search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "student murdered"

    நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது காதலனை போலீசார் கைது செய்தனர்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள பெருமாள் நகர் விலக்கில் இருந்து சேரகுளம் செல்லும் சாலையில் கெமிக்கல் கம்பெனி ஒன்று இயங்காமல் மூடி கிடக்கிறது. அந்த கம்பெனி வளாகத்துக்குள் இளம்பெண் ஒருவர் பிணமாக கிடப்பதாக நேற்று மாலையில் மூலைக்கரைப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு ஒரு இளம்பெண் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அந்த இளம்பெண்ணின் கைகள் பின்புறமாக கட்டப்பட்டு இருந்தது.

    அவரை யாரோ கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது. ஆனால் அந்த இளம்பெண் யார்? அவரை கொன்றது யார்? என்பது தெரியவில்லை. ஆகவே அது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    அதில் கொலை செய்யப்பட்டு கிடந்த அந்த இளம்பெண் நெல்லை பேட்டை ரஹ்மத் நகர் பகுதியை சேர்ந்த மதார் மைதீன் என்பவரின் மகள் ஆஷிகா பர்வீன் (வயது 17) என்பது தெரியவந்தது. அவர் 10-ம் வகுப்பு படித்து விட்டு, கம்ப்யூட்டர் பயிற்சிக்கு சென்று வந்துள்ளார்.

    நேற்று காலையும் வழக்கம் போல் கம்ப்யூட்டர் பயிற்சிக்கு சென்ற அவர் மதியம் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர், அவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டு கேட்டபோது, சற்று நேரத்தில் வருவதாக கூறியுள்ளார். இந்நிலையில் மூலக்கரைப்பட்டி அருகே உள்ள பழைய கெமிக்கல் கம்பெனி வளாகத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.

    மாணவி ஆஷிகா பர்வீனை கொலை செய்தது யார்? அவர் சம்பவ இடத்திற்கு எப்படி சென்றார்? என்பது குறித்து இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. அதன் விபரம் வருமாறு:-

    மாணவி ஆஷிகா பர்வீன் கம்ப்யூட்டர் மையத்துக்கு தினசரி சென்று வந்தபோது, மேலச்செவலை சேர்ந்த முருகன் மகன் சுந்தர்ராஜ் (25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது காதலாக மாறியது. கடந்த 6 மாதமாக சுந்தர் ராஜும், ஆஷிகா பர்வீனும் காதலித்து வந்துள்ளனர்.

    இவர்கள் காதல் விவகாரம் ஆஷிகா பர்வீனின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஆஷிகா பர்வீனுக்கு திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று கம்ப்யூட்டர் பயிற்சிக்கு சென்ற அவர் மதியம் வீடு திரும்பாததால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

    இதையடுத்து அவரது தாயார், ஆஷிகா பர்வீன் செல்போனுக்கு பிற்பகல் 2 மணி அளவில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் நிற்பதாகவும், காதலன் சுந்தர்ராஜனின் படம் தன்னிடம் உள்ளதால் அதை சுந்தர்ராஜிடம் திருப்பி கொடுத்து விட்டு வந்து விடுவேன். இனி அவரை சந்திக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.

    இதனால் அவரது பெற்றோரும் மாணவி ஆஷிகா பர்வீன் சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்து விடுவார் என்று அமைதியாக இருந்து விட்டனர். ஆனால் மாலை வரை ஆஷிகா பர்வின் வீடு திரும்பவில்லை. மேலும் அவரது செல்போன் தொடர்ந்து ‘ரிங்’ அடித்து கொண்டே இருந்ததால், பெற்றோர் சந்தேகம் அடைந்து தேடியுள்ளனர். அப்போது தான் ஆஷிகா பர்வின் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பது அவர்களுக்கு தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து போலீசார் ஆஷிகா பர்வீனின் செல்போனை ஆய்வு செய்தனர். அப்போது அவருடன் சுந்தர்ராஜ் பேசியதும், இருவரும் ஒன்றாக அந்த பகுதிக்கு சென்றதும் தெரியவந்தது. இதனால் போலீசார் காதலன் சுந்தர்ராஜை தேடினார்கள். ஆனால் அவர் மாயமாகி இருப்பது தெரியவந்தது. அவரது செல்போன் ‘சுவிட்ச்’ ஆப் செய்யப்பட்டிருந்தது.

    இதனால் போலீசார் சுந்தர்ராஜை வலைவீசி தேடி வந்தனர். போலீசார் தேடுவதையறிந்த சுந்தர்ராஜின் உறவினர்களும் அவரை தேடினார்கள். அப்போது உறவினர் வீட்டில் சுந்தர்ராஜ் பதுங்கியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து உறவினர்கள் சுந்தர்ராஜை மூலக்கரைப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    அவரிடம் போலீசார் விசாரித்தபோது ஆயிஷா பர்வீனை கொன்றதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து சுந்தர்ராஜை போலீசார் கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து சுந்தர்ராஜ் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விபரம் வருமாறு:-

    ஆயிஷா பர்வீனை நான் 6 மாதமாக காதலித்து வந்தேன். எங்களது காதலுக்கு ஆயிஷா பர்வீன் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. அவருக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்தார்கள். அதற்கு ஆயிஷா பர்வீன் சம்மதித்தார். காதலித்தபோது நாங்கள் இருவரும் எடுத்துக்கொண்ட போட்டோக்கள் எங்களிடம் இருந்தன. அதை பெறுவதற்காக ஆயிஷா பர்வீன் என்னை தொடர்பு கொண்டார்.

    அப்போது ஊருக்கு வெளியே சென்று போட்டோவை தருகிறேன் என்று கூறி மூலக்கரைப்பட்டி பகுதிக்கு அழைத்து சென்றேன். அங்குள்ள காட்டு பகுதிக்கு வந்ததும் என்னை காதலித்து விட்டு வேறொரு வரை திருமணம் செய்ய எப்படி சம்மதிக்கலாம்? நீ என்னைதான் காதலிக்க வேண்டும் என மிரட்டினேன்.

    அதற்கு அவள் என்னிடம் இருந்து போட்டோக்களை பெறுவதிலேயே குறியாக இருந்தாள். இதனால் ஆத்திரமடைந்த நான் ஆயிஷா பர்வீன் கைகளை கட்டி கீழே தள்ளி கழுத்தை அறுத்து கொலை செய்தேன்.

    இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

    இந்த கொலையில் சுந்தர்ராஜுக்கு யாராவது உதவி செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அதன்படி வேறு யாருக்கும் கொலையில் தொடர்பு உள்ளதா? என்று சுந்தர்ராஜிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    ஆத்தூர் அருகே பலாத்கார முயற்சியில் 8-ம் வகுப்பு மாணவியை கொலை செய்த டிரைவர் தன்னை கொலை செய்யுமாறு கூறியுள்ளார்.
    மாணவி ராஜலட்சுமியை கொலை செய்த தினேஷ்குமாரிடம் ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் குற்றப்பிரிவு, தனிப்பிரிவு போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது தினேஷ்குமார் ‘என்னை கொன்று விடுங்கள் என போலீசாரிடம் கெஞ்சினார். நான் வெளியே சென்றால் இதுபோல் வேறு யாரையாவது கொலை செய்து விடுவேன். ஆகவே என்னை உயிருடன் விட்டு விடாதீர்கள். தயவு செய்து கொன்று விடுங்கள் என்று கூறினார்’. அவரிடம் போலீசார், வேறு என்ன? என்ன? குற்றங்கள் செய்துள்ளாய் என கேட்டு தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். #tamilnews
    ஆத்தூர் அருகே பலாத்கார முயற்சியில் 8-ம் வகுப்பு மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக டிரைவர் தினேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.
    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தளவாய்பட்டி ஊராட்சி சுந்தரபுரத்தை சேர்ந்தவர் சேர்ந்தவர் சாமிவேல் (வயது 48). விவசாயி. இவரது மனைவி சின்னப்பொண்ணு (வயது45).

    இவர்களது கடைசி மகளான ராஜலட்சுமி அருகில் உள்ள தளவாய்பட்டி ஊராட்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். சாமுவேலின் வீட்டின் அருகே குழந்தைவேல் மகன் தினேஷ்குமார் என்ற கார்த்தி (25) என்பவர் வசித்து வருகிறார். இவர் நெல் அறுவடை எந்திரத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளி மாவட்டங்களுக்கு நெல் அறுவடைக்கு சென்று விட்டு ஊர் திரும்பினார். குடிப்பழக்கம் கொண்ட தினேஷ்குமார் கடந்த 3 நாட்களாக போதையிலேயே சுற்றி வந்தார். பள்ளிக்கு சென்ற சிறுமி ராஜலட்சுமியை பின் தொடர்ந்து சென்று கேலி, கிண்டல் செய்வதும், சில்மி‌ஷத்தில் ஈடுபட்டு வந்தார்.

    நேற்று இரவு 7.30 மணி அளவில் வீட்டில் ராஜலட்சுமி மல்லிகை பூ கட்டிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற தினேஷ்குமார் ராஜலட்சுமியை பலாத்காரம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அவரது தாய் சின்னபொண்ணு பதறி அடித்தபடி ஓடி வந்தார்.

    அப்போது தினேஷ்குமார், சின்னபொண்ணுவை கீழே தள்ளிவிட்டு விட்டு கையில் இருந்த அரிவாளால் ராஜலட்சுமியின் கழுத்தை கொடூரமாக அறுத்தார். இதில் ரத்தம் மளமளவென பீறிட்டு வெளியேறியது.

    பின்னர் தலையை தனியாக துண்டித்து எடுத்தார். இதில் ராஜலட்சுமி துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். உடலை வெளியே இழுத்து சென்றார். இதை பார்த்த அவரது தாய் கதறி அழுதபடி ஓடினார். பின்னர் ரத்தம் ரத்தம் சொட்ட சொட்ட துண்டித்த தலையை தளவாய்பட்டி- சுந்தராபுரம் சாலையின் நடுவே வைத்து விட்டு தினேஷ்குமார் தப்பி ஓடினார்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆத்தூர் டி.எஸ்.பி. பொன் கார்த்திக்குமார், இன்ஸ்பெக்டர் கேசவன், மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    பின்னர் சிறுமியின் உடல், தலையை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தினேஷ்குமாரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மாணவி ராஜலட்சுமி, தினேஷ்குமார் மனைவியுடன் நெருக்கமாக பழகி வந்தார். அவர் வீட்டிற்கு சென்று, பூக்கள் பறித்து வருவது வழக்கம். கடந்த 3 நாட்களாக வீட்டில் இருந்த தினேஷ்குமார், மாணவியிடம் தொந்தரவு செய்ததாக தெரிகிறது. சைகோ போல சுற்றி திரிந்த தினேஷ்குமார் நேற்று மாணவியின் வீட்டிற்கு சென்று பாலியல் தொந்தரவு செய்ததுடன் மறுத்த அவரை கழுத்தை அறுத்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரித்து வருகிறோம் என்றனர்.

    தினேஷ் குமாரின் மனைவி சாரதா கூறியதாவது:-

    நெல் அறுவடை எந்திரம் வாங்க கடனுதவி கிடைக்காததால் தஞ்சாவூரில் நெல் அறுவடை எந்திர டிரைவர் வேலைக்கு தினேஷ்குமார் சென்றார். அங்கு உடன் வேலை பார்த்து தொழிலாளர்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். மேலும் அடிக்கடி கோபத்தில் ஆவேசமாக தகாத வார்த்தைகளால் திட்டினார்.

    அங்கு கொட்டகையில் தங்காமல், சில மாதங்களாக இரவில் சுடுகாட்டில் தூங்கியதால் இந்த நிலை வந்ததாக தினேஷ்குமார் கூறி வந்தார். இதனால் ஆத்தூரை சேர்ந்த வாகன உரிமையாளர் ராமு அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தார். நீ மேலும் நீ மருத்துவ மனைக்கு சென்று சிகிச்சைப் பெற்று வா என்று அவர் கூறி உள்ளார்.

    10 நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்த தினேஷ்குமார் நான் தான் ‘முனி’ என்று கூறி சாமி ஆடினார். சுடுகாட்டில் படுத்ததால் எனக்கு பேய், பிசாசுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது என்றும், வி‌ஷம் குடித்து இறந்தவர்கள், கிணற்றில் விழுந்து இறந்தவர்கள் பெயரையும் கூறி வந்தார்.

    அப்போது பக்கத்து வீட்டில் வசித்து வரும் ராஜலட்சுமி எங்கு இருக்கிறார். உடனே இங்கு வரச் சொல். நான் அவரை பார்க்க வேண்டும் என கூறினார். உடனே நாங்கள், தினேஷ்குமாரின் முகத்தில் தண்ணீரை தெளித்து, சத்தம் போடாமல் ஒழுங்காக இருக்கும்படி கூறினோம்.

    சைக்கோ போல் சுற்றி வந்த அவர் ஆவேசமாக பேசியதுடன் உறவினர்களை அடிக்கவும் போவார். வாயில் வந்தபடி திட்டினார். இந்த நிலையில் எனது கணவர் மாணவி ராஜலட்சுமியை கொலை செய்து விட்டு வீட்டுக்கு வந்த பின்பு தான் எனக்கு இது பற்றி தெரியும். இதனால் அதிர்ச்சியில் உறைந்த நானும், எனது கணவரின் தம்பியும் சேர்ந்து தினேஷ்குமாரை பிடித்து போலீசில் ஒப்படைத்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.



    குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள ஒரு பள்ளியின் கழிவறையில் 9-ம் வகுப்பு மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #StudentMurdered #GujaratStudentKilled
    வதோதரா:

    குஜராத் மாநிலம் வதோதரா நகரின் பரன்போரா பகுதியில் உள்ள ஒரு பள்ளியின் கழிவறையில் 9-ம் வகுப்பு மாணவன் ஒருவன் இன்று மாலை மர்மமான முறையில் இறந்து கிடந்தான். அவனது தலை மற்றும் உடலில் ரத்தக் காயங்கள் இருந்தன. அருகில் ஒரு கத்தியும் கிடந்தது. எனவே, மாணவனை யாரோ கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என தெரிகிறது. 

    இதுபற்றி  காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் பள்ளிக்கு வந்து மாணவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பள்ளி நிர்வாகிகள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உயிரிழந்த மாணவனுக்கும் 10ம் வகுப்பு மாணவன் ஒருவனுக்கும் இடையே நேற்று வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. எனவே, அந்த மாணவன் ஆத்திரத்தில் கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அந்த மாணவன் தலைமறைவாகிவிட்டதால், அவனைத் தேடி வருகின்றனர்.

    மேலும், பள்ளி வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் கொலையாளியை அடையாளம் காணும் முயற்சியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    மாணவன் கொலை செய்யப்பட்ட தகவல் பரவியதும், பள்ளி முன்பு ஏராளமான மக்கள் திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  #StudentMurdered #GujaratStudentKilled
    ×