search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Painter Arrest"

    • மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டு வந்தேன்.
    • டாஸ்மாக் கடையில் மது வாங்கிக் கொண்டு நவாசாலையில் உள்ள தோட்டத்திற்கு சென்று மது அருந்தினேன்.

    சிவகிரி:

    தென்காசி மாவட்டம் சிவகிரியை அடுத்துள்ள நவாசாலையில் உள்ள தோட்டத்தில் நேற்று சிறுவன் உடல் மிதந்தது. தகவல் அறிந்த சிவகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சண்முகலெட்சுமி வழக்குப்பதிவு செய்து சிறுவன் யார்? என்று விசாரணை நடத்தியதில் சிவகிரி அருகே உள்ள தென்மலை செல்லிபட்டணம் தெருவை சேர்ந்த பெயிண்டரான முனியாண்டி(வயது 45) என்பவரின் மகன் மகிழன்(6) என்பதும், பெற்ற மகன் என்றும் கூட பாராமல் முனியாண்டி சிறுவனை கிணற்றில் வீசி கொலை செய்ததும் தெரியவந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரித்த போது முனியாண்டி கூறியதாவது:-

    எனது மனைவி கார்த்தீஸ்வரி(40). எனக்கு 2 மகன்கள். அதில் 2-வது மகன் மகிழன் தென்மலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டில் வசிப்பவருக்கும், எனக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அவர் எனது மனைவி குறித்து அவதூறாக பேசினார்.

    அந்த நாளில் இருந்தே அந்த நபர் பேசியதை நினைத்து யோசித்துக் கொண்டே இருந்தேன். அதனால் எனது மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டு வந்தேன். இதனால் எங்களுக்குள் குடும்ப தகராறு அதிகரித்தது.

    நேற்று முன்தினம் மீண்டும் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த நான் எனது மகன் மகிழன் படிக்கும் பள்ளிக்கு சென்று அவனை அழைத்து சென்றேன். அவனுக்கு சாப்பாடு, குளிர்பானம், புதிய ஆடை வாங்கி கொடுத்தேன்.

    பின்னர் டாஸ்மாக் கடையில் மது வாங்கிக் கொண்டு நவாசாலையில் உள்ள தோட்டத்திற்கு சென்று மது அருந்தினேன். அப்போது மது போதையில் எனது மகனை கிணற்றில் தள்ளி கொலை செய்துவிட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • கடந்த பிப்ரவரி மாதம் 14-ந்தேதி காதலர் தினம் என்பதால் சந்திரகுமார் சிறுமியை பார்ப்பதற்காக அவரது ஊருக்கு சென்றார்.
    • சிறுமியின் பெற்றோர் கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.

    கோவை:

    கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள சென்னப்ப செட்டிபுதூரை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    இந்தநிலையில் மாணவிக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலமாக அன்னூர் பொன்னேகவுண்டன்புதூரை சேர்ந்த பெயிண்டர் சந்திரகுமார் (வயது 22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போன் மூலமாக பேசி பழகி வந்தனர்.

    கடந்த பிப்ரவரி மாதம் 14-ந்தேதி காதலர் தினம் என்பதால் சந்திரகுமார் சிறுமியை பார்ப்பதற்காக அவரது ஊருக்கு சென்றார். பின்னர் 2 பேரும் அங்குள்ள பழைய கட்டிடத்தில் சந்தித்தனர். அப்போது சந்திரகுமார் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

    இதன் காரணமாக சிறுமி கர்ப்பமானார். கடந்த சில நாட்களாக அவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவரை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அப்போது சிறுமியை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அவர் 7 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனைகேட்ட சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். அவரிடம் கர்ப்பத்துக்கு யார் காரணம் என விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரை சந்திரகுமார் பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பிளஸ்-2 மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சந்திரகுமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    ×