search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Panagudi"

    • ஆறுமுகத்திற்கு மனைவி மற்றும் ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.
    • விபத்தில் இசக்கிமுத்து, முத்துச்செல்வன் ஆகியோருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

    பணகுடி:

    பணகுடி அருகே தளவாய் புரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 42), கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் ஆறுமுகம் தளவாய்புரத்தில் இருந்து பணகுடிக்கு சென்று வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கிக் கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

    பணகுடி வங்கி அருகே வரும்போது எதிரில் ரோஸ்மியாபுரத்தை சேர்ந்த இசக்கிமுத்து (24), அவரது நண்பர் முத்து செல்வம் (23) ஆகியோர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் பணகுடிக்கு பொருட்கள் வாங்க வந்துள்ளனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்குநேர் மோதியது. இதில் ஆறுமுகத்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இசக்கிமுத்து, முத்துச்செல்வன் ஆகியோருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த பணகுடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பலியான ஆறுமுகம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராதாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் லட்சக்கணக்கில் தென்னை மரங்கள் பயிரிடப்பட்டுள்ளது.
    • ஒரு சில கிராமங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் உள்ளது.

    பணகுடி:

    நெல்லை மாவட்டம் ராதாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லட்சக்கணக்கில் தென்னை மரங்கள் பயிரிடப்பட்டு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக இந்த பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் குளம், கால்வாய், கிணறு உள்ளிட்ட அனைத்து விதமான நீர்நிலைகளும் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படு கிறது. மேலும் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்துவிட்டது. ஒரு சில கிராமங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் உள்ளது.

    இந்நிலையில் மழை இன்றி, பல ஆண்டுகளாக விவசாயிகளால் கஷ்டப் பட்டு வளர்க்கப்பட்ட தென்னை மரங்கள் நீரின்றி கருகி வருகிறது. இதனால் ராதாபுரம் பகுதி விவசாயி கள் வேதனை அடைந்துள்ள னர்.

    கடுமையான பாதிப்புக் குள்ளான விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய நிவார ணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • போட்டியில் 100-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன.
    • முதல் 4 இடங்களை வென்ற அணிகளுக்கு ரொக்க பரிசு, கோப்பை வழங்கப்பட்டன.

    பணகுடி:

    பணகுடியில் மாநில அளவிலான இறகு பந்து போட்டி நடைபெற்றது. போட்டியை திசையன்விளை பேரூராட்சி தலைவர் ஜான்சி ராணி, துணைத் தலைவர் ஜெயக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். போட்டியில் சென்னை, பாண்டிச்சேரி, மதுரை சிவகாசி உட்பட பல்வேறு நகரங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. போட்டியில் முதல் பரிசு சென்னை அணியும், 2-ம் பரிசு பணகுடி அணியும், 3-ம் பரிசு தூத்துக்குடி அணியும், 4-ம் பரிசு நெல்லை அணியும் பெற்றது. போட்டியில் முதல் 4 இடங்களை வென்ற அணிகளுக்கு ரொக்க பரிசும், கோப்பைகளும் வழங்கப்பட்டன. இதில் முன்னாள், இந்நாள் விளையாட்டு வீரர்கள், தொழிலதி பர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பணகுடி

    அ.தி.மு.க. நகர செயலாளர் ஜெய்னூல் ஆப்தின், வக்கீல் ராஜா செய்திருந்தனர்.

    • பணகுடி புள்ளிமான் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினம் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
    • மாணவ-மாணவிகள் ராதா மற்றும் கிருஷ்ணா வேடமிட்டு நடனமாடினர்.

    வள்ளியூர்:

    பணகுடி புள்ளிமான் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினம் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் டாக்டர் தேவிகா பேபி தலைமை தாங்கினார். பள்ளி நிர்வாகி டாக்டர் பொன் லட்சுமி முன்னிலை வகித்தார். இதில் மாணவ-மாணவிகள் ராதா மற்றும் கிருஷ்ணா வேடமிட்டு நடனமாடினர். மாணவ-மாணவிகள் வண்ண மலர் கொத்துக்களை ஆசிரியர் களுக்கு வழங்கி ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்தனர். பின்னர் மாணவ- மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    • சம்பவத்தன்று சுபாஷினி அந்த பகுதியில் உள்ள அவரது சகோதரர் வீட்டுக்கு சென்றார்.
    • வீட்டில் ஆள் இல்லாததை அறிந்து மர்மநபர்கள் வீடு புகுந்து நகையை திருடி இருப்பது தெரிய வந்தது.

    பணகுடி:

    நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள பழவூர் மதகனேரி மேற்கு தெருவை சேர்ந்தவர் சுந்தர் மணி. இவரது மனைவி சுபாஷினி (வயது 34). இவரது தாயும் அவருடன் தங்கி உள்ளார்.

    நகை திருட்டு

    சம்பவத்தன்று சுபாஷினி அந்த பகுதியில் உள்ள அவரது சகோதரர் வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டில் அவரது தாயார் மட்டும் இருந்தார். அவர் கதவை பூட்டாமல் அருகே உள்ள கடைக்கு சென்றுவிட்டு சிறிது நேரத்தில் திரும்பி வந்தார்.

    இந்நிலையில் சுபாஷினி வீடு திரும்பினார். அவர் பீரோவை திறந்து பார்த்த போது அதில் இருந்த 4 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது. இதனால் சுபாஷினி அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் ஆள் இல்லாததை அறிந்து மர்மநபர்கள் வீடு புகுந்து நகையை திருடி இருப்பது தெரிய வந்தது.

    கைரேகை நிபுணர்கள்

    இதுகுறித்து அவர் பழவூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள், தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடந்தது.

    • மது அருந்தியபோது ஆல்பர்ட் எஸ்லின், சந்தனக்குமார் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.
    • படுகாயம் அடைந்த ஆல்பர்ட் எஸ்லின் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    பணகுடி:

    கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளம் பகுதியை சேர்ந்தவர் ஆல்பர்ட் எஸ்லின் (வயது24). டிரைவர். இவரும், அதே பகுதியை சேர்ந்த சந்தனக்குமார் (23) என்பவரும் நண்பர்கள் ஆவர்.

    கடந்த 30-ந்தேதி இருவரும் அப்பகுதியில் வைத்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது நண்பர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சந்தனக்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தி யால் ஆல்பர்ட் எஸ்லின் வயிற்றில் குத்தினார்.

    இதில் படுகாயம் அடைந்த ஆல்பர்ட் எஸ்லின் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார்.

    இதற்கிடையே கூடங்குளம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து சந்தனக்குமாரை கைது செய்து இருந்தனர். தற்போது ஆல்பர்ட் எஸ்லின் இறந்ததை தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • பணகுடி வைஷ்ணவி தெருவை சேர்ந்தவர் முருகேச பெருமாள்(வயது 48). இவர் பணகுடி அருகே உள்ள தெற்கு பெருங்குடி மின்வாரிய அலுவலகத்தில் வயர்மேனாக வேலை பார்த்து வந்தார்.
    • நாகர்கோவில் ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்று முருகேச பெருமாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பணகுடி:

    பணகுடி வைஷ்ணவி தெருவை சேர்ந்தவர் முருகேச பெருமாள்(வயது 48). இவர் பணகுடி அருகே உள்ள தெற்கு பெருங்குடி மின்வாரிய அலுவலகத்தில் வயர்மேனாக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் இன்று அதிகாலை அப்பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நாகர்கோவில் ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்று முருகேச பெருமாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து அவர்கள் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், இன்று அதிகாலை 3.30 மணியளவில் அவர் ரெயிலில் அடிபட்டு இறந்திருப்பது தெரிய வந்தது. அந்த நேரத்தில் அந்த வழியாக மும்பை ரெயில், குமரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்டவை செல்லும். அதில் ஏதேனும் ஒன்றில் அவர் அடிபட்டு இறந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

    அதே நேரத்தில் அவர் தடுமாறி தண்டவாளத்தில் விழுந்தாரா? அல்லது ஏதேனும் பணிச்சுமை காரணமாக அவர் ரெயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பணகுடியை அடுத்த பழவூரை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மகன் அஜித்(வயது 25). கூலி தொழிலாளி.
    • நேற்று மதியம் அஜித் அவரது நண்பர்களுடன் சேர்ந்து பழவூர் பெரியகுளம் அருகில் உள்ள புதுகாலனி பகுதிக்கு சென்று மது குடித்ததாக கூறப்படுகிறது.

    பணகுடி:

    நெல்லை மாவட்டம் பணகுடியை அடுத்த பழவூரை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மகன் அஜித்(வயது 25). கூலி தொழிலாளி.

    வெட்டிக்கொலை

    நேற்று மதியம் அஜித் அவரது நண்பர்களுடன் சேர்ந்து பழவூர் பெரியகுளம் அருகில் உள்ள புதுகாலனி பகுதிக்கு சென்று மது குடித்ததாக கூறப்படுகிறது. ஆனால் சில மணிநேரம் கழித்து அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தபோது அஜித்தின் இரு கைகளும் துண்டித்தும், தலை மற்றும் கழுத்துப் பகுதியில் கொடூரமாக அரிவாளால் வெட்டியும் கொலை செய்தனர்.

    இதுகுறித்து பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அஜித்திற்கும், அவரது உறவினருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. அதன் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அதே நேரத்தில் நண்பர்களுடன் மது குடிக்கும்போது மதுவை பங்கு வைப்பதில் அவர்களுக்குள் எழுந்த வாக்குவாதத்தால் அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதுதொடர்பாக வள்ளியூர் போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு யோகேஷ்குமார் மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகள் தேடப்பட்டு வருகின்றனர்.

    • முத்தாரம்மன் கோவிலின் செயலாளராக ஜெயபாரத் என்பவர் இருந்து வருகிறார்.
    • திருட்டு குறித்து ஜெயபாரத் பழவூர் போலீசில் புகார் அளித்தார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பணகுடியை அடுத்த பழவூர் அருகே உள்ள ஆவரைகுளத்தில் புகழ்பெற்ற முத்தாரம்மன்கோவில் உள்ளது. இந்த கோவிலின் செயலாளராக அதே ஊரில் பண்ணைவிளை தெருவை சேர்ந்த ஜெயபாரத்(வயது 49) என்பவர் இருந்து வருகிறார்.

    பூட்டு உடைப்பு

    கடந்த 25-ந்தேதி இவர் வழக்கம்போல் பூஜைகளை முடித்துவிட்டு கோவிலை பூட்டிச்சென்றார். மீண்டும் நேற்று சென்று பார்த்தபோது கோவில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது கருவறையில் அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டு இருந்த 5 பவுன் தங்கநகை திருட்டு போயிருந்தது.

    இதுகுறித்து ஜெயபாரத் பழவூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்தாரம்மன் கோவிலில் நகையை திருடிச்சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அருண் வேலைக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
    • கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ரெயில்வே கேட்டில் பயங்கரமாக மோதியது.

    பணகுடி:

    வள்ளியூர் அருகே உள்ள தெற்கு வள்ளியூர் அம்மச்சி கோவில் மேலத் தெருவை சேர்ந்தவர் முத்தையா. இவரது மகன் அருண் (வயது 34). இவர் நேற்றிரவு வேலைக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

    ரெயில்வேகேட்

    அவர் வள்ளியூர் அருகே ரெயில்வே கேட் பகுதியில் சென்ற போது வேகத்தடையில் ஏறாமல் இருப்பதற்காக சாலையின் ஓரமாக மண் தடத்தில் சென்றுள்ளார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து ரெயில்வேகேட் மீது பயங்கரமாக மோதியது. இதில் அருண் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    போலீசார் விசாரணை

    இது குறித்து தகவல் அறிந்த பணகுடி போலீசார் அங்கு விரைந்து சென்று அருண் உடலை மீட்டு ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இன்ஸ்பெக்டர் அஜிகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    பணகுடி அருகே இன்று காலை கார் மோதிய விபத்தில் காற்றாலை ஊழியர் ஒருவர் பலியானார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பணகுடி:

    பணகுடி அருகே உள்ள மாடநாடார் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன் (வயது 27).  ஐ.டி. படித்து முடித்துள்ள இவர் அப்பகுதியில் உள்ள காற்றாலை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இன்று காலை குமாரபுரம் விலக்கு பகுதியில் நடந்து  சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் இவர் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த ராஜேஷ் கண்ணனை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அதற்குள் அவர் பரிதாபமாக இறந்துவிட்டார்.  இதுகுறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

     இதுதொடர்பாக காரை ஓட்டி வந்த பணகுடியை சேர்ந்த சதீஸ் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பணகுடி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த விபத்தில் வாலிபர் பலியானார்.
    பணகுடி:

    ராதாபுரம் அருகே உள்ள சவுந்திரபாண்டியபுரத்தை சேர்ந்தவர் மார்ஷலின் (வயது 29). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார்.

    சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்த மார்ஷலின் நெல்லையில் வேலை தேடி வந்தார். இந்நிலையில் நேற்று மாலை அவர் தனது மோட்டார் சைக்கிளில் ராதாபுரத்தில் இருந்து வள்ளியூர் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அந்த சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது முன்னால் சென்ற கார் மீது மோட்டார் சைக்கிளின் கண்ணாடி உரசியதாக கூறப்படுகிறது.

    இதில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறியது.இதனால் மார்சலின் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தார்.

    இதில் பலத்த காயமடைந்த அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    விபத்து தொடர்பாக பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×