கார் பருவ சாகுபடிக்கு அணைகளில் தண்ணீர் திறக்க வேண்டும்-இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

அம்பை சட்டமன்ற தொகுதி விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள ஒரு தொகுதியாகும். தற்போது பாசனத்திற்கு தண்ணீர் தராமல் கால்வாய்களில் தண்ணீர் அடைக்கப்பட்டு உள்ளது.
கார் பருவ சாகுபடிக்கு அணைகளில் தண்ணீர் திறக்க வேண்டும்-இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
Published on

சிங்கை:

நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் மற்றும் தமிழக அரசுக்கு அம்பை தொகுதி எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-

அம்பை சட்டமன்ற தொகுதி விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள ஒரு தொகுதியாகும். விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டு இப்பகுதி மக்கள் வசிக்கின்றனர். இந்த நிலையில் கார்பருவ சாகுபடிக்காக நான் பல்வேறு கோரிக்கைகள் வைத்ததின்பேரில் கடந்த மாதம் 19-ந்தேதி பாபநாசம் அணை மற்றும் மணிமுத்தாறு அணையில் இருந்து நீர் திறக்க அரசு ஆணை பிறப்பித்து இருந்தது.

அந்த ஆணையில் 19-7-2023 முதல் 31-10-2023 வரை 105 நாட்கள் 3015 மில்லியன் கனஅடி நீர்பாசனத்திற்காக அதாவது கன்னடியான்கால்வாய், நதியுன்னிகால்வாய், வடக்கு கோடை மேலழகியான், தெற்கு கோடை மேலழகியான்கால் ஆகிய கால்வாயில் பாசன விவசாயிகள் பயன்பெறும் வகையில் தண்ணீர் திறக்கப்படும் என்று அறிவித்து திறக்கப்பட்டது.

அரசின் ஆணையை நம்பி இப்பகுதி விவசாயிகள் விவசாய முன்னேற்பு பணிகளை பெரும் சிரமத்திற்குள் செய்துள்ளனர். இந்நிலையில் தற்போது பாசனத்திற்கு தண்ணீர் தராமல் கால்வாய்களில் தண்ணீர் அடைக்கப்பட்டு உள்ளது. இது இப்பகுதி விவசாய மக்களை மிகவும் பாதிக்கும் சூழலில் உள்ளது. அதனால் அரசும், மாவட்ட நிர்வாகமும் விவசாயிகளின் நலன் கருதி மீண்டும் பாசனத்திற்காக கால்வாய்களில் தண்ணீர் திறக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com