search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுவன் கொலை"

    • சிறுவனை ஓரினச் சேர்க்கைக்கு அழைத்து கொலை செய்ததாக தகவல்.
    • போலீசாருடன் சேர்ந்து கருப்பசாமியும் சிறுவனை தேடியது போல் நடித்ததும் அம்பலமாகியுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்திநகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் முருகன். தொழிலாளி. இவரது மனைவி பாலசுந்தரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இளையமகன் கருப்பசாமி அப்பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

    கடந்த 9-ந்தேதி கருப்பசாமிக்கு உடல்நிலை சரி இல்லாததால் அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டில் இருந்த மாணவன் திடீரென மாயமானார்.

    இது தொடர்பான புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் சிறுவனை தேடி வந்த நிலையில் சிறுவனின் வீட்டின் அருகே இருந்த பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் சிறுவன் கருப்பசாமி சடலமாக மீட்கப்பட்டார்.

    சிறுவன் மாயமான போது அவர் அணிந்திருந்த 1½ பவுன் நகைகள் மாயமாகி இருந்தது. மேலும் அவரது உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதனால் சிறுவன் நகைக்காக கொலை செய்யப்பட்டதை போலீசார் உறுதிபடுத்தினர்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில், சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் கருப்பசாமி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இதில், சிறுவனை ஓரினச் சேர்க்கைக்கு அழைத்து கொலை செய்ததாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    போலீசார் தேடுவதற்கு சிறுது நேரத்திற்கு முன்புதான் சடலத்தை அதே இடத்தில் கருப்பசாமி விட்டுச் சென்றுள்ளார். மேலும், போலீசாருடன் சேர்ந்து கருப்பசாமியும் சிறுவனை தேடுவது போல் நடித்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

    • விடியா திமுக அரசின் காவல்துறை, முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் மெத்தனப் போக்கில் செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது.
    • வழக்கில் தொடர்புள்ள அனைவரையும் உடனடியாக கைது செய்து தக்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த 9ஆம் தேதி காணாமல் போன கருப்பசாமி என்ற சிறுவன், 10ஆம் தேதி மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டதாக செய்திகள் வந்த நிலையில், இன்று அச்சிறுவனின் பெற்றோர் மற்றும் தாத்தா ஆகியோர் தங்கள் இன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    சிறுவன் கழுத்தில் இருந்த நகை மாயமாகி உள்ள நிலையில், புகார் அளித்த அன்றே தீவிரமாக காவல்துறை விசாரித்திருந்தால் குழந்தையை காப்பாற்றியிருக்கலாம் என்று குடும்பத்தார் புகார் தெரிவித்துள்ளனர்.

    விடியா திமுக அரசின் காவல்துறை, முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் மெத்தனப் போக்கில் செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது.

    இது தான் சட்டம் ஒழுங்கை ஒரு முதல்வர் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் விதமா மு.க.ஸ்டாலின் ?

    சிறுவனின் பெற்றோர் மற்றும் தாத்தாவிற்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிப்பதுடன், சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புள்ள அனைவரையும் உடனடியாக கைது செய்து தக்க சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என மு.க.ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிறுவன் நகைக்காக கொலை செய்யப்பட்டதை போலீசார் உறுதிபடுத்தினர்.
    • மகன் கொலையில் குற்றவாளிகளையும் போலீசார் கண்டுபிடிக்கவில்லை.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்திநகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் முருகன். தொழிலாளி. இவரது மனைவி பாலசுந்தரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இளையமகன் கருப்பசாமி அப்பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

    கடந்த 9-ந்தேதி கருப்பசாமிக்கு உடல்நிலை சரி இல்லாததால் அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டில் இருந்த மாணவன் திடீரென மாயமானார்.

    இது தொடர்பான புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் சிறுவனை தேடி வந்த நிலையில் சிறுவனின் வீட்டின் அருகே இருந்த பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் சிறுவன் கருப்பசாமி சடலமாக மீட்கப்பட்டார்.

    சிறுவன் மாயமான போது அவர் அணிந்திருந்த 1½ பவுன் நகைகள் மாயமாகி இருந்தது. மேலும் அவரது உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதனால் சிறுவன் நகைக்காக கொலை செய்யப்பட்டதை போலீசார் உறுதிபடுத்தினர்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று காலையில் சிறுவனின் தந்தை கார்த்திக் முருகன், தாய் பாலசுந்தரி, தாத்தா கருத்த பாண்டி என 3 பேரும் கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

    இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் மற்றும் போலீசார் அதனை தடுத்தது மட்டுமின்றி, அவர்கள் எழுதிய கடிதத்தையும் வாங்கி கிழித்து போட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அந்த கடிததத்தில், எங்களது மகன் ஏன் இறந்தான் என்று தெரியவில்லை. பாசமாக வளர்த்த மகனே போய் விட்டான். நாங்கள் இருந்து என்ன செய்ய? மகன் கொலையில் குற்றவாளிகளையும் போலீசார் கண்டுபிடிக்கவில்லை. இனி நாங்கள் வாழ்வதில் எங்களுக்கு அர்த்தம் இல்லை என்று அந்த கடிதத்தில் எழுதி இருந்ததாக கூறப்படுகிறது. 

    • மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
    • பெண் உள்பட 4 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்திநகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் முருகன். தொழிலாளி. இவரது மனைவி பாலசுந்தரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இளையமகன் கருப்பசாமி. அப்பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் பெற்றோர் வேலைக்கும், அவர்களது மூத்த மகன் பள்ளிக்கு சென்று விட்டனர். கருப்பசாமிக்கு உடல்நிலை சரியில்லாததால் அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டில் இருந்த மாணவன் திடீரென மாயமானார்.

    இது தொடர்பான புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 தனிப்படைகள் அமைத்து சிறுவனை தேடி வந்த நிலையில் நேற்று காலையில் சிறுவனின் வீட்டின் அருகே இருந்த பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் சிறுவன் கருப்பசாமி சடலமாக மீட்கப்பட்டார்.

    சிறுவன் மாயமான போது அவர் அணிந்திருந்த 1½ பவுன் நகைகள் மாயமாகி இருந்ததால் அவர் நகைக்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

    கருப்பசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் சிறுவனின் உடல் நேற்று இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது.

    இந்நிலையில் அதிக அழுத்தம் காரணமாக சிறுவன் கருப்பசாமி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும், வாய் மற்றும் உதடு பகுதியில் காயங்கள் இருப்பதாகவும் பிரேதபரிசோதனை தகவலில் தெரிய வந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதை போலீசார் உறுதிபடுத்துகின்றனர்.

    அதன்படி குற்றவாளிகளை பிடிக்கும் நோக்கில் நேற்று இரவும் சிறுவனின் வீட்டு பகுதியில் உள்ள வீடுகளில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. மோப்பநாய் அந்த வீட்டு பகுதியில் சுற்றி வந்தது.

    மேலும் கடந்த 2 நாட்களாக அப்பகுதியில் இருந்த செல்போன் அழைப்பு விவரங்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக பெண் உள்பட 4 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசுவதால் அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து போலீசார் கூறும்போது, இந்த வழக்கில் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க போதிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும், 3 தனிப்படைகள் அமைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருவதாகவும் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தனர்.

    • சிகிச்சை பலனின்றி மிதுன் என்ற ஜிஸ்னு மாதேஷ் பாண்டியன் உயிரிழந்தான்.
    • சோழவந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யனார் உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனர்.

    சோழவந்தான்:

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள திருவேடகம் காலனி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யனார் (வயது 40). இவருக்கு திருமணமாகி உமா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.

    பக்கத்து வீட்டில் வசிப்பவர் முத்துசாமியின் மகன் விவேக். இவருக்கும் உமாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. அதனை தொடர்ந்து அவர்கள் வீட்டை விட்டு ஓடிவிட்டனர்.

    உமா வீட்டை விட்டு விவேக்குடன் சென்றதால் மனவிரக்தியடைந்த அவரது கணவர் அய்யனார் கடந்த சில வருடங்களாக தனிமையில் வாழ்ந்து வந்தார். மனைவி பிரிந்து சென்றதால் கேலி பேச்சுகளுக்கு ஆளானார்.

    இதனால் ஆத்திரமடைந்த அய்யனார், நேற்றிரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்த முத்துசாமி, அவரது மனைவி தவமணி, பேரன் மிதுன் என்ற ஜிஸ்னு மாதேஷ் பாண்டியன் ஆகியோரை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.

    இவர்களது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் திரண்டதால் அய்யனார் தப்பி ஓடிவிட்டார். அருகில் இருந்தவர்கள் சோழவந்தான் போலீசில் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிகிச்சை பலனின்றி மிதுன் என்ற ஜிஸ்னு மாதேஷ் பாண்டியன் உயிரிழந்தான்.

    இதுகுறித்து சிறுவனின் தாய் அன்பரசி கொடுத்த புகாரின்பேரில் சோழவந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யனார் உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    • ஆபாச படங்களை காட்டி ஓரினச்சேர்க்கை.
    • உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், கருக்குப் பேட்டையை சேர்ந்தவர் ராஜேஷ்(வயது34). இவர் காஞ்சிபுரம் நில அளவை பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். மேலும் பரந்தூர் விமான நிலைய திட்டத்திலும் நில அளவையில் பணியாற்றினார்.

    இவரது மனைவி கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்றுவிட்டதாக தெரிகிறது. இதனால் ராஜேஷ் தனியாக தங்கி பணிக்கு சென்று வந்தார்.

    அதே பகுதியில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த இளம்பெண் ஒருவர் தனது தாயுடன் தள்ளுவண்டியில் டிபன் படை வைத்து உள்ளார்.

    கடைக்கு அடிக்கடி சென்று வரும்போது இளம் பெண்ணுடன் ராஜேசுக்கு பழக்கம் ஏற்பட்டது.

    அப்போது 4-ம் வகுப்பு படித்து வரும் இளம்பெண்ணின் 9 வயது மகள், மற்றும் 1-ம் வகுப்பு படித்து வந்த 5 வயது மகன் குகன் ஆகியோருடனும் ராஜேஷ் நெருக்கமானார்.

    இளம்பெண்ணின் ஏழ்மையை தெரிந்து கொண்ட ராஜேஷ் தனக்கு தெரிந்து அறக்கட்டளை மூலம் சிறுவனையும், சிறுமியையும் படிக்க வைப்பதாக தெரிவித்தார்.

    இதனால் இளம் பெண்ணும் ராஜேசுடன் மிகவும் நெருக்கமானார். அவரது மகன், மகளுடன் ராஜேஷ் பழுகுவதையும் தவறாக நினைக்கவில்லை.

    இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட ராஜேஷ் சிறுவன் குகனை தனது வீட்டுக்கு அழைத்து சென்று செல்போனில் ஆபாச படங்களை காட்டி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டார்.

    மேலும் இதுபற்றி வெளியில் யாரிடமும் கூறக் கூடாது என்று மிரட்டினார். இதனால் சிறுவன் குகன் இதுபற்றி யாரிடமும் கூறாமல் இருந்தார்.

    இந்த நிலையில் குகனுக்கு உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டு மயக்கம் அடைந்தார். அவனை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்த போது சிறுவன் குகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவன் தாக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.

    இதுபற்றி விசாரித்த போதுதான் ராஜேஷ் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட போது மறுத்து சத்தமிட்டதால் சிறுவன் குகனை தாக்கியதும் பின்னர் அவனை வீட்டில் வந்து விட்டு சென்று இருப்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து நிலஅளவையர் ராஜேசை கைது செய்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் இளம் பெண்ணின் மகளுக்கும் ஆபாச படங்களை காட்டி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்தது தெரிய வந்தது. இதுபற்றியும் போலீசார் தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரைக்கால்:

    காரைக்காலை அடுத்த நிரவி பகுதியை சேர்ந்த, திருமலை ராஜன் ஆற்று பாலம் அருகே ஒயிட் ஹவுஸ் காலனி உள்ளது. இங்கு தச்சுவேலை செய்யும் சிங்காரவேலு, தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகன் சந்தோஷ் (வயது 13), இவன் தனது நண்பர்களோடு வீட்டின் அருகே நேற்று மதியம் விளையாடிக் கொண்டிருந்தார்.

    மாலை வெகுநேரமாகியும் சந்தோஷ் வீடு திரும்ப வில்லை. இதனால் சந்தோஷ் பெற்றோர்கள் அவனை பல இடங்களில் தேடினர். அப்போது வீட்டின் அருகே சந்தோஷின் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்த நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், பின்னர் இது குறித்து நிரவி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கொலை செய்யப்பட்ட சிறுவனின் கழுத்து, கை, கால், மார்பு என 17 இடங்களில் கத்தியால் அறுக்கப்பட்டிருந்தது. சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவனின் கொலை குறித்து, அவனுடன் விளையாடியவர்களுடனும், அப்பகுதியிலும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பக்கத்து வீட்டை சேர்ந்த சிறுவன் சந்தோசை கொலை செய்திருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

    அதன்படி அந்த சிறுவனின் வீட்டிற்கு போலீசார் சென்றபோது, வீட்டில் யாரும் இல்லை. பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு ரத்தத்துடன் கத்தி ஒன்று கிடைத்தது. சிறுவனை கொலை செய்ய பயன்படுத்திய கத்தியாக இருக்கலாம் என்று சந்தேகமடைந்த போலீசார், இது குறித்து அந்த குடும்பத்தினரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டனர். ஆனால், அந்த குடும்பத்தினர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர்.

    பக்கத்துவீட்டை சேர்ந்த 17 வயது சிறுவன் மயிலாடுதுறையில் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைந்தது. அங்கு விரைந்த போலீசார் அந்த சிறுவனை மடக்கி பிடித்தனர். இவர் தனது தாயாரின் உதவியுடன் சிறுவன் சந்தோஷை கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து சிறுவனை கைது செய்த போலீசார், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தாயாரை தேடி வருகின்றனர்.

    வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    • சிறுவன் நீண்ட நேரமாகியும் விடுதிக்கு திரும்பாததால் நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விடுதியில் தங்கி இருந்த மற்ற மாணவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கத்தப்பட்டி சுங்கச்சாவடி பகுதியில் தனியார் பவுண்டேசன் சார்பில் அரபி பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த 13 மாணவர்கள் தங்கி படித்து வருகிறார்கள்.

    சம்பவத்தன்று அரபி பள்ளியில் படிக்கும் ஷாநவாஸ் (வயது 9) என்ற சிறுவனுக்கும், அவருடன் படிக்கும் 13 வயது மாணவருக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த மாணவன் அங்கு காய்கறி வெட்ட வைத்திருந்த கத்தியை எடுத்து சிறுவன் ஷாநவாசை சரமாரியாக குத்தினான்.

    இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஷாநவாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். பதட்டத்தில் கொலை செய்ததை உணர்ந்த 13 வயதுடைய மாணவன் சிறுவனின் உடலை யாருக்கும் தெரியாமல் மறைக்க முயற்சி செய்தான்.

    அதன்படிஅருகில் உள்ள கழிவுநீர் தொட்டியில் ஷாநவாஸ் உடலை போட்டு மறைத்து விட்டு எதுவும் நடக்காததுபோல் மீண்டும் பள்ளிக்கு வந்து விட்டான்.

    இதற்கிடையில் சிறுவன் ஷாநவாஸ் நீண்ட நேரமாகியும் விடுதிக்கு திரும்பாததால் நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் மேலூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விடுதியில் தங்கி இருந்த மற்ற மாணவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது 13 வயது மாணவனின் பேச்சு முன்னுக்குப்பின் முரணாக இருந்தது. தொடர்ந்து நடந்த விசாரணையில் ஷாநவாசை கொலை செய்து கழிவுநீர் தொட்டியில் மறைத்து வைத்ததை ஒப்புக்கொண்டான். சிறுவன் ஷாநவாஸ், தனது தாயை தவறாக பேசியதால் கொலை செய்ததாக அழுது கொண்டே தெரிவித்தான்.

    மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    போலீசார் கழிவுநீர் தொட்டியில் கிடந்த ஷாநவாஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 9 வயது சிறுவனை சக மாணவன் கொலை செய்திருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • சிறிது நேரம் கழித்து மீண்டும் வாலிபர் மட்டும் சிறுவன் இல்லாமல் தனியாக வந்ததும் பதிவாகி இருந்தது.
    • தருமபுரி டி.எஸ்.பி. சிவராமன், நேரில் வந்து பிடிபட்ட மாணவனிடம் விசாரணை மேற்கொண்டார்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் மிட்டாரெட்டிஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த மன்மதன். கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி சீதா என்ற மனைவி உள்ளார்.

    இந்த தம்பதியினருக்கு பல ஆண்டுகள் கழித்து பிறந்த மகன் பொன்னரசு (வயது 10). இந்த சிறுவன் அங்குள்ள அரசு தொடக்க பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணி முதல் சிறுவனை காணவில்லை.

    இந்த நிலையில் பதறிப்போன சிறுவனின் உறவினர்கள் அவனை அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தனர். எங்கும் கிடைக்கவில்லை. இதனால் சிறுவன் மாயமானது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து சிறுவனின் பெற்றோர்கள் அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் சிறுவனின் புகைப்படத்தை வாட்ஸ்அப் முகநூலில் பதிவிட்டு காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

    இதனை அடுத்து அதியமான்கோட்டை போலீசார் விசாரித்ததில் சுமார் 12 மணியளவில் பள்ளியில் இருந்த பொன்னரசுவை அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் அழைத்துச் சென்றதை அந்த பகுதியில் இருந்தவர்கள் பார்த்த சிலர் கூறினர்.

    இதைத்தொடர்ந்து போலீசார் மிட்டாரெட்டிஅள்ளி கிராமத்திற்கு சென்று தீவிர விசாரணையில் இறங்கினர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் சிறுவன் பொன்னரசு அதே பகுதியைச் சேர்ந்த வாலிபருடன் சென்றது பதிவாகி இருந்தது. சிறிது நேரம் கழித்து மீண்டும் வாலிபர் மட்டும் சிறுவன் இல்லாமல் தனியாக வந்ததும் பதிவாகி இருந்தது.

    இதைத்தொடர்ந்து அந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்ததில் அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சரவணன் மகன் இளங்கோ (19) என்பது தெரியவந்தது. இதனை அடுத்து இளங்கோவை பிடித்து போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். தகவல் அறிந்த கிராம மக்கள் இரவு 100-க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தில் திரண்டனர். சிறுவனுக்கு என்ன ஆனது என உறவினர்களும், கிராம மக்களும் ஒன்று சேர்ந்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்து வந்த தருமபுரி டி.எஸ்.பி. சிவராமன், நேரில் வந்து பிடிபட்ட மாணவனிடம் விசாரணை மேற்கொண்டார்.

    அப்போது இளங்கோ கஞ்சா போதையில் இருப்பது தெரியவந்தது.

    தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், கஞ்சா மயக்கத்தில் இருந்த இளங்கோ பள்ளியில் இருந்த சிறுவனை அழைத்துச் சென்று அதே பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் தள்ளி கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது.

    இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கிராம மக்கள் மற்றும் போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் விவசாய கிணற்றுக்கு சென்று இரவு 12 மணி அளவில் சிறுவனின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    சிறிது நேரத்தில் பொன்னரசுவின் பிணத்தை கிணற்றில் இருந்து மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் இளங்கோவன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து இளங்கோவனிடம் எதற்காக சிறுவனை கிணற்றில் தள்ளி கொலை செய்தார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-

    அதியமான்கோட்டை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளான நல்லம்பள்ளி, நார்த்தம்பட்டி, இலளிக்கம், மிட்டாரெட்டி அள்ளி உள்ளிட்ட கிராமங்களில் கஞ்சா சரளமாக புழக்கத்தில் இருப்பதாகவும் மாணவர்கள், இளைஞர்கள் சிலர் இதற்கு அடிமையாகி வருவதும், அதனால்தான் இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தனர். மேலும் சில அலோபதி மருந்து கடைகளில் ரூ.10-க்கு போதை ஊசி போடுவதாக அதிர்ச்சி தகவலையும் தெரிவித்தனர்.

    • படுகாயத்துடன் உயிருக்கு போராடிய பெண் செல்போன் மூலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
    • கொலை செய்யப்பட்ட சிறுவன் மற்றும் படுகாயம் அடைந்த அவனது தாய் பெயர் விவரங்களை வெளியிட போலீசார் மறுத்து விட்டனர்.

    சிகாகோ:

    அமெரிக்கா சிகாகோவில் இருந்து தென்மேற்கே 65 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பகுதியில் 32 வயது முஸ்லிம் பெண் தனது 6 வயது மகனுடன் வசித்து வந்தார்.

    நேற்று முன்தினம் இவர்கள் இருவரும் வீட்டில் இருந்தனர். அப்போது 71 வயது முதியவர் ஒருவர் வீட்டுக்குள் கத்தியுடன் புகுந்தார். திடீரென அவர் அந்த பெண்ணையும், அவரது மகனையும் வெறித்தனமாக கத்தியால் தாக்கினார் . 6 வயது சிறுவனை அவர் தொடர்ந்து கத்தியால் குத்திக்கொண்டே இருந்தார். இதில் அவனது உடலில் 26 இடங்களில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. இதனால் ரத்த வெள்ளத்தில் அவன் கீழே சரிந்தான்.

    இதைபார்த்த அந்த பெண் தனது மகனை காக்க முதியவருடன் போராடினார். அவரையும் முதியவர் கத்தியால் குத்தினார். அவரிடம் இருந்து தப்பிக்க அந்த பெண் வீட்டு குளியல் அறைக்குள் ஓடினார். ஆனாலும் அந்த முதியவர் அவரை விடவில்லை. கத்தியால் தாக்கி விட்டு அங்கிருந்து ஓடி விட்டார். இதில் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய அவர் செல்போன் மூலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    மேலும் தனது கணவருக்கும் செல்போனில் தகவல் அனுப்பினார். இதுபற்றி அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணையும், சிறுவனையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சிறுவன் பரிதாபமாக இறந்தான். மருத்துவ பரிசோதனையில் அவனது உடலில் கத்தி இருந்தது தெரியவந்தது. அந்த கத்தி வெளியே எடுக்கப்பட்டது. சிறுவனின் தாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சிறுவனை ஈவு இரக்கம் இல்லாமல் குத்திக்கொன்ற ஜோசப் சுபா என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். அவர் நில உரிமையாளராக இருந்து வருகிறார். இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினர் இடையே நடந்து வரும் சண்டையின் எதிரொலியாக அமெரிக்காவில் வசித்து வந்த பாலஸ்தீனத்தை சேர்ந்த சிறுவனை முதியவர் குத்திக்கொன்றதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொலை செய்யப்பட்ட சிறுவன் மற்றும் படுகாயம் அடைந்த அவனது தாய் பெயர் விவரங்களை வெளியிட போலீசார் மறுத்து விட்டனர்.

    • மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டு வந்தேன்.
    • டாஸ்மாக் கடையில் மது வாங்கிக் கொண்டு நவாசாலையில் உள்ள தோட்டத்திற்கு சென்று மது அருந்தினேன்.

    சிவகிரி:

    தென்காசி மாவட்டம் சிவகிரியை அடுத்துள்ள நவாசாலையில் உள்ள தோட்டத்தில் நேற்று சிறுவன் உடல் மிதந்தது. தகவல் அறிந்த சிவகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சண்முகலெட்சுமி வழக்குப்பதிவு செய்து சிறுவன் யார்? என்று விசாரணை நடத்தியதில் சிவகிரி அருகே உள்ள தென்மலை செல்லிபட்டணம் தெருவை சேர்ந்த பெயிண்டரான முனியாண்டி(வயது 45) என்பவரின் மகன் மகிழன்(6) என்பதும், பெற்ற மகன் என்றும் கூட பாராமல் முனியாண்டி சிறுவனை கிணற்றில் வீசி கொலை செய்ததும் தெரியவந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரித்த போது முனியாண்டி கூறியதாவது:-

    எனது மனைவி கார்த்தீஸ்வரி(40). எனக்கு 2 மகன்கள். அதில் 2-வது மகன் மகிழன் தென்மலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டில் வசிப்பவருக்கும், எனக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அவர் எனது மனைவி குறித்து அவதூறாக பேசினார்.

    அந்த நாளில் இருந்தே அந்த நபர் பேசியதை நினைத்து யோசித்துக் கொண்டே இருந்தேன். அதனால் எனது மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டு வந்தேன். இதனால் எங்களுக்குள் குடும்ப தகராறு அதிகரித்தது.

    நேற்று முன்தினம் மீண்டும் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த நான் எனது மகன் மகிழன் படிக்கும் பள்ளிக்கு சென்று அவனை அழைத்து சென்றேன். அவனுக்கு சாப்பாடு, குளிர்பானம், புதிய ஆடை வாங்கி கொடுத்தேன்.

    பின்னர் டாஸ்மாக் கடையில் மது வாங்கிக் கொண்டு நவாசாலையில் உள்ள தோட்டத்திற்கு சென்று மது அருந்தினேன். அப்போது மது போதையில் எனது மகனை கிணற்றில் தள்ளி கொலை செய்துவிட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டு கலைந்து சென்றனர்.
    • கிருஷ்ணகிரி தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அருகே பாஞ்சாலையூர் கிராமத்தை சேர்ந்த 14 வயதுடைய இர்பான் நேற்று மாலை பாஞ்சாலியூர் அருகே செயல்படும் அரசு மதுபான கடை வழியாக சென்றுள்ளார்.

    அப்போது அவ்வழியாக மது போதையில் வந்த மர்மநபர் சிறுவன் இர்பானிடம் காசு கொடுத்து சிகரெட் வாங்கி வருமாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதற்கு சிறுவன் இர்பான் மறுத்து சிகரெட் வாங்க செல்லவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த மர்மநபர் இர்பானை தாக்கியுள்ளார். மேலும் இருசக்கர வாகனத்தை கொண்டு இர்பான் மீது மோதி உடலில் ஏற்றி இறக்கியுள்ளார்.

    இதில் காயமடைந்த இர்பானை அவரது உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் இர்பான் உயிரிழந்தான்.

    இதனால் கோபம் அடைந்த இர்பான் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் பாஞ்சாலியூர் கிராமத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்து சென்ற போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது அரசு மதுபான கடை இங்கு செயல்படக்கூடாது. வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். மதுபோதையில் சிறுவனை தாக்கி இரு சக்கர வாகனத்தை மேலே ஏற்றி கொலை செய்த மர்மநபர் மீது உரிய நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

    போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டு கலைந்து சென்றனர்.

    இது தொடர்பாக கிருஷ்ணகிரி தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×