search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Boy murder"

    • சிறிது நேரம் கழித்து மீண்டும் வாலிபர் மட்டும் சிறுவன் இல்லாமல் தனியாக வந்ததும் பதிவாகி இருந்தது.
    • தருமபுரி டி.எஸ்.பி. சிவராமன், நேரில் வந்து பிடிபட்ட மாணவனிடம் விசாரணை மேற்கொண்டார்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் மிட்டாரெட்டிஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த மன்மதன். கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி சீதா என்ற மனைவி உள்ளார்.

    இந்த தம்பதியினருக்கு பல ஆண்டுகள் கழித்து பிறந்த மகன் பொன்னரசு (வயது 10). இந்த சிறுவன் அங்குள்ள அரசு தொடக்க பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணி முதல் சிறுவனை காணவில்லை.

    இந்த நிலையில் பதறிப்போன சிறுவனின் உறவினர்கள் அவனை அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தனர். எங்கும் கிடைக்கவில்லை. இதனால் சிறுவன் மாயமானது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து சிறுவனின் பெற்றோர்கள் அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் சிறுவனின் புகைப்படத்தை வாட்ஸ்அப் முகநூலில் பதிவிட்டு காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

    இதனை அடுத்து அதியமான்கோட்டை போலீசார் விசாரித்ததில் சுமார் 12 மணியளவில் பள்ளியில் இருந்த பொன்னரசுவை அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் அழைத்துச் சென்றதை அந்த பகுதியில் இருந்தவர்கள் பார்த்த சிலர் கூறினர்.

    இதைத்தொடர்ந்து போலீசார் மிட்டாரெட்டிஅள்ளி கிராமத்திற்கு சென்று தீவிர விசாரணையில் இறங்கினர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் சிறுவன் பொன்னரசு அதே பகுதியைச் சேர்ந்த வாலிபருடன் சென்றது பதிவாகி இருந்தது. சிறிது நேரம் கழித்து மீண்டும் வாலிபர் மட்டும் சிறுவன் இல்லாமல் தனியாக வந்ததும் பதிவாகி இருந்தது.

    இதைத்தொடர்ந்து அந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்ததில் அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சரவணன் மகன் இளங்கோ (19) என்பது தெரியவந்தது. இதனை அடுத்து இளங்கோவை பிடித்து போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். தகவல் அறிந்த கிராம மக்கள் இரவு 100-க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தில் திரண்டனர். சிறுவனுக்கு என்ன ஆனது என உறவினர்களும், கிராம மக்களும் ஒன்று சேர்ந்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்து வந்த தருமபுரி டி.எஸ்.பி. சிவராமன், நேரில் வந்து பிடிபட்ட மாணவனிடம் விசாரணை மேற்கொண்டார்.

    அப்போது இளங்கோ கஞ்சா போதையில் இருப்பது தெரியவந்தது.

    தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், கஞ்சா மயக்கத்தில் இருந்த இளங்கோ பள்ளியில் இருந்த சிறுவனை அழைத்துச் சென்று அதே பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் தள்ளி கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது.

    இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கிராம மக்கள் மற்றும் போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் விவசாய கிணற்றுக்கு சென்று இரவு 12 மணி அளவில் சிறுவனின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    சிறிது நேரத்தில் பொன்னரசுவின் பிணத்தை கிணற்றில் இருந்து மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் இளங்கோவன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து இளங்கோவனிடம் எதற்காக சிறுவனை கிணற்றில் தள்ளி கொலை செய்தார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-

    அதியமான்கோட்டை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளான நல்லம்பள்ளி, நார்த்தம்பட்டி, இலளிக்கம், மிட்டாரெட்டி அள்ளி உள்ளிட்ட கிராமங்களில் கஞ்சா சரளமாக புழக்கத்தில் இருப்பதாகவும் மாணவர்கள், இளைஞர்கள் சிலர் இதற்கு அடிமையாகி வருவதும், அதனால்தான் இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தனர். மேலும் சில அலோபதி மருந்து கடைகளில் ரூ.10-க்கு போதை ஊசி போடுவதாக அதிர்ச்சி தகவலையும் தெரிவித்தனர்.

    • படுகாயத்துடன் உயிருக்கு போராடிய பெண் செல்போன் மூலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
    • கொலை செய்யப்பட்ட சிறுவன் மற்றும் படுகாயம் அடைந்த அவனது தாய் பெயர் விவரங்களை வெளியிட போலீசார் மறுத்து விட்டனர்.

    சிகாகோ:

    அமெரிக்கா சிகாகோவில் இருந்து தென்மேற்கே 65 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பகுதியில் 32 வயது முஸ்லிம் பெண் தனது 6 வயது மகனுடன் வசித்து வந்தார்.

    நேற்று முன்தினம் இவர்கள் இருவரும் வீட்டில் இருந்தனர். அப்போது 71 வயது முதியவர் ஒருவர் வீட்டுக்குள் கத்தியுடன் புகுந்தார். திடீரென அவர் அந்த பெண்ணையும், அவரது மகனையும் வெறித்தனமாக கத்தியால் தாக்கினார் . 6 வயது சிறுவனை அவர் தொடர்ந்து கத்தியால் குத்திக்கொண்டே இருந்தார். இதில் அவனது உடலில் 26 இடங்களில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. இதனால் ரத்த வெள்ளத்தில் அவன் கீழே சரிந்தான்.

    இதைபார்த்த அந்த பெண் தனது மகனை காக்க முதியவருடன் போராடினார். அவரையும் முதியவர் கத்தியால் குத்தினார். அவரிடம் இருந்து தப்பிக்க அந்த பெண் வீட்டு குளியல் அறைக்குள் ஓடினார். ஆனாலும் அந்த முதியவர் அவரை விடவில்லை. கத்தியால் தாக்கி விட்டு அங்கிருந்து ஓடி விட்டார். இதில் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய அவர் செல்போன் மூலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    மேலும் தனது கணவருக்கும் செல்போனில் தகவல் அனுப்பினார். இதுபற்றி அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணையும், சிறுவனையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சிறுவன் பரிதாபமாக இறந்தான். மருத்துவ பரிசோதனையில் அவனது உடலில் கத்தி இருந்தது தெரியவந்தது. அந்த கத்தி வெளியே எடுக்கப்பட்டது. சிறுவனின் தாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சிறுவனை ஈவு இரக்கம் இல்லாமல் குத்திக்கொன்ற ஜோசப் சுபா என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். அவர் நில உரிமையாளராக இருந்து வருகிறார். இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினர் இடையே நடந்து வரும் சண்டையின் எதிரொலியாக அமெரிக்காவில் வசித்து வந்த பாலஸ்தீனத்தை சேர்ந்த சிறுவனை முதியவர் குத்திக்கொன்றதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொலை செய்யப்பட்ட சிறுவன் மற்றும் படுகாயம் அடைந்த அவனது தாய் பெயர் விவரங்களை வெளியிட போலீசார் மறுத்து விட்டனர்.

    • ஆத்திரம் அடைந்த ஷபி சையக் சம்பவத்தன்று இஸ்லார் மார்வாடியை அரிவாளால் வெட்டினார்.
    • கொலையுண்ட சிறுவன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வீடு புகுந்து திருடிய வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டான்.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பை செம்பூர் பகுதியை சேர்ந்தவர் ஷபி சையக் (வயது33) ஆட்டோ டிரைவர். இவரது மனைவியை இஸ்லார் மார்வாடி என்ற 17 வயது சிறுவன் கேலி, கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி அறிந்த ஷபி சையக் அந்த சிறுவனை கண்டித்தார். ஆனாலும் அவன் கேட்கவில்லை. தொடர்ந்து கிண்டல் செய்து வந்தான்.

    இதனால் ஆத்திரம் அடைந்த ஷபி சையக் சம்பவத்தன்று இஸ்லார் மார்வாடியை அரிவாளால் வெட்டினார். தலையில் சுத்தியலால் தாக்கினார். இதில் அவன் இறந்தான். இதையடுத்து தடயத்தை அழிப்பதற்காக சிறுவன் உடலை ஷபி சையக் 4 துண்டுகளாக வெட்டி பெரிய பைகளில் அடைத்தார். பின்னர் உடல் பாகங்கள் அடங்கிய பைகளை வீட்டு சமையல் அறையில் மறைத்து வைத்தார்.

    இது பற்றி அறிந்த போலீசார் அங்கு சென்று சிறுவன் உடலை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ஷபி சையக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொலையுண்ட சிறுவன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வீடு புகுந்து திருடிய வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டான். பின்னர் சிறுவர் சீர்திருத்த மையத்தில் இருந்த அவன் போதை பொருளுக்கு அடிமையானதாக போலீசார் தெரிவித்தனர்.

    • மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டு வந்தேன்.
    • டாஸ்மாக் கடையில் மது வாங்கிக் கொண்டு நவாசாலையில் உள்ள தோட்டத்திற்கு சென்று மது அருந்தினேன்.

    சிவகிரி:

    தென்காசி மாவட்டம் சிவகிரியை அடுத்துள்ள நவாசாலையில் உள்ள தோட்டத்தில் நேற்று சிறுவன் உடல் மிதந்தது. தகவல் அறிந்த சிவகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சண்முகலெட்சுமி வழக்குப்பதிவு செய்து சிறுவன் யார்? என்று விசாரணை நடத்தியதில் சிவகிரி அருகே உள்ள தென்மலை செல்லிபட்டணம் தெருவை சேர்ந்த பெயிண்டரான முனியாண்டி(வயது 45) என்பவரின் மகன் மகிழன்(6) என்பதும், பெற்ற மகன் என்றும் கூட பாராமல் முனியாண்டி சிறுவனை கிணற்றில் வீசி கொலை செய்ததும் தெரியவந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரித்த போது முனியாண்டி கூறியதாவது:-

    எனது மனைவி கார்த்தீஸ்வரி(40). எனக்கு 2 மகன்கள். அதில் 2-வது மகன் மகிழன் தென்மலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டில் வசிப்பவருக்கும், எனக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அவர் எனது மனைவி குறித்து அவதூறாக பேசினார்.

    அந்த நாளில் இருந்தே அந்த நபர் பேசியதை நினைத்து யோசித்துக் கொண்டே இருந்தேன். அதனால் எனது மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டு வந்தேன். இதனால் எங்களுக்குள் குடும்ப தகராறு அதிகரித்தது.

    நேற்று முன்தினம் மீண்டும் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த நான் எனது மகன் மகிழன் படிக்கும் பள்ளிக்கு சென்று அவனை அழைத்து சென்றேன். அவனுக்கு சாப்பாடு, குளிர்பானம், புதிய ஆடை வாங்கி கொடுத்தேன்.

    பின்னர் டாஸ்மாக் கடையில் மது வாங்கிக் கொண்டு நவாசாலையில் உள்ள தோட்டத்திற்கு சென்று மது அருந்தினேன். அப்போது மது போதையில் எனது மகனை கிணற்றில் தள்ளி கொலை செய்துவிட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டு கலைந்து சென்றனர்.
    • கிருஷ்ணகிரி தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அருகே பாஞ்சாலையூர் கிராமத்தை சேர்ந்த 14 வயதுடைய இர்பான் நேற்று மாலை பாஞ்சாலியூர் அருகே செயல்படும் அரசு மதுபான கடை வழியாக சென்றுள்ளார்.

    அப்போது அவ்வழியாக மது போதையில் வந்த மர்மநபர் சிறுவன் இர்பானிடம் காசு கொடுத்து சிகரெட் வாங்கி வருமாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதற்கு சிறுவன் இர்பான் மறுத்து சிகரெட் வாங்க செல்லவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த மர்மநபர் இர்பானை தாக்கியுள்ளார். மேலும் இருசக்கர வாகனத்தை கொண்டு இர்பான் மீது மோதி உடலில் ஏற்றி இறக்கியுள்ளார்.

    இதில் காயமடைந்த இர்பானை அவரது உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் இர்பான் உயிரிழந்தான்.

    இதனால் கோபம் அடைந்த இர்பான் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் பாஞ்சாலியூர் கிராமத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்து சென்ற போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது அரசு மதுபான கடை இங்கு செயல்படக்கூடாது. வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். மதுபோதையில் சிறுவனை தாக்கி இரு சக்கர வாகனத்தை மேலே ஏற்றி கொலை செய்த மர்மநபர் மீது உரிய நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

    போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டு கலைந்து சென்றனர்.

    இது தொடர்பாக கிருஷ்ணகிரி தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அனூப் தனது உறவினரான சிந்தாராம் உதவியுடன் சிறுவனை கடத்தி கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
    • அனூப், அவரது உறவினர் சிந்தாராம் மற்றும் மந்திரவாதி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    லக்னோ:

    உத்தரபிரதேசம் மாநிலம் பக்ரைச் மாவட்டத்தில் உள்ள பர்சா கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ண வர்மா. இவரது மகன் விவேக் (வயது 10).

    விவேக் கடந்த 23-ந்தேதி இரவு திடீரென காணாமல் போனான். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனது பெற்றோர் பல இடங்களில் தேடிப் பார்த்தும் விவேக் கிடைக்கவில்லை. இதுகுறித்து போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் சிறுவன் விவேக் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில், அப்பகுதியில் உள்ள ஒரு வயலில் பிணமாக கிடந்தான். தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    இதில் நரபலிக்காக விவேக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. கொலை செய்யப்பட்ட விவேக்கின் உறவினரான அனூப் என்பவர் அதே பகுதியில் வசித்து வருகிறார். இவரது 2½ வயது மகன் மனநலம் குன்றியவர் என்றும், அந்த குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குழந்தையின் உடல்நிலை தேறவில்லை.

    இதனால் அனூப் அந்த கிராமத்திற்கு அருகே உள்ள ஒரு மந்திரவாதியை அணுகி உள்ளார். அவர் சிறுவனை நரபலி கொடுத்தால் உனது குழந்தையின் உடல்நலம் தேறும் என தூண்டி உள்ளார்.

    இதை நம்பிய அனூப் தனது உறவினரான சிந்தாராம் உதவியுடன் சிறுவன் விவேக்கை கடத்தி மண்வெட்டியால் தாக்கி கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து அனூப், அவரது உறவினர் சிந்தாராம் மற்றும் மந்திரவாதி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் 3 பேர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரசாந்த் வர்மா கூறினார்.

    • 9 வயது தலித் சிறுவன் ஆசியர்களுக்காக ஒதுக்கி வைக்கப்பட்டு இருந்த பானையில் இருந்த தண்ணீரை எடுத்து குடித்துள்ளான்.
    • ஆத்திரம் அடைந்த ஆசிரியர் மாணவனை கடுமையாக அடித்து உதைத்தார். இதில் சிறுவனின் காது, கண்களில் காயம் ஏற்பட்டது.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டம் ஷயாளா கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று இருக்கிறது.

    இந்த பள்ளியில் படிக்கும் 9 வயது தலித் சிறுவன் ஆசியர்களுக்காக ஒதுக்கி வைக்கப்பட்டு இருந்த பானையில் இருந்த தண்ணீரை எடுத்து குடித்துள்ளான்.

    இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியர் மாணவனை கடுமையாக அடித்து உதைத்தார். இதில் சிறுவனின் காது, கண்களில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். இந்த சம்பவம் கடந்த மாதம் 20-ந்தேதி நடந்தது.

    இந்த நிலையில் ஆசிரியரால் கடுமையாக தாக்கப்பட்ட அந்த சிறுவன் நேற்று சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தான்.

    சிறுவன் இறந்த செய்தி அறிந்த அந்த பகுதி மக்கள் ஆத்திரம் அடைந்தனர். நிலைமை மோசமடைவதை தடுக்க அந்த பகுதியில் இணையதள சேவை முடக்கப்பட்டது. இதை தொடர்ந்து கொலை வழக்கில் ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

    ஆசிரியரால் அடித்து கொல்லப்பட்ட சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளார்.

    அதோடு இந்த வழக்கு தொடர்பாக விரைவாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    நத்தம் அருகே 6 வயது சிறுவன் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக கல்லூரி மாணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செந்துறை:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா செந்துறை அருகே உள்ள சின்னையம்பட்டியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 48). ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வித்யா. இவர்களுக்கு 3 மகள்களும் ஹரிஹர தீபன் (6) என்ற மகனும் உள்ளனர்.

    ஹரிஹரதீபன் தனியார் பள்ளியின் 2-ம் வகுப்பு படித்து வந்தான். வித்யா 100 நாள் வேலைக்கு செல்வது வழக்கம். நேற்று வழக்கம் போல் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். மாலையில் வீடு திரும்பிய வித்யா தனது மகள்கள் மட்டும் இருந்ததைப் பார்த்து மகனை தேடினார். ஆனால் கிடைக்கவில்லை.

    அடிக்கடி வித்யாவின் அக்கா மகன் ராஜேஷ்குமார், உறவினர் பிரியதர்ஷிணி ஆகியோர் வீடுகளுக்கு ஹரிஹரதீபன் விளையாடச் செல்வது வழக்கம் எனவே அவர்களது வீட்டுக்கு சென்று வித்யா தேடிப்பார்த்தார். அங்கும் அவனை காணவில்லை.

    எதேச்சையாக பிரியதர்ஷிணியின் வீட்டு மாடிக்கு சென்று பார்த்தபோது அங்கு ஹரிஹர தீபன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தான் இதை பார்த்ததும் அலறி துடித்த வித்யா அவனை தூக்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் காட்டுத் தீ போல பரவியது.

    இதனையடுத்து நத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசனும் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டார்.

    இது குறித்து போலீசார் தெரிவிக்கையில் ராமகிருஷ்ணனுக்கு 3 மகள்கள் இருந்தபோதும் ஆண் வாரிசுக்காக 4-வதாக ஹரிஹரதீபனை பெற்றெடுத்து ஆசையாக வளர்த்து வந்தனர். ராமகிருஷ்ணன் ஓட்டலில் வேலை பார்த்து வந்த போதிலும் வசதியாகவே இருந்து வந்துள்ளார். இவர்களது பூர்வீக சொத்தை பிரிப்பது தொடர்பாக உறவினர்கள் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

    மேலும் ராமகிருஷ்ணன் வளர்ச்சியிலும் அவர்கள் பொறாமைபட்டு வந்துள்ளனர். இதனால் அவரது உறவினரான அஜய்குமார் (19) என்பவர்தான் கொலை செய்திருக்க கூடும் என தெரிய வந்துள்ளது. எனவே அவரிடம் சந்தேகத்தின் பேரில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். அஜய்குமார் தனியார் கல்லூரியில் பி.காம். 2ம் ஆண்டு படித்து வருகிறார். ஆரம்பத்தில் இந்த கொலை நரபலியாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்த நிலையில் தற்போது உறவினர்களுக்குள் ஏற்பட்ட முன் விரோதத்தில் தான் நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றனர்.

    வேட்டவலம் அருகே சிறுவன் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேட்டவலம்:

    திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அடுத்த ஆவூர் பெரிய ஏரியில் இன்று காலை கரும்புகை வந்தது. இதையறிந்த அப்பகுதியினர் சிலர் ஏரிக்கு சென்று பார்த்தனர். அப்போது எரிந்த நிலையில் சிறுவன் பிணமாக கிடந்தான். இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    இதுகுறித்து அவர்கள் வேட்டவலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் நாகராஜன், மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.

    சிறுவனுக்கு 12 வயது இருக்கும். அவனின் தலை, முகம், உடல், கால்கள் கருகிய நிலையில் கிடந்தது. சிறுவன் மீதும் அவனை சுற்றியும் கோழிகளின் இறகு கழிவுகள் கொட்டப்பட்டு தீவைத்து எரிக்கப்பட்டிருந்தது. பிணம் எரித்திருந்த சிறிது தூரத்தில் மண்ணெண்ணை கேன் வீசப்பட்டு கிடந்தது. எனவே சிறுவனை யாரோ எரித்து கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது.

    சம்பவ இடத்திற்கு எஸ்.பி. சிபிசக்கரவர்த்தி, கலால் டி.எஸ்.பி. பழனி, திருவண்ணாமலை டி.எஸ்.பி. அண்ணாதுரை ஆகியோரும் வந்து விசாரணை நடத்தினர்.

    பிணத்தை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    சிறுவன் எரித்துக்கொலை செய்யப்பட்டாரா அல்லது கொலை செய்து மண்ணெண்ணை ஊற்றி எரிக்கப்பட்டாரா? எந்த ஊரை சேர்ந்தவர்? கொலையாளிகள் யார், கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைரேகை டி.எஸ்.பி. சுந்தரமூர்த்தி வந்து ரேகைகளை பதிவு செய்தார்.

    திருவண்ணாமலையில் இருந்து வரவழைக்கப்பட்ட மோப்பநாய் பெசி, பிணத்தை சுற்றி சுற்றி வந்தது. பின்னர் நடுப்பட்டு கிராமத்திற்கு செல்லும் சாலையையொட்டி சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கல்வி பிடிக்கவில்லை. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மும்பையில் 7 வயது சிறுவன் பீர்பாட்டிலால் குத்திக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக அவனது சித்தப்பாவை போலீசார் கைது செய்தனர். #Mumbai #ManHeld #Murder
    மும்பை:

    மும்பை பைகன்வாடி ரபீக் நகரை சேர்ந்த சிறுவன் முகமது இர்பான் அஸ்காரலி(வயது7). கடந்த சனிக்கிழமை காலை வீட்டில் இருந்து விளையாட வெளியே சென்ற சிறுவன் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் கலக்கம் அடைந்த பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தனர். ஆனால் சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவர்கள் சிவாஜி நகர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை தேடிவந்தனர். இந்தநிலையில் தேவ்னார் தியோனர் சொசைட்டி பகுதியில் உள்ள வாகன நிறுத்தத்தில் சிறுவன் முகமது இர்பான் அஸ்காரலி பலத்த காயங்களுடன் பிணமாக மீட்கப்பட்டான்.

    இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், சிறுவனை அவனது சித்தப்பா முகமது நவ்சத் அலாவூதின் அப்பாசி(22) என்பவருடன் பார்த்ததாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். எனவே போலீசார் சந்தேகத்தின் பேரில் அவரை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில், சிறுவனை அவர் தான் கடத்தி கொலை செய்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

    முகமது நவ்செத் அலாவூதின் அப்பாசி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனால் அவரது அண்ணன் மற்றும் மனைவி திட்டி வந்துள்ளனர். இதனால் அவர்களை பழிவாங்குவதற்காக முகமது இர்பான் அஸ்காரலியை கடத்தி பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் முகமது நவ்செத் அலாவூதின் அப்பாசியை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Mumbai #ManHeld #Murder

    சென்னை நெசப்பாக்கத்தில் கொடூரமாக மகன் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்கு பழியாக கள்ளக்காதலனை தீர்த்துக்கட்ட துப்பாக்கி வாங்கிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை:

    சென்னை எம்.ஜி.ஆர். நகர் நெசப்பாக்கத்தில் கடந்த பிப்ரவரி 28-ந்தேதி ரித்தேஸ்சாய் என்ற 10 வயது சிறுவன் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக எம்.ஜி.ஆர். நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கள்ளக்காதல் தகராறில் இந்த கொலை நடந்தது தெரிய வந்தது. சிறுவனின் தாய் மஞ்சுளாவின் கள்ளக்காதலன் நாகராஜ் கைது செய்யப்பட்டார்.

    சிறுவன் ரித்தேஷ் சாயை கடத்திச் சென்ற, நாகராஜ், அவனை மிகவும் கொடூரமாக துடிக்க துடிக்க கொலை செய்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் சென்னை மாநகர் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் மகன் கொலை செய்யப்பட்டு 5 மாதங்களுக்கு பிறகு தாய் மஞ்சுளா, கொலைக்கு பழிக்கு பழி வாங்குவதற்காக கள்ளத்துப்பாக்கியை வாங்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய பரபரப்பான தகவல்கள் வருமாறு:-

    கடந்த பிப்ரவரி மாதம் சிறுவன் கொலை செய்யப்பட்டபோதே மகன் ரித்தேஸ் கொலைக்கு பின்னர் மஞ்சுளா, நாகராஜனால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ? என்று அஞ்சி வாழ்ந்துள்ளார். அதே நேரத்தில் மகனின் கொலைக்கு பழிக்கு பழி வாங்கவும் அவர் முடிவு செய்தார். கணவர் தன்னை விலக்கி வைத்து இருந்ததால் அவரை கொலை செய்யவும் திட்டமிட்டு இருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து தனக்கு தெரிந்த நண்பர் பிரசாந்த், சுதாகர் ஆகியோருடன் இது பற்றி அவர் கூறினார்.

    துப்பாக்கி வாங்குவதற்காக அவர்களிடம் ரூ.2 லட்சம் பணம் கொடுக்கவும் சம்மதித்தார். இதை தொடர்ந்து இருவரும் துப்பாக்கி ஒன்றை அவருக்கு வாங்கி கொடுத்தனர். ஆனால் அது பொம்மை துப்பாக்கி என்பது தெரிய வந்தது.

    இந்த விவகாரம் சைதாப்பேட்டை போலீசுக்கு தெரிய வந்தது. இதுபற்றி அவர்கள் அதிரடி விசாரணையில் இறங்கினர்.

    சைதாப்பேட்டை உதவி கமி‌ஷனர் அனந்தராமன் இன்ஸ்பெக்டர் விஜயக்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி மஞ்சுளா, பிரசாந்த், சுதாகர் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
    கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டதால் சிறுவனை கொன்று சுடுகாட்டில் புதைத்தோம் என்று 2 சிறுவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை சூளைமேடு ஜோதியம்மாள் நகரை சேர்ந்தவர் பெருமாள். இவர் வசித்து வந்த பகுதியில் உள்ள வீடுகள் காலி செய்யப்பட்டன.

    இதனை தொடர்ந்து இவர் தனது குடும்பத்தினருடன் இடம் பெயர்ந்து சூளைமேடு நெடுஞ்சாலையில் நடைபாதையில் வசித்து வந்தார்.

    பழைய புத்தகங்களை நடைபாதையில் போட்டு பெருமாள் விற்பனை செய்து வருகிறார். இவரது மகன் ராஜேஷ் (17). படிப்பை பாதியில் நிறுத்திய இவன் ஊர் சுற்றி வந்தான்.

    இவன் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் தினத்தன்று காணாமல் போனான். இது தொடர்பாக தந்தை பெருமாள் சூளைமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேசை தேடி வந்தனர். ஆனால் அவனை கண்டு பிடிக்க முடியவில்லை.

    இதனால் ராஜேஷ் வீட்டில் சொல்லாமல் வெளியூருக்கு எங்காவது சென்று தங்கி இருந்து வேலை செய்து வரலாம் என்று கருதப்பட்டது. இதனால் போலீசாரும் ராஜேஷ் காணாமல் போன வி‌ஷயத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அப்படியே விட்டுவிட்டனர்.

    இந்த நிலையில் நுங்கம்பாக்கம் உதவி கமி‌ஷனர் முத்துவேல் பாண்டி முன்பு நேற்று மாலை 2 சிறுவர்களும் பரத்குமார் என்ற 19 வயது இளைஞரும் ஆஜரானார்கள். சூளைமேடு கிழக்கு நமச்சிவாயபுரத்தை சேர்ந்த இவர்கள் 3 பேரும், காணாமல் போன ராஜேசை நாங்கள்தான் கொலை செய்தோம் என்று கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த உதவி ஆணையாளர் முத்துவேல் பாண்டி சிறுவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தினார். அப்போது 3 பேரும் ராஜேசை கொலை செய்து நுங்கம்பாக்கத்தில் உள்ள சுடுகாட்டில் புதைத்தது தெரிய வந்தது. இது பற்றி அவர்கள் அளித்த திடுக்கிடும் வாக்கு மூலம் வருமாறு:-

    ராஜேஷ் எப்போதும் எங்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்பான் இது எங்களுக்கு மிகவும் தொல்லையாக இருந்தது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி நாங்கள் 3 பேரும் நுங்கம்பாக்கம் சுடுகாட்டின் உள்ளே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தோம்.

    அப்போது அங்கு வந்த ராஜேஷ் எங்களிடம் கத்தியை காட்டி மிரட்டினான். பணம் தராவிட்டால் கொன்று விடுவேன் என்று கூறி கத்தியாலும் குத்த வந்தான்.

    இதனால் ஆத்திரம் அடைந்த நாங்கள் ராஜேசை கத்தியால் குத்தி கொலை செய்தோம். பின்னர் நுங்கம்பாக்கம் சுடுகாட்டிலேயே குழி தோண்டி ராஜேசின் உடலை புதைத்தோம். இவ்வாறு வாக்கு மூலம் அளித்துள்ளனர்.

    ராஜேஷ் கொலை செய்யப்பட்டு 6 மாதம் ஆகிறது. நுங்கம்பக்கம் சுடுகாட்டில் ராஜேசின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை 3 பேரும் அடையாளம் காட்டினர். அந்த இடத்தை தோண்டி ராஜேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    கொலையுண்டு 6 மாதமாகி விட்டதால் ராஜேசின் உடல் எலும்புக் கூடாகி இருக்கும் என்பதால் சுடுகாட்டில் தோண்டி எடுத்தவுடன் அங்கு வைத்தே பிரேத பரிசோதனை செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். ராஜேசின் உடல் இன்று அல்லது நாளை தோண்டி எடுக்கப்பட உள்ளது.

    ராஜேசை கொலை செய்து புதைத்தவர்களில் 2 சிறுவர்கள் சுடுகாட்டில் குழிதோண்டும் பணியில் ஈடுபட்டு வெட்டியான் வேலை செய்கிறார்கள். இதனால் தான் அவர்களால் கச்சிதமாக குழிதோண்டி ராஜேசின் உடலை புதைக்க முடிந்துள்ளது. சுடுகாட்டில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வது போல சத்தமில்லாமல் ராஜேசின் உடலையும் புதைத்து விட்டு எதுவும் தெரியாதது போல சுற்றி வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இந்த வழக்கில் இன்னொரு சிறுவனுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவன் தலைமறைவாக உள்ளான். சம்பவத்தன்று நுங்கம்பாக்கம் சுடுகாட்டில் அந்த சிறுவனும் இறந்துள்ளான். அவனை கொலையுண்ட ராஜேஷ் கத்தியால் குத்தி இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    ×