என் மலர்

    நீங்கள் தேடியது "murder attempt"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கள்ளக்காதல் விவகாரம் கார்த்திக்கிற்கு தெரியவரவே அவர் தனது மனைவியை கண்டித்தார்.
    • கார்த்திக்கை தொடர்பு கொண்ட பிரியா உங்களிடம் பேச வேண்டும் என கோவைக்கு அழைத்தார்.

    குனியமுத்தூர்:

    சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 31). வெல்டர். இவரது மனைவி பிரியா (25). இவர்களுக்கு கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர்.

    பிரியாவின் தங்கை வீடு கோவை வெள்ளலூர் அருகே உள்ள கஞ்சிகோணம்பாளைத்தில் உள்ளது. இங்கு அவர் அடிக்கடி வந்து சென்றார். அப்போது பிரியாவுக்கு திருச்செங்கோட்டை சேர்ந்த டிரைவர் தினேஷ் (28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.

    இந்த கள்ளக்காதல் விவகாரம் கார்த்திக்கிற்கு தெரியவரவே அவர் தனது மனைவியை கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    கணவரிடம் கோபித்துக்கொண்டு பிரியாக 2 குழந்தைகளுடன் கோவையில் உள்ள தங்கை வீட்டிற்கு வந்தார். இங்கு வந்த பின்னர் தினேசுடன் நெருக்கம் அதிகமானது. இதனையடுத்து அவர்கள் 2 பேரும் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ ஆரம்பித்தனர். இந்த தகவல் கார்த்திக்கிற்கு தெரியவரவே அவர் தனது மனைவியை தொடர்பு கொண்டு ஏற்கனவே நடந்தவற்றை மறந்து விடு, என்னுடன் வா நாம் சேர்ந்து வாழலாம் என அழைத்தார்.

    இதுகுறித்து பிரியா தனது கள்ளக்காதலன் தினேஷிடம் கூறினார். கார்த்திக் உயிரோடு இருந்தால் நாம் 2 பேரையும் சேர்ந்து வாழவிட மாட்டார். எனவே அவரை கொலை செய்தால் தான் நிம்மதியாக வாழ முடியும் என அவர்கள் 2 பேரும் கொலை திட்டம் தீட்டினர்.

    அதன்படி தனது கணவர் கார்த்திக்கை தொடர்பு கொண்ட பிரியா உங்களிடம் பேச வேண்டும் என கோவைக்கு அழைத்தார். சம்பவத்தன்று அவரும் சேலத்தில் இருந்து புறப்பட்டு கோவைக்கு வந்தார்.

    பிரியா தனது கணவரை கஞ்சிகோணாம் பாளையத்தில் உள்ள தனியார் கம்பெனி பின்புறம் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கு ஏற்கனவே கள்ளக்காதலன் தினேஷ் கத்தியுடன் மறைந்து இருந்தார். அவர் பாய்ந்து சென்று கார்த்திக்கை கத்தியால் குத்தினார். கார்த்திக் தடுக்க முயன்றதில் அவரது கையில் கத்திக்குத்து விழுந்தது.

    வலிதாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டு அலறினார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். அவர்களை பார்த்ததும் தினேசும், பிரியாவும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய கார்த்திக் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய முயன்ற பிரியா, அவரது கள்ளக்காதலன் தினேஷ் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஏஞ்சலின் தயா ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.
    • அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பார்வதிபுரம் கட்டையன் விளை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 42). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். சமீபத்தில் ஊருக்கு வந்துள்ளார்.

    இவரது மனைவி ஏஞ்சலின் தயா (36). கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த செல்வராஜ் அரிவாளால் மனைவி ஏஞ்சலின் தயாவை தலை, கழுத்து, கை உள்பட 5 இடங்களில் சரமாரியாக வெட்டினார்.

    இதில் ஏஞ்சலின் தயா ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதுகுறித்து வடசேரி போலீசில் ஏஞ்சலின் தயா புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் செல்வராஜ் மீது கொலை முயற்சி உட்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மனைவியை அரிவாளால் வெட்டியதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் செல்வராஜுக்கும் அவரது உறவுக்கார பெண் ஒருவருக்கும் இடையே இருந்த பழக்கத்தை ஏஞ்சலின் தயா பலமுறை கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் அவரை வெட்டி இருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். போலீசார் தேடுவது அறிந்த செல்வராஜ் தலைமறைவாகிவிட்டார். அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாங்கனி சத்தம் போடவே 4பேரும் கொலை முயற்சியை கைவிட்டு விட்டு தப்பி சென்று விட்டனர்.
    • கொலை முயற்சி சம்பவத்திற்கு மூலக்காரணம் தனது கணவன் மணிமாறன் என்பது தெரியவரவே மாங்கனி ஊத்துக்குளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் முரட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 38). இவர் சொந்தமாக பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது மனைவி மாங்கனி (35). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்தநிலையில் மணிமாறனுக்கும் அவரது கம்பெனியில் வேலை பார்த்து வந்த இளம்பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர். இந்தநிலையில் அந்த இளம்பெண்ணுக்கு அவரது பெற்றோர் வேறொரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

    இதையறிந்த மணிமாறன் தனது கள்ளக்காதலியின் திருமணத்தை நிறுத்த முடிவு செய்தார். இதற்காக அந்த இளம்பெண்ணுக்கு பார்த்திருந்த மாப்பிள்ளைக்கு, கள்ளக்காதலி குறித்து தவறான தகவல் எழுதி மொட்டை கடிதம் ஒன்றை அனுப்பினார்.

    அந்த கடிதத்தை மணிமாறன் வீட்டில் வைத்து எழுதினார். அப்போது கடிதத்தில் தவறு ஏற்பட்ட போது அந்த கடிதத்தை கசக்கி வீட்டிலேயே போட்டுள்ளார். அதனை மணிமாறனின் மனைவி மாங்கனி எடுத்து பார்த்த போது அதிர்ச்சியடைந்தார்.

    உடனே இதுகுறித்து தனது கணவரிடம் கேட்டதுடன், இளம்பெண்ணுடனான கள்ளக்காதலை கைவிடுமாறும் எச்சரித்தார். இருப்பினும் மணிமாறன் தனது கள்ளக்காதலியை திருமணம் செய்து கொள்ள முயற்சிகள் மேற்கொண்டார்.

    மேலும் தனது கள்ளக்காதல் விவகாரம் மனைவிக்கு தெரிந்து விட்டதால் அவரை கொலை செய்யவும் திட்டமிட்டார். இதற்காக தனது நண்பர்கள் 4 பேரிடம் தெரிவித்துள்ளார். அவர்களும் மணிமாறனின் மனைவியை கொலை செய்ய ஒப்புக்கொண்டனர்.

    அதன்படி சம்பவத்தன்று இரவு மாங்கனி வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தார். அப்போது மணிமாறனின் நண்பர்கள் 4பேரும் வீட்டிற்கு வந்தனர். வீட்டின் கதவை திறந்து 4 பேரையும் மணிமாறன் உள்ளே வரவழைத்தார். பின்னர் மாங்கனி தூங்கி கொண்டிருந்த அறைக்குள் சென்ற 4 பேரும் தலையணையால் அமுக்கி கொலை செய்ய முயன்றனர்.

    மாங்கனி சத்தம் போடவே 4பேரும் கொலை முயற்சியை கைவிட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவத்திற்கு மூலக்காரணம் தனது கணவன் மணிமாறன் என்பது தெரியவரவே இது குறித்து மாங்கனி ஊத்துக்குளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    போலீசார் விசாரணை நடத்தி மணிமாறன் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேரை கைது செய்தனர். கள்ளக்காதலியை திருமணம் செய்து கொள்வதற்காக மனைவியை நண்பர்களுடன் சேர்ந்து கணவன் கொலை செய்ய முயன்ற சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போலீசார் விசாரணையில் சங்கீதா தனது கணவருக்கு, கள்ளக்காதலுடன் சேர்ந்து விஷம் கலந்த மதுவை கொடுத்து கொல்ல முயன்றதை ஒப்புக்கொண்டார்.
    • சண்முகம், சங்கீதாவை போலீசார் கைது செய்தனர். கைதான 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மந்தாரக்குப்பம்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்.

    அவரது மனைவி சங்கீதா (வயது 34). இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர். லாரி டிரைவராக உள்ள வெங்கடேசன் மாதத்துக்கு 3 முறை மட்டும் வீட்டுக்கு வந்து மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்துவிட்டு செல்வது வழக்கம்.

    எனவே சங்கீதா குள்ளஞ்சாவடி அருகே தனது தாயார் ஊரான தோப்புக்கொள்ளை கிராமத்துக்கு கூலிவேலைக்கு தினமும் பஸ்சில் சென்றுவருவார். அப்போது சங்கீதாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சண்முகம் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது.

    எனவே 2 பேரும் ஆட்டோவில் அடிக்கடி சென்று தனிமையில் பலமுறை உல்லாசம் அனுபவித்துள்ளனர். இந்த விவகாரம் சங்கீதாவின் கணவர் வெங்கடேசனுக்கு தெரியவந்தது. அவர் தனது மனைவியை கண்டித்தார்.

    அதன் பின்னர் சங்கீதா ஆட்டோ டிரைவர் சண்முகத்துடன் செல்வதை நிறுத்திவிட்டார். என்றாலும் செல்போனில் அடிக்கடி பேசிவந்துள்ளனர். இந்த விசயமும் வெங்கடேசனுக்கு தெரியவந்தது. இதனால் குடும்பத்தில் பிரச்சினை வெடித்தது. இதனை அறிந்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் சமரசம் செய்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த சங்கீதா கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி கணவன் வெங்கடேசன் வீட்டில் இருக்கும் நேரத்தில் சங்கீதா தனது கள்ளக்காதலன் சண்முகத்திடம் மதுவாங்கிவர கூறியுள்ளார். அதன்படி அவர் மதுவாங்கி வந்தார்.

    அப்போது சண்முகம் மறைந்திருந்தார். அந்த நேரத்தில் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து மதுவில் சங்கீதா கலந்தார். இந்த மதுவை தனது கணவர் வெங்கடேசனுக்கு கொடுத்தார். பாசத்துடன் மனைவி கொடுத்த மதுவை வெங்கடேசன் வாங்கி குடித்தார். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார்.

    அதிர்ச்சியடைந்த உறவினர்கள் வெங்கடேசனை தூக்கிகொண்டு குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு வெங்கடேசன் நிலைமை மோசமானது. எனவே உடனடியாக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த சம்பவம் குறித்து சங்கீதா மீது உறவினர்களுக்கு சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் உறவினர் கந்தன் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து சங்கீதா மற்றும் அவரது கள்ளக்காதலன் சண்முகம் ஆகியோரை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சங்கீதா தனது கணவருக்கு, கள்ளக்காதலுடன் சேர்ந்து விஷம் கலந்த மதுவை கொடுத்து கொல்ல முயன்றதை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து சண்முகம், சங்கீதாவை போலீசார் கைது செய்தனர். கைதான 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புகார் மனுவில் கஞ்சா விற்பனையை தடுக்க முயன்றதால் மர்மநபர்கள் என்னை கொல்ல முயற்சித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
    • போலீசார் வழக்குபதிந்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகர தி.மு.க. துணை செயலாளர் பக்ருதீன் (வயது 42). இவரது சகோதரி நபிஷா கோட்டக்குப்பம் நகராட்சி 27-வது வார்டு கவுன்சிலராக உள்ளார்.

    இந்த வார்டு பகுதியில் கஞ்சா விற்பனை அதிகம் நடைபெறுகிறது. எனவே இதனை கண்காணிக்க அந்த பகுதியில் சி.சி.டி.வி. கேமரா அமைத்துள்ளார். இந்த கேமராக்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மநபர்கள் உடைத்துள்ளனர். இது தொடர்பாக பக்ருதீன் கோட்டக்குப்பம் போலீசில் புகார் செய்தார். இதையொட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் பக்ருதீன் சொந்த வேலை விஷயமாக திருச்சி சென்றார். பின்னர் அங்கிருந்து நேற்று இரவு கோட்டக்குப்பம் பஸ்நிலையத்தில் இறங்கி வீட்டுக்கு நடந்து சென்றார்.

    அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் பக்ருதீனை சுற்றிவளைத்து கத்தியால் வெட்டியது. இதில் அவர் கூச்சலிட்டவாறு ஓடினார். சத்தம்கேட்டு அவரது உறவினர்கள் ஓடிவந்தனர். ஆட்கள் வருவதை அறிந்த மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கத்தி வெட்டில் படுகாயம் அடைந்த பக்ருதீன் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவிட்டு கோட்டக்குப்பம் போலீசில் புகார் செய்தார். புகார் மனுவில் கஞ்சா விற்பனையை தடுக்க முயன்றதால் மர்மநபர்கள் என்னை கொல்ல முயற்சித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குபதிந்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கிருஷ்ணமூர்த்தி ஏற்கனவே 2 திருமணம் செய்து மனைவிகளை விவாகரத்து செய்தவர்.
    • 3-வதாக கிருஷ்ணமூர்த்தி கவுரியை திருமணம் செய்தார். கவுரிக்கும் இது 2-வது திருமணம் ஆகும்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நேரு காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 39). பெயிண்டர். இவரது மனைவி கவுரி (32). இவர்களுக்கு 1 வயதில் ஒரு மகன் உள்ளார்.

    கிருஷ்ணமூர்த்தி, கவுரியை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

    கிருஷ்ணமூர்த்தி ஏற்கனவே 2 திருமணம் செய்து மனைவிகளை விவாகரத்து செய்தவர். 3-வதாக அவர் கவுரியை திருமணம் செய்தார். கவுரிக்கும் இது 2-வது திருமணம் ஆகும்.

    சிறிது காலம் மகிழ்ச்சியாக சென்ற இவர்களது வாழ்வில் கிருஷ்ணமூர்த்தியின் சந்தேக புத்தியால் பிரச்சினை ஏற்பட தொடங்கியது. கவுரியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கிருஷ்ணமூர்த்தி அடிக்கடி தகராறு செய்தார்.

    சம்பவத்தன்று இரவு மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் கவுரி தூங்க சென்றார். ஆத்திரத்தில் இருந்த கிருஷ்ணமூர்த்தி தனது மனைவியை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி வீட்டில் இருந்த பெயிண்டிங் கலக்க பயன்படுத்தப்படும் எண்ணையை எடுத்து தூங்கிக் கொண்டு இருந்த கவுரியின் மீது ஊற்றினார். பின்னர் தீப்பற்ற வைத்தார். பின்னர் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது உடல் முழுவதும் தீ பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று தீயில் இருந்து கவுரியை மீட்டனர். பின்னர் அவரை பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியை தீ வைத்து எரித்து கொலை செய்ய முயன்ற கிருஷ்ண மூர்த்தியை தேடி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சரியான சமயத்தில் தோழி தடுத்திருக்காவிட்டால் தலையில் வெட்டு விழுந்து உயிருக்கே ஆபத்தாகியிருக்கும்
    • போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    கொச்சி:

    கேரளாவின் கொச்சி நகரில் இன்று பட்டப்பகலில் பெண்ணை கத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கொச்சி ஆசாத் சாலையில் இன்று காலை 11 மணியளவில் ஒரு வாலிபருக்கும், இரண்டு பெண்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது அந்த வாலிபர் மறைத்து வைத்திருந்த வெட்டுக்கத்தியை எடுத்து திடீரென ஒரு பெண்ணை நோக்கி வெட்டுவதற்கு ஓங்கி உள்ளார். அப்போது உடனிருந்த மற்றொரு பெண் லாவகமாக கையால் தடுத்துள்ளார். இதில் அந்த பெண்ணுக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சரியான சமயத்தில் தடுத்திருக்காவிட்டால் அந்த பெண்ணின் தலையில் வெட்டு விழுந்து உயிருக்கே ஆபத்தாகியிருக்கும்.

    பாதிக்கப்பட்ட பெண், உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தப்பி ஓடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. குற்றவாளி விட்டுச் சென்ற கத்தியை போலீசார் கைப்பற்றினர். அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
    • தேங்காய் வியாபாரி தனது கள்ளக்காதலுக்கு மனைவி இடையூறாக இருப்பதாக நினைத்தார்.

    கோவை:

    கோவை மலுமச்சம்பட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 29 வயது தேங்காய் வியாபாரி. இவருக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது 1½ வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    கடந்த 6 மாதங்களுக்கு முன் தேங்காய் வியாபாரிக்கு அவரது மனைவியின் தங்கையான திருமணமாகாத இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர்.

    இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலமாக தேங்காய் வியாபாரியின் மனைவிக்கு தெரியவந்தது.

    அவர் தனது கணவரை கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனையடுத்து தேங்காய் வியாபாரி தனது கள்ளக்காதலுக்கு மனைவி இடையூறாக இருப்பதாக நினைத்தார். எனவே அவரை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் விஷத்தை கொடுத்து தீர்த்து கட்ட முடிவு செய்தார். அதன்படி ஆன்லைன் மூலமாக தனது மனைவியை கொல்வதற்கு விஷத்தை வாங்கி உள்ளார். பின்னர் அதனை வீட்டில் மறைத்து வைத்தார்.

    இந்தநிலையில் கடந்த அக்டோபர் மாதம் 17-ந் தேதி தேங்காய் வியாபாரி தனது கள்ளக்காதலியுடன் ஓட்டம் பிடித்தார். இது குறித்து அவரது மனைவி மாயமான தனது கணவர் மற்றும் தங்கையை கண்டுபிடித்து தரும்படி செட்டிப்பாளையம் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியின் தங்கையுடன் ஓட்டம் பிடித்த தேங்காய் வியாபாரியை தேடி வந்தனர்.

    இந்தநிலையில் 2 பேரும் மதுரை ஜெய்ஹிந்புரத்தில் தங்கி இருப்பது தெரியவந்தது. அங்கு விரைந்து சென்ற போது போலீசார் மனைவியின் தங்கையுடன் குடும்பம் நடத்தி வந்த தேங்காய் வியாபாரியை பிடித்தனர். பின்னர் அவரை கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரியா குடும்பத் தகராறில் கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
    • கடந்த சில ஆண்டுகளாக மனைவி தனக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்திருப்பதாக பாறசாலை போலீசில் சுதீர் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாணவருக்கு காதலி குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் இருந்து மீள்வதற்குள் கள்ளக்காதலுக்காக கணவருக்கு மனைவியே விஷம் கொடுத்தள்ளதாக புகார் எழுந்துள்ளது.

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பாறசாலை அருகே உள்ள முறியங்கரை பகுதியைச் சேர்ந்தவர் சுதீர் (வயது 49). கேரள அரசு போக்குவரத்துக் கழக டிரைவர். இவரது மனைவி பிரியா. இவர் தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரியா குடும்பத் தகராறில் கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மனைவி தனக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்திருப்பதாக பாறசாலை போலீசில் சுதீர் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

    இதற்கு ஆதாரமாக வீட்டின் பீரோவில் இருந்து கைப்பற்றப்பட்ட அம்மோனியம் பாஸ்பேட் மற்றும் சிரிஞ்சை அவர் காண்பித்துள்ளார். மனைவி பிரியாவுக்கும் திருநெல்வேலியைச் சேர்ந்த முருகன் என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது என்றும் அவர் தான் விஷத்தை கொரியர் மூலம் அனுப்பி இருக்கிறார் என்றும் சுதீர் கூறினார். மேலும் கடந்த 10 ஆண்டுகளாக எனக்கு வீட்டில் சாப்பிட்டால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. இதற்கு காரணம் மனைவி உணவில் விஷம் கலந்து கொடுத்தது தான் என்றும் அவர் கூறியுள்ளார்.

    அதன்பேரில் விசாரணை நடத்திய பாறசாலை போலீசார், பிரியா, முருகன் ஆகியோர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கள்ளக்காதலனுடன் உல்லாச வாழ்க்கை வாழ, கணவருக்கு மனைவி விஷம் கொடுத்ததாக கூறப்படும் இந்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மாலத்தீவு முன்னாள் அதிபர் அப்துல் கய்யூம் சென்ற அதிவேகப் படகை வெடிகுண்டால் தகர்த்து அவரை கொல்ல முயன்ற வழக்கில் முன்னாள் துணை அதிபரின் 18 ஆண்டு சிறை தண்டனையை நீதிமன்றம் ரத்து செய்தது.
    மாலே:

    சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதினா நகரங்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு சென்று ஹஜ் யாத்திரையை நிறைவேற்றிய மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கய்யூம் தனது மனைவியுடன் விமானம் மூலம் டெல்லி வந்து சேர்ந்தார்.

    டெல்லியில் இருந்து 28-9-2015 அன்று காலை அதிவேக படகின் மூலம் மாலத்தீவு திரும்பிக்கொண்டிருந்தார்.

    அப்போது, அவரது படகு திடீரென்று கடலில் வெடித்து சிதறியது. இதில் அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கய்யூம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இவ்விபத்தில் படுகாயமடைந்த அதிபரின் மனைவி பாத்திமா இப்ராஹிம், டெல்லியில் உள்ள இந்திரா காந்தி நினைவு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கய்யூம் மற்றொரு படகுமூலம் பத்திரமாக மாலத்தீவு தலைநகரான மாலே சென்றடைந்தார்.

    அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கய்யூமை கொல்ல சதி நடந்ததாகவும், அதில் இருந்து அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டதாகவும் அந்நாட்டு உளவுத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர்கள் ரகசியமாக விசாரித்து வந்தனர். இந்த சதியில் மாலத்தீவு துணை அதிபர் அஹமத் அடிப்-புக்கும் தொடர்பு இருந்ததாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகின.



    இதைதொடர்ந்து, துணை அதிபர் அஹமத் அடிப் கைது செய்யப்பட்டார். அதிபரை கொல்ல சதி செய்ததாக அவர்மீது தொடரப்பட்ட குற்ற வழக்கில் அவருக்கு 33 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், நீதிமன்றத்தின் தலையீட்டின் பேரில் தண்டனைக்காலம் 18 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. கடந்த மூன்றாண்டுகளாக அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், இந்த தண்டனையை எதிர்த்து அஹமத் அடிப் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் அவரை சிறையில் விடுதலை செய்யுமாறு மாலத்தீவு உயர்நீதி மன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

    மேலும், குற்றவியல் நீதிமன்றம் முன்னர் விதித்த தண்டனையை ரத்து செய்வதுடன் அதிபரின் படகு வெடித்த விபத்து தொடர்பாக மீண்டும் புதிதாக கோணத்தில் விசாரிக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.