search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mancholai"

    • வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
    • மழையால் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்து போன நிலையில், அடுத்த வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    மாஞ்சோலை

    இந்நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று நெல்லை மாவட்டம் முழுவதிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், ஒரு சில இடங்களில் மட்டும் லேசான சாரல் பெய்தது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை வனப்பகுதியில் உள்ள எஸ்டேட்டுகளில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அங்கு காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து எஸ்டேட்டுகளில் பெய்து வரும் மழையால் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    நீர்வரத்து அதிகரிப்பு

    இன்று காலை நிலவரப்படி மாஞ்சோலையில் அதிகபட்சமாக 33 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. காக்காச்சி, நாலுமுக்கு பகுதி களில் தலா 30 மில்லிமீட்டரும், ஊத்து எஸ்டேட்டில் 20 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    அணை பகுதிகளை பொறுத்தவரை பாபநாசத்தில் 3 மில்லிமீட்டர் மழை பெய்தது. சில நாட்களாக அணை பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக நீர்மட்டம் சற்று உயர்ந்துள்ளது. அணையில் தற்போது 88.45 அடி நீர் இருப்பு உள்ளது. 143 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணைக்கு வினாடிக்கு 1,127 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1304 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    • ஊத்து எஸ்டேட் பகுதியில் 14 மில்லிமீட்டரும், நாலுமுக்கில் 10 மில்லி மீட்டரும் மழை பெய்தது.
    • புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள மாஞ்சோலை வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்த வண்ணம் உள்ளது.

    மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட பகுதிகளில் நேற்றும் சாரல் மழை தொடர்ந்து பெய்து வந்தது. அதிகபட்சமாக ஊத்து எஸ்டேட் பகுதியில் 14 மில்லிமீட்டரும், நாலுமுக்கில் 10 மில்லி மீட்டரும் மழை பெய்தது. மாஞ்சோலையில் 3 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

    மாநகர பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்தது. நாங்குநேரியில் அதிகபட்சமாக 4 மில்லி மீட்டரும், களக்காட்டில் 3.20 மில்லிமீட்டரும் மழை பெய்தது. மணிமுத்தாறு அணை பகுதியில் லேசான சாரல் பெய்தது.

    தென்காசி

    தென்காசி மாவட்டத்தில் மலை பகுதியில் தொடரும் மழையின் காரணமாக குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுந்து வருகிறது.

    தொடர் விடுமுறையை யொட்டி சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. அவர்கள் அருவிகளில் குடும்பத்துடன் வந்து குளித்து மகிழ்கின்றனர்.

    அணை பகுதிகளை பொறுத்தவரை அடவி நயினார் அணையில் 2 மில்லிமீட்டரும், குண்டாறு அணையில் 1.2 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    கருப்பா நதி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் லேசான சாரல் மழை பெய்தது.

    • மாஞ்சோலைக்கு அரசு பஸ்சில் சென்ற பயணிகளை மணிமுத்தாறு வனச்சோதனை சாவடியில் வனத்துறையினர் இறக்கி விட்டனர்.
    • கேள்விகளுக்கு வனத்துறை அதிகாரிகள் மழுப்பலான பதில்களை ஆர்.டி.ஐ. பதிவுக்கு தெரிவித்துள்ளர்.

    கல்லிடைக்குறிச்சி:

    நெல்லை மாவட்டம் அம்பை மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை, ஊத்து, நாலு முக்கு, காக்காச்சி ஆகிய தேயிலை தோட்ட பகுதி களுக்கு அரசு பஸ்களில் சுற்றுலா பயணிகள் மற்றும் தொழிலாளர்களின் உறவி னர்கள் செல்ல வனத்துறை யினர் அனுமதி மறுத்த நிலையில், கடந்த மே மாதம் 26 -ந் தேதி மாஞ்சோலைக்கு அரசு பஸ்சில் சென்ற பயணிகளை மணிமுத்தாறு வனச்சோதனை சாவடியில் வனத்துறையினர் இறக்கி விடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தகவல் அறியும் உரிமை சட்டம்

    இந்நிலையில் மாஞ்சோலை, நாலுமுக்கு தேயிலை தோட்ட பகுதியை சேர்ந்த வக்கீல் ராபர்ட் சந்திரகுமார் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அரசு பஸ்சில் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி மறுப்பு, வனத்துறையினர் வாகனம் மூலம் எவ்வளவு வருமானம் கிடைக்கின்றது என சுமார் 32 கேள்விகள் கேட்டுள்ளார்.

    இந்த கேள்விகளுக்கு வனத்துறை சார்பில் யூகத்தின் அடிப்படையில் கேள்வி உள்ளது என மழுப்பலான பதில்களை வனத்துறை அதிகாரிகள் அந்த ஆர்.டி.ஐ. பதிவுக்கு தெரிவித்துள்ளர்.

    மேலும் இதேபோல் போக்குவரத்து கழகத்திற்கு அனுப்பிய தகவல் அறியும் உரிமை சட்ட பதில் மனுவில், போக்குவரத்து கழகம் சார்பாக தெரிவிக்கையில், நெல்லை மண்டலத்தில் இருந்து மாஞ்சோலைக்கு அரசு பஸ்சில் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி ஏதும் மறுக்கப்படவில்லை.

    மேலும் மணிமுத்தாறு சோதனை சாவடியில் பயணிகள் யாரும் கட்டா யப்படுத்தி இறக்கப்படு வதில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

    எனவே அம்பை வனச் சரகத்தில் உள்ள அதிகாரி களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மேற்குத்தொடர்ச்சி மலையில் ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்பட்ட மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு, குதிரைவெட்டி உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதிகள் உள்ளன.
    • கடந்த சில மாதங்களாக மாஞ்சோலை அடுத்த நாலுமுக்கு தேயிலை தோட்ட பகுதியில் மிளா ஒன்று சுற்றி திரிகிறது.

    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்பட்ட மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு, குதிரைவெட்டி உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதிகள் உள்ளன. மேலும் இந்த வனப்பகுதியில் காட்டுயானை, சிறுத்தை, மிளா, காட்டெருமை, மான், கரடி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகளும் வசித்து வருகின்றன.

    இந்த பகுதி நெல்லை மாவட்டத்தின் பிரதான சுற்றுலா தளம் என்பதால் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்ப குடும்பமாக வருகை தந்து, மாஞ்சோலையின் இயற்கை எழில் மிகுந்த அழகை ரசித்து செல்கின்றனர்.

    இதற்கிடையில் கடந்த சில மாதங்களாக மாஞ்சோலை அடுத்த நாலுமுக்கு தேயிலை தோட்ட பகுதியில் மிளா ஒன்று சுற்றி திரிகிறது. அது சுற்றுலா பயணிகள் கொண்டுவரும் தின்பண்டங்களை சாப்பிட்டு செல்கிறது. அவ்வாறு அதற்கு சுற்றுலா பயணிகள் வழங்குவதை தங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.

    ×