
மக்கள் வீட்டில் உள்ள வாளி, பாத்திரங்களை வைத்து, வீடுகளுக்குள் புகுந்த வெள்ளத்தை வெளியேற்றி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, 40 ஆண்டுகளுக்கு பிறகு கனமழை கொட்டி தீர்த்துள்ளது. இதனால் பல சாலைகள் நீரில் மூழ்கியுள்ளன. எனவே இரும்பறை முதல் சிறுமுகை சாலையில் மேடூர் என்ற இடத்தில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
கோவை மாநகர் பகுதிகளான பாப்பநாயக்கன் பாளையம், ராமநாதபுரம், சிங்காநல்லூர், கணபதி, ரெயில் நிலையம், டவுன்ஹால், உப்பிலிபாளையம், காந்திபுரம், காந்தி பார்க், உக்கடம், சுந்தராபுரம், குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவில் கனமழை கொட்டியது.
இந்த மழையால் அவினாசி சாலை, சத்தி சாலை, திருச்சி சாலை, பொள்ளாச்சி சாலைகளில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களிலும் தண்ணீர் தேங்கி நின்றது.
பீளமேடு பகுதியில் பெய்த மழைக்கு அந்த பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதுடன், சில இடங்களில் தேங்கியும் நின்றது.
கனமழைக்கு நஞ்சுண்டாபுரம் ராமலிங்கம் ஜோதிநகர், சுங்கம் சிவராம் நகர், பீளமேடு வரதராஜபுரம், சிங்காநல்லூர் ஹவுசிங் யூனிட் உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன.
தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர்.
நள்ளிரவில் கொட்டிய கனமழையால் உடையாம்பாளையம் குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் புகுந்தது. 20க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் அங்குள்ள பொருட்கள் தண்ணீரில் மிதந்தன.
நள்ளிரவு நேரம் என்பதால் பொதுமக்களும் வீட்டை விட்டு வெளியில் வரமுடியாத நிலை இருந்தது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று, அங்கிருந்த மக்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டு, பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தனர்.
இதேபோல் உடையாம்பாளையம் கக்கன் நகர் பகுதியில் கார் ஒன்று மழைவெள்ளத்தில் சிக்கி கொண்டது. அதில் 3 பேர் சிக்கியிருந்தனர். தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று 3 பேரையும் பத்திரமாக மீட்டனர். கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக பீளமேடு பகுதியில் 10 செ.மீ மழை பெய்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் நாளை மறுநாள்(7-ந் தேதி) அதிக கனமழை பெய்யும் என தமிழ்நாடு அரசுக்கு தெரிவித்திருந்தது.
இதைத்தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் பருவமழை எதிர்நோக்கி அனைத்து வட்டங்களில் செய்யப்பட வேண்டிய முன்ஏற்பாடுகள் குறித்து கண்காணிக்கவும், மழையினால் பாதிப்புகள் ஏற்படும் போது தாசில்தாரால் மேற்கொள்ளப்படும் பணிகளை கண்காணிக்கவும், ஒவ்வொரு வட்டத்திற்கும், துணை கலெக்டர் நிலையில் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வட்டங்களில் பருவமழையை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் மழையினால் பாதிப்புகள் ஏற்படும் பொருட்டு, வட்டாட்சியரால் மேற்கொள்ளப்படும் பணிகளை கண்காணித்தும் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெள்ள பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு நடவடிக்கையாக மீட்பு வாகனங்கள், மணல் மூட்டைகள், சவுக்கு கட்டைகள், பொக்லைன் வாகனங்கள், பவர் ஸா மற்றும் ஜெனரேட்டர் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர், சப்-கலெக்டர்கள், ஆர்.டி.ஓ.க்கள், மற்றும் துணை ஆட்சியர்களால் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது விநியோகத் திட்டத்தில் தேவையான அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் இருப்பு குறித்து உறுதி செய்தல் வேண்டும். சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ முகாம்களை அமைக்க நடவடிக்கை எடுப்பதோடு, நோய்தடுப்பு மருந்துப் பொருட்கள் தேவையான அளவு இருப்பு வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காவல்துறையினர் பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களில் போக்குவரத்தை சரிசெய்ய மாற்று போக்குவரத்து ஏற்பாடுகளுடன் தயார் நிலையில் இருத்தல் வேண்டும். மின்சார வாரியத்தின் மின்வழித் தடங்களை சரி பார்த்து, பழுதான மின்கம்பங்ளை உடனடியாக மாற்ற வேண்டும். தீயணைப்பு துறையினர் உயிர்ப் பாதுகாப்பு உடைகளுடன் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை உடனுக்குடன் மீட்பதற்குத் தேவையான தளவாடங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
கழிவு நீர் கால்வாய்களில் பொதுமக்கள் கொட்டும் குப்பைகளால் அவ்வப்போது அடைப்பு ஏற்படுகிறது. பொதுமக்கள் இதை உணர்ந்து மழைநீர் வடியும் கால்வாய்களில் குப்பைகளை கொட்டாமலும், அடைப்பு ஏற்படாமலும் பார்த்து கொள்ள வேண்டும். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிப்பதற்காக 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அவசரகால கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்கள் பகுதியில் வடகிழக்கு பருவ மழையால் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டால் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெயில் அடித்து வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் திருப்பூரில் திடீரென மேகம் திரண்டு பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது.
இந்த மழை இரவு 7 மணி வரை 2 மணி நேரம் நீடித்தது. இதே போல் தாராபுரம், காங்கயம், மூலனூர், அவினாசி, பல்லடம், உடுமலை பேட்டை ஆகிய பகுதிகளிலும் மழை நீடித்தது.
திருப்பூரில் பெய்த மழை காரணமாக அங்குள்ள ஈஸ்வரன் கோவில் வீதி பாலம், அவினாசி சாலை, எம்.ஜி.ஆர். சிலை ஆகிய பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்தனர். திருப்பூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு-
அவினாசி - 10.6, திருப்பூர் -28, பல்லடம் -17, தாராபுரம்-16, காங்கயம் -4, மூலனூர் -21, உடுமலை பேட்டை - 5.40.
கோவை மாவட்டத்திலும் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. கோவை நகரில் லேசான மழை பெய்தது. மேட்டுப்பாளையத்தில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது.
வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்தது. வால்பாறை சத்தி எஸ்டேட் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக பொள்ளாச்சி அருகே உள்ள குரங்கு நீர் வீழ்ச்சியில் திடீர் வெள்ள பெருக்கு ஏற்பட்டது.
செம்மண் நிறத்தில் தண்ணீர் கொட்ட தொடங்கியது. அருவியில் குளித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் அங்கிருந்து வெளியேற்றினார்கள். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள். பொள்ளாச்சியிலும் மழை பெய்தது.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு விடிய, விடிய பலத்த மழை பெய்தது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பைக்காரா உள்ளிட்ட பகுதிகளில் இந்த மழை நீடித்தது. அதிகாலை 4 மணி வரை மழை பெய்தது.
மழை காரணமாக இன்று ஊட்டிக்கு சுற்றுலா வரும் பயணிகள் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டது.






