search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mountain"

    • ஊத்து எஸ்டேட் பகுதியில் 14 மில்லிமீட்டரும், நாலுமுக்கில் 10 மில்லி மீட்டரும் மழை பெய்தது.
    • புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள மாஞ்சோலை வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்த வண்ணம் உள்ளது.

    மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட பகுதிகளில் நேற்றும் சாரல் மழை தொடர்ந்து பெய்து வந்தது. அதிகபட்சமாக ஊத்து எஸ்டேட் பகுதியில் 14 மில்லிமீட்டரும், நாலுமுக்கில் 10 மில்லி மீட்டரும் மழை பெய்தது. மாஞ்சோலையில் 3 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

    மாநகர பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்தது. நாங்குநேரியில் அதிகபட்சமாக 4 மில்லி மீட்டரும், களக்காட்டில் 3.20 மில்லிமீட்டரும் மழை பெய்தது. மணிமுத்தாறு அணை பகுதியில் லேசான சாரல் பெய்தது.

    தென்காசி

    தென்காசி மாவட்டத்தில் மலை பகுதியில் தொடரும் மழையின் காரணமாக குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுந்து வருகிறது.

    தொடர் விடுமுறையை யொட்டி சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. அவர்கள் அருவிகளில் குடும்பத்துடன் வந்து குளித்து மகிழ்கின்றனர்.

    அணை பகுதிகளை பொறுத்தவரை அடவி நயினார் அணையில் 2 மில்லிமீட்டரும், குண்டாறு அணையில் 1.2 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    கருப்பா நதி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் லேசான சாரல் மழை பெய்தது.

    • 1100 குளங்களில் 700-க்கும் மேற்பட்ட குளங்கள் நீரின்றி வறண்டு காணப்படுகிறது.
    • 2021-ம் ஆண்டு பாபநாசம் அணையில் 94.69 சதவீதம் நீர் இருப்பு இருந்தது

    நெல்லை:

    நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்க ளில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை குறைவாகவே பெய்துள்ளது.

    நீர் இருப்பு குறைவு

    இதனால் மாவட்டத்தில் உள்ள 1100 குளங்களில் 700-க்கும் மேற்பட்ட குளங்கள் நீரின்றி வறண்டு காணப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 75.10 அடியாக உள்ளது. அந்த அணையில் தற்போது 33.57 சதவீதம் நீர் இருப்பு உள்ளது.

    கடந்த ஆண்டு இதே நாளில் அந்த அணையில் 115.60 அடி நீர் இருப்பு இருந்தது. அதாவது 70.65 சதவீதம் நீர் இருப்பு காணப்பட்டது. தற்போது அதில் இருந்து பாதியாக நீர் இருப்பு குறைந்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு அந்த அணையில் 94.69 சதவீதம் நீர் இருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    நெல் சாகுபடி

    இதேபோல் கடந்த ஆண்டு சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 115.71 அடியாக இருந்த நிலையில் தற்போது 77.30 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இதன் சதவீதம் 21.53 ஆகும். 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் கடந்த ஆண்டு இதே நாளில் 88.54 சதவீதம் நீர் இருப்பு இருந்த நிலையில், இந்த ஆண்டு 48.13 சதவீதமாக உள்ளது.

    இதேபோல் வடக்கு பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு உள்ளிட்ட அணைகளிலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நீர் இருப்பு சதவீதம் பாதியாக குறைந்துவிட்டது. இதன் காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள சுமார் 86 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில் இந்த ஆண்டு நெல் சாகுபடி பணியானது வெகுவாக குறைந்துவிட்டது.

    • நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக முற்றிலும் மழை நின்று கடும் வெயில் அடித்து வந்தது.
    • நெல்லை, தென்காசி மாவட்டத்தின் அணை பகுதிகளில் நேற்று மாலை சாரல் மழை பெய்தது.

    நெல்லை:

    தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வந்தாலும் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் போதிய அளவில் பெய்யாமல் உள்ளது.

    தொடக்கத்தில் பரவலாக பெய்த நிலையில் கடந்த சில நாட்களாக முற்றிலும் மழை நின்று கடும் வெயில் அடித்து வந்தது.

    இந்நிலையில் நேற்று மாலை மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. நெல்லை, தென்காசி மாவட்டத்தின் அணை பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் சாரல் மழை பெய்தது.

    அதிகபட்சமாக திருச்செந்தூர், குலசேக ரன்பட்டி னத்தில் 7 மில்லி மீட்டரும், காயல்பட்டினத்தில் 4 மில்லிமீட்டரும் மழை பெய்தது. இதேபோல் சாத்தான்குளம், தூத்துக்குடி, தென்காசி, கடனாநதி, கருப்பாநதி, பாபநாசம், மணிமுத்தாறு, களக்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது.

    நெல்லை, டவுன், சந்திப்பு, பாளை உள்ளிட்ட இடங்களில் இன்று அதிகாலை சாரல் மழை பெய்தது. 143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பிரதான அணையான பாபநாசம் அணையின் இன்றைய நீர்மட்டம் 94.55 அடியாக உள்ளது. இதேபோல் சேர்வலாறு அணை நீர்மட்டம் 100.36 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 88.86 அடியாகவும் உள்ளது.

    • ரோஷன் கடந்த ஜூலை மாதம் உடையாப்பட்டி அருகே உள்ள கந்தாஸ்ரமம் மேல் பகுதியில் உள்ள மலையில் கல் உடைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
    • அங்கு ரோஷன் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள புத்திரகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரோஷன் (வயது 38). இவருக்கு திவ்யபாரதி (35) என்ற மனைவியும்,லோகேஷ், விஷ்ணு என்ற 2 மகன்களும் உள்ளனர். ரோஷன் கடந்த ஜூலை மாதம் உடையாப்பட்டி அருகே உள்ள கந்தாஸ்ரமம் மேல் பகுதியில் உள்ள மலையில் கல் உடைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

    அப்போது பாறைக்குள் வெடிமருந்தை திணித்து பாறைகளை வெடிக்க வைத்தபோது அதிலிருந்து சிதறிய கற்கள் ரோஷனின் தலையில் பலமாக தாக்கியது. இதில் படுகாயமடைந்த ரோஷன் சேலம் 3 ரோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு ரோஷன் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார் . இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடியாத்தம் அருகே மலை அடிவாரத்தில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணமாக கிடந்தார். அவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குடியாத்தம்:

    குடியாத்தம் அருகே உள்ள ராமாலை காந்தி கனவாய் மலை அடிவாரத்தில் நேற்று மாலை அதிகளவு துர்நாற்றம் வீசியது. ஆடு, மாடுகளை மேய்த்து கொண்டிருந்த சிலர், துர்நாற்றம் வீசிய பகுதிக்கு சென்று பார்த்தனர்.

    30 வயதுடைய ஒரு வாலிபரின் உடல் அழுகிய நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுப்பற்றி, அவர்கள் உடனடியாக கிராம நிர்வாக அலுவலர் சரஸ்வதியிடம் தெரிவித்தனர்.

    கிராம நிர்வாக அலுவலர் பரதராமி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இன்ஸ் பெக்டர் கவிதா தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் சம்பவ பகுதிக்கு விரைந்து வந்தனர்.

    வாலிபரின் உடல் அழுகி இருந்ததால், அவர் யார்? என அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர் இறந்து 3 நாளாகியிருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    மர்ம நபர்கள் யாரேனும், வாலிபரை கொலை செய்து உடலை மலை அடிவாரத்தில் வீசிச் சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×