search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    7-ம் வகுப்பு மாணவிக்கு ஓடும் ஆட்டோவில் பாலியல் தொல்லை கொடுத்த டிரைவர்
    X

    7-ம் வகுப்பு மாணவிக்கு ஓடும் ஆட்டோவில் பாலியல் தொல்லை கொடுத்த டிரைவர்

    • ஆட்டோ சென்றுகொண்டிருந்த போதே, மாணவிக்கு டிரைவர் மண்கண்டன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
    • ஆட்டோ டிரைவர் மணிகண்டனை கையும் களவுமாக பிடித்து பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த 7-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், தினமும் பள்ளிக்கு ஆட்டோவில் சென்று வந்திருக்கிறார். சம்பவத்தன்றும் அவர் பள்ளிக்கு வழக்கமாக செல்லும் ஆட்டோவில் சென்றிருக்கிறார்.

    ஆனால் அன்றைய தினம், மாணவியை வழக்கமான டிரைவர் இல்லாமல், வேறொரு டிரைவரான பாலக்காடு வள்ளிக்கோட்டை பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் அழைத்துச் சென்றுள்ளார். ஆட்டோவில் அந்த மாணவி மட்டும் இருந்துள்ளார்.

    இதனால் ஆட்டோ சென்றுகொண்டிருந்த போதே, மாணவிக்கு டிரைவர் மண்கண்டன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதனை மாணவி கண்டித்திருக்கிறார். ஆனால் அவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தபடியே இருந்திருக்கிறார்.

    மேலும் பலாத்காரமும் செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, சத்தம்போட்டு அழுதுள்ளார். இதனை சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் பார்த்தனர். அந்த பகுதியை சேர்ந்த சிலர், தங்களது வாகனத்தில் அந்த ஆட்டோவை பின்தொடர்ந்து சென்று மடக்கி பிடித்து நிறுத்தினர்.

    பின்பு ஆட்டோவில் இருந்த மாணவியிடம் கேட்டபோது, ஆட்டோ டிரைவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்ற விவரத்தை தெரிவித்தார். இதையடுத்தது ஆட்டோ டிரைவர் மணிகண்டனை கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் மாணவியிடம் ஆட்டோ டிரைவர் அத்துமீறியதும், பலாத்காரம் செய்ய முயன்றதும் உறுதியானது. இதையடுத்து டிரைவர் மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

    Next Story
    ×