search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sambar deer"

    • பழவூர் அருகே உள்ள இருக்கன்துறை புத்தேரி காட்டுப்பகுதியில் உபயோகத்தில் இல்லாத கல்குவாரி ஒன்று உள்ளது
    • யாரேனும் மிளாவை கொன்றிருக்கலாமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பணகுடியை அடுத்த பழவூர் அருகே உள்ள இருக்கன்துறை புத்தேரி காட்டுப்பகுதியில் உபயோகத்தில் இல்லாத கல்குவாரி ஒன்று உள்ளது. இதன் கரையில் மிளா ஒன்று இறந்து கிடந்தது. இதனை இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து பழவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்து கூந்தன்குளம் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த மிளாவை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மிளாவின் கழுத்து பகுதியில் காயம் இருக்கிறது. இதனால் தெற்கு கருங்குளம் பகுதி மலையில் இருந்து மேய்ச்சலுக்காக அங்குள்ள காட்டுப் பகுதிக்கு சென்றபோது மிளாக்கள் சண்டையிட்டு இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் அந்த பகுதியில் விவசாய நிலங்களுக்குள் மிளா அடிக்கடி புகுந்து நாசப்படுத்தி வருவதாக விவசாயிகள் தெரிவித்து வந்தனர். இதனால் யாரேனும் மிளாவை கொன்றிருக்கலாமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • மேற்குத்தொடர்ச்சி மலையில் ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்பட்ட மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு, குதிரைவெட்டி உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதிகள் உள்ளன.
    • கடந்த சில மாதங்களாக மாஞ்சோலை அடுத்த நாலுமுக்கு தேயிலை தோட்ட பகுதியில் மிளா ஒன்று சுற்றி திரிகிறது.

    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்பட்ட மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு, குதிரைவெட்டி உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதிகள் உள்ளன. மேலும் இந்த வனப்பகுதியில் காட்டுயானை, சிறுத்தை, மிளா, காட்டெருமை, மான், கரடி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகளும் வசித்து வருகின்றன.

    இந்த பகுதி நெல்லை மாவட்டத்தின் பிரதான சுற்றுலா தளம் என்பதால் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்ப குடும்பமாக வருகை தந்து, மாஞ்சோலையின் இயற்கை எழில் மிகுந்த அழகை ரசித்து செல்கின்றனர்.

    இதற்கிடையில் கடந்த சில மாதங்களாக மாஞ்சோலை அடுத்த நாலுமுக்கு தேயிலை தோட்ட பகுதியில் மிளா ஒன்று சுற்றி திரிகிறது. அது சுற்றுலா பயணிகள் கொண்டுவரும் தின்பண்டங்களை சாப்பிட்டு செல்கிறது. அவ்வாறு அதற்கு சுற்றுலா பயணிகள் வழங்குவதை தங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.

    ×