search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "auto driver arrest"

    • ஊராட்சி தலைவியின் கணவர் தயாளனுக்கும், மகாலிங்கத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • செவ்வாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மகாலிங்கத்தை கைது செய்தனர்.

    திருவள்ளூரை அடுத்த தண்ணீர்குளம் கிராமத்தை சேர்ந்தவர் தயாளன் (60). இவரது மனைவி தேவி. இவர் தண்ணீர்குளம் ஊராட்சி மன்ற தலைவியாக உள்ளார்.

    இந்த நிலையில் இப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே உள்ள குடியிருப்பு அருகே சாலை அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. அப்போது சாலை வழக்கத்தை விட சற்று உயரமாக அமைக்கப்பட்டதாக தெரிகிறது.

    இதுபற்றி அங்கிருந்த ஊழியர்களிடம் அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மகாலிங்கம் கேட்டார். மேலும் சாலை உயரமாக இருந்தால் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் சென்று வர சிரமமாக இருக்கும் என்று கூறினார். இதனால் அங்கிருந்த ஊராட்சி தலைவியின் கணவர் தயாளனுக்கும், மகாலிங்கத்திற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மகாலிங்கம் கோபத்தில் தயாளன் மீது பாய்ந்து அவரது இடது காதை கடித்து துண்டாக துப்பினார். இதில் வலிதாங்க முடியாத தயாளன் காதில் இருந்து ரத்தம் வடிந்த நிலையில் துடித்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மேல் சிகிச்சைக்காக போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். துண்டான காதையும் ஐஸ்கட்டி நிரப்பிய டப்பாவில் வைத்து எடுத்து சென்றனர். அங்கு தயாளனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மகாலிங்கத்தை கைது செய்தனர்.

    • தீபாவின் வாயில் பூச்சிக்கொல்லி மருந்து ஊற்றுவதை பக்கத்து வீட்டை சேர்ந்த ஜீவனா என்ற 10 வயது சிறுமி பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
    • கரீம் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து கமலிகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் வெங்கட்ராவ் பேட்டையை சேர்ந்தவர் தீபா (வயது 18). கல்லூரி மாணவி. அதே பகுதியை சேர்ந்தவர் கமலிகர். ஆட்டோ டிரைவர் இருவரும் காதலித்து வந்தனர்.

    நெருக்கமாக பழகி வந்த இவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் தீபா காதலனை சந்திப்பதை தவிர்த்து வந்தார். தீபாவை சந்தித்து பேச கமலிகர் பலமுறை முயற்சி செய்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை தீபாவின் பெற்றோர் மற்றும் சகோதரர் யாரும் வீட்டில் இல்லை. இதனை அறிந்த கமலிகர் தீபாவின் வீட்டிற்குள் நுழைந்தார்.

    அப்போது வீட்டில் இருந்த தீபாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்தினார். இதற்கு தீபா மறுப்பு தெரிவித்தார்.

    இதில் ஆத்திரம் அடைந்த கமலிகர் தீபாவை சரமாரியாக தாக்கினார்.

    பின்னர் தான் மறைத்து வைத்து இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை வலுக்கட்டாயமாக தீபாவின் வாயில் ஊற்றினார்.

    தீபாவின் வாயில் பூச்சிக்கொல்லி மருந்து ஊற்றுவதை பக்கத்து வீட்டை சேர்ந்த ஜீவனா என்ற 10 வயது சிறுமி பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து அக்கம் பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்தார்.

    அவர்கள் வருவதற்குள் கமலிகர் அங்கிருந்து தப்பிச் சென்றார். தீபாவின் வீட்டிற்கு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரீம் நகர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி தீபா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கரீம் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து கமலிகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆட்டோ சென்றுகொண்டிருந்த போதே, மாணவிக்கு டிரைவர் மண்கண்டன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
    • ஆட்டோ டிரைவர் மணிகண்டனை கையும் களவுமாக பிடித்து பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த 7-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், தினமும் பள்ளிக்கு ஆட்டோவில் சென்று வந்திருக்கிறார். சம்பவத்தன்றும் அவர் பள்ளிக்கு வழக்கமாக செல்லும் ஆட்டோவில் சென்றிருக்கிறார்.

    ஆனால் அன்றைய தினம், மாணவியை வழக்கமான டிரைவர் இல்லாமல், வேறொரு டிரைவரான பாலக்காடு வள்ளிக்கோட்டை பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் அழைத்துச் சென்றுள்ளார். ஆட்டோவில் அந்த மாணவி மட்டும் இருந்துள்ளார்.

    இதனால் ஆட்டோ சென்றுகொண்டிருந்த போதே, மாணவிக்கு டிரைவர் மண்கண்டன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதனை மாணவி கண்டித்திருக்கிறார். ஆனால் அவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தபடியே இருந்திருக்கிறார்.

    மேலும் பலாத்காரமும் செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, சத்தம்போட்டு அழுதுள்ளார். இதனை சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் பார்த்தனர். அந்த பகுதியை சேர்ந்த சிலர், தங்களது வாகனத்தில் அந்த ஆட்டோவை பின்தொடர்ந்து சென்று மடக்கி பிடித்து நிறுத்தினர்.

    பின்பு ஆட்டோவில் இருந்த மாணவியிடம் கேட்டபோது, ஆட்டோ டிரைவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்ற விவரத்தை தெரிவித்தார். இதையடுத்தது ஆட்டோ டிரைவர் மணிகண்டனை கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் மாணவியிடம் ஆட்டோ டிரைவர் அத்துமீறியதும், பலாத்காரம் செய்ய முயன்றதும் உறுதியானது. இதையடுத்து டிரைவர் மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

    கள்ளக்காதல் பிரச்சனையில் மகள் தற்கொலைக்கு காரணமான அரசு பஸ் டிரைவரை ஆட்டோ டிரைவர் கழுத்தை அறுத்து கொன்றார்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இலைக்கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல், அரசு பஸ் டிரைவர். விருத்தாசலம் அருகே புதுக்குப்பம் பகுதியில் வசித்து வந்தார். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். 2 மகள்கள் உள்ளனர்.

    மனைவி இறந்த பின்னர் அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான ஏழுமலையின் மகள் ஆனந்தவள்ளிக்கும், குமரவேலுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது.

    இதையடுத்து இருவரும் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தனர். கடந்த 18.9.18 அன்று குமரவேலும் ஆனந்த வள்ளியும் இலைக்கடம்பூர் கிராமத்தில் உள்ள வீட்டிற்கு சென்றனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த பிரச்சனையில் ஆனந்தவள்ளி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மகள் தற்கொலைக்கு காரணமான குமரவேல் மீது ஏழுமலைக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டார். நேற்றிரவு விருத்தாசலத்தில் குமரவேலுவை சந்தித்த ஏழுமலை, அவருடன் நைசாக பேச்சு கொடுத்து மது அருந்த அழைத்து சென்றார். ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்றதும் அங்கு இருவரும் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.

    குமரவேலுக்கு போதை தலைக்கேறியதும், ஆத்திரமடைந்த ஏழுமலை, தான் கொண்டு வந்த கத்தியால் குமரவேல் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

    பின்னர் உடலை ஆட்டோவில் ஏற்றி அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பெரியாக்குறிச்சிக்கு சென்றார். அங்கு தனியார் சிமெண்ட் ஆலைக்கு சொந்தமான சுரங்கத்திற்கு எதிரே உடலை போட்டு விட்டு ஊர் திரும்பினார். விருத்தாசலத்தில் போலீசார் மறித்து வாகன சோதனை செய்த போது ஆட்டோவில் உள்ள ரத்தக்கறையை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். ஏழுமலையிடம் விசாரித்த போது அவர் நடந்த சம்பவத்தை கூறினார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் செந்துறை போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குமரவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். கொலை தொடர்பாக ஏழுமலையிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தூத்துக்குடியில் செல்போனில் படம் எடுத்து மிரட்டி கல்லூரி மாணவியை கற்பழித்த ஆட்டோ டிரைவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையை சேர்ந்தவர் லாரி டிரைவர். இவரது 17 வயது மகள் தூத்துக்குடி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவருகிறார். இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அவரது தாய் மாணவியை அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு சென்றார். மாணவியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறினர். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய் இது குறித்து மகளிடம் கேட்டார்.

    அப்போது மாணவி கூறும் போது, பள்ளியில் படிக்கும் போது ஆட்டோவில் அழைத்து செல்லும் ஆட்டோ டிரைவரான புதுக்கோட்டை மேல கூட்டுடன்காடு பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் (33) என்பவர் என்னை ஆபாசமாக படம் எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டினார். மேலும் செல்போன் படத்தை காட்டி மிரட்டி கடந்த 5. 4. 2018 அன்று தன்னை கற்பழித்தார். இதனை வெளியில் கூறினால் செல்போன் படங்களை இணையதளத்தில் வெளியிடுவதாகவும், கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டி பல முறை கற்பழித்ததாகவும் கூறினார்.

    இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு மாணவிக்கு குழந்தை பிறந்தது. இதையடுத்து அவரது பெற்றோர் புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 17 வயது சிறுமியை மிரட்டி கற்பழித்ததாக ஆட்டோ டிரைவர் சுப்பிரமணியனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட சுப்பிரமணியனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    கோவை செல்வபுரம் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து அவரை கொலை செய்ய முயன்ற ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    கோவை:

    கோவை செல்வபுரம் அருகே உள்ள சொக்கம்புதூரை சேர்ந்தவர் சேகர் (வயது 28). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சுகன்யா (24). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்தநிலையில் சேகருக்கு அவரது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனவேதனை அடைந்த சுகன்யா கணவரை பிரிந்து கடந்த 10 நாட்களாக பக்கத்து தெருவில் உள்ள தாய் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று சேகர் தனது குழந்தைகளை பார்ப்பதற்காக சுகன்யாவின் தாய் வீட்டுக்கு சென்றார். அப்போது சுகன்யா உறவினர் ஒருவருடன் பேசிக்கொண்டு இருந்தார்.

    இதனை பார்த்து ஆத்திரம் அடைந்த சேகர் அங்கு இருந்த எல்.இ.டி. டி.வி.யை எடுத்து சுகன்யாவின் தலையில் அடித்தார். பின்னர் தரதரவென வெளியே இழுத்து சென்று அங்கு கிடந்த கல்லால் 2 கால்களில் தாக்கினார். பின்னர் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார்.

    தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய சுகன்யாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து செல்வபுரம் போலீசார் மனைவியை தாக்கிய சேகர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். #tamilnews
    முகப்பேரில் 8-ம் வகுப்பு மாணவியை மிரட்டி கற்பழித்து கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
    போரூர்:

    முகப்பேர், பாடிபுதுநகர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை ஏற்கனவே இறந்து விட்டார். தாய் வீட்டு வேலைகள் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பெருமாள் (33) என்பவர் மாணவியிடம் அடிக்கடி பேசினார். அவரது கொடூர பார்வையை அறியாத மாணவியும் நட்பாக பேசி வந்தார்.

    மாணவி பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் போது அவரது தாய் பெரும்பாலான நாட்களில் வேலைக்கு சென்று விடுவது வழக்கம். இதனால் மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

    இதனை சாதகமாக பயன்படுத்திய பெருமாள் அடிக்கடி மாணவியின் வீட்டுக்கு வந்து சென்றார். அப்போது அவர் மாணவியை மிரட்டி பலமுறை கற்பழித்தார். இதுபற்றி வெளியில் சொல்லக் கூடாது என்றும் மிரட்டினார்.

    இதனால் பயந்து போன மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தாயிடம் தெரிவிக்கவில்லை. இதனை பயன்படுத்தி பெருமாள், பல மாதங்களாக மாணவியிடம் உல்லாசமாக இருந்து உள்ளார்.

    இதற்கிடையே மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. அவரை தாயார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்ற போது மாணவி கர்ப்பமாக இருப்பது தெரிந்தது.

    அதிர்ச்சி அடைந்த தாய் இதுபற்றி திருமங்கலம் மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் மாணவியை கற்பழித்த ஆட்டோ டிரைவர் பெருமாளை கைது செய்தனர்.

    மாணவி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து போலீசார் ஆலோசித்து வருகிறார்கள்.
    கோவில்பட்டியில் முன்னாள் கவுன்சிலருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டி ஜீவ அனுகிரகா பொதுநல அறக்கட்டளை நிறுவனர் ராஜேந்திரன். இவர் முன்னாள் நகர்மன்ற கவுன்சலர் ஆவார். இவர் கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் அறக்கட்டளை சார்பிலும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடனும் மரக்கன்றுகளை நடுவதற்கு முடிவு செய்து புதுரோடு, எட்டயபுரம்சாலை, இளையரசனேந்தல் சாலை, அரசு அலுவலக வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறார்.

    இந்நிலையில் புதுரோடு மற்றும் எட்டயபுரம் சாலையில் உள்ள மரக்கன்றுகள் சேதமடைந்திருந்தது. இதையடுத்து அப்பகுதியில் இருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது தங்கப்ப நாடார் நந்தவனத்தைச் சேர்ந்த ஆட்டோடிரைவர் தாஸ் (வயது 50) என்பவர் மரக்கன்றுகளை சேதப்படுத்தியது தெரியவந்தது.

    இதுகுறித்து ராஜேந்திரன் அவரிடம் தட்டி கேட்டார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே ஆத்திரமடைந்த தாஸ், ராஜேந்திரனை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் தாசை கைது செய்தனர். #tamilnews
    தேனி அருகே 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
    உத்தமபாளையம்:

    தேனி அருகே உத்தமபாளையம் ராயப்பன்பட்டியை சேர்ந்தவர் சேதுமணி மகன் சதீஸ்குமார்(வயது23). ஆட்டோ டிரைவர். திருமணமாகி அதேபகுதியில் மனைவியுடன் வசித்து வருகிறார்.

    வடக்குதெருவை சேர்ந்தவர் 10-ம் வகுப்பு மாணவி பள்ளியில் இருந்து வீடு திரும்பும் போது அவரிடம் சதீஸ்குமார் ஆசைவார்த்தை கூறி ஆட்டோவில் அழைத்துச்சென்றுள்ளார்.

    அதேபகுதியில் புதரில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி அழுதுகொண்டே தனது தாயிடம் கூறியுள்ளார். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    போலீசார் வழக்குபதிவு செய்து சதீஸ்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். #tamilnews
    ×